Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jannal Nila
Jannal Nila
Jannal Nila
Ebook106 pages39 minutes

Jannal Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது முற்றிலும் மாறுபட்ட உணர்வுகளை மட்டுமே மையமாகக் கொண்ட கதை! உடலைக் கடந்து, உள்ளத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட புதினம். இதில் மருத்துவ சாதனையைக் கடந்து மனசுகளின் சாதனை பெரிதாக வெளிச்சமிடுகிறது. அதனால்தான்... கதாபாத்திரத்துக்குப் பெயர் சாதனா!

இந்தப் பெண்ணின் நேர்மறையான துணிச்சல் மற்ற பெண்களுக்கு பாடமாக இருக்கும், வழிகாட்டும், புதிய சிந்தனைகளையும் தோற்றுவிக்கும்!

இது... பெண்களுக்கான ‘ஸ்பெஷல்' புதினம்!

-தேவிபாலா

Languageதமிழ்
Release dateMay 24, 2020
ISBN6580100605417
Jannal Nila

Read more from Devibala

Related to Jannal Nila

Related ebooks

Reviews for Jannal Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jannal Nila - Devibala

    http://www.pustaka.co.in

    ஜன்னல் நிலா

    Jannal Nila

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    கதையைப் பற்றி...

    இது முற்றிலும் மாறுபட்ட உணர்வுகளை மட்டுமே மையமாகக் கொண்ட கதை! உடலைக் கடந்து, உள்ளத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட புதினம். இதில் மருத்துவ சாதனையைக் கடந்து மனசுகளின் சாதனை பெரிதாக வெளிச்சமிடுகிறது. அதனால்தான்... கதாபாத்திரத்துக்குப் பெயர் சாதனா!

    இந்தப் பெண்ணின் நேர்மறையான துணிச்சல் மற்ற பெண்களுக்கு பாடமாக இருக்கும், வழிகாட்டும், புதிய சிந்தனைகளையும் தோற்றுவிக்கும்!

    இது... பெண்களுக்கான ‘ஸ்பெஷல்' புதினம்!

    - அன்புடன்...

    தேவிபாலா

    *****

    1

    இன்னும் இரு வாரங்களில் அவளுக்கு கல்யாணம். அந்த ஏற்பாடுகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது!

    வீடே பரபரப்பாகி விட்டது.

    ஏறத்தாழ 4 மாத காலமாக இதற்கான வேலைகள் மும்முரமாக நடக்கத் தொடங்கிவிட்டது.

    ஜவுளி எடுப்பது; நகை வாங்குவது, மண்டபம்-'கேட்டரிங்'-'வீடியோ' ஏற்பாடு என பரபரப்பான செயல்பாடுகள்.

    நிற்க நேரமில்லை!

    அனு 'எம்.காம்.' பட்டதாரி. படிப்பு முடிந்ததும் அரசாங்க வங்கியில் அதிகாரியாக வேலை கிடைத்துவிட்டது.

    அழகான புத்திசாலிப் பெண்.

    காதல் எல்லாம் இல்லை.

    பெரியவர்கள் பார்த்து, ஜாதகம் பொருந்தி ஏற்பாடு செய்த கல்யாணம். இதற்கு முன் அனுவின் குடும்பப் பின்னணி பற்றி தெரிந்தால்தான் இந்தக் கதை சூடு பிடிக்கும்!

    அனுவின் அப்பா சபாபதி. இப்போது பிரபலமான தொழிலதிபர். சென்னை அம்பத்தூர் அருகில் 'எலக்ட்ரானிக் ஃபேக்டரி' - நகரில் சின்னதாக ஜவுளிக்கடை - தவிர ஒரு ஓட்டல்.

    எல்லாமே நல்ல வியாபாரத்தில்! அதற்கான ஆட்களை சபாபதி சரியாக கவனிப்பதால் அரசியல், போலீஸ் தலையீடுகள் இல்லை.

    சாதுரியமானவர்.

    பேச்சால் யாரையும் கவர்ந்துவிடுவார்.

    நாற்பத்தி எட்டு வயது மனிதர்-ரெட்டை நாடி உடம்பு. நல்ல 'பால்கோவா' நிறம். பளிச்சென இருப்பார். இளம் பெண்களுக்குக்கூட அவரிடம் ஈடுபாடு உண்டாகும் வசீகரம்.

    திடமான 'கணீர்’ குரல். யாரையும் பேச்சால் மயக்கிவிடுவார். அதுதான் அவரது தொழில் வெற்றிக்கான திறவுகோல். வெளிவட்டாரத்தில் எதைத் தொட்டாலும் ஜெயிக்கும் அவர், மிக மோசமாக தோற்றது மனைவியிடம்!

