Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamil Ilakkiyathil Athisaya Seithigal
Tamil Ilakkiyathil Athisaya Seithigal
Tamil Ilakkiyathil Athisaya Seithigal
Ebook216 pages1 hour

Tamil Ilakkiyathil Athisaya Seithigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1993-ம் ஆண்டு முதல் மேகம் பத்திரிகையில் வெளியான கட்டுரைகளே இதில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. லண்டனிலிருந்து வெளியான மேகம் பத்திரிக்கையை டாக்டர் இந்திரகுமார் நடத்தி வந்தார். அவ்வப்போது போன் செய்து உங்களுக்காக பத்திரிக்கை அச்சிடுவதை நிறுத்தி வைத்துள்ளேன் என்பார். அந்த உந்துதலில் உதித்த கட்டுரைகளே பின்னர் நூலாக அச்சேறியது; அத்தோடு லண்டனில் உள்ள சங்கங்களின் மலர்களில் எழுதிய கட்டுரைகளும் இதில் அடக்கம். சங்கத் தமிழ் இலக்கியத்திலுள்ள பல்வேறு துறைச் செய்திகளை விஞ்ஞானப் பின்னணியுடன் சுவையாகக் கொடுத்துள்ளேன்.

Languageதமிழ்
Release dateFeb 13, 2023
ISBN6580153509535
Tamil Ilakkiyathil Athisaya Seithigal

Read more from London Swaminathan

Related to Tamil Ilakkiyathil Athisaya Seithigal

Related ebooks

Reviews for Tamil Ilakkiyathil Athisaya Seithigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamil Ilakkiyathil Athisaya Seithigal - London Swaminathan

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்

    Tamil Ilakkiyathil Athisaya Seithigal

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. தமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள்

    2. கரிகால் சோழனுக்கு பிரிட்டிஷ் நீதிபதிகளுடன் தொடர்பு உண்டா?

    3. தமிழன் கண்ட காலை உணவு

    4. 'ஸ்டிரா'வைக் கண்டுபிடித்தது யார்?

    5. பருவக் காற்றைக் கண்டுபிடித்தது தமிழனா? கிரேக்கனா?

    6. வியட்நாமை ஆண்ட பாண்டிய மன்னன் யார்?

    7. சங்கப் புலவர் கபிலர், ஒரு தாவரவியல் நிபுணர்

    8. வேளிர் குலத்தின்1000 ஆண்டு பழமை: கபிலர் தரும் அதிசய தகவல்

    9. தமிழர்கள் கண்டுபிடித்த ஆமை அதிசயம்!

    10. இந்தியர்களின்/தமிழர்களின் அற்புத கணித அறிவு! 18, 108,1008, 10008

    11. பெண்களின் உடை: தமிழனின் கண்டுபிடிப்பு

    12. பொற்கைப் பாண்டியனின் செயற்கைக் கை

    13. பழந்தமிழர்களின் விநோத தண்டனைகள்

    14. மூன்று குரங்கு பொம்மை தோன்றியது எங்கே?

    15. தலைமுடியைக் கருப்பாக வைத்திருப்பது எப்படி?

    16. விலங்குகள் பற்றிய அதிசயச் செய்திகள்

    17. 2000 ஆண்டுகளுக்கு முன் இத்தாலி - தமிழக உறவு

    18. நாள், கிழமையைக் கண்டுபிடித்தது யார்? தமிழனா? எகிப்தியனா?

    19. தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு

    20. நெல்லிக்கனி மகிமை

    21. நல்லாட்சி நடந்தால் மானும் புலியும் ஒன்றை ஒன்று தாக்காது

    22. வள்ளுவர் சொன்ன பேய்க் கதை

    23. வள்ளுவர் கூறும் அதிசயச் செய்திகள் உண்மையா?

    24. வள்ளுவர் - சாக்ரடீஸ் – சிவபெருமான் இவர்கள் மத்தியில் என்ன தொடர்பு?

    25. 'புருஃப் ரீடர்' முருகப் பெருமான்

    26. சிவபெருமானின் 'ரெகமன்டேஷன்' லெட்டர்

    27. தமிழர்களின் சோதிட நம்பிக்கை

    28. பழந்தமிழ் நாட்டில் ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள்

    29. தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!!

    30. தமிழ் - ஒரு கடல்

    31. திருமூலரும் தீர்க்க ரேகையும்

    32. பஞ்சை எரிக்கும் 'லென்ஸ்' பற்றி திருமூலர்

    33. சம்பந்தரும் ஆண்டாளும் மாயமாக மறைந்தது எப்படி?

    34. கண்ணகி மதுரையை எரித்தது எப்படி?

