Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நிறங்கள்
நிறங்கள்
நிறங்கள்
Ebook122 pages30 minutes

நிறங்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தலா ஒரு குவார்ட்டர் விஸ்கி. ஒரு முழுக்கோழியை காரத்தோடு விழுங்கி அந்த பாரை விட்டு வெளியே வந்தார்கள் அந்த மூன்று பேரும். பிலிஸ் வில்லா ரோட்டில் தள்ளாடினார்கள்.
 ஒருவன் காந்தன். தீர்க்கமான உயரம். மாநிறம். சிலும்பின் சில தலை முடியை கர்ச்சீப்பால் அடக்கியிருந்தான். வலது கண் புருவத்தின் மேல் லாடமாய் ஒரு தழும்பு. உருட்டின மாதிரியான மூக்குக்குக் கீழே பிரதானமாய் மீசை. நீலக்கோடு போட்ட வெள்ளை சர்ட்டிலும் - சாம்பல் நிற பேண்டிலும் என்பது கிலோ உடம்பைத் திணித்திருந்தான்.
 இரண்டாமவன் மருது. நடுத்தர வயது. நிறை மாச! கர்ப்பிணியை ஞாபகப்படுத்தும் தொப்பை. வரிவரி பனியன் வழுக்கை மண்டை. கழுத்தில் கர்ச்சீப். இடுப்பில் அவிழக் கூடிய நிலைமையில் லுங்கி.
 மூன்றாமவன் குமரு. இளைஞன். மூன்று பேர்களில் இவன் நிறைய தள்ளாடினான். உடம்பில் சதைப் பூச்சில்லாமல் ஒட்டடைக் குச்சி மாதிரி தெரிந்த குமரு நான்கு தடவை வேலூர் ரிடர்ன்ட். அணிந்திருந்த மட்டமான ஜீன்ஸ் பேண்டில் - முக்கியமான இடத்தில் ஜிப் மாட்டப்படாமல் மானத்தை வாங்கியது.
 "டேய்...குமரு... இப்போ எங்கேடா போலாம்...?"
 "உள்ளே சரக்கு போயாச்சு... வயிறு முட்ட புரோட்டாவும் கோழியும் வயித்துக்குள்ளே போட்டு ரொப்பியாச்சு... ஹில்டாப் ரோட்ல இருக்கிற பலான வூட்டுக்கு போய் ராத்திரி பூராவும் தங்கிடலாமா...?"
 "அங்கே வேண்டாண்டா குமரு..." காந்தன் சொன்னான்.
 "ஏன்...?"
 "அங்கே போலீஸ் கெடுபிடி இப்போ எக்கச்சக்கமாயிடுச்சு.""அப்போ... நீயே சொல்லு... வேற பக்கம் எங்கே போலாம்...?"
 "பீன் ஹில் ரோட்ல... ரோஸின்னு ஒரு ஆங்கிலோ இண்டியன். அபாரமான சரக்கெல்லாம் வெச்சிருக்காளாம். அங்கே போயிடுவோமா...?"
 "அவ துட்டு ஜாஸ்தியா கேப்பாளே...?"
 "குடுத்துட்டாப் போச்சு..."
 "அப்ப... நட..." மூன்று பேரும் லேசாய் தள்ளாடிக் கொண்டே நடந்தார்கள். ஹோட்டல் தமிழ்நாடு அருகே - அதன் காம்பௌண்ட் பக்கமாய் வந்தபோது குமரு 'சட்'டென்று நின்றான்.
 "ஏண்டா நின்னுட்டே...?"
 "அந்தக் கார்லயிருந்து இறங்கற கட்டையைப் பார்ரா...! சும்மா ராயர் கடை பேக்கரி மாதிரி 'சிக்'ன்னு இருக்கா..."
 "புதுசா கல்யாணமானது போலிருக்கு."
 "காரை விட்டு இறங்கற ரெண்டு பேர்ல யாரு புருஷன்ல தெரியலை..."
 "ராத்திரிக்கு ஒருத்தன்... பகலுக்கு ஒருத்தன் போலிருக்கு அவ பாடு திண்டாட்டம்தான்."
 "திண்டாட்டமா...? கொண்டாட்டம்ன்னு சொல்லு..." காரை விட்டிறங்கி - ராகினியிடமும், பிரதீப்பிடமும் பேசிக் கொண்டிருந்த மங்கள் தனக்குப் பின்னால் - எழுந்த அநாகரீகப் பேச்சைக் கேட்டு குபீரென்று திரும்பினான்.
 "வெயிட் ஏ மினிட் மிஸ்டர் பிரதீப்..." சொல்லிவிட்டு - வேகவேகமாய் - அந்த மூன்று பேரை நோக்கிப் போனான் மங்கள். ஸ்தாயியை குறைத்துக் கொண்டு - மிகவும் நிதானமான குரலில் கேட்டான்.
 "ஏம்பா... ஒரு பெண்ணைப் பத்தி இப்படித்தான் அநாகரீகமா பேசறதா...? இப்படியெல்லாம் பேச உங்களுக்கு வெக்கமாயில்லை...?"
 காந்தன் முன்னால் வந்தான்என்ன ஸார் சொன்னீங்க...? நாங்க அநாகரீகம் பேசிட்டோமா...? சரி... சரி... நாகரீகமா பேசறது எப்படின்னு கொஞ்சம் சொல்லித் தர்றீங்களா...?"
 மங்கள் சீறினான்.
 "குடிகாரப் பசங்களுக்கு நாகரீகத்தைப் பற்றி என்ன தெரியும்? அக்கா, தங்கச்சியோட பொறந்து - அதுங்க கூடவே வளர்ந்திருந்தா... அதெல்லாம் தெரிஞ்சிருக்கும்..."
 சொல்லிவிட்டு நகர்ந்த மங்களை - ஒருத்தன் தோளை தட்டி நிறுத்தினான்.
 "இந்தா ஸாரே... ஒரு நிமிஷம்... நில்லு"
 மங்கள் நின்றான்.
 "என்ன சொன்னே... நாங்க குடிகாரப் பசங்களா...?"
 "ஆமா..."
 சொன்ன மங்களின் ஜிப்பாவை ஒருத்தன் எட்டிப் பிடித்தான். ஆத்திரமாய் கசக்கினான்.
 அடுத்த விநாடி –
 அவன் கை உதறப்பட்டு - முகத்தில் மொத்தப்பட்டு மூக்கில் ரத்தம் காட்டினான். மற்ற இரண்டு பேரும் ஆளுக்கொரு பக்கமாய் வர - மங்கள் சுழன்று - தன் வலது காலை வீசி - இரண்டு பேர்களின் இடுப்புகளையும் சந்தித்தான்.
 பிரதீப் ஓடி வந்தான்.
 "மிஸ்டர் மங்கள்... விடுங்க அவங்களை..."
 "அவன் என்ன பேச்சு பேசறான்னு பார்த்தீங்களா...? நான் கத்துகிட்ட கராத்தேயை இவங்ககிட்ட காட்டினாத்தான்.... அடுத்த தடவை ஒரு பெண்ணைப் பார்க்கும் போது ஞாபகம் வரும்..."
 "குடிச்ச ஆசாமிகிட்ட எதைப்பேசி... என்ன பிரயோஜனம்? வாங்க... நாம ஹோட்டலுக்குப் போலாம்..."
 மங்களின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு - ஹோட்டலுக்குள் போனான் பிரதீப்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 8, 2023
ISBN9798223161356
நிறங்கள்

