Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

108 Pearls of Wisdom
108 Pearls of Wisdom
108 Pearls of Wisdom
Ebook464 pages2 hours

108 Pearls of Wisdom

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

டாக்டர் கொர்ரபாடி, நாம் அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய , ஆனால் அதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க முடியாத பண்புகளைப் பற்றி விவாதிக்கிறார். அப்பண்புகளாவன: நேரம் தவறாமை, அடக்கம், பண்புடைமை, முன் எச்சரிக்கையாய் இருத்தல் தன்னைத் தானே மேற்பார்வையிடல், விடாப்பிடியாய் இருத்தல், மன்னித்தல், உறுதியாய் இருக்கும் தன்மை, முயற்சி மற்றும் நகைச்சுவை உணர்வோடு இருத்தல். இந்தப் பண்புகள் இந்நிய இளைஞர் மத்தியில் திறன்களை மேம்படுத்த பிரதமரால் உருவாக்கப்பட்ட தேசியத் திறன் மேம்பாட்டு வாரியத்தின் பண்புகளை ஒத்து இருக்கின்றன. தி இந்து.
Languageதமிழ்
PublisherDiamond Books
Release dateSep 15, 2022
ISBN9789352782185
108 Pearls of Wisdom

Related to 108 Pearls of Wisdom

Related ebooks

Reviews for 108 Pearls of Wisdom

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    108 Pearls of Wisdom - Dr. Raghu Korrapati

    1. உனது முகத்தில் புன்னகையைப் பூத்திடு

    (Having a Smile on your Face)

    புன்னகை என்பது ஒரு வளைவு.

    ஆனால் அது எல்லாவற்றையும் நேராக்கும்

    - பில்லிஸ் டில்லர்

    உண்மையான புன்னகைக்கு விலையே இல்லை. இது, பெறுபவரின் மனநிலையை உயர்த்துவதோடு, கொடுப்பவரின் மனநிலையையும் அவ்வாறே செய்கிறது. புன்னகை பிறருக்கும் தொற்றக்கூடியது. யாராவது உன்னை நோக்கிப் புன்னகைத்தால், என்னதான் உனக்கு அக்கரையில்லாதிருந்தாலும், நீ திரும்பப் புன்னகைப்பாய், பிறருக்கு உன்மேல் நல்ல கருத்து ஏற்பட வேண்டுமானால், அது கல்லூரியாகவோ, சமுதாயமாகவோ அல்லது பன்னாட்டு நிறுவனச் சூழலோ, எதுவாக இருந்தாலும் அங்கே நீ முதலில் புன்னகை செய்யும் வாய்ப்பை எடுத்துக் கொள்.

    புன்னகை என்பது முகத்தின் வெளிப்பாடு என்றாலும் முகத்தின் இருமுனையிலும் சில தசைகள் நெகிழ்வதால் உண்டாகுதல் என்றாலும், இது ஒருவர் மீதோ அல்லது பலரின் மேலோ ஏற்படுத்தும் விளைவு மகத்தானது. ஒவ்வொரு முறையும் நேர்மறையில் நீ இருப்பதற்குப் புன்னகை உதவுகிறது. ஒரு புன்னகையை விடுவதால் எந்த ஒரு எதிர்மறையும் விளைந்திடாது. எந்த ஒரு சவாலையும் எடுத்திடும் போதும், முதலில் உன்னுடைய முகத்தில் ஒரு வலுவான புன்னகைையை ஏற்படுத்து. உடனடியாக ஒரு நல்ல உணர்வு உனக்குத் தோன்றும். நாம் புன்னகைக்கும் போது, நமது மூளை மற்ற உறுப்புகளுக்கு ‘வாழ்க்கை விசித்திரமானது’ என்ற ஒரு செய்தியை அனுப்புகிறது.

