Nam Kadavul Namum Kadavul
By S. Gopal
()
About this ebook
இந்திய மண்ணில் தோன்றிய மஹரிசிகள் கடவுளை அடிப்படையாகக் கொண்டு பல விஞ்ஞானத் தகவல்களைச் சொல்லியிருக்கிறார்கள் என்றும், அவை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும், பொதுமக்களுக்குச் சென்றடையவேண்டும், கல்வியாக்க வேண்டும் என்ற பொது நோக்க கருத்துடன் எழுதி வெளியிட்டிருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்னால் அரசு அலுவலர்களுக்காக அவர்களின் சட்ட விதிமுறைகள் சம்பந்தப்பட்ட “அரசுப் பணியாளர்களின்” நண்பன் போன்ற 25 புத்தகங்கள் வரை எழுதிய எழுத்தனுபவமும், 1970களில் பள்ளி கல்லூரி காலத்தில் கோவிலின் அமைப்பு விநாயரிடம் போடப்படும் தோப்புக்கரணம் ஆகியன முறைகளை உடற்பயிற்சியுடன் ஒப்பிட்டு கோவிலும், கோவிலில் கடவுளை வணங்குவதும் உடற்பயிற்சி விஞ்ஞானத்தின் அடிப்படைதான் என்ற எனக்குள் தோன்றிய கருத்தும் தான் இந்தப்புத்தகம் வளர அடிப்படைக்காரணம்.
இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் பிற்காலத்தில், நான் தெரிந்துண்ட கடவுள் கோவில் புராணம் ஆகியனவற்றில் இருக்கும் விஞ்ஞானத்தை புரிந்துகொள்ள காரணமானது. இந்திய ஞானிகள், [1] ஏராளமான கடவுள்களைக் குறிப்பிட்டதன் காரணமும்; [2] கணவன் மனைவி குடும்பம் குழந்தை என்று சொன்னதன் பின்னனியில் உள்ள விஞ்ஞானமும் [3] சிவனுக்கு பார்வதியும் விஷ்ணுவுக்கு லக்ஷ்மியையும் ப்ரம்மாவுக்கு சரஸ்வதியையும் மனைவியாக ஜோடி சேர்த்ததில் உள்ள விஞ்ஞானமும் இதுபோன்ற பல முக்கிய விஞ்ஞானத் தகவல்களையும் விவரித்திருக்கிறேன். இந்தப்புத்தகத்தில் சிவன், ஆதி பராசக்தி, விநாயகர், சுப்பிரமணியன் என்று சொல்லியிருந்தாலும், இதில் மதம் சம்பந்தபட்டுத்தாமல் எழுத நினைத்ததன் விளைவே இந்தப்புத்தகம். இந்திய ஞானிகள் தன் ஞானத்தால் அறிந்த இயற்கையின் விஞ்ஞானத்தை, இயற்கையின் விதிகளை, மனித தர்மங்களை வேதம், புராணம், கோவில், ஆகமம், கடவுள் என்பதன் வாயிலாக விளக்கியிருக்கின்றனர் என்ற அடிப்படைக் கருத்தை வலியுருத்தியிருக்கிறேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தப் புத்தகத்தில் ஞானம் என்பதன் வலிமையையும் புரிந்துகொள்ளவும் முடியும். இதே அடிப்படையில் இன்னமும் சில புத்தகங்கள் எழுதிக்கொண்டிருக்கிறேன், அவற்றில் [1] வர்ணம் அதாவது ப்ராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்பதன் அடிப்படைகளை உதாரணங்களுடன் விவரித்தும்; [2] பஞ்சபூதமும் ஆரோக்யமும் போன்ற தலைப்புகளில் சிறிய புத்தகங்கள் வெளிவர இருக்கின்றது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பகவத் கீதையில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொல்வது – “மனதில் தோன்றும் பல எண்ணங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதன்படி செயல்பட ஆரம்பித்தால் எண்ணத்தின் இலக்கை அடைய பாதை வகுக்கப்படும், என்று” - இது இந்தப்புத்தகம் எழுதியதில், நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்த சத்தியம்.
