Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kerala Koyilgal Part 1
Kerala Koyilgal Part 1
Kerala Koyilgal Part 1
Ebook219 pages2 hours

Kerala Koyilgal Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பச்சைப் பசேலென்று பரந்து விரிந்த நிலப்பரப்புகள், வெள்ளை நிறத்தில் ஓடும் நதிகள், நீலநிறக் கடல் பகுதிகள், பசுமையான மலைப்பகுதிகள், மலையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகள் என்று இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் கேரளாவின் சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ‘கேரளா கடவுளின் தேசம்’(God's own country) என்ற வாசகம் கேரளாவிலுள்ள பல்வேறு கோயில்களைக் காணும் போது, உண்மையில் கேரளா கடவுளின் தேசம்தான் என்று அனைவரையும் சொல்ல வைத்து விடுகிறது.

பரசுராமர் தோற்றுவித்ததாகக் கருதப்படும் கேரளாவில் பல இந்து சமயக் கடவுள்களின் கோயில்கள் இருக்கின்றன. இந்தக் கோயில்களில் இராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளுடன் தொடர்புடைய கோயில்கள், சிலப்பதிகாரத்துடன் தொடர்புடைய கோயில்கள், வித்தியாசமான அமைப்புகளையும், வழிபாடுகளையும் கொண்டதாகச் சில கோயில்கள் என்று ஒவ்வொரு கோயிலும், ஒரு புதிய செய்தியை அல்லது நல்லதொரு வழிகாட்டுதலை நமக்குத் தரக்கூடியதாக அமைந்திருக்கின்றன.

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580150507915
Kerala Koyilgal Part 1

Read more from Theni M. Subramani

Related to Kerala Koyilgal Part 1

Related ebooks

Reviews for Kerala Koyilgal Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kerala Koyilgal Part 1 - Theni M. Subramani

    https://www.pustaka.co.in

    கேரளக் கோயில்கள் தொகுதி 1

    Kerala Koyilgal Part 1

    Author:

    தேனி மு. சுப்பிரமணி

    Theni M. Subramani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/theni-m-subramani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உள்ளடக்கம்

