Vazha Ninaithal Saagalam
()
About this ebook
சமூகத்தில் மக்களால் ஐயா என்று அழைக்கப்படும் சக்கரவர்த்தி அரசியல் செல்வாக்கு உள்ளவர். மக்களுக்கு தேவையான உதவிகளை செய்பவர். அதே சமயம் ரகசியமாக, முறைகேடான மோசடி வேலைகளை செய்வதை கண்டறிகிறார் காவல்துறையின் நேர்மையான அதிகாரியான எஸ்,பி. மருது. தகுந்த ஆதாரங்களுடன் சக்கரவர்த்தியை பிடிக்க திட்டம் தீட்டுகிறார். ஆனால் அந்த திட்டத்தில் அவருக்கு என்ன ஆனது? இந்நிலையில் எஸ்.பி. மருது திரட்டிய ஆதாரங்களை தேட களமிறங்குகின்றனர் பரத்தும் சுசீலாவும்... இறுதியில் என்ன ஆனது?... வாசிப்போம்...
Read more from Pattukottai Prabakar
Bharath VS Susila Rating: 4 out of 5 stars4/5September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Oor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsThappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Narukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsIravu Pathu Rating: 5 out of 5 stars5/5Puthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Ini... Iniya... Rating: 5 out of 5 stars5/5Thottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Pushpa Rating: 5 out of 5 stars5/5Mazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Uyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Yaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsNer Meley Nila Rating: 5 out of 5 stars5/5Sollungal Seyyapadum Rating: 0 out of 5 stars0 ratingsSugamthaney Suseela? Rating: 0 out of 5 stars0 ratingsPatharathey Bharath Rating: 5 out of 5 stars5/5
Related authors
Related to Vazha Ninaithal Saagalam
Related ebooks
Virpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Kathi Mel Payanam Rating: 0 out of 5 stars0 ratingsSingapore Sathi Rating: 0 out of 5 stars0 ratingsMaanilam Enna Vilai? Rating: 0 out of 5 stars0 ratingsSattapadi Kutramillai! Rating: 0 out of 5 stars0 ratingsThee... Deepa... Deepavali Rating: 5 out of 5 stars5/5Aa...! Rating: 0 out of 5 stars0 ratingsTwist Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPulip Pori Rating: 0 out of 5 stars0 ratingsNaan Yaar Theriyuma? Rating: 0 out of 5 stars0 ratingsCycle Bhagavathar Rating: 0 out of 5 stars0 ratingsVidiyattum Paarkalam...! Rating: 0 out of 5 stars0 ratingsSaagaavaram Rating: 4 out of 5 stars4/5saagavaram Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Arindhaal... Rating: 0 out of 5 stars0 ratingsThandanai Thappathu! Rating: 5 out of 5 stars5/5Moolai Thanda Moolathanam Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Ettu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Panam Kanne Panam! Rating: 0 out of 5 stars0 ratingsVelli Nila Muttrathile! Rating: 5 out of 5 stars5/5Mutham, Nizhal Mutham Rating: 5 out of 5 stars5/5Innum Sila Nimidangalil... Rating: 5 out of 5 stars5/5Nirangal Iranthana... Rating: 0 out of 5 stars0 ratingsClick Click Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsThrill Thrill Dynamite Rating: 0 out of 5 stars0 ratingsKondralum Kuttramillai Rating: 5 out of 5 stars5/5Kizhpakkam to Kottai Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Sakthi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vazha Ninaithal Saagalam
0 ratings0 reviews
Book preview
Vazha Ninaithal Saagalam - Pattukottai Prabakar
https://www.pustaka.co.in
வாழ நினைத்தால் சாகலாம்
Vazha Ninaithal Saagalam
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
1
தீ முற்றிலும் அணைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் எரிந்தது போக மிச்சமிருந்த கருகின உத்தரங்கள், இடிந்த சுவர்களிலிருந்து இன்னும் லேசாக புகை வந்து கொண்டிருந்தது. ஒரு போட்டோகிராபர் படம் எடுத்துக் கொண்டிருந்தான். வாழ்க்கையின் நிலையின்மை என்னும் தலைப்பில் புகைப்பட போட்டிக்கு அனுப்பப் போகிறானோ என்னவோ?
சமூக சேவை சங்கம் ஒன்று ஒரு வேனில் கொண்டு வந்த பிரெட்டும், சாப்பாட்டுப் பொட்டலங்களும் கொடுத்துக் கொண்டிருந்தது. கண்ணாடி அணிந்த அரசு அதிகாரிகள் பெயர், விலாசம், நஷ்ட அளவு கேட்டு நாக்கில் தொட்டு புத்தகம் புரட்டி எழுதிக்கொண்டார்கள்.
பாதிக்கப்பட்ட ஜனங்கள் கும்பலாய் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்கள்.
மியூசிகல் ஹார்ன் பொருத்தின வெளிநாட்டு கார் வந்து நின்றபோது பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 'அய்யா வர்றார், அய்யா வர்றார்' என்று பேசிக்கொண்டார்கள். அமர்ந்திருந்தவர்கள் அவசரமாக எழுந்து கொண்டார்கள். காரை நெருங்கி குரல் எழுப்பிக்கொண்டு விரைந்தார்கள்.
கார் நின்றதும் முன் சீட்டில் அமர்ந்திருந்த அய்யாவின் குமாரன் தீபன் இறங்கி பின் கதவை பவ்யமாகத் திறந்து பிடித்ததும், சக்கரவர்த்தி இறங்கினார்.
