Naan Avan Than...!
()
About this ebook
அநேகமாக எல்லா தமிழ்ப் பத்திரிகைகளிலும் பங்களிப்பை நல்கியவர். தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி, தி மிர்ரர், ஈவ்ஸ் வீக்லி, தி வீக், ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆகிய ஆங்கில இதழ்களிலும் எழுதியிருக்கிறார். இவருடைய ஒரு பக்கக் கதைகள் உருது மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தகமாக வெளியாகியிருக்கிறது. சிறந்த எழுத்தாளர்களுடன் பேசி, பழகி, கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட சம்பவங்கள், வாசகக் கோணத்தில் எழுதுவதைக் கற்பித்த பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுடன் கொண்ட நட்பு, கதை-நாவல்-கட்டுரை-நாடகம்-பேட்டி-புகைப்படம்-வானொலி-தொலைக்காட்சி என்று எழுத்து இலக்கணத்தின் பல்வேறு பரிமாணங்களில் பரிமளிக்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றவர்.
டன்லப் டயர் உற்பத்தித் தொழிற்சாலையில் ஊழியர் நல அதிகாரியாகப் பணியாற்றியபோது டன்லப் அம்பத்தூர் நியூஸ் என்ற உள்சுற்று பத்திரிகையை (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) நடத்தியவர். ஹட்ஸன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் அருண் ஐஸ்க்ரீம் பிரிவுக்காக ‘அருண் குளுமை மலர்’ என்ற உள்சுற்றுப் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர். ‘மாநகரச் செய்திகள்’ என்ற வட சென்னைப் பகுதிக்கான மாதமிருமுறை பத்திரிகையைத் திறம்பட நடத்தியவர்.
சுஜாதா ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்த ‘மின்னம்பலம்’ இணைய இதழ், மற்றும் ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’ மாதமிருமுறை இதழில் உதவி ஆசிரியராகவும், தினகரன் குழுமத்தின் ஆன்மிக இதழ்களின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த வகையில் சுஜாதா முதல் மிகப் பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளைத் தான் பணியாற்றிய பத்திரிகைகளில் வெளியிட்டு, அவர்களுக்கும் அந்தப் பத்திரிகைகளுக்கும் பெருமை சேர்த்தவர்.
Read more from Prabhu Shankar
108 Divya Desa Ulaa – Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsValam Tharum Virathangal Rating: 0 out of 5 stars0 ratingsZainthavi Rating: 0 out of 5 stars0 ratingsNallana Ellam Arulum Naradar Puranam! Rating: 0 out of 5 stars0 ratingsOm Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsThelivu Peru Om Rating: 0 out of 5 stars0 ratings108 Divya Desa Ulaa – Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsAandroor Uthirtha Aanmeega Muthukal Rating: 0 out of 5 stars0 ratingsKaana Mudiyathathil Unarapadubavare Kadavul! Rating: 0 out of 5 stars0 ratingsChuttigale, Koyilukku Pogalama? Rating: 0 out of 5 stars0 ratings108 Divya Desa Ulaa – Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsPongalo Pongal…! Rating: 0 out of 5 stars0 ratingsAanandham Arulum Arupadai Veedu Annal! Rating: 0 out of 5 stars0 ratingsPadi Alakkiran! Rating: 0 out of 5 stars0 ratingsVaanga Thambi Thangaiyare Rating: 0 out of 5 stars0 ratingsOru Cameravin Kaadhal Konam! Rating: 0 out of 5 stars0 ratingsSabarimalai Yathirai Oru Vazhikatti Rating: 0 out of 5 stars0 ratingsGanga Snanam Aacha Rating: 0 out of 5 stars0 ratingsSwaroopa - Oru Vanna Kanavu! Rating: 0 out of 5 stars0 ratingsEn Anbu Kuzhanthaigale.... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Pisase Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Paarvaiyil Ramayanam Rating: 0 out of 5 stars0 ratingsSarvathigari Idi Amin Rating: 0 out of 5 stars0 ratingsModel Mayakkam Rating: 0 out of 5 stars0 ratingsVithiyasa Ramanayam Rating: 0 out of 5 stars0 ratingsChiranjeevi Rating: 0 out of 5 stars0 ratingsPoorva Janmathu Bandham Rating: 0 out of 5 stars0 ratingsPillai Kaniamuthey... Rating: 0 out of 5 stars0 ratings108 Divya Desa Ulaa – Part 3 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Naan Avan Than...!