    1. கொட்டாரக்கரா மகாகணபதி கோயில்

    2. திருச்சூர் வடக்குநாதர் கோயில்

    3. அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணர் கோயில்

    4. மீன்குளத்திப் பகவதி அம்மன் கோயில்

    5. கடவில் ஸ்ரீ மகாலட்சுமி கோயில்

    6. பனச்சிக்காடு சரஸ்வதி தேவி கோயில்

    7. பேரளச்சேரி சுப்பிரமணியா கோயில்

    8. குளத்துப்புழா ஐயப்பன் கோயில்

    9. ஆரியங்காவு ஐயப்பன் கோயில்

    10. அச்சன்கோவில் ஐயப்பன் கோயில்

    11. சபரிமலை ஐயப்பன் கோயில்

    12. பொன்னம்பல மேடு ஐயப்பன் கோயில்

    13. ஆலத்தியூர் அனுமன் கோயில்

    14. ஆதித்யபுரம் சூரியன் கோயில்

    15. பரசினிக்கடவு முத்தப்பன் கோயில்

    16. படநிலம் பரப்பிரம்மம் கோயில்

    17. பொருவழி துரியோதனன் கோயில்

    18. தளிப்பிரம்பா ராஜராஜேஸ்வரர் கோயில்

    19. திருவல்லம் பரசுராமர் கோயில்

    20. திருவித்துவக்கோடு அஞ்சுமூர்த்திக் கோயில்

    21. கோட்டுக்கல் குடைவரைக் கோயில்

    22. திருக்காட்கரையப்பன் கோயில்

    23. வடக்கன்தரை பகவதியம்மன் கோயில்

    24. திரிப்பிரங்கோடு கருடன் கோயில்

    25. வேட்டக்கொரு மகன் கோயில்கள்

    26. பெருவனம் இரட்டையப்பன் கோயில்

    27. லோகனார்காவு லோகாம்பிகை அம்மன் கோயில்

    28. திருநாவாய் முகுந்தன் கோயில்

    29. ஏமூர் பகவதியம்மன் கோயில்

    30. ஹரிப்பாடு சுப்பிரமணியசாமி கோயில்

    என்னுரை

    பச்சைப் பசேலென்று பரந்து விரிந்த நிலப்பரப்புகள், வெள்ளை நிறத்தில் ஓடும் நதிகள், நீலநிறக் கடல் பகுதிகள், பசுமையான மலைப்பகுதிகள், மலையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகள் என்று இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் கேரளாவின் சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ‘கேரளா கடவுளின் தேசம்’(God's own country) என்ற வாசகம் கேரளாவிலுள்ள பல்வேறு கோயில்களைக் காணும் போது, உண்மையில் கேரளா கடவுளின் தேசம்தான் என்று அனைவரையும் சொல்ல வைத்து விடுகிறது.

    பரசுராமர் தோற்றுவித்ததாகக் கருதப்படும் கேரளாவில் பல இந்து சமயக் கடவுள்களின் கோயில்கள் இருக்கின்றன. இந்தக் கோயில்களில் இராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளுடன் தொடர்புடைய கோயில்கள், சிலப்பதிகாரத்துடன் தொடர்புடைய கோயில்கள், வித்தியாசமான அமைப்புகளையும், வழிபாடுகளையும் கொண்டதாகச் சில கோயில்கள் என்று ஒவ்வொரு கோயிலும், ஒரு புதிய செய்தியை அல்லது நல்லதொரு வழிகாட்டுதலை நமக்குத் தரக்கூடியதாக அமைந்திருக்கின்றன.

    தினத்தந்தி நாளிதழின் இணைப்பிதழ்களான அருள் தரும் ஆன்மிகம் மற்றும் வெள்ளிமலர் இதழ்களில் நான் எழுதிய பல கேரளக் கோயில்களுக்கான கட்டுரைகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட முப்பது கோயில்களின் கட்டுரைகள் மட்டும் கேரளக் கோயிகள் – தொகுதி 1 எனும் பெயரில் இங்கு நூலாக்கம் செய்யப் பெற்றிருக்கிறது.

    இந்நூலில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கோயிலுக்கான கட்டுரையிலும், அதனுடன் தொடர்புடைய சில முக்கியத் தகவல்களைப் பெட்டிச் செய்திகளாக வழங்கியிருக்கிறேன். இந்து சமய ஆன்மிகத்தில் ஈடுபாடுடையவர்களுக்கும், பல்வேறு கோயில்களுக்குப் புனிதப் பயணம் செல்ல விரும்புபவர்களுக்கும் இந்நூல் நல்லதொரு வழிகாட்டியாக அமையும் என்று நம்புகிறேன்.

    இந்நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகளைத் தினத்தந்தி நாளிதழின் அருள் தரும் ஆன்மிகம் மற்றும் வெள்ளிமலர் இதழ்களில் வெளியிட்டுச் சிறப்பித்த பொறுப்பாசிரியருக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்னைத் தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தி வரும் நண்பர்கள் தூத்துக்குடி எஸ்.ஏ. சுகுமாரன், மதுரை வழக்கறிஞர் எஸ். இளங்கோவன், தேனியிலிருக்கும் வி.பி. மணிகண்டன், எஸ். செந்தில்குமார், கவிஞர் வி.எஸ். வெற்றிவேல், ஆர்.எம். தாமோதரன் மற்றும் என் மேல் அன்பு கொண்ட உறவுகள், நட்புகள் என்று அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என் அனைத்து வளர்ச்சியிலும் எனக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் என் பெற்றோர் எஸ்.முத்துசாமி பிள்ளை - கமலம் ஆகியோருடன் என் வாழ்க்கைத் துணைவி தாமரைச்செல்விக்கும், என் மகள் மு.சு.முத்துக்கமலம் ஆகியோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்நூலை மின்னூலாகப் பதிப்பித்திருக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    - தேனி. மு. சுப்பிரமணி

    19/1, சுகதேவ் தெரு,

    பழனிசெட்டிபட்டி,

    தேனி – 625 531

    அலைபேசி: 9940785925, 9042247133.