    35. அலாவுதீன் அற்புத விளக்கும் ஞான சம்பந்தரும்

    36. நாகரத்னம் உண்மையா?

    37. தமிழ்த் தாத்தா உ.வே.சா.

    38. இந்தியா ஒரு அதிசய நாடு

    39. மறைந்த அதிசயங்களை கண்டுபிடிக்க கடவுள் அனுப்பிய தூதர்கள்

    40. நாம் காணும் கனவுகள் பலிக்குமா? ஒரு டாக்டரின் ஆராய்ச்சி

    41. அறிவியல் உலக அதிசயங்கள் ஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்

    முன்னுரை

    ‘தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்’ என்ற இந்த நூல் 2009 ம் ஆண்டில் அச்சிட்ட புஸ்தகமாக வெளியிடப்பட்டது. அதிலுள்ள சில தவறுகளைத் திருத்தி இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளியிடுகிறேன். அந்த நூல் வெளியாவதற்கு முன்னரே 1993-ம் ஆண்டு முதல் மேகம் பத்திரிகையில் வெளியான கட்டுரைகளே இதில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. லண்டனிலிருந்து வெளியான மேகம் பத்திரிக்கையை டாக்டர் இந்திரகுமார் நடத்தி வந்தார். அவ்வப்போது போன் செய்து உங்களுக்காக பத்திரிக்கை அச்சிடுவதை நிறுத்தி வைத்துள்ளேன் என்பார். அந்த உந்துதலில் உதித்த கட்டுரைகளே பின்னர் நூலாக அச்சேறியது. அத்தோடு லண்டனில் உள்ள சங்கங்களின் மலர்களில் எழுதிய கட்டுரைகளும் இதில் அடக்கம். சங்கத் தமிழ் இலக்கியத்திலுள்ள பல்வேறு துறைச் செய்திகளை விஞ்ஞானப் பின்னணியுடன் சுவையாகக் கொடுத்துள்ளேன். முதல் எடிசன் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததால் இப்பொழுது ஈ புஸ்தகமாக வெளிவருகிறது. என்னுடைய 90 க்கும் மேலான புஸ்தகங்களை வெளியிட் ட புஸ்தகா.காம் அமைப்புக்கு என் நன்றி உரித்தாகுக. இதுவரை வெளியான புஸ்தகங்களை வாங்கி எங்களை ஊக்குவித்த வாசகர்களுக்கும் நன்றி. இந்த நூலிலுள்ள பொருளடக்கத்தைப் பார்த்தாலேயே மற்றவர்கள் யாரும் தொடாத விஷயங்களும் இதில் இருப்பதை வாசகர்கள் உணர்வார்கள்.

    லண்டன் சுவாமிநாதன்

    பிப்ரவரி 2023

    1. தமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள்

    புத்தகத்தின் உள்ளே நீங்கள் காணப்போகும் பல சுவையான செய்திகளின் தொகுப்பு இதோ :

    1.கரிகால் பெருவளத்தான் என்ற சோழ மன்னன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டை ஆண்டான். இமயம் வரை சென்று அங்கே புலிக் கொடி பொறித்தான். ஒரு நாள் அவனது அவைக்கு ஒரு வழக்கு வந்தது. கரிகாலன் இளம் வயதில் பட்டம் ஏற்றவன். வழக்கை விசாரிக்கும் மன்னன் ஒரு இளைஞன் என்பதைக் கண்ட வாதிக்கும், பிரதிவாதிக்கும் முகம் கோணியது. இந்தச் சிறுவனா இந்தச் சிக்கலான வழக்கைத் தீர்க்கப் போகிறான் என்று எண்ணித் தயங்கினர். அகத்தின் அழகு முகத்தில் தெரிந்ததைக் கண்ட கரிகாலன், அவர்களை மறுநாள் வரும்படி பணித்தான்.

    மறுநாள், தானே நரை முடி தரித்தான். ஒரு முதியவர் போல வேடமணிந்து வந்து அமர்ந்தான். ஒரு முதியவரை வழக்கை விசாரிக்க அனுப்பியிருக்கிறான் மன்னன் என்று கருதிய வாதியும், பிரதிவாதியும் அவர்களுடைய வழக்கை வாதப் பிரதிவாதங்களுடன் எடுத்துரைத்தனர். இருவரும் ஏற்கும் அருமையான தீர்ப்பை வழங்கினான் முதியவர் வேடத்தில் வந்த அந்த நரை முடிச் சோழன்! இது பழைய கதை. இச் செய்தி பொருநராற்றுப்படை, மணிமேகலை, பழமொழி ஆகிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதில் என்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா? இன்றும் கூட பிரிட்டனின் கோர்ட்டுகளில் நீதிபதிகள் வெள்ளை நிற தலைமுடியை அணிந்து தான் தீர்ப்பு கூறுகிறார்கள். கரிகாலன் தோற்றுவித்த நரைமுடி வழக்கும் பிரிட்டன் வரை பரவியது எப்படி? ஆராய்ச்சிக்குரிய விஷயம்!