Related ebooks
Mogame Mounamai... Rating: 0 out of 5 stars0 ratingsKolai Kolaiyam Mundhirikka Rating: 0 out of 5 stars0 ratingsEttu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Aabathu August 10! Rating: 0 out of 5 stars0 ratingsKodungal Ketkapadum Rating: 5 out of 5 stars5/5Ellam Poi Rating: 0 out of 5 stars0 ratingsKaathiru, Kaadhalikkirean! Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsEn Irantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsParvai Ondre Podhume! Rating: 0 out of 5 stars0 ratingsKulirkaala Kutravaligal Rating: 0 out of 5 stars0 ratingsAdimaiyin Kaadhal Rating: 5 out of 5 stars5/5Meendu(m) Varuven Rating: 0 out of 5 stars0 ratingsVaanavil Kutram Rating: 5 out of 5 stars5/5Ingeyuma Nee? Rating: 0 out of 5 stars0 ratingsKanavaana Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaanam Miga Arugil Rating: 0 out of 5 stars0 ratingsNaan Enbathu Nee Allavo Rating: 0 out of 5 stars0 ratingsVasantham Varum Rating: 0 out of 5 stars0 ratingsMoochil Vaazhum Pullanguzhalgal! Rating: 0 out of 5 stars0 ratingsYaaga Pasukkal Rating: 0 out of 5 stars0 ratingsசொதப்பல் மன்னன் ஐடியா சாமி Rating: 0 out of 5 stars0 ratingsSothappal Mannan Idea Saamy Rating: 0 out of 5 stars0 ratingsAriyum Paruvam Rating: 0 out of 5 stars0 ratingsKolai Express Rating: 0 out of 5 stars0 ratingsKilakku Sivakkaiyile Rating: 0 out of 5 stars0 ratingsMedhuvaga Sellum Ambulancegal Rating: 0 out of 5 stars0 ratingsMaandavan Kattalai Rating: 0 out of 5 stars0 ratingsMaandavan Kattalai Rating: 3 out of 5 stars3/5கோவையில் ஒரு குற்றம் Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Naan Avan Than...!
0 ratings0 reviews
Book preview
Naan Avan Than...! - Prabhu Shankar
http://www.pustaka.co.in
நான் அவன்தான்…!
Naan Avan Than…!
Author:
பிரபு சங்கர்
Prabhu Shankar
For more books
http://www.pustaka.co.in/home/author/prabhu-shankar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
அதிகாலைப் பொழுது.
பாலா, கேட்டு சாத்தினியா?
ஸ்டேஷன் மாஸ்டர் கேட்டார்.
இதோப் போறேஞ்சாமி...
என்ற பாலா இருப்புப் பாதை வழியாக ஓடினான். சற்று தூரத்தில் இருந்த லெவல் கிராஸிங் கதவுகளை இழுத்து மூடி, அப்போதைய சாலைப் போக்குவரத்தைத் தற்காலிகமாகத் தடை செய்தான். சிக்னல் லீவரை இழுத்து லாக் பண்ணினான். கைக்காட்டி, வரப்போகும் ரயிலைத் தடுத்து நிறுத்தத் தயாராக இருந்தது.
ஆள் சந்தடியே இல்லாத அந்த ஸ்டேஷனுக்குள் நுழைந்தது ரயில். எதிர்க்க யாருமில்லை என்ற தைரியத்தில் பலமாய் கத்தி ஆர்ப்பரிக்கும் ரௌடிபோல 'கூ...' என்று கத்தி ஓய்ந்தது.
