Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sundara Kanavugal
Sundara Kanavugal
Sundara Kanavugal
Ebook94 pages23 minutes

Sundara Kanavugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘சுந்தர கனவுகள்’ நாவல் சம்பத் என்னும் ஒரு நடுத்தர வாழ்வாதாரத்தை கொண்ட இளைஞனின் வாழ்கை பற்றியது. பள்ளி பருவத்தில் மிக சிறந்த மாணவனான அவன் வறுமை காரணமாக கல்லுரி சென்று படிக்க இயலாமல் வருந்துகிறான். அவனுக்கு சிறு வயதிலேயே பொறுப்பு திணிக்கப்பட்டுவிட்டதை விதி என்று தான் சொல்லவேண்டும். தனக்கு கீழ் இருக்கும் ஒரு தம்பி தங்கை அவர்களது வாழ்க்கைக்கான முழு பொறுப்பும், எதிர்பாராமல் மறைந்துவிடும் அவன் தாயால் தன் தோளில் சுமக்கிறான். பொறுப்பான மனநிலையில் வாழும் சம்பத்துக்கு வாழ்கை என்ன தந்தது என்று தெரிந்து கொள்ள இந்த நாவலை தொடர்ந்து படியுங்கள்!
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580131006295
Sundara Kanavugal

Read more from S. Kumar

Related authors

Related to Sundara Kanavugal

Related ebooks

Reviews for Sundara Kanavugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sundara Kanavugal - S. Kumar

    https://www.pustaka.co.in

    சுந்தரக் கனவுகள்

    Sundara Kanavugal

    Author:

    எஸ்.குமார்

    S. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    1

    ‘கிளக்’கென்ற சத்தத்துடன் கல், நீரைக் கிழித்து, வட்டவடிவமான நிழல்கள் பரவி... மறைந்தன. நீர் மீண்டும் சலனமற்றுப் போயிற்று. சம்பத் அடுத்த கல்லை எரியத் தயங்கினான். தூரத்திலிருந்த புதர் பகுதியில் எறிந்துவிட்டு எழுந்தான். ‘விர்’ரென்று காற்றின் வேகமாய் ஒரு குழிமுயல் பறந்தது.

    கல்லை எறிந்திருக்க வேண்டாம்.

    எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை இருக்கிறது. படிக்காதவனுக்கும் இந்த விதி தெரிந்திருக்கிறது. ஆனால் அந்த வினையின் வீச்சும் அளவும் எந்த அளவிற்கு மனதிற்குப் பிடிபடுகின்றது?

    புத்தம் சரணம் கச்சாமி... என்று ஆசை வெறுத்துப் போனால் தொல்லையில்லை.

    முடிவதில்லை.

    ஆக்டோபஸின் கால்களாக வளைத்திருக்கும் பாசவலை அனுமதிப்பதில்லை.

    புன்னைமரத்தின் கீழே வந்து உட்கார்ந்தான்.

    சிகரெட் பற்ற வைத்தான்.

    குளுமையான புன்னைச் சலசலப்பில் புறம் குளிர வெம்மையாக சிந்தும் புகையில் அகமும் குளிர்ந்தது.

    தண்ணீர்த் தேக்கம் கசிந்து கொண்டிருந்தது.

    ஆகாயத்தைப் பார்த்து மலர்ந்திருக்கும் பூ மாதிரி, வித்தியாசமான பாணியில் கட்டப்பட்ட அந்தத் தேக்கம் அங்கு வந்த புதிதில் அவனுக்கு ஒரு அற்புதமாய்த் தெரிந்தது. நாளாவட்டத்தில் அதன் புதுமை மெருகு மனதில் பழசாயிற்று.

    துக்கங்களும் சந்தோஷங்களும் எல்லா உணர்வுகளும் இப்படித்தான். ஆரம்பத்தில் அற்புதமாகும். பின்னால் அற்பமாகும்.

    புகையை நன்றாக உறிஞ்சியதும் நெஞ்சு லேசாக சளியைப் புரட்டியது.

    ஒருமுறை ரத்தப் பரிசோதனை செய்து ஈஸ்னோபீலியா சதவீதம் பார்க்கவேண்டும்.

    சிகரெட் துண்டை வீசி எரிந்துவிட்டு, எழுந்து நடந்தான். பளிச்சென்ற தார்ச்சாலை நடமாட்டமின்றி வீணாகிக்கொண்டிருந்தது.

    சைக்கிளின் பின்னால் பெரிய கருப்புக் கேனுடன் எதிரில் ஒருவன் தென்படத் துவங்கினான்.

    அவனது தெளிவற்ற குரல் மெல்ல நெருங்கி வந்து நாட்டுப் பாடலாகியது.

    கேன் பொங்கிக் கொண்டிருந்தது. அவனும்...

    அவனைக் கடந்து அங்காடி மையத்தை நெருங்கியபோது...

    அம்புக்குறியிட்ட இடத்தில் சைக்கிளை நிறுத்து என்றது இந்திய அரசாங்கம்.

    கடந்தான்.

    தூரம் தூரமாய் தேர்தல் கூட்டத்து விளக்குக் கம்பங்களோடு மரங்கள் நின்றன.

    விசிறியாய் கிளைவிரித்து நின்ற விசேஷ சவுக்கிடம் காற்றின் அசைவுகள் ஒரு கனவுப் பிரேமையைத் தோற்றுவித்தன.

    அதைக் கடந்து இடப்புறமாய்த் திரும்பி, கடற்கரையை அடைந்தான்.

    ‘விர்’ரென்று காற்று முகத்தில் மோதி, மனதில் பரவியது.

    உட்கார்ந்தான்.

    சம்பத்

    திரும்பினான்.

    நாகராஜ்.

    ஹேய் ராஜ்... வாடா...

    நெருங்கி வந்து பக்கத்தில் உட்கார்ந்தான்.

    ராஜி, எக்ஸாமெல்லாம் எப்படி பண்ணியிருக்க?

    பிரமாதமாப் பண்ணியிருக்கேன். இது கடைசி வாய்ப்பாச்சே! கஷ்டப்பட்டு பண்ணேன். பலன் இருக்கும்னு நினைக்கிறேன்.

    நிச்சயமா நீ வெற்றி பெறுவே!

    Enjoying the preview?
    Page 1 of 1