    ஒரு வேலைக்காக இரண்டு சமமான தகுதி வாய்ந்தவர்கள் முயற்சி செய்தால், முகத்தில் புன்னகையைக் கொண்டிருப்பவன், ஒரு நல்ல குழுவின் பணியாற்றுபவனாகவும், எளிதாகப் பணிகளை ஆற்றுபவனாகவும் கருதப்படுவான். யார் இந்த வேலையைப் பெற்றிடுவார் என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? எனவே நீங்கள் ஒரு சிறு புன்னகை செய்வதால் பலவற்றைப் பெறுவீர்கள். ஏனென்றால், புன்னகை, சொற்களைக் காட்டிலும் மதிப்பு வாய்ந்தது. சில நேரங்களில், பல சொற்களால் தோற்றுப் போனவை, ஒரு புன்னகையால் உனக்கு, நல்ல விளைவுகளைத் தரும்.

    அழகில்லாத புன்சிரிப்பை இதுவரை நான் பார்த்ததில்லை. ஆனாலும், புன்னகைக்கும் போது நாம் நல்லவராயிருக்க வேண்டும். உங்கள் விழிப்புணர்வைத் தூண்ட இது ஒரு வழியாகும். உன்னைச் சுற்றி, நல்லவர்களும், நெருங்கிய இணக்கமானவர்களும் உள்ளார்கள் என்பதை உணர்ந்திடு. அங்கு அவர்களிடம் புன்னகை உள்ளதா? உடனே நீ புன்னகையை வரவழைக்க முயற்சி செய்து, அவர்களுக்குச் சமமாக இரு புன்னகைப்பவர்களின் புன்னகை இருதயத்திலிருந்து ஆரம்பித்து, கண்கள் வழியாக வெளிவந்து வாயில் மிளிர்வதைக் கவனி.

    2. நாணயம் (Honesty)

    அறிவு என்னும் புத்தகத்தின் முதல் பக்கம் நாணயம்

    - தாமஸ் ஜெப்பர்சன்

    பன்னாட்டு நிறுவனங்களில் வேலை தேடிவரும் பல இளைஞர்கள் ஒரு கேள்விக்குப் பதிலளித்திருக்க முடியாதென எண்ணுகிறேன்- ஏன் ஒருவர் நாணயமாய் இருக்கவேண்டும்? ஒருவர் வாழ்க்கையில் முன்னேற அவர் ஏன் நாணயமாயிருக்க வேண்டுமென்பதை நான் உங்களுக்குச் சிறிது விளக்குகிறேன்.

    ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரபல்யமான ஒரு பத்திரிகையாளரை நான் அறிவேன். ஒருநாள் நான், அவருடன் நேர்முகத் தேர்வுகள் குறித்து ப் பேசிக் கொண்டிருந்தேன். உங்கள் பத்திரிகை நிறுவனத்தின் முதலாளி நேர்முகத் தேர்வில் உங்களிடம் என்ன கேட்டார் என்று கேட்டேன். நீ எந்தப் புத்தகங்கள் மற்றும் வெளியீடுகளை நித்தமும் படிப்பாய்? என்ன பதில் சொன்னார் என்பதை அறிய விரும்பினேன். நான் அவரிடம் உண்மையைச் சொன்னேன். உண்மை என்னவென்றால் நான் வழக்கமாகப் படிப்பது ‘பிளேபாய்’. இதைத்தான் அவரிடம் சொன்னேன். அவரின் பத்திரிகையின் பெயரைச் சொல்லவில்லை. ஆனாலும், அவர் எனக்கு வேலை தந்தார் என்று சொன்னார். இந்தச் செய்தித் தாளின் முதலாளி நல்லதையே செய்தார். அவர், எனது நண்பரின் நாணயத்திற்குப் பரிசளித்துள்ளார். என் நண்பர் பின்பு ஒரு பிரபலமான பத்திரிகையாளராய் ஆனார். இது எப்படி நடந்தது? நாணயம் எப்போதும் உதவிடும். ஏன் பணியாளர்கள் நாணயத்துடன் இருக்கிறார்கள் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படலாம். இதை மேலும் உணர்ந்திட, நீங்கள் பள்ளியில் படித்த ஒரு அரசனின் புது ஆடைகள்" என்ற கதைப் புத்தகத்தை மறுபடியும் ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும்.