வெள்ளை வேட்டி, வெள்ளை அரைக்கை சட்டை, தோளில் ஒரு சிறிய தேங்காப் பூ துண்டு. நெற்றியில் பட்டையாக விபூதி. நடுவே குங்குமம். கையில் தாமிரக்காப்பு. சட்டைப் பையில் ஏராள காகிதங்கள். பேனா.
அய்யா இறங்கியதுமே, எங்க நிலைமையைப் பாருங்க மவராசா
என்று பெரிய குரலில் அழுது ஒரு கூட்டம் அவர் கால்களில் விழுந்தது.
எந்திரிங்க
என்று அவர் வேட்டியை மடக்கிக்கட்டிக் கொண்டு, எரிந்த குடிசைகளைப் பார்வையிட்டார் பரிவுடன். பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இரண்டு, மூன்று பேர் கூடவே நடந்து குடிசைகளைக் காட்டினார்கள். இவரைப் புகைப்படம் எடுக்க வந்தவனை வேணாம் தம்பி
என்று தடுத்தார்.
எத்தனை குடிசை எரிஞ்சது?
எழுபத்தி ஆறுங்க.
உயிர் சேதம் எதுவுமில்லையே?
இல்லைங்கய்யா. மூணு பேருக்கு கடுமையா தீப்புண்ணுங்க. ஆஸ்பத்திரில சேர்த்திருக்காங்க. எல்லாம் தினக்கூலிக்கு போற ஜனங்க அய்யா.
கவர்மென்ட் அதிகாரிங்க வந்து பார்த்தாங்களா?
ரெண்டு மூணு ஜீப்புல வந்தாங்க. பேர் எல்லாம் கேட்டு எழுதிகிட்டாங்க. குடிசைக்கு இருநூறு ரூபா தரப் போறாங்களாம். கீத்து மாத்தவே காணாதுங்கய்யா.
அய்யா கைகளைக் கட்டிக்கொண்டு யோசித்தார். தீபன்
என்றார்.
அப்பா
என்றான்.
ஒரு குடிசைக்கு ஐநூறு ரூபாய் வீதம் கொடுக்க ஏற்பாடு செய்யி.
சரிப்பா.
அய்யா! நீங்க நல்லா இருக்கணும். உங்களை மாதிரி ஜனங்க தான் பதவிக்கு வரணும். நீங்க அரசியல்ல எறங்குங்கய்யா. எலெக்ஷன்ல நில்லுங்கய்யா. நாங்க ஜெயிக்க வைக்கிறோம்.
மனிதாபிமானம் காட்ட பதவி அவசியமில்லை. என்கிட்டே இருக்கு. கொடுக்கறேன். ஆர்ப்பாட்டம் வேணாம். தீபன், போலாமா?
அவர் நின்ற இடத்திற்கு அருகில் கார் வந்து நின்றது. ஏறிக்கொண்டார். தீபனும் ஏறிக்கொண்டதும், கார் புறப்பட்டது.
அடுத்து எங்கே போகணும் தீபன்?
நம்ம தெரு மாரியம்மன் கோயில்ல கும்பாபிஷேகம் உங்க தலைமையில.
மாரியம்மன் கோயிலில் கூட்டம் வழிந்தது. ஸ்பீக்கர்களில் பக்திப் பாடல்கள் கொட்டிக் கொண்டிருக்க... இவரின் கார் வந்ததும், போலீஸ் பாதை அமைத்துக் கொடுக்க, தர்மகர்த்தாவும், நிர்வாக அதிகாரியும் மாலை போட்டு வரவேற்றனர்.
சுவாமியை வணங்கிவிட்டு கோபுரமருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடைக்கு வந்து அய்யா தொட்டுக் கொடுத்ததும் - புனித நீர் கோபுரத்தின் கும்பத்தில் ஊற்றப்பட்டு... பக்தர்கள் பரவசத்துடன் கன்னங்களில் போட்டுக்கொண்டார்கள்.
அய்யா கை கட்டி, கண் மூடி நின்றிருந்தார். தர்மகர்த்தாவை அருகில் அழைத்தார்.
திருப்பணி செலவுகள் எஸ்டிமேட்டைவிட கூடப் போய்ட்டதா கேள்விப்பட்டேன்.
ஆமாங்கய்யா. எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியலை.
எவ்வளவு துண்டு விழுவுது?
ஒன்பதாயிரத்திச் சொச்சம்.
தீபன்
என்றார்.
அப்பா
என்றான் அருகில் வந்து கை நீட்டினார். புரிந்து கொண்டு அவரின் கைப்பையைக் கொடுத்தான். அதிலிருந்து செக் புத்தகம் எடுத்து பத்தாயிரம் ரூபாய் எழுதிக் கையெழுத்திட்டு தர்மகர்த்தாவிடம் கொடுத்தார்.
இதை விளம்பரப்படுத்திடாதீங்க. நான் புறப்படறேன்.
மீண்டும் காரில் பயணம். நகரின் செல்வச் செழிப்பான ஏரியாவில் அவரது பங்களாவுக்குள் கார் வந்து நின்றது. நிறைய பேர் காத்திருந்தார்கள். காத்திருந்த கார்களில் ஒன்றில் ஆளும் கட்சியின் கொடி பறந்தது.
அய்யா இறங்கி நடந்து வரவேற்பறையில் காத்திருந்த