Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaattil Nila
Kaattil Nila
Kaattil Nila
Ebook96 pages28 minutes

Kaattil Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமணமான இளங்கோ, தனது மனைவி லட்சுமியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறான். வருடங்கள் மூன்றாகியும் குழந்தை இல்லாததை அவன் தாய் விசாலாட்சிகாரணம்காட்டி தனது மருமகளான லட்சுமியை மலடி என்று இடித்துரைக்கிறாள். உண்மையில் நல்லவளான லட்சுமி மனம் மிக வருந்தி இருக்கும் போது இளங்கோவின் நண்பன் தனசேகர் ராணுவத்திலிருந்து வருகிறான். அவனால் இளங்கோ லட்சுமி இருவருக்குள்ளயும் நடக்கும் பிரச்சனையின் தொடர்ச்சியாய் இளங்கோ எடுக்கும்விபரீத முடிவு கடைசியில் அவர்கள் வாழ்க்கையில் என்ன,என்ன மாற்றத்தை உண்டகுகிறது என்ன தெரிந்துகொள்ள இந்த கதையை படியுங்கள்!
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580131006296
Kaattil Nila

Read more from S. Kumar

Related authors

Related to Kaattil Nila

Related ebooks

Reviews for Kaattil Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaattil Nila - S. Kumar

    https://www.pustaka.co.in

    காட்டில் நிலா

    Kaattil Nila

    Author:

    எஸ். குமார்

    S. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    திருமணமான இளங்கோ, தனது மனைவி லட்சுமியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறான். வருடங்கள் மூன்றாகியும் குழந்தை இல்லாததை அவன் தாய் விசாலாட்சி காரணம் காட்டி தனது மருமகளான லட்சுமியை மலடி என்று இடித்துரைக்கிறாள். உண்மையில் நல்லவளான லட்சுமி மனம் மிக வருந்தி இருக்கும் போது இளங்கோவின் நண்பன் தனசேகர் ராணுவத்திலிருந்து வருகிறான். அவனால் இளங்கோ லட்சுமி இருவருக்குள்ளயும் நடக்கும் பிரச்சனையின் தொடர்ச்சியாய் இளங்கோ எடுக்கும் விபரீத முடிவு கடைசியில் அவர்கள் வாழ்க்கையில் என்ன, என்ன மாற்றத்தை உண்டகுகிறது என்ன தெரிந்துகொள்ள இந்த கதையை படியுங்கள்!

    காட்டில் நிலா

    சாம்பு பேப்பரில் வந்த ‘மணமகள் தேவை’ விளம்பரத்தைப் பார்த்து கடிதம் எழுதி விட்டுத்தான் சம்பந்தம் பேச வந்தார்.

    வணக்கம்!

    வணக்கம், என்ன வேணும்?

    உத்திரமேரூரிலிருந்து லெட்டர் போட்டிருந்தேனே

    ஆமாம், பொண்ணு பேரு யமுனா இல்லே? என்று கேட்டான்.

    இவன்தான் இளங்கோவா?

    அவனே பேசினான். என்னைப் பற்றி ஏற்கனவே விளம்பரத்திலேயே சுருக்கமா சொல்லியிருக்கேன். எனக்கு இப்ப முப்பத்தொன்பது வயசு ஆகுது. ஒரு அண்ணன், ஒரு அக்கா... அண்ணன் இந்தூர்ல டெலிபோன்ஸ்ல ஆபீசரா இருக்கான், அக்கா திருச்சியில் இருக்கா. ரெண்டு குடும்பங்களோடும் எனக்கு போக்குவரத்து கிடையாது. அம்மாதான் போய் வருவாங்க. அம்மா என்னோடதான் இருக்காங்க. திருச்சிக்குப் போயிருக்காங்க.

    அவன் குரல் சற்று கட்டையாக இருந்தது. தோற்றமும் அழகின்றி சராசரியாக இருந்தது. தலையில் முடிகொட்டிப் போகவில்லை. இளநரையும் இல்லை. வயது முப்பத்திரண்டோ, மூன்றோ சொன்னால் நம்புவார்கள்.

    பெரியவங்க கூட இருக்கிறது சௌகர்யம்தான்

    நான் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த மாதிரி இப்ப நான் தேடறது இரண்டாம்தாரம். என்னோட முதல் கல்யாணம் இருபத்தாறு வயசில நடந்தது. ரெண்டு வருஷம் கழிச்சி ஒரு பையன் பிறந்தான். அதோட நாங்க பிரிஞ்சிட்டோம்.

    டைவர்ஸ் பண்ணிட்டிங்களா?

    இல்லை

    அதிர்ந்தார். பிரிஞ்சிட்டோம்னு சொன்னிங்க...

    ஆமாம், என் முகத்தில் முழிக்காதேன்னு விரட்டிட்டேன். சட்டபூர்வமா நடவடிக்கை எடுக்க அவ ஒத்துக்கலே. நானும் கோர்ட்டு, கேசுன்னு அலையாம விட்டுட்டேன்.

    சரி. இப்ப மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிறதா முடிவு பண்ணிட்டிங்க. இப்ப டைவர்ஸ் பண்ணிடலாமே!

    அதெல்லாம் சுலபமில்லே. பத்து வருஷமாயிடுச்சி. இன்னும் அவளுக்கு வந்து வாழணுங்கிற எண்ணமிருக்கு. எனக்கு விருப்பமில்லே. ரெண்டு பேரும் ஒத்துவந்தா விவாகரத்து சுலபம். ஒருத்தர் முரண்டினா கஷ்டம். கேஸ் இழுத்துக்கிட்டே போகும்...

    முதல் சம்சாரம் உயிரோடு இருக்கும் போது ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறது குற்றமில்லையா? அப்பவும்தான் கோர்ட்டு, கேசுன்னு அலையணும். அதுவுமில்லாம ஜெயிலுக்குப் போகணும். உங்க ரெண்டாம் தாரமும் நடுரோட்டில இல்லே நிக்கும்?

    அப்படியெல்லாம் ஆகாது... சாதாரணமா ஒருத்தர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்டா அவங்க ஜெயிலுக்குப் போவாங்கன்றது சரிதான். நான் அரசு ஊழியன். எனக்கு வேலையும் போகும்.

    இவ்வளவு விவரமா தெரிஞ்சி வச்சிகிட்டு, அப்புறம் ஏன் விளம்பரத்தைக் கொடுத்து என்னை அலைய வைக்கறிங்க?

    அவசரப்படாதிங்க. சட்டப்பூர்வமா நான் இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாதான் சிக்கல். அதனாலதான் நான் முழு விவரங்களையும் முன்னாலேயே சொல்லிடறேன். இதுக்குப் பிறகும் நான் சொல்ற கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டாதான் கல்யாணம்.

    என்ன உங்க கண்டிஷன்?

    இந்தக் கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணக் கூடாது. பெரிய கோயில்லியோ, சத்திரத்திலியோ வச்சி நடத்தக் கூடாது. நெருங்கின உறவுக்காரங்களைத் தவிர மத்தவங்களைக் கூப்பிடக்கூடாது. இன்விடேஷன் அடிக்கக் கூடாது...

    தாலியாவது உண்டா?

    இல்லை.

    இது கல்யாணம் இல்லை.

    "நான்

    Enjoying the preview?
    Page 1 of 1