    இப்போது உங்களுக்காக ஞாபகப்படுத்தி அதைச் சொல்கிறேன். ஒரு காலத்தில், ஒரு மன்னன் இருந்தான். அவன் புதுவிதமான உடைகளை மிகவும் விரும்புபவன். இதை அறிந்து கொண்ட இரண்டு ஏமாற்றுக்காரர்கள் அரசருடைய முட்டாள்தனமான புதுவித ஆடைகளின் மேல் கொண்டுள்ள ஆசையைப் பயன்படுத்த மன்னரின் அரச சபைக்கு வந்தனர். வியாபாரத் திறமை கொண்ட அந்த இரு ஏமாற்றுப் பேர் வழிகளும், ஆடம்பரமிக்க, ஓரளவு முட்டாள்தனமுள்ள அரசனை நம்ப வைத்துப் பெருமளவில் தங்கக் காசுகளைப் பெற எண்ணி, ‘கண் பார்வைக்குப் புலனாகாத, மிகுந்த சன்னமான இழைகளால் பின்னப்பட்ட புத்தாடை ஒன்றை அரசருக்குக் கொண்டு வந்திருக்கிறோம். அந்த ஆடையைப் பெருமைக்குரிய மற்றும் அறிவுடையவர்- களால்தான் பார்த்திட முடியும்" என்று கூறினர். அதை வஞ்சனையற்ற மன்னர் அவர்களிடமிருந்து வாங்கினார். அதைத் தைத்து, தையல்காரர் மன்னரிடம் தந்தார். அவர் பெருமிதத்தோடு அதை அணிந்து, ஆடையில்லாக் கோலத்தில் வீதியில் வலம் வந்தார். மன்னர் எந்த ஆடையும் அணியாது இருக்கிறார் என்பதைத் துணிவோடு யாரும் சொல்லவில்லை. எல்லோரும் மன்னரின் விசித்திரமான மயக்க நிலையைக் (ஆடை எதுவும் அணியவில்லை என்ற நிலையை) கூறினால் தண்டனை கிடைக்கும் என்றெண்ணி, ஆடை நன்றாயிருக்கிறதென்றனர். ஆனால் சிறிய பையன் ஒருவன் அந்த உண்மையை (ஆடையில்லாதிருப்பதை) உரத்த குரலில் கூறினான். அப்போது தான் எல்லோரும் ஒத்துக் கொண்டனர். பின்பு மன்னருக்குச் சரியான நிலையை எடுத்துரைத்தனர்.

    நாணயத்தோடு நினைத்துப் பாருங்கள். நாணயத்தோடு எண்ணிப் பார்க்கவில்லையெனில், நீ நாணயமாய் இருக்க முடியாது. ஆராயாத முடிவு மற்றும் ஒன்றைப் பற்றி முன்னமேயே ஏற்படுத்திக் கொண்ட முடிவு ஆகியவற்றால் உண்மையிலேயே உண்மை என்பது இதுதான் என்பதை எடுத்துக் காட்ட இயலாது. எதையும் பார்த்த உடனேயே தீர்மானிக்காதே. நீ சிலவற்றைப் படிக்கும்போது, பார்க்கும்போது அல்லது கேட்கும்போது உடனே ஒரு கருத்துக்கு வந்திடவேண்டாம். உண்மையை வெளிப்படுத்த மற்றும் புரிந்து கொள்ள நீ ஒரு செயலைச் செய்திடும்போது, ஒரு உண்மையை உணரவேண்டும். நாம் எண்ணுவதில் மற்றும் நாம் அறிவதில் பல உண்மையானவைதான் என்பதைக் காட்டிலும், அந்தக் கருத்தினை நாம் கொண்டுள்ளோம் என்பது தான் உண்மை. நீ உனது கண்களால் காணாதவற்றை, உனது வாயால் அவற்றிற்குச் சாட்சி சொல்லாதே என்பதை நீ மனதில் கொள்.