Related to Nam Kadavul Namum Kadavul
Related ebooks
Ariviyal Nokkil Aanmeega Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsIndiya Samudhaya Varalatril Penmai Rating: 0 out of 5 stars0 ratingsMuppathu Katturaigalil Hindu Madha Athisayangal! Rating: 5 out of 5 stars5/5Thathuva Darisanam Rating: 0 out of 5 stars0 ratingsPurana Thuligal Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsSiruvan Pragalathanum, Narasimharum Rating: 0 out of 5 stars0 ratingsKatturai Kadhambam Rating: 0 out of 5 stars0 ratingsPeriya Puranathil Pengal Or Aaivu Rating: 0 out of 5 stars0 ratingsShirdi Baba Rating: 0 out of 5 stars0 ratingsBharatha Natiya Kathaigalum Pazhamozhi Kathaigalum Rating: 0 out of 5 stars0 ratingsNallana Ellam Arulum Naradar Puranam! Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Muthukal Rating: 0 out of 5 stars0 ratingsPadaippu Thiranum Yerpu Kotpaadum Rating: 0 out of 5 stars0 ratingsKadavulai Kaattu! Rating: 0 out of 5 stars0 ratingsKaliyuga Deivam shirdi Sai Rating: 0 out of 5 stars0 ratingsSanga Ilakkiyathil Anthanarum Vedhamum! Rating: 0 out of 5 stars0 ratingsThiran Koottum Dhyanam Rating: 0 out of 5 stars0 ratingsManida Siragugal Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavar Rating: 4 out of 5 stars4/5Neengalum Vallalar Aaga... Rating: 4 out of 5 stars4/5Bhavishya Puranam Rating: 2 out of 5 stars2/5Vainava Amutha Thuligal Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Manimaalai Rating: 2 out of 5 stars2/5Kaaladiyil Pootha Kamala Malar Rating: 0 out of 5 stars0 ratingsIraivanai Naadu! Rating: 0 out of 5 stars0 ratingsArul, Porul, Inbam… Rating: 0 out of 5 stars0 ratingsAdharvana Vedha Bhoomi Suktham Sollum Viyappaana Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsUlaga Madhangal Rating: 0 out of 5 stars0 ratingsUlagam Muzhuthum Paambu Vazhipaadu! Rating: 0 out of 5 stars0 ratingsAmmaiyapparay Ulagukku Ammaiyappar Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nam Kadavul Namum Kadavul
0 ratings0 reviews
Book preview
Nam Kadavul Namum Kadavul - S. Gopal
https://www.pustaka.co.in
நம் கடவுள் நாமும் கடவுள்
Nam Kadavul Namum Kadavul
Author:
கோபால்
S. Gopal
For more books
https://www.pustaka.co.in/home/author/s-gopal
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
1.புராணங்களில் விஞ்ஞானம்
2.இயற்கையான பஞ்சபூதங்களே கடவுள்கள்
3.பஞ்ச பூதங்களின் தோற்றம்
4. . . . . ஆகவே நம் கடவுள்கள்
5. ஒன்றே கடவுள் ஒருவனே தேவன்
6.எங்கும் கடவுள் எதிலும் கடவுள்
7.நாமும் கடவுள்
8.வாழ்க்கை . . . .
9.கடவுளுடன் பேசுவது
10. பின்னுரை
முன்னுரை
நன்றி நன்றி நன்றி
இப்புத்தகம் வடிவமைந்து வெளிவந்ததற்கான அடிப்படைக் காரணம் என் குழந்தைகளே. ஆகவே என் முதல் நன்றி என் பிள்ளைகள் இருவருக்குமே. பின்னர் இறைவனுக்கே சமர்ப்பணம். என் குழந்தைகளுக்கு நீதி மற்றும் கடவுளின் கதைகளைச் சொல்வது வழக்கம். ஒருமுறை பஞ்சபூதம் பற்றி என் மகள் கேட்டதற்கு கொடுக்கப்பட்ட விளக்கமே கடவுள்களைப் பற்றி நான் தெரிந்து, புரிந்துகொள்வதற்கு காரணமானது. அதன் விளைவே இந்தப் புத்தகம்.
அணுவைப் பற்றி பாடம் சொல்லிக்கொடுக்கும் போது அணுவின் அமைப்பும், சூரிய மண்டலத்தின் அமைப்பும் ஒன்று போலவே இருக்கிறது என்பதுடன், அண்டம் முதல் அணுவரை எல்லாமும் ஒத்த அமைப்பிலிருப்பதையும் தெரிந்துகொண்டேன் ; 1910 ஆம் ஆண்டு என் மகள் 7ஆம் வகுப்பு படிக்கும் பொழுது, பள்ளி ஆண்டு புத்தகத்திற்காக பரிணாமம் பற்றி எழுத நினைத்த போதுதான் தசாவதாரம் பரிணாம விஞ்ஞானத்துடன் ஒத்துப்போவது புரிந்தது. இது போன்ற சில விஷயங்களால் வியந்து போன நான் மேலும் யோசித்ததன் விளைவே இந்தப் புத்தகம்.
