Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anugraham
Anugraham
Anugraham
Ebook420 pages1 hour

Anugraham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'அனுக்கிரகம்' என்ற இந்த நூல் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெருமளவில் பயன்படும் ஒரு ஆன்மிக கையேடாக அமைந்துள்ளது. இந்த நூலில் தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் குறித்தான விபரங்களும், ஆலயம் அமைந்து இருக்கும் இடம் மற்றும் இந்த ஆலயத்திற்குச் செல்வதால் ஏற்படும் பலன் தரும் பரிகார பூஜைகள் குறித்து பிற விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வகையில் இந்த நூல் பக்தர்களுக்கு பயன்தரும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்நூல் ஆன்மிக அன்பர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580155108462
Anugraham

Read more from Vaasthu Ratna S. Ravichandran

Related to Anugraham

Related ebooks

Reviews for Anugraham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anugraham - Vaasthu Ratna S. Ravichandran

    http://www.pustaka.co.in

    அனுக்கிரகம்

    அபூர்வ ஆலயங்கள்! பலன் தரும் பரிகாரங்கள்!

    Anugraham

    Aboorva Aalayangal! Palan Tharum Parigarangal!

    Author:

    வாஸ்து ரத்னா ரவிச்சந்திரன்

    Vaasthu Ratna S. Ravichandran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vaasthu-ratna-s-ravichandran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்து மடல்

    ஆசிரியர் உரை

    ஆசிரியர் உரை

    அபூர்வ ஆலயங்கள்

    அர்த்தமுள்ள ஆராதனைகள்

    பலன் தரும் பரிகாரங்கள்

    பூஜைகளும் பிரசாதங்களும்

    ஊர்களுக்கு இடையேயான தூரம்

    நன்றி

    S. ரவிச்சந்திரன் B.Com., FCA., ACS

    இந்த நூலாசியர்களில் ஒருவரான வாஸ்து ரத்னா திரு எஸ். ரவிச்ச்திரன் அவர்கள், தொழில் முறையில் ஒரு சார்ட்டட் அக்கௌண்டன்ட். ஆனால் ஆன்மிகத்தில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, தற்போது ஆன்மிகத் தொடர்பான வாஸ்து சாஸ்திரம் பற்றிய துறையில் ஈடுபட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக தொலைக்காட்சியில் வாஸ்து சாாதிரம் மற்றும் ஆன்மிகம் பற்றி நிகழ்சிசயை வழங்கி வருகிறார். வாஸ்poது தோஷம் நீங்க இவர் செய்து கொடுத்த பரிகாரங்களால் பலன் பெற்றோர் பல்லாயிரம் பேர். இவரது முதல் புத்தகம் ஆன்மிக டிப்ஸ் என்ற தலைப்பில் வெளி வந்தது. தற்போது மேலும் பல அரிய தகவல்களுடன் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

    திருமதி புஷ்பா ரமணி M.A.B.L.

    இந்த புத்தகத்தின் மற்றொரு ஆசிரியரான திருமதி புஷ்பா ரமணி, ஒரு வழக்கறிஞர், எழுத்துத் துறையில் அதிக பற்றுக்கொண்டவர். அந்த பற்றின் காரணமாக, பத்திரிக்கைத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். கடந்த 22 வருடங்களாக பல முன்னணி பத்திரிக்ககைகளில் பல்வேறு துறை பற்றி எழுதி வருகிறார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றம் மற்றும் சட்டம் தொடர்பானவைகளில் அதிக கவனம் செலுத்துகிறார். 15 வருடங்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறார். பல அபூர்வமான தகவல்களுடனும், குறிப்பாக பூஜை முறைகள் பற்றியும் விரிவாக விளக்கியுள்ளார்.