"திம்மூரு, திம்மூரு...' என்று கத்தியபடியே வேகமாக ரயில் பெட்டிகளை ஒட்டி ஓடினான் பாலா. இந்த ஸ்டேஷனில் இறங்கவேண்டியவர்கள் யாராவது பெட்டிக்குள்ளேயே தூங்கிக் கொண்டிருந்தால் அவர்களை எழுப்பவே இந்தக் கூப்பாடு! அந்த காலத்திலிருந்து மாறாதிருக்கும் ஆங்கிலேய நடைமுறைகளில் இதுவும் ஒன்று. அப்படி ஓடிய வேகத்திலேயே பெட்டி, படுக்கைகளுடன் வந்திருக்கும் பயணிகள் யார் என்று ஒரு நோட்டம் விட்டுக்கொண்டான். 'நமக்குத் தெரிஞ்சு, சமீபத்ல இந்த கிராமத்திலேருந்து யாரும் வெளியூர் போகலே. அதனால யாரும் திரும்பி வரவும் வாய்ப்பில்லே. புது மனுஷாளும், போயும் போயும் இந்த கிராமத்துக்கு ஏன் வரப் போறாங்க!' என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்.
ஊர்ப் பெயரைக் கத்திச் சொல்லிவிட்டு, ஸ்டேஷன் மாஸ்டர் தன் கையில் சுருட்டி வைத்திருந்த பச்சைக் கொடியைப் பிரித்து விசிறிக் காட்டிய அதே நேரம், ஒரு கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த தண்டவாளக் கட்டையை பெரிய இரும்புத் திருகாணியால் தட்டவேண்டும் அவன். ஓடிப்போய் சிக்னல் லீவரைத் தாழ்த்தி விட்டு, இரண்டு முறை மணி அடித்துவிட்டு கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொண்டான் பாலா.
ரயில் புறப்பட்டு கிழக்கே நோக்கி நகர்ந்தபோது, பேண்ட் -சட்டை அணிந்த ஒரு இளைஞன் தன்னை நோக்கி வருவதைக் கண்ட ஸ்டேஷன் மாஸ்டர் அவன் தோற்றத்தால் வசீகரிக்கப்பட்டார்.
தான் தூக்கி வந்த சூட்கேஸைக் கீழே வைத்துவிட்டு பேண்ட்டின் பின் பாக்கெட்டிலிருந்து டிக்கட்டை எடுத்து ஸ்டேஷன் மாஸ்டரிடம் கொடுத்தான் அவன். லேசாக உதடு பிரித்து, நான் இந்த கிராமத்ல இருக்கற தேவா ஃபெர்டிலைஸர் கம்பெனி சேல்ஸ் பிராஞ்சுக்கு மாற்றலாகி வந்திருக்கேன், தற்காலிகமாக. கொஞ்ச நாளைக்கு அப்புறம் திரும்ப சென்னைக்கே திரும்பப் போயிடுவேன். என் பெயர் கண்ணன்,
என்று அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
அப்படியா? ரொம்ப சந்தோஷம். நீங்க உங்க ஆபீஸ் ஜாகையிலேயே தங்கிக்கலாம், இல்லையா? நான் மேலத் தெருவிலே இருக்கேன். ஒங்களுக்கு ஏதாவது உதவி வேணும்னா தயங்காம கேளுங்கோ. அவசியம் செய்யறேன்....
ஸ்டேஷன் மாஸ்டர் அவனுடைய தோற்றத்திலேயே லயித்தவராக வரவேற்பு உபசாரம் செய்தார்.
தேங்க்யூ
என்ற அவனுடைய குரலில்தான் எத்தனை காந்தம்!
இங்கிருந்து ஆபீஸ் எவ்ளவு தூரம் இருக்கும்?
பாலாவிடம் கேட்டான் கண்ணன்.
அது இருக்குமே, ரெண்டு கல் தூரம்...
என்று இழுத்த பாலா, ஸ்டேஷனுக்கு வெளியே வந்து, ஏலேய், எந்திரிடா. சாமியை ஊர்ல கொண்டு விடு,
என்று வண்டிக்குள் தூங்கிக் கொண்டிருந்த வண்டிக்காரனை எழுப்பினான்.
வண்டிக்காரன் முனகியபடியே எழுந்தான். மிகப் பெரிதாக சப்தமிட்டபடி கொட்டாவி விட்டான். மரத்தில் கட்டியிருந்த மாட்டின் கயிற்றை அவிழ்த்து அதன் முதுகிலேயே வளைத்துப் போட்டான். சொல்லி வைத்தாற்போல வண்டி நுகத்தடிக்குள் தானே தலையை நுழைத்துக் கொண்டது மாடு. இப்பிடி ஏறுங்க சாமி,
என்று வண்டிக்காரன் கண்ணனிடம் வண்டியில் பின் பகுதியைக் காட்டினான். கண்ணன் யோசித்தபடியே ஏறிக்கொண்டான்.