Read more from Rajeshkumar

Related to நிறங்கள்

Related ebooks

Related categories

Reviews for நிறங்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நிறங்கள் - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    "உங்க கையை வெச்சுகிட்டு நிமிஷ நேரம் சும்மா இருக்கமாட்டீங்களா...?"

    இருக்க மாட்டேன்...

    சை! உங்க கூட கொடைக்கானலுக்கு தனியா வந்தது தப்பா போயிடுச்சு...

    புருஷன் கூட ஹனிமூனுக்கு வர்றப்ப தனியாத்தான் வரணும்... அம்மாவையும் அப்பாவையும் கூட்டிகிட்டா வருவாங்க...?

    என்ன இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம்... இடுப்பைக் கிள்ளி கிள்ளி - அந்த எடம் என்னமா சிவந்திருக்கு பாருங்க...?

    எங்கே பார்க்கலாம்...

    சை கையை எடுங்க... யாராவது பார்க்கப் போறாங்க...

    இங்கே பார்க்கிறவங்க யார் இருக்காங்க...? கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும்... மரம். செடி... புல்வெளி... எப்பவாவது தெரியற ரெண்டு மனுஷத்தலை. ஹனிமூனுக்கு வர்றவங்களெல்லாம்... இந்த மாதிரி ஆப் சீசன்லதான் வரணும்.... கும்பல் இல்லாம... பிச்சுப் பிடுங்கல் இல்லாம... நிம்மதியா புதுப் பொண்டாட்டியைக் கொஞ்சலாம்.

