Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aval Oru Poonthotiti...
Aval Oru Poonthotiti...
Aval Oru Poonthotiti...
Ebook159 pages56 minutes

Aval Oru Poonthotiti...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவரைப் பற்றி...

இவரது மூதாதையர்கள் வசித்த ஊர் மாமண்டும் என்றாலும் இவர் பிறந்தது வளர்ந்தது காஞ்சியில் தான் பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு எல்லாமே காஞ்சிபுரம் தான். வங்கிப் பணியில் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். சிறுகதை வேந்தர், சிறுகதை நன்மணி, சிறுகதை செம்மல், பாரதியார் விருது போன்றவை இவர் பெற்ற விருதுகளாகும்.

சிறுகதை எழுத்தாளர், நாவல் ஆசிரியர், நடிகர் என்ற பலவேறு கோணங்களில் இவருக்கு பரிச்சய முண்டு. சன் தொலைக்காட்சி, புதுவை தொலைக்காட்சி, சென்னை பொதிகை, விஜய் தொலைக்காட்சி, ஜெயா தொலைக் காட்சிகளில் இவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன.

“இவன் தந்திரன்" என்ற படத்தில் நூலகராக ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். "தீ பரவட்டும்" என்ற குறும்படத்திலும் இவரது பங்களிப்பு உண்டு.

இவரது நாவல்கள் கண்டிப்பாக வாசகர்களை கவரும் என்பதில் ஐயமில்லை. இவர் மேன்மேலும் தொடர்ந்து பல படைப்புக்களை எழுதி வாசக வாசகிகளின் பாராட்டுக்களை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

அவள் ஒரு பூந்தொட்டி, மனம் போன போக்கிலே, நிஜம் போன்ற பொய், பணமா பாசமா என்பவை உள்ளிட்ட பல நாவல்களும், வாரங்கள் வார்த்த நிலாக்கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பும் ஏற்கனவே வெளிவந்து, அரசு நூலகங்களில் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. பல்வேறு வார இதழ்களில் இவரது எண்ணற்ற சிறுகதைகளும், நாவல்களும் வெளிவந்துள்ளன.

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580128604689
Aval Oru Poonthotiti...

Read more from Kanchi Balachandran

Related to Aval Oru Poonthotiti...

Related ebooks

Reviews for Aval Oru Poonthotiti...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aval Oru Poonthotiti... - Kanchi Balachandran

    http://www.pustaka.co.in

    அவள் ஒரு பூந்தொட்டி...

    Aval Oru Poonthotiti…

    Author:

    காஞ்சி பாலச்சந்திரன்

    Kanchi Balachandran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kanchi-balachandran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    முன்னுரை

    திருமணம் என்பது புனிதமான இரு உள்ளங்களையும் இணைய வைக்கும் பந்தம்.

    புரிதல், விட்டுக்கொடுத்தல் என்பதெல்லாம் ஒரு பக்கமிருந்தாலும் சிறுசிறு சண்டை சிறிது நேரம் பேசாதிருத்தல், பொய் கோபம் எல்லாமே வாழ்க்கையை மேலும் சுவையாக்கும் நிகழ்வுகள்.

    மேலை நாட்டுக் கலாசாரம் என்ற போர்வையில் திருமணத்திற்கு முன்பே காதலன் காதலி சுற்றித் திரியும் டேட்டிங்இன்னும் ஒருபடி மேலே சென்று திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் சேர்ந்து வாழ ஒப்பந்தம். அதாவது லிவிங் டுகெதர்என்று வேகமாக வாழ்க்கை பரவி வருகிறது.

    இந்த நாவலில் கதாநாயகன் நாயகி இருவருமே இந்த ஒப்பந்தப்படி வாழ்கிறார்கள். அவர்கள் ஒப்பந்தம் நீடித்ததா இல்லையென்றால் என்ன நேர்ந்தது. அவர்கள் எடுத்த முடிவு சரிதானா? என்பதை வாசித்துப் பார்த்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    இதே கருத்தை மையமாக வைத்து ஒரு திரைப்படம் வந்தாலும் அதற்கு முன்னரே இந்த நாவல் கண்மணியில் வெளிவந்ததை தெளிவுப்படுத்த கடமைப்பட்டுள்ளேன். கண்மணிக்கு எனது நன்றி.

    வாசக, வாசகியர்களுக்கு எனது வாழ்த்துகளோடு நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்றும் நட்புடன்

    காஞ்சி, பாலச்சந்திரன்

    1

    அம்ருதா கண் விழிப்பதற்கும் அலாரம் அடிப்பதற்கும் சரியாக இருந்தது. மணி ஆறு என்று தன் பொறுப்பினை உணர்த்தியது கடிகாரம். பட்டனை அழுத்தி அமைதியாக்கிவிட்டு எழுந்தாள்.

    குளியல் முடித்து, கல்லூரிக்குப் புறப்பட தயாரானாள்.

    அம்மா!

    என்னடி!

    இன்று தான் கடைசி எக்ஸாம். வர லேட்டாகும்.

