Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalvi 4.0 Arimugam
Kalvi 4.0 Arimugam
Kalvi 4.0 Arimugam
Ebook91 pages33 minutes

Kalvi 4.0 Arimugam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு தனிமனித பொருளாதார்த்தை மேம்படுத்தும் கல்விக் கட்டமைப்பு கண்டிப்பாக மாற வேண்டியக் கட்டாயம் நமக்கு உள்ளது. வரலாறின் ஒவ்வோரு காலக் கட்டத்திலும், நம் வாழ்வியலின் சூழல் மாற மாற நம் கல்விக் கட்டமைப்பு மாற்றம் அடைந்து வருகிறது.

பண்டைக்காலத்தில் குடும்பத் தோழிலைக் கற்றுக் கொடுக்கும் கட்டமைப்பு அரசு சார்ந்த குருகுலக் கல்வியாக மாறி தொழில் புரட்சி சார்ந்த் கல்வியாக இன்று தற்சார்பு சார் கல்வியாக மாறி உள்ளது. அவற்றை பற்றிய அறிமுகமே இந்நூல்.

Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580151708389
Kalvi 4.0 Arimugam

Read more from Suganthi Nadar

Related to Kalvi 4.0 Arimugam

Related ebooks

Reviews for Kalvi 4.0 Arimugam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalvi 4.0 Arimugam - Suganthi Nadar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கல்வி 4.0 அறிமுகம்

    Kalvi 4.0 Arimugam

    Author:

    சுகந்தி நாடார்

    Suganthi Nadar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/suganthi-nadar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கல்வி 4.0 அறிமுகம்

    கல்வியின் எதிர்காலம் கணினியா?

    கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்

    தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளும் கல்வியும்

    இன்றைய கல்வியின் துணைக்கருவிகளாக தொழில்நுட்பம்

    கல்வியியலின் மற்றப்பரிணாமங்களும் கல்வி 4.0வின் தேவையும்

    2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி

    இயற்கை வளங்களில்லா உலகில் கல்வி என்பது என்ன?

    டாவோஸ் செயல்திட்டமும் கல்வி 4.0ம்

    கல்வி 4.0 அறிமுகம்

    ஒரு தனிமனித பொருளாதார்த்தை மேம்படுத்தும் கல்விக் கட்டமைப்பு கண்டிப்பாக மாற வேண்டியக் கட்டாயம் நமக்கு உள்ளது. வரலாறின் ஒவ்வோரு காலக் கட்டத்திலும், நம் வாழ்வியலின் சூழல் மாற மாற நம் கல்விக் கட்டமைப்பு மாற்றம் அடைந்து வருகிறது, பண்டைக்காலத்தில் குடும்பத் தோழிலைக் கற்றுக் கொடுக்கும் கட்டமைப்பு அரசு சார்ந்த குருகுலக் கல்வியாக மாறி தொழில் புரட்சி சார்ந்த் கல்வியாக இன்று தற்சார்பு சார் கல்வியாக மாறி உள்ளது.

    ஒருவர் தன்னுடைய சூழ்நிலையில் வல்லுனராகத் திகழ வேண்டுமென்றால், கல்விக் கூடங்களில் கற்றக் கல்வி மட்டுமே இன்றைய அளவில் போத்ஜாது.

    தேர்வு நடத்தி மதிப்பெண் கொடுத்து, மாணவர்களின் அறிவுத்திறனை, செயல் திறனீ மதிப்பிடுவது மட்டுமே அவர்களை வல்லுனராகவும் காட்டி விடாது.

    ஏன் வல்லுனராக இருக்கும் ஒருவர் வாழ்வியியல் பொருளாதாரத்தில் வெற்றி பெற்றவராகவே இருந்தாலும். தினமும் புதியதாய்க் கற்றுக் கொள்ள வேண்டிய கணினி யுகத்தில் நாம் இருக்கின்றோம்.

    அதுவுமம் கல்வித் துறையில் இருக்கும் நாம் நிச்சயமாய் இன்று தினம் ஒரு புதுனையை நம் அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டே இருக்கின்றோம்.