பல அறிஞர்கள் சொல்கிறார்கள் - இந்து மதம் என்பது மதம் என்பதல்ல ; மனிதன் எப்படி வாழவேண்டும் என்று உலக மக்களுக்கு வழிகாட்டும் தர்மம் / சனாதன தர்மம் பற்றியது. ஆனாலும், மனிதன் பிறந்ததிலிருந்து கடவுளின் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்ததால், சொல்லப்பட்ட தர்மம் கடவுளை அடிப்படையாகக் கொண்டு கடவுள் கதைகளின் வாயிலாக இந்திய மஹரிஷிகள் சொன்னார்கள் என்பதுடன், அடிப்படையில், சக்தி, வெப்பம், பூமி, நீர், காற்று ஆகிய 5 மஹாசக்திகளையே, கடவுள்களாகச் சொன்னார்கள். இருப்பினும், ஆழ்ந்து கவனித்தால் இந்திய மண்ணின் மஹரிஷிகள் அருளிய வேதமும் புராணமும், கடவுள் மற்றும் தர்மம் என்பதற்கும் அப்பாற்பட்டு இயற்கையின் விதிகளையும், வானியலையும், விஞ்ஞானத்தையும், பொதுவாழ்க்கையின் விதிகளையும் ஒருங்கிணைத்து இறை ஞானத்துடன் பின்னிப்பிணைத்து அறிவுறுத்திய மெய்யறிவியலாகும் என்பதைச் சொல்வதே இந்தப் புத்தகம்.
இந்திய மஹரிஷிகள் தன் ஞானத்தால் அறிந்த அறிவியலை உலகுக்குச் சொல்ல நினைத்தனர், ஆனால் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் கல்வியும் விஞ்ஞானமும் இல்லாத காலமாதலால் விஞ்ஞானத்தை மக்களுக்கு எடுத்துறைத்து புரியவைப்பது சாத்தியமில்லை என்பதை ஞானிகள் அறிந்திருந்ததால், மனிதர்கள் நம்பிக்கை கொண்டிருந்த கடவுள் என்பதன் அடிப்படையில் கடவுளின் கதைகளில் இவற்றை பின்னிப் பிணைத்து புராணங்களாக அருளினர் என்பதை உதாரணத்துடன் தெரிவிப்பதே இந்தப் புத்ததம்.
பாமர மக்களுக்கு கடவுள் மீது இருந்த பயமும் நம்பிக்கையுமே புராணங்களில் மறைமுகமாக சூட்சுமமாக சொல்லப்பட்ட அறிவியலை, இயற்கையின் விதியை, வானியலை, அழிக்காமல் காத்து, யுகங்கள் பயணித்து இன்று வரை நிலைத்திருக்கச் செய்திருக்கின்றது என்பதற்கான உதாரணம் இந்தப் புத்தகம்.
ஞானிகள் தங்கள் ஞானத்தால் வானவியலையும் விஞ்ஞானத்தையும் அறிந்துகொண்டது விந்தை என்றால் அதைவிட மகத்தான விந்தை, அவற்றை நமக்கு அருளிய விதம் – அதாவது கடவுள்களை ஆண் பெண் என்று உருவகித்து நடைமுறை வாழ்க்கையைப் போல கணவன் மனைவி குடும்பம் என்று சொல்லி, பொது வாழ்க்கையின் விதிதான் இயற்கையின் விதி என்பதை கடவுளின் கதைகளின் வாயிலாக புரியச் செய்திருக்கும் விதத்தையும் இந்திய ரிஷிகளின் ஞானத்தின் உச்சத்தையும் சொல்வதே இந்தப் புத்தகம்.
