Kodungal Ketkapadum
5/5
()
About this ebook
தீய நண்பனின் பழக்கம் வாழ்க்கையே திசை திருப்பிவிடும் என்பதைப் போல, ராமகிருஷ்ணனின் தீய நண்பனின் பழக்கத்தினால் அவனின் வாழ்க்கையில் நடக்கும் திருப்பம் என்ன?
காவல் துறையை பற்றிய தவறான எண்ணத்தை மாற்றி, தங்களால் மக்களுக்கு நல்லதும் செய்ய முடியும் என்ற எண்ணத்தை உருவாக்க துடிக்கும் இன்ஸ்பெக்டர். காவல்துறையின் திறமையால் ராமகிருஷ்ணனின் வாழ்க்கை பயண மாற்றம் எப்படி இருந்தது? தொடர்ந்து படியுங்கள்...
Read more from Pattukottai Prabakar
Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Oor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Bharath VS Susila Rating: 4 out of 5 stars4/5Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsThottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Ini... Iniya... Rating: 5 out of 5 stars5/5Thappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Iravu Pathu Rating: 5 out of 5 stars5/5Narukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsPuthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Pushpa Rating: 5 out of 5 stars5/5Varuvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsYaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsNer Meley Nila Rating: 5 out of 5 stars5/5Uyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Kuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsTick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Patharathey Bharath Rating: 5 out of 5 stars5/5Sollungal Seyyapadum Rating: 0 out of 5 stars0 ratings
Related authors
Related to Kodungal Ketkapadum
Related ebooks
December Punnagai Rating: 5 out of 5 stars5/5Kulirkaala Kutravaligal Rating: 0 out of 5 stars0 ratingsKolai Kolaiyam Mundhirikka Rating: 0 out of 5 stars0 ratingsVilaga Vilaga Vibareetham Rating: 5 out of 5 stars5/5Oru Koodai Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsInnum Sila Nimidangalil... Rating: 5 out of 5 stars5/5Maranam Thappinal Maranam Rating: 0 out of 5 stars0 ratingsPoi Kaatchi! Rating: 0 out of 5 stars0 ratingsImaikkum Nerathil Rating: 5 out of 5 stars5/5Vetri Kodu Rating: 5 out of 5 stars5/5Andha Nimidam Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsEppadiyum Jeikka Vendum Rating: 0 out of 5 stars0 ratingsWellington Vibareetham Rating: 5 out of 5 stars5/5Vidiyattum, Vidai Solgirean Rating: 0 out of 5 stars0 ratingsAbaayam Thodathey! Rating: 5 out of 5 stars5/5Hello 100 Rating: 5 out of 5 stars5/5Ilamai - Ithudan Inaippu Rating: 0 out of 5 stars0 ratingsIdhu Valarum Paruvam Rating: 5 out of 5 stars5/5Ethuvarai Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsInnamum Brammachari Rating: 5 out of 5 stars5/5Naan Oru A Rating: 0 out of 5 stars0 ratingsNizhal Mudichu Rating: 5 out of 5 stars5/5Vedikkai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsOru Chinna Thavaru Rating: 0 out of 5 stars0 ratingsOru Nijam Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5Thandanai Neram Rating: 0 out of 5 stars0 ratingsSigappaaga Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5Ula Vara Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsOperation Venus Rating: 0 out of 5 stars0 ratingsKadhal XYZ Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Kodungal Ketkapadum
1 rating0 reviews
Book preview
Kodungal Ketkapadum - Pattukottai Prabakar
https://www.pustaka.co.in
கொடுங்கள் கேட்கப்படும்
Kodungal Ketkapadum
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
கரைந்த வெளிச்சத்தில் மாலை.
தன் தோழர்களுடன் தூரத்தில் வந்து கொண்டிருந்தது இருட்டு.அதை எதிர்க்க மின்சாரம் அங்கங்கே தயாராகிக் கொண்டிருந்தது.
திருச்சியின் மலைக்கோட்டை அடிவாரத்தில் சாலைகள் ஏக சத்தத்தில், ஏக பரபரப்பில் இருந்தன. வரிசையான துணிக்கடைகளில் அடிவயிற்றில் சேலை கட்டின பொம்மைகளுக்குத் தனி விளக்குகள். செலவழித்தே தீருவது என்று தீர்மானமாக மக்கள் நடந்து கொண்டிருக்க... ஒரு கல்லூரியைச் சேர்ந்த பொதுச் சேவைப்படை அவர்களை ஓரமாக நடக்கச் சொல்லிக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க...