    2.புறநானூற்றுப் பாடல் ஒன்று. காலையில் பாலில் அரிசிப் பொரியைச் சேர்த்து உண்பதாகக் குறிப்பிடுகிறது. இன்று பிரிட்டனிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் வாழும் மக்கள் காலை உணவில் 'கார்ன் ப்ளேக்ஸ்' (மக்காச் சோளம்), CORN FLAKES ரைஸ் கிரிஸ்பிஸ்' (அரிசிப் பொறி) RICE CRISPIES ஆகியவற்றைச் சாப்பிடுவதைக் காண்கிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் கண்டுபிடித்த காலை தானிய உணவு (BREAKFAST CEREALS) உலகெங்கிலும் பரவியது எப்படி? இது ஆராய்ச்சிக்குரிய பொருள்!

    3.கம்ப ராமாயணத்தில் ஒரு பாடல் வருகிறது. அதில் இளநீரை ஓட்டையுள்ள ஒரு காம்பைக் கொண்டு உறிஞ்சிக் குடித்ததாக ஒரு செய்யுள் வருகிறது. இன்று மேலை உலகில் பர்கர் கிங், மக்டோனல்டு போன்ற உணவகங்களில் கோக் அல்லது பழச்சாறு வாங்கினால் கூடவே ஸ்ட்ராவும் (STRAWS) தருகிறார்கள். குளிர் பானங்களை ஸ்டிரா STRAW வைத்து உறிஞ்சிக் குடிக்கும் வழக்கத்தை தமிழன் தான் உலகிற்குக் கற்பித்தானோ! இது ஆராய்ச்சிக்குரிய விஷயம்!

    4.சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான கலித்தொகையில் ஒரு அதிசயச் செய்தி வருகிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோ இயற்றிய பாடலில், ஒரு மரத்தின் கீழ் பொய் சொல்பவன் நின்றால் அந்த மரம் வாடிவிடும் என்று கூறுகிறார். தற்காலத்தில் அமெரிக்காவில் பொய் கண்டுபிடிக்கும் கருவியைப் (LIE DETECOR ) பயன்படுத்துகின்றனர். பொய் சொல்பவனின் நாடி, இருதயம், மூளை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கிட்டு அவன் பொய்யன் என்பதைக் கண்டுபிடிக்கின்றனர். ஆனால் தமிழனோ இதற்கு ஒரு படி மேலாகச் சென்று ஒரு தாவரம் கூட பொய்யைக் கண்டுபிடிக்க உதவும் என்கிறான். ஆனால் அத்தகைய மரம் எது என்று தெரியவில்லை. வள்ளுவர் கூட 'மோப்பக் குழையும் அனிச்சம்' என்று அனிச்சம்பூ பற்றிக் கூறுகிறார். அதாவது முகர்ந்து பார்த்தாலேயே வாடிவிடுமாம் அனிச்சம். தாவரங்களுக்கும் உயிருண்டு, உணர்ச்சியுண்டு என்பதை 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டு பிடித்தவன் தமிழன். இன்னொரு சங்கப் பாடலில் ஒரு செடியை நெய்யும் பாலும் ஊற்றி, பெற்ற மகளைப் போல அன்பாக வளர்த்த ஒரு பெண் பற்றி ஒரு கவிஞன் பாடுகிறான்!

    5.விண்வெளியில் ஏராளமான கிரகங்கள் உள்ளன. அவைகளில் பூமியைப் போல காற்று மண்டலம் இருந்தால் தான் உயிரினங்கள் வாழ முடியும். பூமிக்கு மேலே - விண்வெளியில் - காற்று மண்டலம் (ATMOSPHERE) இல்லை. இதை பழந் தமிழர் அறிந்திருந்தனர் போலும்! வெள்ளைக்குடி நாகனார் என்ற புறநானூற்றுப் புலவர் (புறம் 35) 'வளியிடை வழங்கா வானம்' என்று குறிப்பிடுகிறார். குறுங்கோழியூர்க்கிழார் (புறம் 20) 'வறிது நிலை இல் காயம்' என்றும் புலவர் மார்க்கண்டேயனார் (புறம் 365). 'வளியிடை வழங்கா வழக்கு அரு நீத்தம்' என்றும் வள்ளுவன் (குறள் 245) 'வளி வழங்கு பூமி' என்றும் இதையே குறிப்பிடுகின்றனர்.