    ஆரம்பத்தில் நாணயஸ்தனாக வாழ்க்கையின் சாதாரண விசயங்களில் நடைமுறைப்படுத்து. ஆனால் உலகில் இந்த உண்மை எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. ஒரு சில ‘சென்ட்’ நாணயங்கள் தனக்குச் சொந்தமானதில்லையென்று, ஆப்ரஹாம் லிங்கன் திருப்பிக் கொடுத்த நாணயமே, அவர் புகழ் பெற்றவராய் மாறுவதற்கான உண்மையாகும். அவருக்கு அதனாலேயே ‘நாணயமான ஆப்’ என்ற பட்டப்பெயரைத் தந்தது. சிறிய விசயங்களுக்குக் கூட நாணயத்தை நீ கைக்கொண்டால், பொதுவாகவே நீ நாணயமாக இருப்பது சாதாரணமாகி, அதுவே பின்பு ஒரு பழக்கமாகி விடும்.

    முடிவாக, நீ எப்போதும் அன்பாக இரு. நல்ல நீண்ட தொலை தூரப் பார்வையிலிருந்து எப்போதும் உண்மையைக் கொண்டிரு. அடிக்கடி உண்மை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதைக் காணுகிறேன். அத்தோடு இந்த ஆயுதம் சிலநேரம் சுற்றியிருக்கக்கூடிய மகக்ளுக்குத் துன்பத்தையும், கொடுமையையும் கொடுப்பதாய்க் காணுகிறேன். உன்னைச் சுற்றியுள்ள பலர் இந்த ஆயுதத்தைக் கொள்ளாதவர்களாய் இருக்கலாம். எனவே கவனமாக அடியெடுத்து நடந்து செல். பொய் சொல்லாமல் இருப்பதும், உன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரிடமும் உண்மையைத் திணிப்பதும் ஒன்றல்ல. நீ நாணயத்தோடு தனித்திரு. மற்றவர்களோடு நாணயமாயிரு. எப்போதும் அடுத்தவர் நிலையில் நின்று இரக்கம் காட்டும் தொலைப் பார்வையைக் கைக்கொள்.

    ஒரு பணியாளராய் நீ உன்னுடைய நாணயத்தால் மட்டுமே உனது நிறுவனத்திற்கு உன்னால் முடிந்த நன்மைகளைச் செய்யமுடியும். நாணயமுள்ளவன் பயமின்றி உண்மை கூறுவான். இதனால் நீ உன் நிறுவனத்திற்குக் கீழ்ப்படியாதவனாகவும் அல்லது உனது மேலாளரிடம் ஒரு பொருள் பற்றி முடிவில்லாத வாதங்களில் ஈடுபடவேண்டுமெனவும் சொல்லவில்லை. பெரியவர்கள் சொல்வது போல, கருத்துக்களின் முரண்பாடு, ஒரு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். கருத்துக்களும், ஆலோசனைகளும் திறந்த மனதோடு சொல்லப்படும் போதுதான், ஒரு நிறுவனம் முன்னேற்றம் பெற முடியும். இந்த உண்மையின் மதிப்பினை அளவிடத் தெரியாத ஒருவனும் ஒரு வேலையைப் பெற்றிட இயலும். ஆனால் அந்த வேலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அவன் மிகவும் கஷ்டப்பட வேண்டியதிருக்கும்.

    3. தகவல் தொடர்பு (Communication)

    தகவல் தொடர்புதான் என்னுடைய மதம்

    - டாக்டர் ரகுகொரப்பாடி Ph.D.