    www.muthukamalam.com

    www.thenitamilsangam.org

    1. கொட்டாரக்கரா மகாகணபதி கோயில்

    D:\Daily thanthi\anmeegam\sending\published\kerala\volume1\kottarakara mahaganapathy\kottarakara mahaganapathi temple1.jpg

    விநாயகர் என்றாலே ‘கொழுக்கட்டைப் பிரியர்’ என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், கேரள மாநிலம், கொட்டாரக்கராவிலிருக்கும் விநாயகருக்கு மட்டும் ‘நெய்யப்பம்’ தான் மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. இங்கிருக்கும் மகாகணபதியை நெய்யப்பம் கொண்டு வழிபடுபவர்களுக்கு, அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்கின்றனர்.

    தல வரலாறு

    அரசகுலத்தவர்கள் பலரையும் அழித்ததால் ஏற்பட்டப் பாவத்தைப் போக்குவதற்காகப் பரசுராமர், கேரளாவின் பல பகுதிகளில் சிவபெருமான் கோயில்களை நிறுவினார். அந்தக் கோயில்களில் கொட்டாரக்கராவிலுள்ள சிவன் கோயிலும் ஒன்று.

    கேரளாவின் புகழ்பெற்ற சிற்பியான பெருந்தச்சன் கொட்டாரக்கரா சிவனை வழிபட்ட பின்பு, அந்தப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு பலா மரத்தை பார்த்தார். அந்தப் பலா மரம் அவருக்கு மிகவும் பிடித்துப் போனதால், அந்த மரத்தின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து, அதில் கணபதி திருமேனி ஒன்றைச் செய்தார்.

    கொட்டாரக்கராவிலிருக்கும் சிவன் கோயிலில், அந்தத் திருமேனியை நிறுவ நினைத்த அவர், அதற்காகக் கோயில் நிர்வாகத்தினரிடம் அனுமதி கேட்டார். அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், சிவன் கோயில் வளாகத்தில் கணபதியின் திருமேனி நிறுவப்பட்டுத் தனிக்கோயிலும் கட்டுமானம் செய்யப்பட்டது என்று இந்தக் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் மகாகணபதியின் சன்னதி அமைந்ததற்கான வரலாறு சொல்லப்படுகிறது.

    இதுபோல், சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு, கொட்டாரக்காராவில் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்கிய நாராயணன் எனும் வேதியர் ஒருவர், தினமும் கொட்டாரக்காராவிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு வந்தார். ஒருநாள் அவர் அந்தக் கோயிலுக்குள் சென்று திரும்பிய போது, ஓரிடத்திலிருந்து வேதியரே, இங்கிருக்கும் என்னையும் வணங்கிச் செல்லுங்கள் என்று குரல் கேட்டது.

    அந்தக் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த அவர், அங்கு ஒரு பலா மரம் சாய்ந்து கிடந்ததைக் கண்டார். அந்தப் பலாமரத்தின் வேர்ப்பகுதி இருந்த இடத்தில் ஏற்பட்ட பள்ளத்தில், பலா மரத்தினாலான விநாயகர் உருவத் திருமேனி ஒன்று இருந்தது.

    அந்தத் திருமேனியின் அழகைக் கண்டு வியந்த அவர், தன்னிடம் பேசியது அந்தப் பலா மரத்திலான விநாயகர்தான் என்பதைத் தெரிந்து கொண்டார். அவர், விநாயகரை அந்த இடத்திலேயே கோயில் கொண்டு, அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அவரின் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட விநாயகரும் அந்த இடத்திலேயே கோயில் கொண்டார். அதன் பிறகு, அங்கு விநாயகருக்குப் புதிதாகக் கோயில் கட்டப்பட்டது என்று மற்றொரு வரலாறும் சொல்லப்படுகிறது.

