Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aadhaar Attaiyum Appusamiyum
Aadhaar Attaiyum Appusamiyum
Aadhaar Attaiyum Appusamiyum
Ebook228 pages1 hour

Aadhaar Attaiyum Appusamiyum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112304126
Aadhaar Attaiyum Appusamiyum

Read more from Bakkiyam Ramasamy

Related to Aadhaar Attaiyum Appusamiyum

Related ebooks

Related categories

Reviews for Aadhaar Attaiyum Appusamiyum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aadhaar Attaiyum Appusamiyum - Bakkiyam Ramasamy

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    ஆதார் அட்டையும் அப்புசாமியும்

    Aadhaar Attaiyum Appusamiyum

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆதார் அட்டையும் அப்புசாமியும்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அப்புசாமியின் மாஞ்சா மகோத்ஸவம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் - 6

    டங்காமாரியும் அப்புசாமியும்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    தேள் அழகர் அப்புசாமி

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    ஆதார் அட்டையும் அப்புசாமியும்

    அத்தியாயம் - 1

    அக்கம்பக்கத்து கடிகாரங்களில் அப்புசாமி விசாரித்ததில் பிற்பகல் இரண்டு மணி அளவிலிருந்து, இரண்டரை மணி வரையிலான வேறுபட்ட பலவித நேரங்கள் கிடைத்தனவே தவிர, கரெக்ட் மணி என்ன என்பது அவருக்குத் தெரியவில்லை.

    அப்புசாமியிடம் சீதாப்பாட்டி உலகமகாக் கடினமான பொறுப்பு ஒன்றை ஒப்படைத்து, செய்கூலி வகைக்கு நூறு ரூபாயும் தந்து, ஆதார் க்யூவில் நிற்க வைத்துவிட்டாள்.

    பிற்பகல் இரண்டே கால் மணியளவில் அப்புசாமியின் தொண்டைக்குள் ஒருவகை நமைச்சல் ஏற்பட்டது. மாமூலாக ஏற்படுவதுதான். சூடாகக் காப்பியோ, டீயோ அந்த வழியாக அப்போது சென்றாலொழிய அந்த வேட்கை அடங்காது என்பதும் அவருக்குத் தெரிந்த விஷயம்.

    ஆனால் அவரோ சூழ்நிலைக் கைதியாக காலை ஏழரை மணியிலிருந்து பகல் இரண்டு தாண்டியும் ஆதார் க்யூவில் நின்றுகொண்டிருந்தார்.

    ஒரு மணிக்கு அரை அங்குலம் வீதம் க்யூ நகர்ந்துகொண்டிருந்தது.

    பூமி சுற்றுகிறது என்கிறோம். சுற்றுவது நம் கண்களுக்குத் தெரிகிறதா என்ன? க்யூ வரிசை நகர்வதும் அப்படித்தான்.

    நகர்வதே தெரியாத ஒரு நகர்தல். செலவழிந்ததே தெரியாமல் செலவாகும் பணம்.

    உறிஞ்சப்படுவதே தெரியாமல் உறிஞ்சப்படும் உழைப்பு. ஓடுவதே தெரியாமல் ஓடும் கடியாரம். ஆறுவதே தெரியாமல் ஓட்டல்களில் ஆறும் போண்டா பஜ்ஜி.

    ஆதார் க்யூ மெதுவே நகர்ந்துகொண்டிருந்தது. அப்புசாமிக்கு உடனடியாக சுடச்சுடவோ, ஆறினதாகவோ, குளிர்ச்சியாகவோ, சாதாவாகவோ, எதுவாகவோ குடித்தாகவேண்டும். தொண்டை வழியே திரவ ஓட்டம் சில துளிகள் சென்றாலல்லது அவரது திரவ தாகம் தீராது. சுதந்திர தாகம் மாதிரி அது ஒருவகை சுதந்திர(வ) தாகம்.

    ‘ஸார்’ என்றார் அப்புசாமி - தனக்குப் பின்னால் நின்றிருந்த அழகிய கிழவரிடம். பழைய பச்சைக் கொத்தமல்லிக்கு தண்ணீர் தெளித்தாற்போல் தளதளப்பாக இருந்தார் அந்தப் பெரியவர்.

    எந்தப் பெரிய மனிதரானாலும், எத்தனை வயசானவராக இருந்தாலும் க்யூ வரிசையில் நின்றே தீரவேண்டிய ஒரு கட்டாய நிலையை நாடு ஆதார் அட்டை மூலம் பிரகடனப்படுத்திவிட்டதே (நாமிருக்கும் க்யூ நமதென்பதறிந்தோம். இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்) என்று சிலர் சந்தோஷப்பட்டாலும், பலருக்கு - முக்கியமாக ஸீனியர் ஸிடிஸன்களுக்கு, வயசாளிகளுக்கு, சான்றோர்களுக்கு, ரூமடைட் பேர்வழிகளுக்கு கிழம்கட்டைகளுக்கு க்யூவில் நிற்பது பெரும் துன்பமாகவே இருந்தது.

