Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Swaroopa - Oru Vanna Kanavu!
Swaroopa - Oru Vanna Kanavu!
Swaroopa - Oru Vanna Kanavu!
Ebook87 pages29 minutes

Swaroopa - Oru Vanna Kanavu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு நடிகை படபிடிப்பில் இருக்கும் போது கொல்லப்படுகிறாள். அந்த நடிகையின் மீது வெறிகொண்ட ரசிகனான கதாநாயகன் துப்பறிகிறார். விறுவிறுப்பான இக்கதையில் எப்படி கொலைகாரனை கண்டுபிடிக்கிறான்? படித்துப் பாருங்கள்.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580130604984
Swaroopa - Oru Vanna Kanavu!

Read more from Prabhu Shankar

Related to Swaroopa - Oru Vanna Kanavu!

Related ebooks

Reviews for Swaroopa - Oru Vanna Kanavu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Swaroopa - Oru Vanna Kanavu! - Prabhu Shankar

    http://www.pustaka.co.in

    ஸ்வரூபா

    ஒரு வண்ணக் கனவு!

    Swaroopa

    Oru Vanna Kanavu!

    Author:

    பிரபுசங்கர்

    Prabhu Shankar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/prabhu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    ஸ்வரூபாவுக்கு வாழ்ந்தாகவேண்டிய கட்டாயம். அதனால் தான் மேற்கொண்டிருக்கும் தொழிலில் அதிக அக்கறை காட்ட வேண்டிய நிர்ப்பந்தம்.

    ஒரு கவர்ச்சியான வீட்டுக்கு முன்னால் அவள் போய் நின்றபோது பிரதான வாசல் கதவின் அந்தப்புறம் இருந்த கன்றுக்குட்டி உயரமுள்ள நாய்கூட குரைக்க யோசித்தது. அவளைப் பார்த்துக்கொண்டே நின்றது. வாலையும் ஆட்டியது.

    அவள் புரிந்து கொண்டாள். அந்த ஐந்தறிவு ஜீவன் தன் தோழமையை எதிர்பார்க்கிறது. ஆனால் உள்ளே இருப்பவர்கள் எப்படியோ!

    நாயின் வாலாட்டல் அவளுக்கு தைரியத்தைக் கொடுத்தது.

    தாள் நீக்கிக் கதவைத் திறந்தாள்.

    நாய்க்கும் மீறிய இரண்டாவது எச்சரிக்கை ஒலியாகக் கதவு கிரீச்சிட்டது.

    வீட்டினுள் வராந்தா ஜன்னல் வழியாக யாரோ எட்டிப் பார்ப்பது தெரிந்தது.

    உடனே உள் வாசல் கதவு திறந்தது. லுங்கி அணிந்திருந்த ஒரு நாற்பது வயதுக்காரர் வெளியே வந்தார். உடம்பின் மேல் பகுதி திறந்தவிடப்பட்டிருந்தது. முகத்தில் மீசை. இரு நுனிகளும் «ல்நோக்கி வளைந்து கண்களைப் பார்த்தன.

    வீட்ல லேடீஸ் இருக்காங்களா? ஸ்வரூபா அவரைப் பார்த்துக் கேட்டாள்.

    நீ யாரும்மா? யார் வேணும் உனக்கு?

    நான் ஒரு சேல்ஸ் கெர்ள் சார். பெண்களுக்கான சமாச்சாரம் விற்க வந்திருக்கேன். வீட்ல லேடீஸ் இருந்தாங்கன்னா வரச்சொல்லுங்க... என்ற அவளுடைய பார்வை அந்த ஆள் மீது லேசன சந்தேகத்தையும் படரவிட்டது.

    உள்ளே வாம்மா. இந்த வீட்ல நிறைய லேடீஸ் இருக்காங்க, வா, என்று அழைத்தபடி உள்ளே சென்றார் லுங்கி.

    சற்றுத் தயங்கியபடியே ஹாலுக்குள் நுழைந்தாள் ஸ்வரூபா.

    உட்கார், என்றார். ஃபேன் விசையைத் தட்டிவிட்டார்.

    தன்னை அவர் ஒருமையில் அழைத்ததில் அவள் மனசுக்குள் வருத்தப்பட்டுக்கொண்டாள். ஆனால் இந்தத் தொழிலில் ஏச்சு பேச்சுகளையே கேட்க வேண்டியிருந்த அவளுக்கு இது பெரிதாகப் படவில்லை. ஏதோ வியாபாரம் ஆனால் சரி.

    உட்கார்ந்த நாற்காலி மெத்தென்று இருந்தது. அறைக்குள் லேசாக விஸ்கி வாடைஅடித்தது. அடுத்த அறையிலிருந்து தப்பித்து வந்திருக்கும்.

    சுவர்களில் நிறைய கவர்ச்சி நடிகைகள், உடைகள் இல்லாப் படங்களாகத் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.

    அந்தப் படங்களைப் பார்த்தபோது, தன் வியாபாரம் அங்கே எடுபவே படாது என்று தோன்றியது ஸ்வரூபாவுக்கு. ஒருசில படங்களில் மெலிதான துணி போர்த்தியிருந்ததே தவிர உள்ளாடைகள் இல்லை.

    ஸ்வரூபா நெளிந்தாள்.

    வாம்மா, விஸ்கி வாசனை முன்னே வர, அந்த அறையிலிருந்து வந்தாள் ஒரு அம்மாள். செம தடி. அவளுக்கு, தான் நடந்து வருவதே பெரிய வேலையாகத் தெரிந்தது.

    ஹாலுக்குள் நுழைந்த அந்தப் பெண்மணி ஸ்வரூபாவைப் பார்த்து ஒரு கணம் அப்படியே நின்றாள். அவள் கொண்டு வந்திருந்த இரண்டு ஜோல்னா பைகளையும் பார்த்தாள்.

    யார் அனுப்சாங்க? அம்மாள் கேட்டாள். மனசு கால்குலேட்டரில் கணக்குப் போட்டுக் கொண்டாள். எம்.எல்.ஏ ரொம்ப நாளா புதுமுகம் ஒண்ணு வேணும்னு கேட்டுகிட்டிருந்தாரே... இந்தப் பொண்ணு சரியாக இருக்கும். இப்படி ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தி வைத்து தான் இன்னும் சில வருஷங்களுக்கு, குறந்த பட்சம் அடுத்த தேர்தல் வரையிலாவது, வாழ்க்கையைத் தொந்தரவு இல்லாமல் ஓட்டலாம்...

    "யாரும் அனுப்பலே. நானாகத்தான் வந்தேன். நான் ஒரு சேல்ஸ் கேர்ள். பிரா விக்கறேன். ஆனா...

    Enjoying the preview?
    Page 1 of 1