Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sirithe Ahavendiya Chinna Chinna Katturaigal
Sirithe Ahavendiya Chinna Chinna Katturaigal
Sirithe Ahavendiya Chinna Chinna Katturaigal
Ebook248 pages1 hour

Sirithe Ahavendiya Chinna Chinna Katturaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112303621
Sirithe Ahavendiya Chinna Chinna Katturaigal

Read more from Bakkiyam Ramasamy

Related to Sirithe Ahavendiya Chinna Chinna Katturaigal

Related ebooks

Related categories

Reviews for Sirithe Ahavendiya Chinna Chinna Katturaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sirithe Ahavendiya Chinna Chinna Katturaigal - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    சிரித்தே ஆகவேண்டிய சின்னச் சின்னக் கட்டுரைகள்

    Sirithe Ahavendiya Chinna Chinna Katturaigal

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பெயர் வைப்பது எப்படி?

    'நயா'னார்கள் சரித்திரம்

    சட்டம் ஒரு சிரிப்புறை

    தினப் புதிர்கள்

    பொன் மொழிகளும் போன் மொழிகளும்

    மௌனத்தின் ரகசியம்

    செய்துப் பாருங்கள்

    ஒரு கெஞ்சல்

    அவள் ஒரு வெய்யில்

    இப்படி ஒரு நன்றி

    சங்கீத ஞானமு

    நடவடிக்கைகள்

    கா. போ. ச.

    நடுநிசிக் காதலி

    புத்திமதி

    தேடல்

    மார்க்கெட்

    புதுப் புதுத் திட்டங்கள்

    சிக்கனத் திருமணம்

    முதல் உதவிகள்

    ஏக்க விளம்பரங்கள்

    அது ஒரு உலகம்

    ஆரோக்கிய ரகசியம்

    அடியில்லை திருத்தமில்லை

    பயங்கர ஊகங்கள்

    ஆபீஸ் மொழி

    சாதனையாளரின் சங்கடம்

    ஒரு விசித்திர ராஜினாமா

    அந்தக் காலத்து பட்ஜெ ஒன்று

    அனுபவமில்லாத வைத்திய முறை

    அந்தப் பொருள்

    பட்டங்கள் வழங்கப்படும்

    ஆறாதது சினம்

    வ. க. கல்லூரி

    வீட்டுக்குள் வரவேற்பு

    மெனு தர்ம சாஸ்திரம்

    கிலிம்பிக் செய்தி

    புள்ளி விவரம்

    சில நேரங்களில் சில கேள்விகள்

    புராணம்

    புள்ளிகளின் பின்னே...!

    சிந்தனை சொப்பனமே

    ரிகார்டுகள்

    பிரியமான கடிதம்

    பேரம்

    மஞ்சு விரட்டு வர்ணனை

    விண்வெளிப் பயணம்

    கொத்தவால்சாவடி கொலை

    உஷார்

    வளர்ப்பு

    கலை

    இனியவை நாற்பது

    ரிப்பேர்

    சின்னங்கள்

    ஓடிவந்து பார்க்க

    பரபரப்பு

    சோதிடம்

    நான்கு கதைகள்

    நேர்முக வர்ணனை

    குரல்கள்

    தவிப்பு

    உதவி! உதவி!

    அறிமுகம்

    அலுவலகப் பேரகராதி

    அச்படியே

    முதலைக் கதை

    துப்பறியும் ராம்சிங்

    அன்பு மகனே

    ஆராய்ச்சி

    மெய்ப்பொருள்

    கொழுக்கட்டுரை

    மாலை வரவேற்பு

    அதிசய டாக்டர்

    புலம்பல்

    பெண்ணோ பேயோ?