    ஆனால் அப்புசாமி தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

    முன்தினம் கைக்கெட்டியது, வாய்க்கெட்டாமல் போய்விட்டது.

    தடுப்புத் தட்டிவரை போனார். தடக்கென்று தாள்போட்டு, ‘மீதியெல்லாம் நாளைக்கு’ சொல்லிவிட்டார்கள்.

    சட்டென்று அவருக்கு க்யூ தர்ம சாஸ்திரத்தில், தான் படித்த ஒரு விளக்கம் ஞாபகத்துக்கு வந்தது.

    நீண்ட நேரமாக க்யூவில் நிற்கும் ஒரு வயோதிகர், தனக்குத் தொண்டை வரண்டோ, நெஞ்சை அடைத்தோ, கால் துவண்டோ, கண் இருட்டிக் கட்டிக்கொண்டாலோ தாராளமாகத் தனக்கு அடுத்து நிற்பவரிடம் உதவி கேட்டுப்பெறலாம் என்பதே அந்த விதி.

    ஆகவே அப்புசாமி தனக்குப் பின்னால் நின்றிருந்த ஒருவரை நட்புரிமையோடு தட்டி, சார், நான் போய் ஒரு டீ அடிச்சிட்டு வந்துடறேன். கொஞ்சம் இடத்தைப் பார்த்துக்கிறீங்களா? என்று பயபக்தியுடன் கேட்டுக்கொண்டார்.

    அந்தப் பெரியவரும், அப்புசாமியின் ஸ்டேட்ஸிலே இருந்தார் போலும். தாராளமாப் போய்வாங்க. அப்படியே எனக்கும் ஒரு டீ வாங்கியாங்க - சர்க்கரை போடாமே என்று லைக்போட்டு பளபள பத்து ரூபா நோட்டு ஒன்றைத் தன் தடித்த பர்ஸிலிருந்து உருவித் தந்தார்.

    ‘இப்படியெல்லாம் உருவும் காலம் தனக்கும் என்றைக்காவது ஒரு நாள் கிடைக்காதா’ என்று கணநேர ஏக்கத்துடன் ரூபாயை வாங்கிக்கொண்டு சற்றுத் தொலைவிலிருந்த டீக்கடைக்குப் புறப்பட்டார். டீ சற்று மெல்லிசாக இருந்தாலும் தொலைநோக்குப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் ஒரு மினி டீ ஆறே ரூபாய்! (வெளியிடத்தில் பத்து ரூபாய்.)

    பெரியவருக்கும் ஞாபகமாக ஒரு மொட்டை அட்டைக் கப்பில் ஸிங்கிள் டீ ஆறு ரூபாய்க்கு வாங்கிக்கொண்டார். கப் நிறைய இருந்ததால் தளும்பிச் சிந்தி கையைச் சுட்டுவிடப்போகிறது என்று அந்தப்பக்கமாய் சற்று ஒதுங்கி யாரும் பார்க்காத நேரத்தில் ஒரு சின்ன உறிஞ்சிப்போட்டு, டீயை விளிம்புக்குள் அடக்கிவிட்டு க்யூவில் தனது இடத்துக்கு சென்றார்.

    பெரியவர் ஆர்வத்துடன் வாங்கிக் குடித்தார். உசிர் வந்தது. தாங்க்ஸ் சார்!

    அடடா! எனக்கு என்ன ஞாபக மறதி. இந்தாங்க பாக்கி சில்லறை. பத்து ரூபா கொடுத்தீங்களா, சிங்கிள் ஆறு ரூபா… பாக்கி இந்தாங்க நாலு ரூபா. நமக்கு எதுக்கு சார் பிறத்தியார் காசு! உழைக்கற காசே ஒட்டமாட்டேங்குது. சரியாயிருக்கா, உழை உழைன்னு உழைக்கிறேன்! கிழவி தர்ர காசே ஒட்டமாட்டேங்குது. எண்ணிப் பாத்துக்குங்க. இரண்டு ரூபா நாணயம் ஒண்ணு! ஒற்றை ரூபாயா இரண்டு! ஆக நாலு ரூபாய்.

    டீ குடித்து முடித்தவர் இன்னொரு தரம், ரொம்ப நன்றி சார்! என்றவர் அப்புசாமி நீட்டிய ரூபாயை வாங்கிக்கொள்ளாமல், பரவாயில்லை… நீங்களே வச்சுக்குங்க சார்! தப்பா நினைச்சுக்காதீங்க. நான் சில்லறையைத் தொடறது இல்லே… விரதம்! என்றார்.