    6.ஒலியும் ஒளியும் (SOUND AND LIGHT ) என்பன இயற்பியலின் இரண்டு முக்கிய விஷயங்கள் என்பதால் பெளதீகம் படிக்கும் மாணவர்களுக்கு இவற்றை இதே தலைப்பில் கற்றுக்கொடுப்பார்கள். மேலும் மின்னல் ஒளி வந்தால் இடி ஒலி கேட்கும் என்பதை எல்லோரும் அறிவர். இதை அறிந்து தானோ என்னவோ தமிழ் மொழியில் மட்டும் ஒலி - ஒளி என்று ஏறத்தாழ ஒரே சப்தமுள்ள இரண்டு சொற்கள் இதைக் குறிக்க பயன் படுத்தப்படுகின்றன. சம்ஸ்கிருதம், ஆங்கிலம் உள்பட எல்லா மொழிகளிலும் இதற்கு வெவ்வேறு சப்தமுள்ள சொற்கள் உள்ளன.

    7.தற்கால பறவையியல் அறிஞர்கள் பறவைகள் குடியேற்றம் (BIRD MIGRATIONS) பற்றி விரிவாக ஆராய்ந்து வருகின்றனர். சில வகைப் பறவைகள் 12,000 மைல் பறந்து வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை சென்று திரும்புகின்றன. இதைக் கண்டுபிடிக்க நவீன உத்திகளைக் (ELECTRONIC TAGGING OR RINGING) கையாளுகின்றனர். பறவைகளின் காலில் தேதியும் ஊர்ப் பெயரும் பொறித்த ஒரு அலுமினிய வளையத்தையோ, மின்னணுக் கருவியையோ மாட்டி விடுவார்கள். வேறொரு நாட்டில் இத்தகைய பறவைகளைக் கண்டால் அந்த வளையத்திலுள்ள செய்திகளையும், அதைத் தாங்கள் பார்த்த தேதி, இடத்தின் பெயரையும் அந்த நாட்டு பறவையியல் அறிஞர்கள் உலக முழுவதுமுள்ள பறவையியல் ஆய்வுக் கூடங்களுக்கு அறிவிப்பார்கள். ஆனால் 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே தென்குமரியிலிருந்து வட இமயத்திற்கு அன்னப் பறவைகள் பறந்து செல்வதையும் இமய மலையிலிருந்து அவை தமிழ் நாட்டுக்கு வருவதையும் தமிழன் அறிந்து வைத்துள்ளான். காலில் வளையம் மாட்டாமலும் மின்னணுக் கருவியைப் பயன்படுத்தாமலும் 3,000 மைல் பயணத்தை அறிந்து பாடியுள்ளான் தமிழன்.

    (புறம் 67 - பிசிராந்தையார், நற்றிணை - 70 வெள்ளி வீதியார், நற்றிணை 356 - பரணர், அகம் 120 - நக்கீரனார், அகம் 273 - ஒளவையார் ஆகிய பாடல்களைக் காண்க.).

    8.பிராணிகளுக்கு அறிவு உண்டு என்றும் மனிதர்களைப் போலவே அவைகளுக்கு உணர்வுகள் உண்டு என்றும் தற்காலத்தில் ஏராளமான கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியாகி வருகின்றன. குரங்குகள் மனிதர்களைப் போலவே கருவிகளைப் பயன்படுத்துகின்றன என்று பிரபல வார இதழான 'நியூஸ் வீக்'கில் அண்மை காலத்தில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. ஆனால் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி விட்டான் தமிழன். குரங்குகள் முரசு அடிப்பதை முட மோசியார் (புறம் 128) என்பவரும், குரங்குகள் குச்சிகளைப் பயன்படுத்துவதைக் கபிலர் என்பவரும் (ஐங்குறு நூறு 275 -277) குறிப்பிடுகின்றனர். ஆடுகளைக் கொட்டகையில் அடைப்பதற்கு ஆட்டிடையர்கள் நாய்களைப் பயன்படுத்தும் காட்சியை பிபிசி டெலிவிஷனில் பலரும் பார்த்திருப்பபீர்கள். தொலைவில் நின்றவாறே வாயின் மூலம் விசில் அடித்து ஆடுகளை அழைக்கும் காட்சியை கபிலர் (அகம் 318) பாடுகிறார். பாரியின் பறம்பு மலையை மூவேந்தரும் முற்றுகையிட்ட காலத்தில் கிளிகளின்

    Enjoying the preview?
    Page 1 of 1