    குறிப்பிட்ட சில அடிப்படையான நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளைக் கொண்டதே மதமாகும். இது இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் புத்த மதத்தினராலும் அல்லது பலதரப்பட்ட அதிக எண்ணிக்கையிலுள்ள மனிதர்களாலும் பொதுவாக ஒப்புக் கொள்ளப் பட்டதாகும்.

    இந்த உலகம் அல்லது உயிர், தோன்றிடுவதை விளக்குவதற்காக அல்லது இந்த வாழ்க்கையின் அர்த்தத்தைத் தருவதற்காகப் பல மதங்கள் பலவிதக் கதைகளை, குறிகளை, வழக்கங்களை மற்றும் புனிதச் சடங்குகளையும், பழக்கங்களையும் கொண்டுள்ளன.

    தகவல் தொடர்பை ஒரு மதமாக எண்ணிப் பாருங்கள். ஒருவர் ஒரு கோவிலுக்கோ, மசூதிக்கோ அல்லது கிறிஸ்தவக் கோவிலுக்கோ சென்று வழிபட்டு, தகவல் தொடர்பையும் இதோடு வளர்த்துக் கொள்கிறார். உங்களது மதத்தினை வளர்த்திடுவது போல், தகவல் தொடர்பையும் வளர்த்திடுங்கள். சமூக, குடும்ப, அலுவலகம் போன்ற உங்களின் வாழ்வின் முக்கியப் பகுதிகளில் பங்கு கொண்டோர்களைத் தேர்வு செய்யுங்கள். ஒரு ‘தகவல் தொடர்புச் செயல் திட்டத்தை’ முக்கியமாக ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு உங்கள் மனதிலும், செயற்பாட்டிலும் தயாரித்து, வளர்த்துக் கொள்ளுங்கள்.

    பலவிதமான தகவல் தொடர்புகள்

    1. பேசுகின்ற தகவல் தொடர்பு

    மக்கள் முகத்துக்கு முகமாக- நேரடியாகத் தகவல் தெரிவிப்பது ஒரு வகை. இதுவே பேசுகின்ற தொடர்பு. இதில் மிக முக்கியமானவை, சத்தம் (ளுழரனெ), வார்த்தைகள், பேச்சு மற்றும் மொழி போன்றவையாகும்.

    2. பேசாத தகவல் தொடர்பு (Non-verbal)

    வார்த்தைகள் இல்லாச் செய்திகளை அனுப்பியும், பெற்றுக் கொள்தலும், பேசாத தகவல் தொடர்பாகும். இவ்வாறான செய்திகள் சைகையாலும், உடல் மொழியாலும் அல்லது தோற்றப்பாங்காலும், முகக் குறிப்பாலும் அல்லது கண் பார்வையாலும் தெரிவிக்கப்படுகின்றன.

    3. எழுதிய தகவல் தொடர்பு (Written)

    எழுதிய குறிகளாலும் மற்றும் எழுத்துக்களாலும் தகவலைத் தெரிவிப்பதே எழுதிய தகவல் தொடர்பாகும்.

    எந்தத் தகவலைத் தெரிவிப்பதற்கும் திட்டமிட்டுச் செம்மையாகச் செய்திட வேண்டும். அவ்வாறு தரும் தகவல் மாறுபடாத தன்மையுடனும், வருவதை உணர்த்துவதாகவும் மற்றும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

    மாறுபடும் தன்மை நம்முடைய அன்றாட வாழ்வு முழுவதும் வெளிப்படையாக இருந்து கொண்டுதானிருக்கிறது. ஆனாலும் மக்கள் விரும்புவது மாறுபடாத தன்மையையே. குறிப்பாக வாணிபம் செய்யும் மக்களிடமிருந்து நாம் இதை எதிர்பார்க்கிறோம். வெற்றி பெற்றவர்கள் அவர்களுடைய நிலை எதுவாக இருந்தாலும், அவர்கள் எது செய்தாலும் மாறுபாடில்லாச் செயலினைச் செய்து வருபவர்களே!

