Sila Nerangalil Sila Anubavangal Part 1
()
About this ebook
Read more from Bakkiyam Ramasamy
Bakkiyam Ramasamyin 100 Suvaiyana Nagaichuvai Kathaigal Rating: 5 out of 5 stars5/5Mamanar Kathaigal Rating: 5 out of 5 stars5/5Come on Appusamy Come on Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Africa Azhagiyum Rating: 5 out of 5 stars5/5Appusamyin Colour TV Rating: 0 out of 5 stars0 ratingsMarumagal Rajyathil... Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Padam Edukkirar Rating: 0 out of 5 stars0 ratingsHuman Bomb Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Thairiyasami Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Paritchai Ezhuthukirar! Rating: 0 out of 5 stars0 ratingsKoondukkul Appusami Rating: 0 out of 5 stars0 ratingsAakasavaniyil Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsMahabalipurathil Marupadi Narasimma Pallavan Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAadhaar Attaiyum Appusamiyum Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKurunkatturaigal Moolam En Aanmeega Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Azhagi Pottiyum Rating: 0 out of 5 stars0 ratings'Ink'eetham Therinthavara Neegal? Rating: 0 out of 5 stars0 ratingsAndha 37 Varudangal Rating: 0 out of 5 stars0 ratingsNaanaa Ponathum Thaanaa Vandhathum Rating: 0 out of 5 stars0 ratingsAugust Thiyagi Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Varisu Thedukirar Rating: 0 out of 5 stars0 ratingsSundakkai Sithar Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsDabbaji Bansleyudan Appusami Rating: 0 out of 5 stars0 ratingsAppusamiyin Thaali Bakkiyam Rating: 0 out of 5 stars0 ratingsSeethobadesam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Sila Nerangalil Sila Anubavangal Part 1
Related ebooks
Nadanthathu Nadanthapadiye! Rating: 0 out of 5 stars0 ratingsRangoon Periyappa Rating: 0 out of 5 stars0 ratingsPasithalum Puli... Rating: 0 out of 5 stars0 ratingsDevathaigal Thoonguvathillai Rating: 0 out of 5 stars0 ratingsKal Vadiyum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsAambalai Rating: 5 out of 5 stars5/5Vazhvin Oli Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Nera Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKan Ketta Pin Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Payanam Rating: 5 out of 5 stars5/5Poruthathu Pothum! Rating: 0 out of 5 stars0 ratingsIrandaavathu Amma Rating: 0 out of 5 stars0 ratingsKungumam Rating: 5 out of 5 stars5/5Oru Paravai Paarvai Rating: 0 out of 5 stars0 ratingsThirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 5 Rating: 0 out of 5 stars0 ratingsVenuvanavaasam Rating: 0 out of 5 stars0 ratingsDecember Poo Teacher Rating: 0 out of 5 stars0 ratingsSoundarammal Rating: 0 out of 5 stars0 ratingsAagaya Thottil Rating: 0 out of 5 stars0 ratingsVeppamarathu Pookkal Rating: 5 out of 5 stars5/5Ranjani Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalum Kutrame... Rating: 4 out of 5 stars4/5Engirunthu Vatuguthuvo... Rating: 0 out of 5 stars0 ratingsEn Veedu Rating: 0 out of 5 stars0 ratingsIvanum Oru Parasuraman Rating: 0 out of 5 stars0 ratingsVazhkkai Enbathu Varam Rating: 0 out of 5 stars0 ratingsOru Thozhi Deivamagiral Rating: 0 out of 5 stars0 ratingsThunbam Nergaiyil… Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Sila Nerangalil Sila Anubavangal Part 1
0 ratings0 reviews
Book preview
Sila Nerangalil Sila Anubavangal Part 1 - Bakkiyam Ramasamy
http://www.pustaka.co.in
சில நேரங்களில் சில அனுபவங்கள் பாகம் - 1
Sila Nerangalil Sila Anubavangal Part - 1
Author:
பாக்கியம் ராமசாமி
Bakkiyam Ramasamy
For more books
http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
இங்கே கொஞ்சம் வர்ரீங்களா?