'ஜலங்,,,ஜலங்...' என்று மாட்டின் கழுத்து மணி இனிமையாய் ஒலிக்க, வண்டி போய்க் கொண்டிருந்தது. அதிகாலையில் அந்த ஒலி மனசுக்கு இதமாக இருந்தது. ஊர் வந்துவிடப் போகிறதே என்ற கவலையில் பின்னிரவு தூக்கத்தை ரயிலிலேயே தத்தம் செய்துவிட்ட கண்ணனுக்கு அந்த மணியோசை ஒரு தாலாட்டு போலவே இருந்தது.
ஊர் நெருங்கியது. தூரத்தே சில வீடுகள் தெரிந்தன. ஏற்கெனவே சுமாரான வேகத்தில் சென்றுகொண்டிருந்த மாட்டுவண்டி, இன்னும் வேகத்தைக் குறைத்தது.
சாமீ, மேலத்தெருவிலே எறங்கிக்கறீங்களா? யார் வீட்டுக்குப் போகப் போறீங்க?
வண்டிக்காரன் கேட்டான்.
வீடு இல்லே, இந்த உரம் விக்கறாங்களே, உரம்...பயிருக்கு உரம்....அந்த ஆபீசுக்குப் போகணும்...
என்றான் கண்ணன்.
அட, அது கௌக்குத் தெருவிலே இல்ல இருக்குது. நாம மேக்குத் தெருவுக்குள்ளாற நுழைஞ்சிட்டோமே...
என்று சற்றே அலுத்துக்கொண்டான் வண்டிக்காரன். சரி, இப்படியேத்தான் போவோம்,
என்ற அவன் மாட்டைத் தட்டிவிட்டான். 'ஜலங்...ஜலங்...' என்ற மங்கல ஒலியுடன் முன்னேறியது அந்த ஆரோக்கியமான ஆனால் அடிமை மாடு.
மேற்குத் தெருவில் வீடுகள் பக்கத்துப் பக்கத்தில் அழகான வரிசையில் அமைந்திருந்தன. அளவுகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டாலும் பட்டணத்துத் தீப்பெட்டி அடுக்காக இல்லாமல் அழகாகவே இருந்தது.
தெருவில் ஒரு வீட்டு முன்னால் பெரிய அளவில் கோலம் போட்டுக் கொண்டிருந்த ஒரு பெண் நிமிர்ந்தாள். அப்போதுதான் குளித்து, முடிந்து விட்டிருந்த முடி அவள் முகத்தில் பாதியை மூடியிருந்தது. குனிந்த நிலையிலேயே ஏறிட்டுப் பார்த்த அவளுடைய பாதிமுக அழகைக் கண்டதும் கண்ணனின் கண்களில் ஆச்சரியம் மின்னியது. விழிகளாலேயே அவளை விழுங்கிவிடுவது போலப் பார்த்தான்.
கோலம் போடும் பாவனையில் முழங்கால்கள் மீது தன் முழங்கைகளைப் பதித்து, கால்களை அகட்டி வைத்து குனிந்திருந்த அவள், யாரோ ஒரு புதியவன் தன்னை ஊன்றி கவனிப்பது கண்டு வெட்கப்பட்டு நிமிர்ந்தாள்.
நிமிர்ந்த அவளுடைய அழகு, கண்ணனை இன்பமாய்த் தாக்கியது. வண்டி நின்றிருந்தபோதிலும் இடித்துக்கொண்டான். வாயில் தாவணி அவளுடைய இளமை பூரிப்புக்குப் போதிய கவசமாக இருக்க முடியாமல் தவித்ததோடு, கண்ணனின் கண்களுக்கும் விருந்தளித்தது.
அவள் ஏக்கத் தவிப்புடன் பார்த்தாள். தான் பெரிய அளவில் போடும் இந்தக் கோலத்தை இந்த மாடு காலால் மிதித்து நாசப்படுத்திவிடுமோ?