    அப்புசாமி ஆச்சரியப்பட்டார். இப்படி ஒரு விரதமா?

    ஆமாம், எனக்கு ஒரு சாமியார் சொல்லித் தந்தார்.

    அப்புசாமியின் ஆச்சரியம் மேல் உதட்டுக்கும், கீழ் உதட்டுக்குமாக விஸ்வரூபமெடுத்தது. சாமியார் கற்றுக்கொடுத்தாரா?

    ஆமாம், நான் நம்ம ராமகிருஷ்ண மடத்துக்கு ஒழுங்காகப் போகிறவன். அங்கே ஒரு சாமியார் லெக்சரின்போது சொன்னார். சில்லறையை எண்ணாதீங்க, நோட்டை எண்ணுங்க என்றார்.

    அவர் சில்லறை என்று குறிப்பிட்டது, நாம சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் ஆசைப்படறதை. நமக்குப் பெரிய விஷயங்களில் அதாவது சத் விஷயங்களில் ஈடுபாடு ஏற்படணும் என்கிறதைதான் அப்படிச் சொன்னார்.

    அப்புசாமி அந்த மகான் பெயரைக் கேட்டுக்கொண்டு மேற்படி, ஆனந்தா வாழ்க வாழ்க என்று நாலுதரம் சொல்லிக்கொண்டார்.

    அவராலன்றோ இன்றைக்கு நாலு ரூபாய் வல்லிசாக அவருக்குக் கிடைத்தது.

    பெரியவர் அன்புடன் தந்தருளிய நாலு ரூபாய் அப்புசாமியின் ஜிப்பாப் பையில் சிலுங்சிலுங்கென்று குலுங்கி, ‘இன்னும் ஒரு ரெண்டு ரூபாய் இருந்தால் அடுத்தாற்போல ஒரு டீ அடிக்கலாம்’ என்று கக்கிரித்தது.

    சற்றுநேரத்தில் அப்புசாமி தனக்கு முன்னேயிருந்தவரின் சட்டையைக் கனிவுடன் தொட்டார்.

    கூப்பிட்டீங்களா பெரியவர்! என்று அந்த முன் வழுக்கை முத்துசாமி திரும்பினார்.

    அப்புசாமி டெக்னிக்கைப் பயன்படுத்தினார். ஹிஹி! கொஞ்சம் இடத்தைப் பார்த்துக்கிறீங்களா? ஒரு டீ சாப்பிட்டு வந்திடறேன். நீங்க என்ன காப்பி கீப்பி சாப்பிடறதில்லையா? காசு கொடுத்தீங்கன்னா உங்களுக்கு வேணும்னா ஒரு டீ வாங்கி வர்ரேன்.

    சந்தோஷமா… என்றவாறு அந்த ஆசாமி ஒரு பத்து ரூபா நோட்டைத் தந்தார்.

    அப்புசாமி டீக்கடைக்குப் போய் டீ வாங்கிக்கொண்டு மீதி சில்லறையுடன் க்யூவுக்கு வந்தார். தந்தார். கொடுக்கவேண்டியதை, கொடுத்துப் பெறவேண்டியதைப் பெற்றார். ஜிப்பாப் பையில் எட்டு ரூபாய் குலுங்கியதும் வேகமாக கணக்குப்போட்டது அவர் மனம்.

    மேலோட்டமாக க்யூ வரிசையிலுள்ளவர்களை எண்ணினார். அது கிடக்கும்போலிருக்கு நூறுக்கும் மேலே.

    நூறில் ஒரு முப்பதுபேருக்கு டீ சேவை செய்தால்கூட, ஒரு நாளைக்குச் சுலபமாக நூறு ரூபாய் தேறுமே.

    A picture containing text Description automatically generated

    ஒதுக்குப்புறமான இடத்தில் நின்றுகொண்டு ஸெல்லில் நண்பன் ரசகுண்டுவை அழைத்தார். டேய் ரசம்! இங்கே பட்டணம் கொள்ளை போகுது. வாடா உடனே! உன் சேவை நாட்டுக்கு இப்போது அவசரமாத் தேவைடா.

    அப்புசாமி அவசரமாகவும், சுருக்கமாகவும், குழப்பமாகவும் பதட்டமாகவும், தனது திட்டத்தை அவனுக்குத் தெரிவித்தார்.

    என்னே ஒரு நல்ல சகுனம்!

    ரசகுண்டுவும், அவனது மனைவி ருக்மிணியும் அப்புசாமி போன் வந்தபோதுதான் தங்களுக்கான ஆதார் பதிவு செய்துகொள்ளும் ஸ்தலத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

    அப்புசாமி மொபைலில் தனது திட்டத்தை ரகசியக்குரலில் சுடச்சுட விவரித்தார்.