ஐஸ்கிரீம் கடை ஒன்றில் வாசலுக்கு அருகே இருந்த மேசையில் சாலையைப் பார்க்கும் வண்ணம் அமர்ந்து மூன்றாவது ஐஸ்கிரீமை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அவன்.
குளிர் செய்யப்பட்ட அந்தக் கடையின் சுவர்களில் இதமான இயற்கை காட்சிகள் ஒட்டப்பட்டிருக்க... ஒரு இடைவெளியில் இருந்து ரகசியமாக காற்றை நனைத்துக் கொண்டிருந்தது சங்கீதம்.
அவன் அடர்த்தியான வகை துணியில் பாண்டும், சட்டையும் அணிந்து, அந்த நேரத்திற்கு சம்மந்தமே இல்லாமல் குளிர் கண்ணாடி அணிந்து கொண்டிருந்தான்.
அந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டு முடித்துவிட்டு கண்ணாடிக் கதவின் வழியாக சாலையைப் பார்த்தான். யாரையோ, எதையோ தேடினான். பிறகு மேசை மீதிருந்த கண்ணாடி தம்ளர் எடுத்துத் தண்ணீர் குடித்தான்.
சார், வேற என்ன வேணும்?
அவ்வளவுதான். பில் கொண்டாங்க.
சட்டைப் பையிலிருந்து சிகரெட்டை எடுத்துக் கொண்ட போது, கல்லாவில் அமர்ந்து பணம் வாங்கிக் கொண்டிருந்த இளைஞன், தயவுசெய்து இங்கே சிகரெட் குடிக்காதீங்க. மத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்கும்
என்று சொல்ல....
அவனை எரிக்கிற பார்வைப் பார்த்துவிட்டு, சிகரெட்டை மறுபடி பையில் போட்டுக் கொண்டான். மறுபடி சாலையைப் பார்த்தான்.
கதவைத் தள்ளிக் கொண்டு இரண்டு கல்லூரி மாணவிகள் மார்பில் அணைத்த புத்தகங்களோடு வந்து அவன் எதிரே காலியாய் இருந்த நாற்காலிகளில் அமர, தடிமனான அவனது கண்ணாடிக்குள்ளிருந்த பார்வை அவர்களை நோக்கித் திரும்பியது.
பிளாஸ்டிக் தட்டில் வைத்து இவனுக்கு பில் வந்த போது...
இரண்டு பைனாப்பிள் ஐஸ்கிரீம்
என்றார்கள், அவர்கள்.
எனக்கும் ஒரு பைனாப்பிள் ஐஸ்கிரீம்
என்றான் அவன்.
சார், பில் கொண்டாரச் சொன்னீங்களே...
பில் போட்டுட்டா அதுக்கப்புறம் சாப்பிடக் கூடாதுன்னு சட்டமா?
இல்லை, சார். கொண்டார்றேன்.
சர்வர் நகர்ந்ததும்...
சீதாலட்சுமி கல்லூரியா?
என்றான், அவர்களை.
அவர்கள் பதில் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டு கிசுகிசுப்பாகப் பேசிக் கொண்டார்கள், வேற மேசைக்குப் போயிடலாம் வாடி.
அவர்கள் எழுந்து வேறு மேசைக்குச் சென்று அமர்ந்து கொள்ள, அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
அவன் சொன்ன ஐஸ்கிரீம் கொண்டு வரப்பட்ட போது...
எனக்கு ஐஸ்கிரீம் வேணாம்
என்றான்.
நீங்கதானே சார் கொண்டுவரச் சொன்னீங்க?
அதனால் சாப்பிட்டாகணும்னு கட்டாயமா? பில்லிலே சேர்த்துக்கோ. பணம் கொடுத்துடறேன். நீ வேணும்னா சாப்பிட்டுக்கோ
என்று எழுந்தான்.
கல்லாவுக்கு வந்து ஐம்பது ரூபாய் நோட்டைத் தந்து பாக்கி வாங்கிக் கொண்டு, அங்கேயே நின்று சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, வயசு என்னப்பா உனக்கு?