இரண்டு கிளிஞ்சல்கள்
இருபத்து மூணு பெரிசா? முப்பத்து மூணு பெரிசா?
இருந்த இடத்தில் இருந்துகொண்டே...
ஜாலிக்கு பதில் ஜாமி
ஜினோஜாட்ஸ் பேரியக்கம்
கடவுள்களுக்கு இடநெருக்கடி
காய்கறித் தியாகிகள்
கல்லுக்குள் ஈரம்
கல்யாணப் பரிசு
காணாமல் போன செக்யூரிட்டி
கண்ணே, MONEYயே!
காராசேவில் முடிந்த காரமான விவாதம்
கேலிக்கிடமான பட்ஜெட்!
கொடுத்து வைக்காத குரல்
கொஞ்சம் பயப்படுங்கள்
கொசு அடிப்பது ஒரு கலை
கிருஷ்ணன் குட்டியின் கராஜ்
குளிக்கத் தெரிந்த மனமே உனக்கு...
குறிப்பொன்றுமில்லாத கோவிந்தன்
குழி மீட்டிங்குகள்
மாமியார் டீ!
ஒரு 'அண்ணே'யின் மவுன விரதம்
முதல் இரவுப் பெண்ணின் தங்கை
(பி)தத்துவக் கட்டுரை:
நடுநிசி அழைப்புகள்
சீப்பிச் சாப்பிடுவதே இன்பம்!
செவ்வாய்ப்பேட்டை குதிரைகள்
சில நேரங்களில் சில கேள்விகள்
சில நேரங்களில் சில பொய்கள்
இங்கே கொஞ்சம் வர்ரீங்களா?
இங்கே கொஞ்சம் வர்ரீங்களா?
என்று மனைவி கூப்பிட்டால் நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடுக் கணவன்மார்கள் வெளிப்படையாகவோ உள்படையாகவோ நடுங்குவதுதான் வழக்கம்.
காலை வேளையில் குளியல் அறையிலிருந்து கொண்டு, 'இங்கே கொஞ்சம் வர்ரீங்களா?' என்றால் தலை துவட்டிக்கொள்கிற துண்டை மறந்து விட்டாள், அதைக் கொண்டு போய்க் கதவிடுக்கு வழியே தரவேண்டும் என்று அர்த்தம்.
சமையலறையிலிருந்து 'இங்கே கொஞ்சம் வர்ரீங்களா?' என்றால் எதையோ கைவிடாமல் கிளறி அவளுக்குக் கை வலி எடுத்துவிட்டது, நம்மிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து, கை விடாமல் கிளறிக் கொண்டிருங்கள்
என்று கிளறல் கைங்கர்யத்தை நம்மிடம் ஒப்படைத்துவிட்டு அவள் வேறு காரியம் கவனிக்கச் செல்கிறாள் என்று அர்த்தம்.
வாஷிங் மிஷின் அருகிலிருந்து கூப்பிட்டால், மிஷினில் உள்ள துணிகளையெல்லாம் எடுத்து வாளியில் போட்டுக் கொண்டு போய், மனைவி தயாரித்துத் தந்த கஞ்சியைப் போட்டு அத்தனை துணிகளையும் கிளிப் போட்டு உலர்த்த வேண்டும் என்று அர்த்தம்.
வீட்டுக்கு யாராவது வந்து, எங்கள் வெட்டிங் டே. இருபத்தஞ்சு வருஷம்
என்று வணங்கினபின் 'இங்கே கொஞ்சம் வர்ரீங்களா?' என்று மனைவி கூப்பிட்டால், வந்தவங்களுக்கு எத்தனை ரூபாய் கொடுத்து நமது அன்பைத் தெரிவிப்பது என்பதை அவள் சொல்லுவாள் என்று அர்த்தம்.