    வாழ்த்து மடல்

    திருக்கோயில்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கு பயன்தரும் ஆன்மிக நூல்களின் வரிசையில் வாஸ்து ரத்னா திரு எஸ். ரவிச்சந்திரன் மற்றும் திருமதி புஷ்பா ரமணி அவர்கள், திருக்கோயில்கள் குறித்து தகவல்கள் சேகரித்து எழுதியுள்ள 'அனுக்கிரகம்' என்ற இந்த நூல் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெருமளவில் பயன்படும் ஒரு ஆன்மிக கையேடாக அமைந்துள்ளது. இந்த நூலில் தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் குறித்தான விபரங்களும், ஆலயம் அமைந்து இருக்கும் இடம் மற்றும் இந்த ஆலயத்திற்குச் செல்வதால் ஏற்படும் பலன் தரும் பரிகார பூஜைகள் குறித்து பிற விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வகையில் இந்த நூல் பக்தர்களுக்கு பயன்தரும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்நூல் ஆன்மிக அன்பர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். இந்நூல் எழுதிய வாஸ்து ரத்னா திரு எஸ். ரவிச்சந்திரன் மற்றும் திருமதி புஷ்பா ரமணி அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆசிரியர் உரை

    ஆன்மிகம் என்பது ஓர் ஆழ்கடல். அதில் முத்தெடுக்க முயல்பவர்களில் நானும் ஒருவன். ஆன்மிகம் என்பதை நாம் எல்லோரும் வெவ்வேறு வழிகளில் நம்முடைய வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக் கொள்கிறோம்.

    என்னுடைய தொலைகாட்சி நிகழ்ச்சி வாஸ்து பற்றியதாக இருந்தாலும், அதில் ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, கோவில்கள் பற்றிய விவரங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வாஸ்து தொடர்புடைய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பரிகாரங்கள், கோவிலுக்குச் செல்வதையும், வீட்டில் பூஜைகள் செய்வதையுமே அடிப்படையாக வைத்து சொல்லப் படுகின்றன. அதனால் வாஸ்து என்பது ஆன்மிகத்தின் ஒரு பகுதிதான் என்பது என் கருத்து.

    என் பணியின் காரணமாக நான் பல்வேறு இடங்களுக்குப் போக வேண்டிய அவசியம் இருப்பதால் பல கோவில்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. நான் பார்க்கும் கோவில்களைப் பற்றி தொலைக்காட்சி நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பார்த்த நிகழ்வுகள் குறுகிய காலத்திலேயே நம் கருத்தை விட்டு அகன்றுவிடும். ஆனால் புத்தகங்களை 100 ஆண்டுகள் ஆனாலும் மறுபடியும் எடுத்து படிக்க முடியும். அதனால்தான் தொலைகாட்சியில் நான் சொன்ன ஆன்மிக குறிப்புகளை ஆன்மிக டிப்ஸ் என்ற புத்தகமாக எழுதினேன்.

    அதன் பிறகும் பல நூற்றுக்கணக்கான கோவில்களை தரிசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவைகளையும் தொலைகாட்சி நேயர்களுடன் பகிர்ந்து கொண்டாலும், இதற்கும் புத்தகப் பதிவு அவசியம் என்பதால் இந்த புத்தகத்தை உருவாக்கினோம். கோவில்களில் அபூர்வ சந்நிதிகளுடன், பல்வேறுபட்ட வழிபாட்டு முறைகள், பரிகாரங்கள், பூஜை முறைகள் பற்றியும் கொடுத்திருக்கிறோம். இந்த புத்தகம் உங்களுக்கு பயன் உள்ளதாகவும், மகிழ்ச்சியைக் கொடுப்பதாகவும் இருக்கும் என்ற நம்பக்கை இருக்கிறது. உங்களுடைய மகிழ்ச்சியே எங்களது வெற்றி.

    எஸ். ரவிச்சந்திரன்

    ஆசிரியர் உரை

    விஞ்ஞானம் அதிகம் வளர்ச்சி அடையாத காலங்களில் மெய்ஞானம் மூலமாக நம் மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்கள். தற்போது பிரபலமாகப் பேசப்பட்டு வரும் வாக்கிங் என்னும் உடற்பயிற்சிக்காகவே பண்டைய காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் பிரதட்சணம் செய்யும் பிரகாரங்கள் மிகவும் விஸ்தாரமாக அமைக்கப்பட்டிருந்தன.

