Tamil Inaiya Chitrithazhgal
()
About this ebook
ஆதிமனிதன் மற்றொருவனுக்கு ஒலிகளை எழுப்பியேத் தன் கருத்தைத் தெரிவித்தான். அவனைத் தன் பக்கம் திரும்பச் செய்வதற்கு ஒரு வகையான ஒலியையும், தன் கருத்தை அவனுக்கு வெளிப்படுத்துவதற்கு மற்றொரு வகை ஒலியையும் எழுப்பினான். இந்த ஒலிகளின் சேர்க்கையும் தொடர்ச்சியும் இணைந்து சொற்களாகவும், பேசும் மொழியாகவும் உருவாக்கப்பட்டன.
இன்றைய அறிவியல் வளர்ச்சியின் காலத்தில் இவர்களுக்குள் தகவல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்காகப் பல ஊடகங்கள் பயன்பட்டு வருகின்றன. இந்த ஊடகங்களில் தற்போது புதிதாக வந்திருக்கும் ஒரு ஊடகம்தான் இணையம். இந்த இணையத்தில் அனைத்து மொழிகளும் தகவல் தொடர்பு வசதிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழர்கள் தமிழ் மொழியையும் இந்த இணைய ஊடகத்தின் வாயிலாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அச்சில் வரும் இதழ்களைப் போல் தமிழ் இணைய இதழ்கள், ஒலியின் மூலம் வரும் வானொலிகளை போல் இணைய வானொலிகள், ஒளி மற்றும் ஒலிகளை இணைத்து வரும் காட்சி ஊடகங்களைப் போல் இணையத் தொலைக்காட்சிகள் என்று அனைத்துத் தகவல் தொடர்பு சாதனங்களும் இணையப் பயன்பாட்டில் வந்து கொண்டிருக்கின்றன.
அவற்றை பற்றிய குறிப்புகள் அடங்கிய தொகுப்பே இந்நூலே
Read more from Theni M. Subramani
Kerala Koyilgal Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsIndiya Dhesiya Poongakkal Rating: 0 out of 5 stars0 ratingsKerala Koyilgal Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsPayanulla 100 Inaiyathalangal Rating: 0 out of 5 stars0 ratingsTamil Wikipedia Rating: 0 out of 5 stars0 ratingsAthisayangal! Ulaga Athisayangal! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Tamil Inaiya Chitrithazhgal
Related ebooks
Tamil Computing Journal - December 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKarpithalil Kanini Rating: 0 out of 5 stars0 ratingsTamil-il Unix Rating: 0 out of 5 stars0 ratingsKalviyiyal Maanaaddu Aaivu Kovai 2022 - Thoguthi 3 Rating: 0 out of 5 stars0 ratingsSorseyali Rating: 0 out of 5 stars0 ratingsKalviyiyal Maanaaddu Aaivu Kovai 2021 Thoguthi - 2 Rating: 0 out of 5 stars0 ratingsOvvoru Naalum Urchagam Rating: 5 out of 5 stars5/5Sanketha Selaavani Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Panathil Nadantha M.G.R Noottrandu Vizhakkal Rating: 0 out of 5 stars0 ratingsMoondravathu Kann Rating: 0 out of 5 stars0 ratingsEngalin Ennangal Rating: 0 out of 5 stars0 ratingsEngey Pogirom? Rating: 0 out of 5 stars0 ratingsMennulagam Rating: 0 out of 5 stars0 ratingsKalvi 4.0 Arimugam Rating: 0 out of 5 stars0 ratingsSutrupura Soozhal Sinthanaigal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsAthvaidham Rating: 0 out of 5 stars0 ratingsIlangai Kaatchigal Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2023 Rating: 0 out of 5 stars0 ratingsMu. Varatharasanar Maanavargalukku Sonnathu Rating: 0 out of 5 stars0 ratingsSutrupura Soozhal Sinthanaigal - Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsUnmai Urangum Neram Rating: 0 out of 5 stars0 ratingsDigital Vazhkai Rating: 0 out of 5 stars0 ratingsVazhkai Nalam Rating: 0 out of 5 stars0 ratingsSilapathigarathil Ara Kotpaadu Rating: 0 out of 5 stars0 ratingsSinthanai Thuligal Rating: 0 out of 5 stars0 ratingsEngalin Anbar Rating: 0 out of 5 stars0 ratingsEn Kanavugal... Un Kaaladiyil... Rating: 0 out of 5 stars0 ratingsSutrupura Soozhal Sinthanaigal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsMuppathu Katturaigalil Hindu Madha Athisayangal! Rating: 5 out of 5 stars5/5
Reviews for Tamil Inaiya Chitrithazhgal
0 ratings0 reviews
Book preview
Tamil Inaiya Chitrithazhgal - Theni M. Subramani
https://www.pustaka.co.in
தமிழ் இணையச் சிற்றிதழ்கள்
Tamil Inaiya Chitrithazhgal
Author:
தேனி மு. சுப்பிரமணி
Theni M. Subramani
For more books
https://www.pustaka.co.in/home/author/theni-m-subramani
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
என்னுரை
ஆதிமனிதன் மற்றொருவனுக்கு ஒலிகளை எழுப்பியேத் தன் கருத்தைத் தெரிவித்தான். அவனைத் தன் பக்கம் திரும்பச் செய்வதற்கு ஒரு வகையான ஒலியையும், தன் கருத்தை அவனுக்கு வெளிப்படுத்துவதற்கு மற்றொரு வகை ஒலியையும் எழுப்பினான். இந்த ஒலிகளின் சேர்க்கையும் தொடர்ச்சியும் இணைந்து சொற்களாகவும், பேசும் மொழியாகவும் உருவாக்கப்பட்டன.