    ரசகுண்டு அதைக் கேட்டுப் புல்லரித்துப்போய், ஜெய் ஆதார்! ஜெய் தாத்தா! என்று ஜெயகோஷமிட்டுவிட்டு, இதோ நேரா வர்ரேன், ருக்மிணி வரலாமில்லையா?

    ஏன்டா கழுதை! சக்தியில்லாமல் சிவமேதுடா; மாவில்லாமல் பணியாரம் ஏதுடா, அம்மா இல்லாமல் அ.தி.மு.க. ஏதுடா?

    தாத்தா! தாத்தா! அரசியில் நமக்கு வேண்டாம். நான் அப்புறம் விளக்குமாற்றை எடுத்துப்பேன்!

    டேய் பாவி! சும்மா ஒரு அடுக்குமொழிக்குக் சொன்னேன்டா!

    சற்றுநேரத்தில் ரசகுண்டு, ருக்மிணி சமேதராக தனது மோட்டார் சைக்கிளில் அப்புசாமி க்யூவில் நின்றிருந்த இடத்தை அடைந்தான். கண்டுபிடிப்பது ஒன்றும் கஷ்டமாயில்லை.

    எந்த வட்டமோ, சதுரமோ, வார்டோ ஆதார் வழங்கப்படும் இடத்துக்குப் பொதுவாக சில லட்சணங்கள் இருக்கும்.

    ஆதார் அட்டை எல்லா இடங்களிலும் பதிவு செய்துவிட முடியாது.

    அது வழங்கப்படும் இடம் கொஞ்சம் இடிபாடுகளுடன் இருந்தால் ரொம்ப விசேஷம். அதற்கு ஒதுக்குப்புறமான ஒரு கட்டிடம் தேவை.

    சுற்றிலும் முள், கல், புதர் மண்டியிருப்பது மிக அவசியம். குறைந்தபட்சம் ஒரு சாக்கடையாவது ஓட அல்லது ஓடாமலிருக்க வேண்டும்.

    எக்காரணம் கொண்டும் இருசக்கர வாகனங்களும், கார்களும் நிறுத்தத் தனி இடம் இருக்கலாகாது.

    க்யூவில் நிற்கும் வயசாளிகள் உட்கார, அங்கங்கே பழைய கள்ளிப்பெட்டி (பிரத்யேக ஆணிகளுடன் கூடியது) போடப்பட்டிருப்பது அவசியம். நாட்டியம் தெரிந்த நாற்காலிகளுக்கு முன்னுரிமை தரப்படும். முக்கியமாக எல்லாத் திசைகளிலிருந்தும் சுரீரென்று வெய்யில் அடிக்கவேண்டும்.

    குடிதண்ணீர்க் குழாய் சத்தியமாக இருக்கக்கூடாது. அடிதண்ணீர்க் குழாய் இருந்தாலும் அதில் கைப்பிடி இருக்கலாகாது.

    வாயகன்ற டேக்ஸாவில் சூடான வடைக் குவியலை ஏந்தி ருக்மிணி ஒயிலாக நடந்து வந்தாள். பிளாஸ்கிலிருந்து டீ கப்புகளில் நிரப்பிக்கொண்டிருந்த ரசகுண்டுவின் கண்களில் ருக்மிணி வடை ஏந்திவரும் காட்சி தென்பட்டதும், அவன் பிளாஸ்கை டொம்மென்று நழுவவிட்டுவிட்டு பிரமை பிடித்தவன்போல ஆனான்.

    அப்புசாமி கர்மமே கண்ணாக, ஏன்டா படுவா! பிளாஸ்கைப் பொதேன்னு போட்டுட்டே! என்னாச்சிடா உனக்கு! குண்டு, மண்டு, தண்டு! என்று கடிந்துகொண்டார்.

    சாதாரண நேரமாயிருந்தால் தாத்தாவுக்குப் சரியான டோஸ் விட்டிருப்பான். ஏதோ தெய்வீகக் காட்சியைப் பார்த்துப் பிரமித்து மயங்கிய மாதிரி யாமு நிலையில் அவன் காணப்பட்டதை அப்புசாமி கொஞ்சமும் உணரவில்லை. சில மூடர்கள் யோகியின் தியானத்தை சோம்பேறியின் தூக்கம் என்பார்கள். அந்த மாதிரி ரசகுண்டுவின் பரவசநிலையை அப்புசாமியால் புரிந்துகொள்ள முடியவில்லை. கேவலம் ஒரு பிளாஸ்க் டீ கொட்டிவிட்டதே என்ற கவலை அவருக்கு.

    தாத்தா! மோகினி! என் மோகினி! இந்த வார்த்தைகளுடன் தலைசுற்றி மயக்கமாகிச் சரிந்தான் ரசகுண்டு.

    Enjoying the preview?
    Page 1 of 1