Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Angum Ingum Paathai Undu!
Angum Ingum Paathai Undu!
Angum Ingum Paathai Undu!
Ebook117 pages41 minutes

Angum Ingum Paathai Undu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'அங்கும் இங்கும் பாதை உண்டு' என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் அதில் பயணிப்பவர்கள்தான் சில சமயம் வித்தியாசப்படுகின்றனர். ஒருவருக்காக வகுக்கப்பட்ட பாதையில் வேறொருவர் பயணிப்பதை தீர்மானிப்பது விதியா? மனிதனின் மதியா? கதையின் நாயகி அன்னமும் அப்படித்தான் பயணிக்கிறார். அவளுடைய பயணம் வெற்றி அடைய வாழ்த்துவோம்.

Languageதமிழ்
Release dateMay 13, 2023
ISBN6580137109462
Angum Ingum Paathai Undu!

Read more from R. Sumathi

Related to Angum Ingum Paathai Undu!

Related ebooks

Reviews for Angum Ingum Paathai Undu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Angum Ingum Paathai Undu! - R. Sumathi

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    அங்கும் இங்கும் பாதை உண்டு!

    Angum Ingum Paathai Undu!

    Author :

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அங்கும் இங்கும் பாதை உண்டு!

    அம்மா... அம்மா... இந்தக் குரல் வெகுநேரமாக கேட்பதைப்போல் தோன்றியது. ‘எங்கோ யாரோ யாரையோ அழைக்கிறார்கள்’ என்றபடி செய்தித்தாளில் மூழ்கியிருந்த முத்தையா யதேச்சையாக குரல் வந்த திசையைப் பார்த்தார். வாசலில் மிகப்பெரிய இரும்பு கேட்டை பற்றியபடி ஒரு பெண் தெரிந்தாள்.

    ஆர். சுமதி

    1

    அவர் மாடியில் பால்கனியில் அமர்ந்திருந்ததால் உருவம் அவ்வளவு நன்றாகத் தெரியவில்லை. பாவாடை தாவணி அணிந்திருப்பதும் மார்போடு அணைத்தபடி ஒரு பை வைத்திருப்பதும் தெரிந்தது. அவள் கம்பிகளுக்கிடையில் முகத்தைப் பதித்து விழிகளை தோட்டத்தின் நாலாப்பக்கமும் உருளவிட்டபடியே மறுபடியும் குரல் கொடுத்துக்கொண்டிருந்தாள். செய்தித்தாளை மடித்து வைத்துவிட்டு எழுந்தவர் பின்பக்கம் வந்து எட்டிப் பார்த்தார்.

    கீழே கொல்லைப்புறம். தங்கம் துணி உலர்த்திக் கொண்டிருந்தாள்.

    தங்கம்... அவருடைய அழைப்பிற்கு நிமிர்ந்து பார்த்த தங்கம் என்னங்கய்யா? என்றாள்.

    கேட் பக்கம் யாரோ ஒரு பொண்ணு ‘அம்மா அம்மா’-ன்னு ரொம்ப நேரமா கூப்பிட்டுக்கிட்டிருக்கு. என்னன்னு போய் பாரு.

    ஐய்யா... எவளாவது பிச்சைக்காரியாயிருப்பா. கூப்பிட்டுப் பார்த்துட்டு போயிடும்.

    பிச்சைக்காரி மாதிரி தெரியலை தங்கம். சின்னப் பொண்ணாட்டம் தெரியுது. போய் என்னன்னு பாரேன்.

    பார்க்கறேன். பார்க்கறேன் என்று கடைசியாக இருந்த துணியையும் பிழிந்து காயப் போட்டுவிட்டு ஈரக்கையை முந்தானையால் துடைத்தபடி தோட்டத்து வழியாகவே வாசல் பக்கம் வந்தாள்.

    முத்தைய்யா பழையபடி பால்கனியில் வந்து அமர்ந்து செய்தித்தாளில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். கேட்டருகே வந்த தங்கம் அந்தப் பெண்ணைப் பார்த்தாள்.

    இருபது இருபத்தியொரு வயதிருக்கும். மாநிறத்தில் முகத்தில் வயதிற்குரிய பொலிவை வறுமையும், சோர்வும் மறைத்திருந்தது.

    தலை நிறைய முடி இடுப்பு வரை நீண்டிருந்தாலும் செம்படை பாய்ந்து சிக்குப் பிடித்துக் கிடந்தது. பழைய பாவாடை தாவணி அழுக்காய் இருந்தாலும் கிழிந்திருக்கவில்லை. அந்த வீட்டிற்கே எஜமானியைப் போல் தங்கம் அதிகாரமாய் குரல் கொடுத்தாள்.

    இந்தா... என்ன வேணும் உனக்கு? எதுக்கு இங்க நிக்கறே... போ... போ... முதல்ல இங்கிருந்து போ... என்ன வேணும் என்று கேட்டவளே அவள் பதில் சொல்வதற்கு முன் அவளை விரட்டினாள்.