என்றான்.
ஏன்?
சும்மா கேட்டேன்
என்று கண்ணாடிக் கதவைத் தள்ளி, ஓட்டலை விட்டு வெளியேறினான்.
மலைக்கோட்டை வாசலில் இருந்த மெயின்கார்ட் கேட் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒவ்வொரு கார்களையும் உற்றுப் பார்த்துக் கொண்டு நிதானமாக சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான். நடுவில் இரண்டு தரம் கைக்கெடிகாரத்தைப் பார்த்துக்கொண்டான்.
அந்தக் கல்லூரி மாணவிகள் வெளியே வந்து இவனைக் கடந்து நடந்தபோது...
ஐஸ்கிரீம் நல்லா இருந்திச்சா?
என்றான்.
அவர்கள் திரும்பிப் பார்க்காமல் சென்றனர்.
டை கட்டின இளைஞன் ஒருவன் அருகில் வந்து, விக்ஸ் பெரிய பாட்டில் வாங்கினால் இந்த பிளாஸ்டிக் தம்ளர் இலவசம்
என்றான்.
ஜலதோஷம் பிடிச்சதும் சொல்லி அனுப்பறேன்
என்றதும், அவன் வந்த வேகத்தில் திரும்பிச் செல்ல
அவனை உரசினது போல் வந்து நின்றது, அந்த கார்.
காரை ஓட்டின கவுன் அணிந்த அந்தப் பெண், அலோ
என்றதும், தாமதிக்காமல் முன் கதவைத் திறந்து ஏறிக்கொண்டு,
ம், சீக்கிரம்... வண்டியை எடு
என்றான்.
கார் புறப்பட்டு சந்தடிகளை விலக்கி, தில்லை நகரை நோக்கி மேம்பாலத்தில் ஏறத் தொடங்க, மாரீஸ் தியேட்டர்களில் மக்கள் மொய்த்துக் கொண்டிருக்க
நிம்மி, நீ நாற்பது நிமிடம் தாமதம்
என்றான்.
கைக்கு வர்றதிலே கொஞ்சம் தாமதமாயிடுச்சி
என்றாள், சாலையில் இருந்து பார்வையை விலக்காமல்.
எங்கே வச்சிருக்கே நிம்மி?
டிக்கியிலே.
விமானம் மூலமா அனுப்ப முடியாதே. நேரமாயிடுச்சே.
விமானம் வேணாம் யுவா, சொல்லச் சொன்னார். ரொம்ப பயப்படணும். ரெயில்தான் சவுகரியம். அதிலேயும் இரண்டாம் வகுப்புதான் சிறந்தது. என்ன சொல்றே?
மேலிடம் சொல்லியாச்சுன்னா சரிதான். மலைக்கோட்டை எக்ஸ்பிரசிலே அனுப்பிடறேன். நேரமிருக்கு.
யாரை அனுப்பப் போறே?
மணியை வரச் சொன்னேன். இப்போ என் வீட்டுல காத்திருப்பான்.
அவன்தான் சரியான ஆள். டிக்கெட்டு வாங்கிடுவியா?
யுவராஜை என்ன நினைச்சே நீ? ஒரே ஒரு போன் போதும், சகலமும் சாதிச்சுக் காட்டுவேன் நிம்மி.
இந்த தடவை மதிப்பு அதிகம். தெரியுமில்லையா?
தெரியும். ஆனால், சரக்கு என்னன்னு தெரியாது. பொடியா? ரொட்டியா?
ரொட்டி.
அப்போ கனம் அதிகமா இருக்குமே...
.
இல்லை. சுமாரான கனம்தான், சென்னைக்கு நீ போன் பண்ணித் தகவல் சொல்லிடறியா, நான் சொல்லட்டுமா?
நானே சொல்லிடறேன்.
கொஞ்ச நேரம் மவுனமாய் இருந்தார்கள்.
கார் தில்லை நகரில் திரும்பி அதன் குறுக்குத் தெருக்களில் ஒன்றில் வேகம் குறைந்து ஊர்ந்து கொஞ்சம் இருட்டாய் இருந்த அந்த வீட்டின் முன் நின்றதும்...
வீட்டின் வாசலில் கதவு திறந்து, கழுத்து மூடிய பனியன்