    மகாகணபதி

    கொட்டாரக்காரா சிவன் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய விநாயகரை வழிபட்ட அனைவருக்கும் அவர்கள் வேண்டியது அனைத்தும் அப்படியேக் கிடைத்தது. அந்தப் பகுதி முழுவதும் புதிதாகத் தோன்றிய விநாயகரின் சிறப்பு பற்றிய செய்தி பரவத் தொடங்கியது.

    அதனால், அந்தப் பகுதி மக்களிடம் பெரும் மதிப்பைப் பெற்ற புதிய விநாயகர் கோயில், பரசுராமரால் நிறுவப்பட்ட முதன்மைக் கோயிலான சிவன் கோயிலை விடப் பெருமையுடையதாக மாற்றம் பெற்றது. அங்கிருந்த விநாயகரும் மகாகணபதி என்று புதிய பெயரையும் பெற்றார்.

    கோயில் வளாகம்

    இங்குள்ள சிவன் கோயிலின் கருவறையில் பரசுராமரால் நிறுவப்பட்ட சிவலிங்கம் இருக்கிறது, கருவறையின் பின்புறம் பகவதி அம்மன் கோயில் இருக்கிறது. இங்கிருக்கும் அம்மன் மேற்குப் பார்த்த நிலையில் இருப்பதால், மேற்கு என்பதைக் குறிக்கும் மலையாளச் சொல்லான படிஞ்ஞாயிறு என்பதைச் சேர்த்து படிஞ்ஞாயிறு பகவதி என்று அழைக்கப்படுகிறார்.

    புதிதாக அமைந்த மகாகணபதி கோயில் கருவறையில், பலா மரத்திலான மகாகணபதி அப்பம் ஒன்றைக் கையில் வைத்தபடி இருக்கிறார். கொழுக்கட்டைப் பிரியரான கணபதி, இந்தக் கோயிலில் நெய்யப்பப் பிரியராக இருப்பது தனிச்சிறப்பாகும்.

    இக்கோயில் வளாகத்தில், தர்மசாஸ்தா, சுப்பிரமணியசுவாமி, நாகதேவதைகள் போன்றவர்களுக்கும் தனிச்சன்னதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    வழிபாடு

    இக்கோயில் வளாகத்திலிருக்கும் அனைத்துச் சன்னதிகளிலும் தினசரி வழிபாடுகள் நடத்தப்பெற்று வருகின்றன. இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி, மேடத்திருவாதிரை, சிவராத்திரி, ஆயில்யம் – மகம், நவராத்திரி, பிரதிஷ்டாதினம், தைப்பூசம், விசு, மண்டலச்சிறப்பு எனும் சிறப்பு விழாக்கள் ஆண்டுதோறும் நடத்தப் பெற்று வருகின்றன.

    மகாகணபதி கோயிலுக்கு வரும் பக்தர்கள், மகாகணபதிக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நெய்யப்பத்தைப் படைத்துத் தங்களின் வேண்டுதல்களை அவர் முன்பாகச் சொல்லி வழிபடுகின்றனர். நெய்யப்பம் கொண்டு வழிபடுபவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறிவிடும் என்பது இங்கு வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    கேரள மாநிலத்தின் நடனங்களில் ஒன்றான கதகளியாட்டம் கொட்டாரக்காரா மகாகணபதி கோயிலில்தான் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. எனவே, கதகளியாட்டக் கலைஞர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது, இக்கோயிலுக்கு வந்து மகாகணபதிக்கு ’நெய்யப்ப வழிபாடு’ செய்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

    அமைவிடம்

    கேரள மாநிலம், கொல்லம் எனும் ஊரிலிருந்து வடகிழக்கில் 27 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கொட்டாரக்காரா எனும் ஊருக்குப் பேருந்து, தொடருந்து வசதிகள் இருக்கின்றன.

    2. திருச்சூர் வடக்குநாதர் கோயில்

    C:\Users\Admin\Desktop\vadakkunathar temple front view1.jpg

    வாழ்க்கையில் புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, நீண்ட வாழ்நாள் எனும் பதினாறு வகையான வளங்களும் கிடைக்கப் பெற்றவர்களே முழுமையான மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். வாழ்க்கையின் முழு

    Enjoying the preview?
    Page 1 of 1