    பெயர் சந்திரா!

    மோசமான பிடிவாதக்காரி. அதிக முன்கோபம். எடுத்தெறிந்து பேசும் குணம். எதைத் தொட்டாலும் சந்தேகம். எதற்கும் அனுசரிக்காத போக்கு. பெண் வடிவில் ஒரு மிருகம்.

    மாமன் மகள்!

    மாமா சாகும்போது அம்மாவிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு, 'சந்திரா நம்ம சபாபதிக்குத் தான்' என்று கண்களை மூடினார்.

    அக்கா-தம்பிக்குள் பாசப் பிணைப்பு. தட்ட வழி இல்லை.

    சந்திரா கறுப்பாக சுமாராக இருப்பாள். பள்ளிக்கூடப் படிப்போடு சரி.

    நாகரீகம் தெரியாது. எந்த விதத்திலும் சபாபதிக்கு துளிகூட பொருத்தம் இல்லாதவள்.

    சபாபதியின் அம்மா ருக்மணி சிறுவயதில் கணவனை இழந்தவள்.

    முழுக்க முழுக்க மாமா ஆதரவில் வளர்ந்தவர் சபாபதி. தான் பெற்ற பிள்ளையைப் போல அவனை நெஞ்சில் சுமந்தார். படிக்க வைத்து, இந்த உயரத்துக்கு கொண்டு வந்தவர்.

    மாமாவை கடவுளாக சபாபதி நினைத்ததால்... அம்மாவுக்கும் பாசம் மிதமிஞ்சிப் போனதால் மறுப்புக்கே இடமில்லை.

    மாமா இவர்களிடம் நன்றிக் கடனாகக் கேட்ட ஒரே வரம் அதுதான்!

    மறுக்க முடியவில்லை.

    அம்மாவுக்கும் தெரியும்... மகனுக்கு எந்த விதத்திலும் பொருத்தம் இல்லாதவள் சந்திரா என்று!

    அவளது குணமும் புரியும்.

    ஆனாலும், வேறு வழி இல்லை. சத்தியம் செய்து தந்துவிட்டாள்.

    மாமாவின் காரியம் முடிந்ததும், மகனிடம் தனியாகப் புலம்பிவிட்டாள்.

    என்னை மன்னிச்சிடு சபா! உன் மாமாவுக்கு இதைவிட எப்படி நாம நன்றி செலுத்த முடியும்? சந்திரா உனக்கு பொருத்தம் இல்லை. அவகிட்ட எந்த நல்ல குணமும், தகுதிகளும் இல்லை. ஆனாலும் நீதான் படிப்படியா அவளை மாத்தணும்.

    அவன் பேசவில்லை.

    எங்கிட்ட கோபமாப்பா?

    இல்லேம்மா... உன் சொல்லுக்கு மறுப்பே இல்லை. நான் தயார். எப்படியும் கல்யாணம் நடக்கணும். அது யாரா இருந்தா என்ன? அழகு... சாகாவரம் இல்ல! அழியக் கூடியது. மனசு அப்படி இல்லை. மாத்திக்கலாம். நீ கவலைப்படாதே...

    நம்பிக்கை தந்தான்.

    தாய் பூரித்தாள்.

    கல்யாணமும் நடந்தது!

    ஆனால், சபாபதியின் எந்த சாதுரியமும் எடுபடவில்லை. சந்திராவை மாற்ற அவனால் முடியவே இல்லை.

    உறவு என்றும் பாராமல், வயதையும் மதிக்காமல், தன் கோபத்தால் அத்தையைப் புண்ணாக்கி... தினசரி 'டார்ச்சர்' கொடுத்து அவமானப்படுத்த...

    சபா பொங்கியபோதும் பெற்றவள் தடுத்ததால் சகலமும் தாங்கினான்.

    இரண்டே வருடங்களில் அம்மா காலமானாள்.

    அதற்குள் குழந்தை அனு பிறந்துவிட்டாள்.

    சந்திராவின் அம்மா ஆரம்பம் முதலே சரியில்லை.

    சந்திரா இந்த அளவுக்கு குணம் கெட்டுப் போக அவள்தான் காரணம்.

    புருஷன் சாகவும் அவள்தான் காரணம்.

    ஒரு பெண் மிக மோசமாக... மற்றவர்களால் விமர்சிக்கப்படும் வகையில் இருந்தால், அவளைக் கண்டு பிறர் பயந்து ஓடினால், அவள் இருக்கும் திசைக்கே ஒரு கும்பிடு போட்டால், அதற்குக் காரணம் அவளது தாய் தான்.

    பெண் குழந்தைகள் குட்டிச்

    Enjoying the preview?
    Page 1 of 1