நண்பரோடு அரட்டை அடித்துக்கொண்டிருக்கும்போது 'இங்கே கொஞ்சம் வர்ரீங்களா?' என்றால் ரெடி செய்த டிபனை நண்பருக்குக் கொண்டு தரவேண்டும் என்று அர்த்தம். சில சமயங்களில், "வளவளன்னு பேசினது போதும். கோவிலுக்கு புறப்பட்டாகணும். அபிஷேகம்னு சொல்லிட்டு ஆசாமியைக் கிளப்பப் பாருங்க' என்று உத்தரவிடுவதாக அர்த்தம்.
சாதாரணமாக மனைவியின், 'இங்கே கொஞ்சம் வர்ரீங்களா?' குரல் கேட்டதும் உடனடியாகக் கணவன் அங்கே போய் விடுவது நல்லது. சில சமயம் அரிவாள் மனையில் விரலை நறுக்கிக் கொண்டு, மனைவி அவசர உதவிக்குக் குரல் தரலாம். ஆனால் அது மாதிரி சமயங்களில் பெரும்பாலான இல்லத்தரசிகள், 'ஆ! ஊ! விரலை நறுக்கிக் கொண்டுவிட்டேன்! ஓடி வாங்களேன்,' என்று பதட்டமாகக் குரல் தரமாட்டார்கள்.
அப்போதுதான் தங்கள் சகிப்புத் தன்மையையும் பொறுமையையும் கணவனுக்கு நிரூபிக்க விரும்புவார்கள். இங்கே கொஞ்சும் வர்ரீங்களா?
என்று வெகு நிதானமாக வெகு வெகு பொறுமையாகக் குரல் கொடுப்பார்கள்.
கணவன் அலட்சியமாகச் சற்றுப் பொறுத்து பேப்பரைப் புரட்டி விட்டு காலதாமதமாக உள்ளே போய், 'கூப்பிட்டியா என்ன?' என்று விசாரிக்கும்போது அவனுக்குப் படு அதிர்ச்சி தருவது போல, சுண்ணாம்பு பாட்டில் திறந்து கிடக்கும். அரிவாள்மனை ஏரியாவில் ரத்தத் திட்டுக்கள். ஏதாவது ஒரு விரலில் தலையணை சைஸில் ஒரு பெரிய டர்பன். அதில் கசியும் சிவப்பு. 'என்னை உடனே கூப்பிடக்கூடாதா?' என்று கணவன் குற்ற உணர்வுடன் பதறுவதைப் பார்ப்பதைத் தங்கள் வலிக்கு நல்ல மருந்தாகவே இல்லத்தரசிகள் நினைத்துக்கொள்வார்கள்.
'இங்கே வர்ரீங்களா' என்று கூப்பிட்டு ஆறு மாசத்துக்குப் பிறகு பூத்த அபூர்வ செம்பருத்தியைக் காட்டுபவர்கள் உண்டு. டியூபை வைத்து செடிக்குத் தண்ணீர் ஊற்றும்போது கூப்பிட்டால் மலர் அழகைக் காட்டுவதைவிட 'டியூப் பிய்த்துக் கொண்டது. சீக்கிரம் எதையாவது போட்டுக் கட்டவும்' என்று அர்த்தம்.
இங்கே கொஞ்சம் வர்ரீங்களா குரலை டி.வி. பார்த்துக்கொண்டே மனைவி கூறினால், ரிமோட்டைத் தேடி எடுத்து வால்யூமைச் சற்று பெரிதாக்க வேண்டுமென்று அர்த்தம்.