    மார்கழி பஜனையும், கோலமும் இன்றும் நாம் நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை பார்க்கிறோம். இதற்குக் காரணம் எல்லோருக்குமே தெரியும். மார்கழி மாத விடியலில் காற்றில் ஓசோனின் அளவு அதிகம் இருக்கும் என்பது. இந்த விஞ்ஞான உண்மையினை நமது முன்னோர்கள் மெய்ஞானம் மூலம் அறிந்திருந்ததால்தான் கடவுளின் பெயரால் மக்களை அதிகாலையில் எழுப்பியிருக்கிறார்கள்.

    ஆண்டவன் இருக்கும் இடம் ஆலயம் தான். அதனால் அவனை அங்கேயே போய் வழிபடுவோம் என்று நினைத்துத்தான் பலர் கோயில்களுக்குச் செல்கிறார்கள். ஆனால் கடவுளை வணங்க மட்டுமே ஆலயங்கள் கட்டப்படவில்லை. அந்தக் கால மன்னர்கள் கலைகளை வளர்க்கவும் மக்களுக்கு தர்மத்தின் உண்மையைப் புரிய வைக்கவும், மேலே சொன்ன உடல் ஆரோக்கியத்திற்காகவும் இன்னும் கண்டு பிடிக்கப்படாத பல உண்மைகளுக்காகவும் கோயிலை கட்டினார்கள்.

    நம்முள்ளேயே இறைவன் இருக்கும் போது எந்தக் கோயிலிலும் இருப்பானே என்று நாம் ஒரே ஒரு கோயிலுக்குப் போவதுடன் நிறுத்திக் கொள்வதில்லை. பல ஊர்களுக்குச் சென்று கடவுளின் பல உருவங் களை தரிசித்து பரவசப்படுகிறோம். விதவிதமாக வழிபாடுகளைச் (ஆராதனைகள்,) செய்கிறோம். பல பரிகாரங்களைச் செய்து பயனடைகிறோம். வீட்டிலேயும் பூஜைகள் செய்து இறைவனை இறைஞ்சுகிறோம்.

    இந்தப் புத்தகத்தில் அபூர்வ ஆலயங்களும் கேள்விப்பட்டிராத சில அர்த்தமுள்ள ஆராதனைகளும், பலன்தரும் பல பரிகாரங்களும், பூஜைகளுக்கும் நைவேத்தியங்களுக்குமான சில புதிய விளக்கங்களும் இருக்கும். இவைகளின் ஒரு பகுதியைத் தான் இந்த புத்தகத்தில் தந்திருக்கிறோம். இவைகளைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான இடங்களுக்கு இடையே உள்ள தோராயமான தூரத்தை ஒரு அட்டவணையாகவே கொடுத்திருக்கிறோம்.

    இந்தப் புத்தகத்தின் மூலம் படிப்பவர்களுக்கு சிறிய அளவிலேனும் பயன் இருக்குமானால் அதுவே இந்தப் புத்தகத்தின் வெற்றியாக கருதி மகிழ்வோம்.

    புஷ்பா ரமணி

    அபூர்வ ஆலயங்கள்

    பொதுவாக நமக்கு சாதாரண விஷயங்களை விட அபூர்வமான விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும். அதுவும் கடவுளைப் பற்றிய விஷயங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால் ஆண்டவனின் படைப்பிலோ அனைத்துமே அற்புதம்தான்! ஆச்சர்யம்தான்!! அபூர்வம்தான்!!! உலகில்தான் எத்தனை அற்புதங்கள், எத்தனை அதிசயங்கள். அப்படி அதிசய அற்புதங்களைப் படைத்த கடவுளைத் தொழுவதற்காக மனிதன் பல கோவில்களைக் கட்டியுள்ளான்.