    கல்வி நிலையங்களை சார்ந்த கல்வியை மட்டுமே கொண்டு இன்று வாழ்க்கைப் பொருளாதாரத்தில் வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது. ஒரு கல்வி நிலையத்தில் எந்த அளவு ஒருவர் தன் நேரத்தையும் உழைப்பையும் சிந்திக் கல்விக் கற்றாலும், கல்வி நிலையங்களுக்கு வெளியே அவர் தன்னுடைய பொருளாதார வளர்ச்சிக்காகவும் சுய தேடல் மூலம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. கற்றல் ஒவ்வோரு உயிரினத்திற்கும் அது வாழும் ஒவ்வோரு நொடியும் நடந்து கொண்டு இருக்கின்றது. இவ்வகை கற்றல் கற்பித்தல் அவ்வுயிரினத்தை சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொள்ள உதவுகிறது. உலகில் உள்ள அனைத்து உயிரின்ங்களிலும் உயர்ந்து உன்னத நிலையில் இருக்கும் மனித இனம், இயற்கையாக்க் கொடுக்கப்பட்டு இருக்கும், சூழ்நிலையை தன்னுடைய புத்தாக்க சிந்தனைக்கும் கற்பனா சக்திக்கும்,வாழ்க்கை வசதிக்கும் ஏற்ப தன் வழ்ழ்வியியல் சூழ்நிலையை மாற்றிக் கொள்ளக் கூடிய செயல் திறன் வாய்ந்தவர்கள். அதே நேரத்தில் மாறக்கூடிய சூழலில் பொருந்தி வாழ பொது மக்களுக்கு உதவி செய்வதே கல்வி என்றக் கட்டமைப்பு. இக்கட்டமைப்பு கணினித் தொழில்நுட்பம் சார்ந்த வாழ்க்கை முறையினால் பல பரிணாமங்களைக் கொண்ட தாக மாறி விட்டது, நம் வாழ்வின் பரிணாமங்களையும் மாற்றிக் கொண்டு இருக்கின்றது.இந்த வாழ்வியியல் மாற்றங்களின் எதிர்கால எதிரொலி எவ்வாறு இருக்கும்?, அந்த எதிரொலியையை எதிர் கொள்ள பொது மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறும் கல்விக்கான கட்டமைப்பே கல்வி 4.0.

    காலம் காலமாக கல்வி என்பது, மாணவர்களின் கற்றல் திறனையும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் மதிப்பீடு செய்யும் வகையில் இருந்து. மாணவர்கள் கவனம், கற்றல்,நினைவாற்றல் செயல் திறன், பயிற்சி. நேர மேலாண்மை என்றத் திறமைகளை மாணவர்கள் அடிப்படையாக்க் கொண்டு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம்மிடையே இருக்கின்றது அது போல ஆசிரியர் என்பவர், தன்னுடையதுறையின் பொருண்மையில் தேர்ந்தவராக இருக்க வேண்டும். மாணவர்களை அன்போடும் பண்போடும் வழி நட த்திச் செல்ல வேண்டும். நேர மேலாண்மைக் கொண்டவராக இருக்க வேண்டும், பல் துறையில் பொது அறிவும் ஈடுபாடும் கொண்டு இருக்க வேண்டும் சுய முன்னேறத்தைலும் தொழில் முறைமேம்பாட்டுக் கற்றலிலும் முனைப்புடன் இருக்க வேண்டும். என்ற எதிர்பார்ப்பு நம்மிடையே இருக்கின்றது.

    நம் சூழ்நிலை மாற்றங்களும் , ஒவ்வோரு ஆசிரியரின் செயல்திறனும், ஒவ்வோரு மாணவரின் செயல் திறனும் தனித் தன்மை வாய்ந் த்து. எனவே கல்வியின் பொருண்மையை ஆசிரியர்கள் , மாணவர்கள் சார்ந்த ஒன்றாகப் பார்க்காமல் .அதை தனிப்பட்ட முறையில் வரையறுக்க வேண்டும் என்றால் கல்வி என்பது. ஒருவருகுத் தெரியாத ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1