காலையில் கணவன் எழுந்ததுமே, 'இங்கே கொஞ்சம் வர்ரீங்களா?' என்று ஹாலிலிருந்து மனைவி குரல் தந்தால் நிச்சயம் கணவனைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி 'முன்தினம் இரவு ஹால் மின் விசிறியையும் டி.வி.யின் சிவப்பு விளக்குப் பொட்டையும் அவன் அணைக்காமலேயே படுக்கப் போய்விட்டதை அவனுக்குச் சுட்டிக் காட்டுவதற்காக இருக்கும். (இடித்துக் காட்டுவதற்காக என்றும் கொள்ளலாம்.)
கணவனும் மனைவியும் ஏதாவது வெளியூர் போய்விட்டு வீடு திரும்பியதும் மனைவி, டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து 'இங்கே கொஞ்சம் வர்ரீங்களா?' என்று பரம நிதானமாகக் கூப்பிட்டால் பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடக்கு என்று அர்த்தம். அழுத்தமான இல்லத்தரசிகள் எதற்கும் பதற மாட்டார்கள்.
கல்யாண வீட்டுக்குப் புறப்பட சர்வாலங்காரமும் செய்து கொண்ட பின் கணவனை 'இங்கே கொஞ்சம் வர்ரீங்களா?' என்றால், 'வாட்ச்சைக் கொஞ்சம் சரியாப் போட்டுவிடுங்க' என்பதற்காகவோ, 'பிளவுஸ் மாட்சிங்காக இருக்கா?' என்று சந்தேகம் கேட்கவோ, 'ஒரே கையில் எல்லா வளையல்களையும் போட்டுக்கவா அல்லது பிரித்துப் போட்டுக் கொள்ளட்டுமா?' போன்ற அலங்கார யோசனைகள் கேட்பதற்காகவோ இருக்கும்.
காருக்குள்ளிருக்கும் நண்பருடன் தெருவில் நின்று பேசும்போது மனைவியிடமிருந்து 'இங்கே கொஞ்சம் வர்ரீங்களா' அஸ்திரம் வந்தால் 'டப்பாக் கட்டு' கட்டிக் கொண்டதை அவிழ்த்து விட்டுத் தொலையுங்கள் பக்கிரி மாதிரி இருக்கு.' என்ற கண்டனத்தைத் தெரிவிப்பதற்காக இருக்கும்.
தபால்காரர் எந்த உறையையாவது வீசியெறிந்து விட்டு போன சமயம் இங்கே வர்ரீங்களா
என்று மனைவியிடமிருந்து குரல் வந்தால் எந்தப் பத்திரிகையிலிருந்தாவது கதை திரும்பி வந்திருக்கிறது என்று அர்த்தம்!
***
இரண்டு கிளிஞ்சல்கள்
அது எந்த இதழ் என்று எனக்கு மறந்துவிட்டது. பிரசுரமான கதை கட்டுரைகளைத் தொலையாமல் வைத்துக் கொள்ளும் பழக்கம் இல்லை. 'எதையாவது எழுதித் தொலை' என்று எந்தப் பெரியவரோ ஆசீர்வாதம் பண்ணித் தொலைத்திருப்பார் போலிருக்கிறது. பலித்துவிட்டது. எழுதுவேன், தொலைத்துவிடுவேன்.
எந்தக் கதைகளையோ, கட்டுரைகளையோ நான் பேணிக் காத்ததில்லை. (அப்புசாமி கதைகளில் சில மட்டும் எப்படியோ ஓரளவு புத்தகங்களாகப் பதிக்கப்பட்டுவிட்டன.)
இந்தக் கதையெல்லாம் எதற்கு என்றால், இதற்கும் காலஞ்சென்ற என் நண்பரும் இந்தத் தலைமுறையின் சிறந்த இலக்கியவாதியுமான சுஜாதாவுக்கும் சம்பந்தம் உண்டு.
ஜெயின் இனத்தைச் சேர்ந்தவரும், பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவருமான பிரபல வைர வியாபாரி பாபாலாலின் நெருங்கின உறவுக்காரப் பெண், தனது 16வது வயதில் துறவறம் மேற்கொண்டாள். அந்தப்