    அம்மா... ஏதாவது வேலையிருந்தா கொடுங்கம்மா. என்றாள்.

    வேலையா? தங்கம் கேட்கும்போதே தன் வேலைக்காரி பணிக்கு வேட்டு வைத்து விடுவாளோ என்ற பயம் மனதில் எழுந்தது.

    இங்க வேலையெல்லாம் ஒண்ணுமில்ல. கிளம்பு, கிளம்பு. அதட்டினாள். விரட்டுவதிலேயே குறியாக இருந்தாள்.

    அம்மா... எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன். சம்பளம் எதுவும் கேட்க மாட்டேன். மூணு வேளை சாப்பாடு போட்டா போதும். ஒரு ஓரமா தங்கிப்பேன். ப்ளீஸ்... மனசு வைங்கம்மா ‘அவள் ப்ளீஸ்...’ என்றதும் தங்கம்மா கலவரமாக அவளைப் பார்த்தாள்.

    ‘அட... இங்கிலீஷ் பேசறா. இங்கிலீஷ் பேசினா வேலை கிடைச்சிடுமா?’

    இந்தா... இங்க ஒரு வேலையும் இல்லை. கிளம்பு முதல்ல. ஐயா பார்த்தா திட்டுவாரு... போ... போ... முதல்ல விரட்டி விட்டுத்தான் முதல் வேலையைப் பார்த்தாள்.

    ‘அவள் போய்விட்டாளா?’ என்று பார்த்தபின் கேட் நன்றாக சாத்தியிருக்கிறதா? என்பதையும் உறுதிபடுத்திக் கொண்டு உள்ளே வந்தாள்.

    அதற்குள் முத்தையாவும் பால்கனியிலிருந்து இறங்கி கூடத்திற்கு வந்திருந்தார்.

    என்ன தங்கம் யார் அந்த பொண்ணு.

    யாரோ... பிச்சைக்காரி மாதிரி தெரியறா. ஆனா... பிச்சைக் கேட்கலை. ஏதாவது வேலை வேணுமாம். ஒரு வேலையும் இல்லைன்னு சொல்லிட்டேன். அனாதையாம். சம்பளமெல்லாம் வேண்டாமாம். மூணு வேளை சாப்பாடு போட்டா பேதுமாம். ஒரு ஓரமா சுருண்டுப்பாளாம்

    முத்தையாவின் முகத்தில் உடனடியாக இரக்கம் தெரிந்தது.

    இந்த சின்ன வயசுல யாரும் இல்லையா அவளுக்கு? பாவம். சம்பளம் கூட வேணாம்னு சொல்றாள்னா அவளுக்கு முக்கியமா பாதுகாப்பு வேணும்னு அர்த்தம். அவளை ஏன் போகச் சொன்னே. உள்ளே கூட்டிக்கிட்டு வர வேண்டியதுதானே.

    ஐய்யா... இந்த மாதிரி குட்டிகளை நம்பக் கூடாது. அனாதை, யாரும் இல்லைன்னு சொல்லிக்கிட்டு வருவாங்க. வீட்ல இருக்க இடம் கொடுங்கம்பாளுங்க. உண்மையில் இவங்களுக்கு வீடு, உறவுகள்னு எல்லாம் இருக்கும். வேலை செய்யறமாதிரி சும்மா பாவ்லா காட்டிட்டு இருக்கறதை சுருட்டிக்கிட்டு கம்பியை நீட்டிடுவாளுங்க. இதுங்களை நம்பவே கூடாது.

    மிகவும் எச்சரிக்கையோடு பேசினாள் தங்கம்.

    முத்தையா வாய்விட்டு சிரித்தார்.

    என்னமோ நீதான் இந்த மாதிரி பல கேஸ்களைப் பிடிச்சு போலீஸாக்கு கொடுத்தமாதிரி பேசறே?

    கேஸை பிடிச்சு போலீஸ்ல கொடுத்தாத்தான் பேசணுமா? டி.வி. நியூஸ்ல எத்தனை வருது.

    தங்கம். மனிதர்களை நம்பணும். நம்பிக்கைதான் வாழ்க்கை.

    இப்படி நம்பி முன்ன பின்ன தெரியாதவங்களை வேலைக்கு வச்சவங்க கதி என்னன்னு எனக்குத் தெரியும்.

    நிறைய டி.வி. பார்க்காதேன்னா கேட்கறியா? நீயும்தான் வேலைக்கு வந்தப்ப நீ யாருன்னே எனக்குத் தெரியாது. உன்னை நம்பி இந்த வீட்டை நான் ஒப்படைக்கலையா? நீ என்ன திருடிட்டா போயிட்ட?

    அவர் பெரிதாக சிரிக்க அவள் இரு கையையும் இடுப்பில் வைத்து முறைத்தாள்.

    "ஆமா... இந்த வீட்ல அப்படியே

    Enjoying the preview?
    Page 1 of 1