    கடவுளின் திருத்தலங்கள் அவற்றிற்குரிய ஆகமவிதிகளின் படிதான் அமைக்கப்பட்டிருக்கும். எந்த இடத்தில் எந்தச் சன்னதி இருக்க வேண்டும், எந்தக் கடவுளின் திருவுருவம் எப்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும், நாம் எப்படி வணங்க வேண்டும் என்பவைகளுக்கு விதிமுறைகள் உண்டு. ஆனால் பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டும், தவறு செய்பவர்களுக்கு உண்மையை உணர வைக்கும் பொருட்டும் இன்னும் சில காரணங்களுக்காகவும் இறைவன் சில திருத்தலங்களில் தோன்றியும், சிலருக்குக் கட்டளையிட்டும் இருப்பதாக நம்பிக்கை நிலவி வருகிறது. அதனால் மேலே சொன்ன விதிமுறைகளில் சில மாறியிருக்கும். அப்படிப்பட்ட கோவில்கள் அபூர்வமான கோவில்களாகக் கருதப்படுகின்றன. இன்னும் சில ஆலயங்கள் பெரும்பாலான மக்களுக்குத் தெரியாமலேயே இருக்கின்றன. அவையும் அபூர்வமானவையே. இத்தகைய தன்மையுள்ள கோவில்களைப் பற்றித்தான் இந்தப் பகுதியில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

    வாருங்கள், ஆலய உலாவைத் தொடங்குவோம்.

    1. ஈச்சனாரி விநாயகர், கோவை.

    ஸ்ரீவிநாயகர் எழுந்தருளியுள்ள அத்தனை க்ஷேத்ரங்களிலும் அற்புத சக்தி உண்டு. கேது பகவானுக்கு அதிதேவதையாக விளங்கும் ஸ்ரீ கணேசப் பெருமான் கோயம்புத்தூரில் கோவில் கொண்டு ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதிதேவதையாக இருந்து அனுக்ரஹம் செய்கிறார்.

    இத்திருக்கோவிலில் பிள்ளையாருக்கு நடைபெறும் அலங்கார வைபவம் மிகவும் விசேஷமானது. மற்றும் அபூர்வமானது. இங்கு நடைபெறும் அலங்கார வைபவங்கள் சாஸ்திர ரீதியாக அமைந்துள்ளன.

    இங்கு 27 நட்சத்திரங்களுக்கு அனுதினமும் ஒரு நட்சத்திரம் வீதம் விசேஷ அலங்காரம் நடைபெறுகிறது.

    பலன்: பக்தர்கள் தங்கள் நட்சத்திரத்தன்று ஈச்சனாரி விநாயகரைத் தரிசிப்பதும், விநாயகருக்கு அர்ச்சனை செய்வதும், சதிர்த் தேங்காய் உடைப்பதும் அவர்களுக்கு ஜாதக ரீதியாக நல்ல பலனைக் கொடுக்கும் என்கிறார்கள். ஜாதகத்தில் கேது தோஷம் இருப்பவர்கள் இந்த விநாயகரைத் தரிசித்து தோஷ நிவர்த்தி செய்து பலன் பெறுகிறார்கள்.

    கோயமுத்தூர் ரயில் நிலையத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது - ஈச்சனாரி கோவில்.

    2. மன்னீஸ்வரர் (இறகு லிங்கம்) அன்னூர்.

    சிவலிங்கம் என்றால் நம் கண் முன்னே நிழலாடுவது கறுப்பு நிறத்தில் உருளை போன்ற வடிவமைப்புதான். சில இடங்களில் சிவ லிங்கத்தின் நிறம் மாறுபட்டிருக்கும். ஆனால் பறவை போன்ற அமைப்பில் மன்னீஸ்வரராக பக்தர்களுக்கு அன்னூரில் காட்சி தருகிறார் சிவபெருமான். இங்கே கைலாச விமானத்தின் இருபுறமும் பறவை போல, இறகு வடிவம் இருக்கிறது. உற்றுப் பார்த்தால் கருடன் தனது இறக்கைகளை மடக்கி அமர்ந்திருப்பது போல் காட்சி தெரியும். யாருக்கும் தெரியாது என்று நினைத்து நாம் செய்யும் தவறுகளையும், பாவங்களையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்த்துவது போல இங்கே ஈசன் இறகு லிங்கக் கோலத்தில் காட்சியளிக்கிறான் என்கிறார்கள்.

    பலன்: செய்த பாவத்துக்கு மன்னிப்பு வேண்டி இனியும் பாவம் செய்ய மாட்டேன் என்று இங்கே வருபவர்கள் உறுதி எடுத்துக்கொள்கிறார்களாம்.

    கோவையிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் ரோடில் 25 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அன்னூர். அன்னூர் பஸ் நிலையத்துக்கருகில் கோவில் இருக்கிறது.

    3. பாறைக்கோவில் பகவதி, எர்ணாகுளம்.

    தமிழ்நாட்டில் பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவறைக் கோவில்கள் மிகவும் பிரசித்தம். ஆனால் ஒரு பாறையே அம்மனின் தலைக்கூரையாகக் கொண்ட கோவில் ஒன்று கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் இருக்கிறது. பெரும்பாவூருக்கு அருகில், மேதலா என்ற இடத்தில் உள்ள 'கல்லில் அம்பலம்' என்ற கோவிலில் ஒரு பெரிய பாறையே கோவிலின் மேற்கூரையாக இருக்கிறது.

    சுமார் 50 அடி நீளமும், 20 அடி அகலமும் கொண்ட பாறையின் ஒரு பகுதி கோவிலின் கருவறையாக அமைந்துள்ளது.

    ஸ்ரீகோவில் என்றழைக்கப்படும் கருவறைக்குள் அர்ச்சகர் மட்டுமே போக முடியும். பக்தர்கள் பகவதியம்மனை வலம் வர பாறையைத்தான் சுற்றிவர வேண்டும். கார்த்திகை மாத விழாவில் ஆண் யானைகள் மட்டுமே கலந்து கொள்வது இன்னுமொரு சிறப்பு.

    பலன்: மனநிலை பாதிக்கப்பட்டவர்களை இங்கே அழைத்து வந்து பகவதியம்மனிடம் வேண்டிக் கொண்டால் மனநோய் விரைவில் குணமாவதாகச் சொல்கிறார்கள்.

    எர்ணாகுளம், பெரும்பாவூரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம்.

    4. முருகன், சென்னிமலை.

    சென்னிமலை திருக்கோவில் கிருத யுகத்தில் இருந்தே பூஜிக்கப்பட்டு வந்ததாக தலவரலாறு கூறுகிறது. வேதகாலத்தில், ஆதிகேசவனுக்கும் வாயுதேவனுக்கும் பலப்பரீட்சை நடந்ததாம். வாயுதேவன் கடுமையாக காற்றை வீசி ஆதிசேஷனை கீழே வீழ்த்தி தோற்கடிக்க முயற்சி செய்தபோது அனந்தனும் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக மகாமேரு பர்வதத்தைச் சுற்றிப் பிடித்துக் கொண்டாராம். ஆனால் வாயு தேவன் மிகக் கடுமையாக வீசியதால் ஆதிசேஷன் சுற்றிப் பிடித்துக் கொண்டிருந்த மகா மேருமலையின் ஒரு பகுதி கீழே விழுந்து விட்டதாம். அந்தப் பகுதியே 'சிரகிரி' எனப்பட்ட, தற்போதைய சென்னிமலை ஆகும் என்களிது புராணம்.

    தமிழ் மொழியில் மந்திர சக்தி கொண்ட பாடல்களில் முதன்மை வாய்ந்தது பாலன் தேவராய ஸ்வாமிகள் இயற்றிய கந்தர் சஷ்டிக் கவசம். இதனை அரங்கேற்றம் செய்ய எந்த இடம் ஏற்றது என்பதறியாமல் கந்தப் பெருமானை வேண்டி நிற்க சென்னிமலையே உகந்தது என்பதை தன் அருளாணையினால் உணர்த்தினாராம். அவரது ஆணையை ஏற்ற ஸ்ரீ தேவராய ஸ்வாமிகள் ஒரு நன்னாளில் சென்னிமலைப் பெருமானின் சந்நிதியில் கந்தர் சஷ்டிக் கவசத்தை அரங்கேற்றம் செய்திருக்கிறார்.

    கந்தர் சஷ்டி கவசத்தில் 'சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என்ற அடிகள் வருவதைக் கவனித்தால் சென்னிமலை பெருமானின் பெருமையை உணர்ந்து கொள்ள முடியும்.

    பலன்: தடங்கல்கள் நீங்கி எந்தக் காரியத்தையும் சீக்கிரமே முடித்துத் தருகிறானாம் இந்த சிரகிரி வேலவன்.