    ஏன்

    என் பிரண்ட்ஸ் கூட வெளியே போயிட்டு வரனும்.

    அம்ருதா!

    என்னம்மா

    நீ எங்களுக்கு ஒரே பொண்ணு. உன்னை ஒரு எடத்திலே ஒப்படைக்கும் வரை எங்களுக்கு நிம்மதியில்லை. அப்பாவுக்கும் இதே கவலைதான், பொறுப்பா நடந்துக்கோ.

    இப்போ என்னம்மா சொல்லிட்டேன், படிப்பு இன்றோடு முடியுது. இந்த நாலு வருஷமா என்னோடு ஒண்ணா படிச்சி பழகிட்டாங்க. நாளைக்கு யார், யார் எந்த மூலையில் இருப்போமோ. அதான் எல்லோரும் ஓட்டலுக்குப் போயிட்டு மூவிக்குப் போறோம், நீ என்னடான்னா ஏதோ ஏதோ கற்பனைப் பண்ணிக்கிட்டுப் பேசறே!

    இல்லடா... அது வந்து... இத்தனை நாளா நீ காலேஜ்க்குப் போனே... நாங்க கவலைப்படலே... இப்போ லேட்டா வர்றேன்னு சொல்றே! அதுக்கும் கவலைப்படலே! ஆனா சென்னைக்குப் போகப் போறியே... அதை நெனைச்சாத்தான் பயமாயிருக்கு.

    எதுக்கும்மா பயப்படறே... சென்னை என்ன பொல்லாத ஊரா அங்கேயும் நல்லவங்க இருக்காங்கம்மா!

    அதுக்கில்லடா ராஜா...!

    அம்மா பொண்ணுக்கும் என்ன விவாதம் சூடாயிருக்கு.

    எல்லாம் உங்களால்தான்.

    நான் என்ன பண்ணேன். சிவனேன்னு உட்கார்ந்திருக்கேன்.

    இப்போ உட்கார்ந்திருக்கிங்க. அப்போ அவளுக்கு செல்லம் கொடுத்து கொடுத்து இப்படி ஆக்கிட்டிங்க! பையன் நமக்கு இல்லையேன்னு இவளை ஆம்பனை பையன் போடற டிரஸ் எல்லாம் வாங்கிக் கொடுத்தீங்க.

    நவமணி உன் காலம் வேறே! இந்த காலம் வேறே இப்போ, ஜீன்ஸ், டீ சர்ட் எல்லாம்தான் செளகரியம்,

    என்னவோ போங்க, அவளை ஒரு வழி பண்ணிட்டிங்க.

    என்னம்மா, அம்மா ஒரே புலம்பறா...

    விடுங்கப்பா... அது புலம்பல் கேஸ்.

    என்னடி! நானா புலம்பல் கேஸ்...

    இல்லேம்மா... சும்மா... நீ... ஓ... ஓ... நீ ரொம்ப ஜீனிஸ்.

    ஜீன்ஸா...

    அம்மா ஜீன்ஸ் இல்லே ஜீனிஸ். அப்படின்னா ரொம்ப ரொம்ப அறிவாளின்னு அர்த்தம்.

    உனக்கு என்னைப் பார்த்தா கிண்டலாயிருக்கா.

    என்னம்மா! உனக்கு இன்னிக்கு என்ன ஆச்சு! காலையிலிருந்தே புலம்ப ஆரம்பிச்சிட்டே.

    நானா புலம்பறேன் மடியிலே நெருப்பைக் கட்டிக்கிட்டு அலையறேன்.

    ஏம்மா உனக்கு தலையெழுத்து

    என்னடிச் சொல்றே.

    நெருப்பு கையிலேப் பட்டாலே சுடும், நீ எதுக்கு மடியிலே கட்டிக்கிட்டு...

    அதைக்கேட்டு அப்பா சிரித்தார்.

    என்னங்க அவள் சொன்னதற்கு நீங்க சிரிக்கிறிங்க. என்னைப் பார்த்தா உங்களுக்குக் கிண்டலா...

    இதோ பாரு நவமணி! நம்ம காலமாதிரியே பேசறே... இப்போ இவங்க காலம் வேறே... அதுக்கு அனுசரிச்சித்தான் நாம வாழணும். எல்லோருமே புத்திசாலியாக இருக்காங்க. அதை நினைச்சி சந்தோஷப்படு. உன் பேச்சை இத்தோடு நிறுத்து... எங்க ரெண்டு பேருக்கும் டிபன் கொடு.

    என்னம்மா டிபன்

    ரவாக்கிச்சடி, சட்னி.

    அதானப் பார்த்தேன். உனக்கு எது பிடிக்குதோ... அதையே எங்க ரெண்டு பேரு தலையிலே கட்டிடு.

    என்னங்க! இவள் இப்படியேப் பேசிக்கிட்டிருக்கா... என்னை மட்டும் பேசக்கூடாதுன்னு சொல்றீங்களே... எதுவும் அவளைக் கேட்க மாட்டிங்களா...