உலகத்தில் புவியியலின் அடிப்படையில் இந்த மொழிகள் பல இருக்கின்றன. இந்த மொழியின் அடிப்படையில் இனங்கள் அடையாளம் கொள்ளப்படுகிறது. இவ்வகையில் தமிழ் மொழியைப் பயன்படுத்துபவர்கள் இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ், பிஜூ போன்ற நாடுகளிலும் இவர்கள் தமிழர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். இவர்கள் இந்நாடுகளில் இருந்து தங்களின் வாழ்வாதாரங்களுக்காகப் புலம் பெயர்ந்து பல நாடுகளுக்குச் சென்று வசித்து வருகின்றனர்இன்றைய அறிவியல் வளர்ச்சியின் காலத்தில் இவர்களுக்குள் தகவல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்காகப் பல ஊடகங்கள் பயன்பட்டு வருகின்றன. இந்த ஊடகங்களில் தற்போது புதிதாக வந்திருக்கும் ஒரு ஊடகம்தான் இணையம். இந்த இணையத்தில் அனைத்து மொழிகளும் தகவல் தொடர்பு வசதிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழர்கள் தமிழ் மொழியையும் இந்த இணைய ஊடகத்தின் வாயிலாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அச்சில் வரும் இதழ்களைப் போல் தமிழ் இணைய இதழ்கள், ஒலியின் மூலம் வரும் வானொலிகளை போல் இணைய வானொலிகள், ஒளி மற்றும் ஒலிகளை இணைத்து வரும் காட்சி ஊடகங்களைப் போல் இணையத் தொலைக்காட்சிகள் என்று அனைத்துத் தகவல் தொடர்பு சாதனங்களும் இணையப் பயன்பாட்டில் வந்து கொண்டிருக்கின்றன.
உலகம் முழுவதும் பரவலாக வாழ்ந்து வரும் தமிழர்கள். பிற நாடுகளில் இருக்கும் தமிழர்களுடன் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், சமூகம், இலக்கியம் மற்றும் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், தமிழ் இணைய இதழ்களை உருவாக்கியுள்ளனர். இணையத்தில் மட்டுமே வெளியாகும் அனைத்துத் தமிழ் இணைய இதழ்களையும் (Tamil Web Magazines), தமிழில் வெளியாகும் வலைப்பூக்களையும் (Tamil Blogs) தமிழ் இணையச் சிற்றுதழ்கள் என்கிற ஒரு வரையறைக்குள் கொண்டு வந்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் (Journalism and Mass Communication) துறையில் என்னுடைய ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டத்திற்கான கல்வியின் ஒரு பகுதியாக் மேற்கொண்ட ஆய்வுக் கட்டுரையுடன் (Dissertation), இணையத்தில் தமிழ் படைப்புகளை எப்படி வெளியிடலாம் என்கிற பகுதியும் சேர்த்து இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த நூலில் என் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டத்திற்கான ஆய்வு நெறியாளராக இருந்து உதவிய மயிலாடுதுறை, ஏ.வி.சி. கல்லூரி (தன்னாட்சி)யின் தமிழ் உயராய்வு மையத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் தி. நெடுஞ்செழியனின் அவர்களுக்கும், என் ஆய்விற்கு உதவிய உலகம் முழுவதுமுள்ள இணைய வழியிலான தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் இங்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.