    ஈரோடிலிருந்து 26 கி.மீ. தூரத்திலும், பெருந்துறையிலிருந்து 13 கி.மீ. தூரத்திலும் உள்ளது சென்னிமலை திருத்தலம்.

    5. ஸ்ரீ பட்டீஸ்வரர், பேரூர்.

    இக்கோவிலின் முன்பகுதியில் பட்டி சுற்றும் மேடைக்கு அருகே பாதையோரம் உள்ளது பிறவாபுளி. இத்தெய்வீக மரத்தின் விதைகளை விதைத்தால் அவை முளைப்பதில்லையாம். பேரூர் திருத்தலத்தில் வாழ்வோருக்கு இனி பிறப்பில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது என்கிறார்கள். வட கயிலாயநாதர் கோயிலுக்கு வடகிழக்குப் பகுதியில் உள்ளது மற்றொரு மரமான இறவாபனை. நீண்டகாலமாக இறவாமல் தொடர்ந்து இம்மரம் உள்ளதாம். பேரூர் பகுதியில் வாழ்வோர் இறவாத புகழடம்பு எய்துவார்கள் என்பதற்கு இப்பனைமரம் சான்றாக விளங்குகிறதாம்.

    பலன்: பட்டீஸ்வர ஈசனை தரிசித்தால் ஆயுள் கூடும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.

    கோயமுத்தூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது பேரூர். கோவையின் எல்லாப் பகுதியிலிருந்தும் பேருந்து வசதி உண்டு.

    6. குமராயி, மோகனூர்.

    ஆடிப்பெருக்கன்று தீர்த்தக் கரையில் அமைந்த கோவில்களில் பெண் தெய்வங்களைத் தரிசிப்பது விசேஷம். இந்த இனிய நாளில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அசலதீ பேஸ்வரர் கோயிவிலில் உள்ள குமராயி என்ற மதுகரவேணியைத் தரிசிப்பது பெரும் பாக்கியமாகக் கருதப்படுகிறது.

    சுவாமி சன்னதியில் எப்போதும் அசையாத அணையா தீபம் எரிந்து கொண்டிருக்கிறது. எனவே சிவன் 'அசலதீபேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். 'அசலம்' என்றால் 'அசையாதது', 'சலனமற்றது' என்று பொருள். இவருக்கு அருகில் மதுகரவேணி பூஜித்த பாணலிங்கம் உள்ளது.

    அம்பிகை குமாரயி என்னும் பெயரில் இங்கு வாழ்ந்ததால் இவளுக்கு 'குமராயி' என்றும் பெயர் ஏற்பட்டது.

    பலன்: பவுர்ணமியன்று இந்த பூஜையில் கலந்து கொண்டு குமராயியை பிரார்த்தித்தால் புத்திரப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

    நாமக்கல்லில் இருந்து 18 கி.மீ தூரத்தில் மோகனூர் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ. சென்றால் கோவிலை அடையலாம்.

    7. ரங்கநாதர், காரமடை.

    திருமால் தலங்களில் பிரதானமானது ஜடாரி சேவை. ஜடாரியின் மேல் பகுதியிலுள்ள சுவாமியின் திருவடி ஸ்பரிசம் நமக்குக் கிடைப்பதாகவும், அதன் மூலம் பிறப்பற்ற நிலையை அடையலாம் என்பதும் ஐதீகம். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள காரமடை ரங்கநாதர் கோவிலில் ஜடாரி சேவையுடன் ராமபாண சேவையும் செய்யப்படுவது கூடுதல் விசேஷம். இந்த ரங்கநாதர் வேறொரு வகையிலும் விசே ஷமானவர். இவரது உருவம் சிவலிங்க வடிவில் இருப்பது தான் அது.

    இக்கோயிவிலில் உள்ள உற்சவர் வெங்கடேசப் பெருமாள். மூலவர் ரங்கநாதரை விட அளவில் பெரியவர்.

    பலன்: ரங்கநாதருக்கு பந்தசேவை (தீப்பந்தம் எடுத்துக் கொண்டு வீதி உலா வருதல்) எடுத்தால் நினைத்த

    Enjoying the preview?
    Page 1 of 1