    நானும் ஒரு காலத்திலே அம்ருதா மாதிரிதான் பேச்சிக்கிட்டிருந்தேன். உன்னை என்னைக்குக் கைப்பிடிச்சேனோ... அப்பவே பேச்சும் போச்சு... சுதந்திரமும் போச்சு.

    என்னைப் பார்த்தா இந்தக் கேள்வி கேட்கிறீங்க. உங்களுக்கு என்ன குறைவச்சேன். வேளா வேளைக்கு விதவிதமாய் சமைச்சிப் போடறேனே...

    அம்மா கொஞ்சம் நிறுத்து! சமைச்சிப் போடற சரி... அது என்ன விதவிதமாய்...

    ஏண்டி! உனக்கு ரொம்ப கொழுப்புத்தாண்டி... அவக்கூட சேர்ந்து நீங்களும் என்னை வார்றிங்களா... இருங்க இருங்க உங்க ரெண்டு பேரு கொழுப்பையும் அடக்குறேன்.

    நவமணி டாக்டர் தான் உன் முன்னாடியே கொலஸ்ட்ரால் இருக்குன்னு சொல்லிட்டாரு. அதைக் கேட்டதும் ஆரம்பிச்சே உன் சமையலை... சுட்ட சப்பாத்தி... எண்ணெய் பார்க்காத தோசை.., கோதுமை கஞ்சின்னு...

    அப்பா! நான் லக்கிப்பா, இனிமேல் எனக்கு விடுதலை, சென்னைக்கு தப்பிச்சிப் போறேன்.

    என்னங்க... சென்னைக்கு தப்பிச்சிப் போறேன்னு சொல்றா...

    பைத்தியம்! உன்னை கிண்டல் பண்றா! அவ புத்திசாலி... எதையும் யோசித்துத்தான் செய்வா... அவளுக்கு நம்ம அட்வைஸ் தேவையில்லை.

    சரி சரி டிபனைக் கொடு!

    அம்ருதா அதோடு விடுவதாயில்லை.

    எனக்கு ஒரு சந்தேகம்பா...

    கேளும்மா...

    நீங்க அழகாயிருக்கிங்க, அதோடு அமைதி, பொறுமையாயிருக்கிங்க. எப்படி இவங்களை செலக்ட் பண்ணாங்க.

    இதைக் கேட்டதும் நவமணி முகம் கோபத்தால் சிவந்தது.

    மகள் தன்னை புகழ்ந்ததும் அவரின் வயது குறைந்து முகம் பளபளப்பானது.

    சொல்லுங்கப்பா...

    அதை ஏம்மா இப்போ ஞாபகப்படுத்துறே...!

    எனக்கு எத்தனையோ இடத்திலிருந்து பெண் கொடுக்க நான், நீன்னு போட்டிப் போட்டாங்க, எங்கம்மாவும், இவங்க வீட்டுக்கு போயி பெண் பார்த்தாங்க.

    அம்மாவையா...

    இல்லேம்மா... இவ தங்கச்சியைத்தான் காட்டினாங்க. எனக்குப் பிடிச்சிப் போச்சு. கல்யாணத்தன்னிக்கு பார்த்தா இவ என் பக்கத்திலே வந்து உட்கார... பயந்து அலறிட்டேன். கேட்டா இவ அப்பா இவளைத்தான் உங்களுக்குக் காண்பிச்சோம், பையனுக்கு பார்வைக் கோளாறா... உளறுறாருன்னு சொல்லிட்டார்.

    உங்களை மாதிரி தைரியமெல்லாம் எங்களுக்கு அப்போ கிடையாதும்மா! அதிலேயும் இவள் தம்பிங்க ரெண்டு பக்கமும் கிருதா வச்சிக்கிட்டு முறைச்சானுங்கம்மா... அதுக்குப் பயந்தே இவ கழுத்திலே தாலி கட்டிட்டேன். அந்த பயம் இன்னும் போகலே...

    அம்மா அவ்வளவுப் பொல்லாதவங்களா...

    அம்ருதா! உங்கப்பா சொன்னது அத்தனையும் பொய். நம்பாதே... இவரு கதையைச் சொன்னா... நீ இப்படியா இவருன்னு ஆடிப்போயிடுவே...

    அப்படியா! சொல்லு சொல்லு...

    என்னம்மா...

    இருங்கப்பா, சொல்லட்டும்.

    இவருக்கு எத்தனையோ எடத்திலே பெண் கேட்டும் யாரும் கொடுக்க மாட்டேன்னு ரெண்டு காலிலும் நின்னுட்டாங்க, கடைசியா எங்கப்பனயே ஏமாற்றி என் தனலயில் கட்டிட்டாங்க. எங்கப்பாவும் ஏதோ கவர்மெண்ட் வேலைப் பார்க்கிறாரேன்னு பரிதாபப்பட்டு கொடுத்திட்டாங்க.

    "என்ன இருந்தாலும் அப்பா சொன்னதுதான் விறுவிறுப்பாயிருக்கு. நீ சொன்னது ஒண்ணும்

    Enjoying the preview?
    Page 1 of 1