வேதம் புராணம் சடங்கு சம்பிரதாயங்களின் வாயிலாகச் சொல்லப்பட்ட பல விஷயங்களின் உட்கருத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை அல்லது சொல்லித்தரவில்லை; சொல்லித்தரப்பட்ட பல விஷயங்கள் மறந்தும் மறுவியும் போய்விட்டன. ஆயினும் இன்று கல்வியறிவு வளர்ந்த நிலையில் வேதத்திலும் புராணத்திலும் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை கூர்ந்து கவனிப்பதாலும், இப்படியும் இருக்கலாம் அல்லது ஏன் இருக்கக்கூடாது என்று யூகிப்பதாலும், விஞ்ஞானத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலமும் புராணத்தில் புதைந்திருக்கும் அரிய பல விஞ்ஞான விஷயங்களை வெளிக்கொணரலாம் என்பதை விவரிப்பதே இந்தப் புத்தகம் - மேலும்
வேதம் படித்தவரும் விஞ்ஞானியும் ஒருங்கிணைந்தால் பல வானவியல் கேள்விகளுக்கு விடைகள் கண்டுபிடிக்கலாம், அதை உலகிற்கு நிரூபித்தால் இந்திய மாமுனிகள் அருளிய வேதத்தின் சிறப்பையும் ஞானிகளின் ஞானத்தையும் உலகிற்கு பரைசாற்றலாம் என்பதுடன் இந்தியாவை விஞ்ஞானத்தில் உலகத்தின் முன்னோடியாக நிலை நிறுத்தலாம் என்பதை குறிப்பிடுவதற்காகவும் இந்தப் புத்தகம்.
நான் வேதம் படிக்கவில்லை, புராணமும் தெரியாது, ஆனாலும் அவ்வப்போது தெரிந்து கொண்ட சில விஷயங்களின் அடிப்படையில் மட்டுமே இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது என்பதுடன் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் கற்பனையானலும், விவாதத்திற்கு உட்படக்கூடிய விஷயமானாலும், இருக்கலாம் என்று ஏற்றுக் கொண்டாலும் எது எப்படியிருந்தாலும் என்னுள் தோன்றிய கருத்துக்களை தொகுத்து ஒழுங்குபடுத்தி கவனித்ததில், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் கருதிய கருத்துக்களை பதிவு செய்வதற்காகவே இந்தப்புத்தகம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்திய மஹரிஷிகள் வேதம் புராணம் கோவில் ஆகமம் சடங்கு சம்ரதாயங்கள் ஆகியவற்றின் வாயிலாக விஞ்ஞானங்களைச் சொல்லியிருக்கிறார்கள் என்பதுடன் யாரை நம்கடவுளாகச் சொல்லியிருக்கிறார்கள், ஆண் பெண், கணவன் மனைவி, குழந்தைகள், குடும்பம் என்று எதன் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது அதில் உள்ள விஞ்ஞானம் என்ன என்பது இரண்டாம் பகுதியாகவும் ; ஏன் நாமும் கடவுள் என்பது மூன்றாம் பகுதியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
சு. கோபால்
***
இந்திய ரிசிகள் அருளிய வேதம் நிரூபிக்கப்படாத விஞ்ஞானம் - தியரிடிகல் சயன்ஸ்
1.புராணங்களில் விஞ்ஞானம்
A. தசாவதரம் = பரிணாமம் என்ற விஞ்ஞானம்
இந்திய மண்ணில் பிறந்த ஞானிகள் தான் அறிந்துகொண்ட உயிரினத்தின் பரிணாமம் என்ற விஞ்ஞானத்தை கடவுளின் கதைகளில் இணைத்துச் சொன்னதுடன், அதில் பூமியில் மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற தர்மத்தையும் பிணைத்து காலத்தால் அழியாத வண்ணம் கடவுளின் தசாவதாரக் கதையாக வழங்கியிருக்கிறார்கள் ஞானிகள்.
மச்ச அவதாரம் = மீன் = பூமியில் முதலில் உயிரினம் நீரில் தான் தோன்றியது என்பதற்கான அவதாரம்.
கூர்மாவதாரம் = ஆமை = நீரில் தோன்றிய உயிரினம் பின் நீரிலும் நிலத்திலும் வாழும்படி பரிணாம வளர்ச்சி அடைந்த அவதாரம்
வராஹ அவதாரம் = பன்றி = பின் நிலத்தில் மட்டும் வாழும் உயிரினங்களான மிருகங்களாக பரிணாம வளர்ச்சி அடைந்தது
நரசிம்ம அவதாரம் = மிருகமும் மனிதனும் = மிருகம் பரிணாம வளர்ச்சியில் முழு மிருகமுமில்லாத முழு மனிதனுமில்லாத நிலையாகி - பின்
வாமன அவதாரம்