    கோக்கர்ஸ் வாக்கின் அந்த மலைச்சரிவில் - ஏறிக் கொண்டிருந்த ராகினி தன் கணவர் பிரதீப்பை ஆச்சர்யமாய் பார்த்தாள்.

    'இரண்டு நாட்களுக்கு முன்னால் - மணவறையில் 'தேமே' என்று உட்கார்ந்து ஐயர் சொன்ன மந்திரங்களை பவ்யமாய் உச்சரித்தவரா இவர்...?'

    என்ன ராகினி... அப்படி பார்க்கிறே...? என்னோட பர்சனாலிட்டியைப் பார்த்து மயங்கிப் போயிட்டியா...?

    ஆமா... அய்யா பெரிய மன்மதக் குஞ்சு... நா ஒண்ணும் அதுக்காகப் பார்க்கலை...

    பின்னே...?

    இவ்வளவு துள்ளலையும் துடிப்பையும் வெச்சுகிட்டு மணவறையில் - ரெண்டு நாளைக்கு முன்னாடி எப்படி உட்கார்ந்திட்டிருந்தீங்க...?

    அடக்கி வச்சிட்டிருந்தேன்...

    இருட்டப் போகுது... லாட்ஜுக்கு கிளம்பலாமா...?

    அதுவும் சரிதான். வெளியே குளிர். ரூமுக்கு போயிட்டோம்ன்னா கொஞ்சம் வெதுவெதுப்பா... கதகதப்பா...

    அம்மாடி... நான் இன்னிக்கு ரூமுக்கே வரமாட்டேன்...

    வரமாட்டியா...?

    ஊ...ஹும்...

    இப்பவே உங்கப்பாவுக்கு போய் தந்தியடிக்கிறேன்.

    எதுக்கு?

    அவரை வரச் சொல்லி...

    அதான் எதுக்குன்னு கேக்கறேன்...

    மாமா...! மாமா...! நீங்க இவ்வளவு நகை போட்டு - லட்சகல்கணக்கான ரூபாய் செலவு பண்ணி அமர்க்களமா கல்யாணம் பண்ணி வெச்சு என்ன பிரயோஜனம்...? கையில பத்தாயிரம் ரூபாயை முள்ளங்கி பத்தையாட்டம் எடுத்துக் குடுத்து - மாப்ளே... மாப்ளே...! நீங்க எம்பொண்ணை கொடைக்கானலுக்கு கூட்டிப் போய் ஹனிமூன் கொண்டாடிட்டு வாங்கன்னு சொல்லி என்ன பிரயோஜனம்...? தொட்டா போதும் உங்க மக குதிக்கிறாளே... நான் என்ன பண்ணட்டுமென்று அவர்கிட்டே கேக்கப்போறேன்... முகத்தை விளையாட்டுத்தனமான சீரியஸோடு வைத்துக் காண்டு - பிரதீப் தன் கண்களை உருட்டி உருட்டிப் பேசியதைக் கேட்டு - ராகினியால் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. சிரித்தாள். அதே விநாடி - பின்பக்கமாய் அந்தக் குரல் கேட்டது. எக்ஸ்க்யூஸ்மீ... பிரதீப்பும் ராகினியும் திரும்பினார்கள். அந்த இளைஞன் நின்றிருந்தான். வயது முப்பதுக்குள் இருக்கலாம். ஒடிசலான சிவந்த தேகம். கொடைக்கானலின் குளிரை அலட்சியப்படுத்தி - வெண்ணிறத்தில் மஸ்லிம் ஜிப்பா மாதிரி ஏதோ ஒன்று அணிந்திருந்தான். முகம் புல் முளைத்ததைப் போல தாடியுடன் கரகரவென்றிருந்தது சில்வர் பிரேமிட்ட கண்ணாடிக்குப் பின்னே அமைதியான கண்கள்.

    எஸ்...

    பிரதீப் அவனை நோக்கி வந்தான். அவன் புன்னகைத்து கொண்டே சொன்னான்.

    நான் உங்க சந்தோஷத்துக்கு இடைஞ்சலா வந்துட்டேனா...?

    நோ... நோ... வாட்ஸ் தேர்...?

    "என்னோட பேர் மங்கள். நான் ஒரு ஆர்டிஸ்ட். சில்வர் காஸ்கோட்ல எனக்கு பங்களா இருக்கு... இந்த மாதிரி ஆப் சீசன்ல நான் கொடைக்கானலுக்கு வந்து தங்கி - ஆர்ட் பண்ணிட்டு போவேன். எனக்கு ரொம்ப நாளாவே மனசுல ஒரு ஆசை,

    பிரதீப்பும்

    Enjoying the preview?
    Page 1 of 1