    4. பொறுமை (Patience)

    எப்போதும் அமைதியாகவும், முரட்டுத்தனமில்லாமலும் எல்லாச் சூழ்நிலையிலும் இருப்பவர்களைக் காட்டிலும் மற்றவர்கள் ஒருவித நன்மையையும் பெற்றிட முடியாது.

    - தாமஸ் ஜாப்பர்சன்

    வாழ்க்கையின் குழப்பங்களும், சவால்களும் பொறுமையை மேற்கொள்ளச் செய்கின்றன. ஆனாலும் வாழ்க்கை ஓட்ட வேகத்தில் நாம் மிகக் குறைந்த பொறுமையையே கடைப்பிடிக்கிறோம். பொறுமை நமக்கு சுயக் கட்டுப்பாடு பெற்றிட, நாம் அதிக அன்போடிருக்க, மற்றும் நாம் விரும்புவதை அடைய உதவுவதால், அது மிகவும் அவசியமாகும். நம் உடலுள்ள ஒரு தசை போல், தகுந்த பயிற்சியின் மூலம் பொறுமையின் சக்தியை நாம் கையகப்படுத்த முடியும்.

    ‘பொறுமை என்பது ஒரு கற்புநிலை’ என்ற இந்த வார்த்தை, பொறுமையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

    ‘கற்புநிலை’ என்பது ஒரு தனித்தன்மை அல்லது மிகச்சிறந்த ஒரு நெறியாகும். சிறந்த நெறியுள்ள மனிதனாய் வாழத் தேவையான அடிப்படையாக, இது மதிப்பிடப்படுகிறது. நல்ல குடிமகனாக நம்மை மாற்றிடப் பொறுமையால் முடியும். இந்த வார்த்தையின் விளக்கம் யாதெனில், ‘தன்னடக்கத்தாலும், நிதானத்தாலும் தாமதத்தைப் பொறுத்துக் கொள்ளுதல்’ ஆகும். ‘பொறுமை ஒரு கற்புநிலை’ என்று நாம் சொல்லும்போது, நாம் நமது நன்நெறியின் மதிப்பை வெளிப்படுத்துகிறோம். மேலும் மனித அடிப்படைத் தத்துவத்தின் அடிக்கல்லாக உள்ள பொறுமையின் முக்கியத்துவத்தை வெளிச் சொல்லுகிறோம். மகிழ்ச்சியோடு இருப்பதற்குப் பொறுமை மிகவும் தேவையானது. அதனால்தான் ‘பொறுமை ஒரு கற்புநிலை’ என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

    பொறுமையை வளர்ப்பதற்கான வழிமுறைகள்

    ஏன் இவ்வாறான வேகத்தில் இருக்கிறாய் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய். நாம் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் போதோ அல்லது நெருக்கடியான பணியில் ஈடுபடும் போதோ நமது பொறுமையை இழக்க நேரிடுகிறது. நெருக்கடியான நேரத்தில் உங்களுடைய இயற்கையான உணர்வை நீங்கள் மாற்ற முயற்சிக்கும் முன்பு, நிதானமாக உட்கார்ந்து, செய்ய வேண்டிய பணிகளின் பட்டியலை மாற்றி அமைக்க வேண்டும். ஒரு நேரத்தில், ஒரு வேலையை மட்டும் செய்திடுமாறு உங்களின் பணிகளை முடிந்த அளவு பிரித்துப் பரப்பிக் கொள்ளவேண்டும். உன்னால் முடியுமாயின் சில பொறுப்புக்களைப் பிறருக்குப் பகிர்ந்து கொடு. இதுவே உன்னுடைய பொறுமையைச் சோதிக்கும் செயலாகும். எப்படியும் உனது வேலைப் பழுவை பிறருக்குப் பகிர்ந்து தரும் பண்பைக்கற்றுக்

    Enjoying the preview?
    Page 1 of 1