Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poorva Janmathu Bandham
Poorva Janmathu Bandham
Poorva Janmathu Bandham
Ebook84 pages31 minutes

Poorva Janmathu Bandham

Rating: 0 out of 5 stars

()

Read preview
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580130605093
Poorva Janmathu Bandham

Read more from Prabhu Shankar

Related to Poorva Janmathu Bandham

Related ebooks

Reviews for Poorva Janmathu Bandham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poorva Janmathu Bandham - Prabhu Shankar

    http://www.pustaka.co.in

    பூர்வ ஜன்மத்து பந்தம்

    Poorva Janmathu Bandham

    Author:

    பிரபு சங்கர்

    Prabhu Shankar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/prabhu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    ஒரு மருத்துவமனையில்தான் எல்லாவகையான உணர்வுகளையும் கவனிக்க முடியும். நோயுற்றவர்களின் வேதனை முகம், முனகல்; அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களின் பரிதவிப்பு, பயம்; ‘சப்ஜக்ட்’ என்று நோயாளியை பொத்தாம் பொதுவாகக் குறிப்பிட்டு ‘அதற்கு’ வைத்தியம் பார்க்கும் மருத்துவர்கள், அவர்களுடைய உதவியாளர்கள், மற்றும் செவிலியர்களின் இறுக்கமான, வலி புரிந்துகொள்ளாத விரும்பாத முகபாவம்; குணமாகித் திரும்பும் நோயாளியின் வாடிய முகத்தின் உயிர்ப்பு; அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் உறவினரின் மலர்ச்சி முகம்; யந்திரக் கதியாக பணத்தை எண்ணி உள்ளே போட்டுக்கொண்டு ரசீது வழங்கும் கவுன்ட்டர் பணியாளர்களின் சுறுசுறுப்பு; எண்ணும்போது கையும், கொடுக்கும்போது மனமும் வலிப்பதைக் காட்டும் பணம் செலுத்துவோரின் முகம்; இவற்றினூடே நோயாளியின் உடல்நலம் பற்றிய தகவல்களை டாக்டர்கள் ரகசியமாக வைத்திருப்பதால் அவர்களுடைய உறவினர்களுக்குள் ஏற்படும் பரிதவிப்பு....

    டாக்டர் என்ன சொல்றார்? வழக்கமான கேள்வி. தான் நேரடியாக டாக்டரிடம் கேட்டாலும், அவர் சொல்லப்போவது தனக்குப் புரியாது என்ற காரணத்தாலும், அதைப் பிறர் மூலமாகத் தெரிந்து கொள்ளும் அப்பாவித்தனம்.

    எல்லா டெஸ்ட்டும் பண்ணியாச்சு; ஆனாலும் ஒண்ணும் புரியலையேன்னு முழிக்கறார்... டாக்டருக்கே தெரியவில்லை என்பதை அவரை கேலி செய்யும் தொனியில் வரும் பதில்!

    அப்படின்னா என்ன அர்த்தம்? தொடர்ந்து ட்ரீட்மென்ட் எடுத்துக்கணுமாமா? இல்லே, வீட்டுக்கு அழைச்சுண்டு போயிடலாமா? என்று அடுத்து வந்தது செலவுக் கவலை. அப்படியே வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனாலும், அங்கே இந்த ஆஸ்பத்திரி மாதிரி சிசிருஷை பண்ண முடியுமா என்பதும் சந்தேகமே!

    எனக்கென்னவோ இன்னும் பணம் பிடுங்குவார்னுதான் தோணறது. இதுவரை ஆன செலவை மனசுக்குள்ளேயே கணக்குப் போட்டுக்கொண்டு, அந்த செலவுக்கான நியாயமான விளைவாக நோயாளியின் உடல்நலத்தில் முன்னேற்றம் காண முடியாத விரக்தி பதில்.

    பணம் போனாலும் பரவாயில்லையே, ஆயுசுக்கு கியாரன்டி தர முடியுமா அவரால? கூடுதல் விரக்தியுடன் வந்தது கேள்வி. இனிமேலும் ஆகபோகும் செலவுக்காவது ஏதேனும் பிரயோஜனம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு!

    அதெப்படி தருவார்? அது பிரம்மன் எழுதின விதியாச்சே... என்னதான் செலவு செய்தாலும், என்னதான் டாக்டர்கள் முயற்சித்தாலும், விதி என்று ஒன்று இருக்கிறதே என்று முன்னேற்பாடாக மனதைத் தயார் பண்ணிக்கொள்ளும் தந்திரம் இது.

    என்னமோ போ. ஏதோ சொல்வாங்களே, உலகத்ல எல்லார்கிட்டேயும் தனித்தனியா அன்பு பாராட்ட முடியாதுன்னுதான் தாயை பகவான் அனுப்பிச்சு வெச்சான்னு, அதே மாதிரி, எல்லார் உயிரையும் தன் ஒருத்தனால எடுக்க முடியாதுன்னுதான் எமன், டாக்டர்களை அனுப்பிச்சு வெச்சானோன்னு சொல்லலாம் போல இருக்கு....! தான் கேள்விப்பட்ட கேஸ்கள் எல்லாமே ஆஸ்பத்திரியில்தான் இறுதி மூச்சை விட்டதால் தோன்றிய அவநம்பிக்கைத் தத்துவம்.

    அவங்களையும் குறை சொல்ல முடியாது. அவங்களும் தங்களால ஆனவரைக்கும் முயற்சி பண்ணத்தான் செய்யறாங்க. என்ன, அளவுக்கு மிஞ்சி செலவு அதிகமாகிறதையும், அளவுக்கு மிஞ்சி நோயாளிக்கு வலி, வேதனை அதிகமாகிறதையும்தான் தாங்கிக்க முடியலே... யார்தான் ஒருத்தரோட உயிருக்கு கியாரன்டி கொடுக்க முடியும்? ஹும், எதெது எப்பெப்படி நடக்கணுமோ, அதது அப்பப்படிதான் நடக்கணும்... டாக்டர்கள் முயற்சியால் நோயாளி பிழைத்துவிட வேண்டுமே என்ற ஆதங்கத்தில், டாக்டர்களைக் குறை சொன்னால், எங்கே ஏதாவது ஏடாகூடமாகிவிடுமோ என்ற அமானுஷ்ய பயம்.

    சரி, முடிவா நீங்க என்ன சொல்றீங்க? வீட்டுக்கு அழைச்சுகிட்டுப் போயிடலாமா? ஒரு ஊகமா இது அவரோட கடைசி காலம்னு வெச்சுகிட்டு அவங்களுக்கு வேண்டியவங்களை வந்து பார்த்துட்டுப் போகச் சொல்லலாமா....? கடவுள் முடிவெடுப்பதைவிட, டாக்டர்கள் முடிவெடுப்பதைவிட, தான் ஒரு முடிவைச் சொல்லி, அதையே விதியின் முடிவாகவும் மாற்றத் துணியும் அசட்டு தைரியம். அல்லது அப்போதைக்குத் தான் மேலும்

    Enjoying the preview?
    Page 1 of 1