இந்நூல் வெளிவர ஆர்வத்துடன் ஊக்கமளித்து உதவிய நண்பர்கள் மதுரை வழக்கறிஞர் எஸ்.இளங்கோவன், திருச்சி, முனைவர் துரை.மணிகண்டன், தூத்துக்குடி, எஸ்.ஏ.சுகுமாரன் மற்றும் தேனியைச் சேர்ந்த கவிஞர் வி.எஸ்.வெற்றிவேல், வி.பி.மணிகண்டன், எஸ்.செந்தில்குமார், எஸ்.மாரியப்பன், பொன்.கணேஷ் ஆகியோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்என் அனைத்து வளர்ச்சியிலும், எனக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் என் பெற்றோர் எஸ். முத்துசாமி பிள்ளை – கமலம் ஆகியோருடன் என் வாழ்க்கைத் துணைவியார் தாமரைச்செல்விக்கும் என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேனி. மு. சுப்பிரமணி
19/1, சுகதேவ் தெரு,
பழனிசெட்டிபட்டி,
தேனி – 625 531
அலைபேசி: 9940785925, 9042247133.
www.muthukamalam.com
உள்ளடக்கம்
1. தமிழ் இணையச் சிற்றிதழ்கள் அறிமுகம்
2. தமிழ் இணையச் சிற்றிதழ் உருவாக்கமும் உதவும் தொழில் நுட்பங்களும்
3. தமிழ் இணைய சிற்றிதழ்களின் உள்ளடக்கமும் வகைப்பாடும்
4. தமிழ் இணையச் சிற்றிதழ்களின் நிறை - குறைகள்
5. தமிழ் இணையச் சிற்றிதழ்களின் வணிக நிலை
6. இணையத்தில் தமிழ் படைப்புகள்
1. தமிழ் இணையச் சிற்றிதழ்கள் அறிமுகம்
உலகை உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்ட கணிப்பொறிகளின் பங்கும் பயன்பாடும் தேவை என்றாகி விட்டது. குறிப்பாகத் தகவல் தொடர்புத் துறையில் கணிப்பொறிகளும், அதன் வழியிலான இணையத் தொடர்புகளும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டன. இணையத் தொடர்பு வாயிலாக, உலகில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளையும், பல்வேறு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. இணையப் பயன்பாட்டின் அதிகரிப்பிற்குப் பின்பு, அச்சு ஊடகங்களில் வெளியாகும் சில தமிழ்ச் செய்தித்தாள்களும், இதழ்களும் இணையத்தில் இடம் பெறத் தொடங்கின. தற்போது அச்சு ஊடகத்தில் வெளிவராத பல இதழ்கள் இணையத்தில் புதிதாக வலம் வரத் தொடங்கியிருக்கின்றன. இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பண்பாடுகள், வாழ்வியல் நெறிமுறைகள் என்று பல புதிய தகவல்களையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
1.1 இணையம்
உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான கணிப்பொறிகளை ஒருங்கிணைக்கும் ஒரு முறையே இணையம் என்று அழைக்கப்படுகிறது. நம்மிடம் உள்ள கணிப்பொறியை மற்ற கணிப்பொறிகளுடன் இணைத்தால் அதிகப் பயன்பாடுகளைப் பெற முடியும் என்கிற நோக்கத்துடன் முதலில் ஒரு கட்டிடத்திற்குள் உள்ள கணிப்பொறிகளைக் கம்பிச்சுருள் வழியாக ஈதர்நெட் (Ethernet) எனும் அட்டை ஒன்றின் உதவியுடன் இணைத்து ஒரு வலைப்பின்னல் உருவாக்கப்பட்டது. இதற்கு குறும்பரப்பு வலைப்பின்னல்
(LAN - Local Area Network) இணைப்பு என்று பெயரிட்டார்கள். அடுத்த கட்டமாக, இந்தக் குறிப்பிட்ட இடத்திற்குள் அமைக்கப்பட்ட குறும்பரப்பு வலைப்பின்னல் இணைப்புகளை எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து அந்தப்பகுதிக்குள் உள்ள மற்ற கணிப்பொறிகளுடன் பரவலாக இணைத்தால் பயன் மேலும் அதிகரிக்கும் என்பதால் செய்யப்பட்ட முயற்சியின் விளைவாக அகன்ற பரப்பு வலைப்பின்னல்
(WAN - Wide Area Network) தோன்றியது. இந்த அகன்ற பரப்பு வலைப்பின்னல்களை எல்லாம் கம்பிகளின் வழியாக ஒன்றாய்ச் சேர்த்துவிட முயன்ற போது, இயற்கையாக இருக்கும் கடல், மலை போன்ற சில தடைகள் இருந்தன. இந்தத் தடைகளை எல்லாம் உடைத்தெறிய விடை தேடிய போது கிடைத்ததுதான் செயற்கைக்கோள் வழியிலான இணைப்பு. இந்த இணைப்பிற்குப் பிறகு உலகம் முழுவதும் உள்ள குறும்பரப்பு வலைப்பின்னல் மற்றும் அகன்ற பரப்பு வலைப்பின்னல் கொண்ட