    அதிர்ச்சி

    ஹலோ ஹலோ

    மன ஆர்டர் பாரம்

    புதிய வானிலை

    அரசியல் வெளியீடு

    விளம்பரம் கேட்கிறது

    புதிய கனவுகள்

    கிராமத் தமிழ்க் கையகராதி

    ஐ.நா.வில் அத்தை

    முன்னுரை

    1. சரித்திரம் கலந்த சிரித்திரம்

    1959 - 60களில் குமுதம் இதழ்களின் கடைசிப் பக்கங்களில் வந்த எனது நகைச்சுவை ஒரு பக்கக் கட்டுரைகளின் தொகுப்பு இது.

    நகைச்சுவையில் பலவிதமாகப் புகுந்து விளையாட துணை ஆசிரியராக இருந்த எனக்கு ஊக்கம் கொடுத்த குமுதம் ஆசிரியர் அமரர் திரு. எஸ்.ஏ.பி. அவர்களுக்கு இக்கட்டுரைத் தொகுப்பைக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன்.

    முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னிருந்த நாட்டின் அரசியல் நிலை, பொருளாதார நிலை, நாகரிகம், சுற்றுச் சூழ்நிலை இவற்றை இந்த நகைச் சுவைகள் தங்களை அறியாமலே இன்றைய தலைமுறையினருக்கு வழங்கியுள்ளது.

    பாக்கியம் ராமசாமி

    ***

    பெயர் வைப்பது எப்படி?

    பொதுக்கூட்டத்தில் தலைமை தாங்கும் பிரமுகரிடம் சட்டென்று சிலர் தம் குழந்தையைக் கொண்டுவந்து நீட்டிப் பெயர் வைக்கச் சொல்கிறார்கள். இது மிகவும் தப்பான காரியம். தலைவருக்கு யோசனை செய்யப் போதிய அவகாசமும், முன் எச்சரிக்கையும் தரப்பட வேண்டும். அப்படித் தராவிட்டால், தலைவர், தமது அப்போதைய மன நிலைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்பக் குழந்தைகளுக்குக் கீழ்க் கண்டபடி பெயர் வைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    கூட்டத்துக்கு வரும்போது சாப்பிட்ட பலகாரம், வயிற்றில் 'கடமுட' செய்து கொண்டிருக்கிறது. வீட்டுக்குப் போய் 'ஓம வாட்டர்' சாப்பிட எண்ணிக் கொண்டிருக்கிறார்.

    இந்த நிலையில் குழந்தைக்கு அவர் வைத்த பெயர் ஓமாமிர்தம்.

    தொண்டை வறண்டு கிடக்கிறது. சோடாவுக்கு ஏங்குகிறார். சோடா வருகிற வழியாக இல்லை.

    இந்த நிலையில் குழந்தைக்கு அவர் வைத்த பெயர் தாகசாந்தி.

    மாலை போடவே மறந்து போய் விட்டார்கள்.

    இந்த நிலையில் குழந்தைக்கு அவர் வைத்த பெயர் பூமாலை.

    தூக்கக் கலக்கமாக இருக்கிறார்.

    இந்த நிலையில் குழந்தைக்கு அவர் வைத்த பெயர் கலக்கலிங்கம்.

    வீட்டில் மனைவியோடு போட்டுக் கொண்ட சண்டை நினைவாக இருக்கிறார்.

    இந்த நிலையில் குழந்தைக்கு அவர் வைத்த பெயர் ராட்சசேஸ்வரி.

    தன் பேச்சின்போது நாலு பேர்கூட அப்ளாஸ் தரவில்லையே என்று வருந்திக் கொண்டிருக்கிறார்.

    இந்த நிலையில் குழந்தைக்கு அவர் வைத்த பெயர் அப்ளாஸாரி.

    தலைமை உரை நிகழ்த்தும்போது தட்டித் தடுமாறிப் பேசினோமோ என்ற யோசனையில் இருக்கிறார்.

    இந்த நிலையில் வைத்த பெயர் தடுமாறன்.

    மெயிலுக்கு நேரமாகி விட்டது, போகவேண்டுமே என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்.

    இந்த நிலையில் குழந்தைக்கு பெயர் மெயில்வாகனன்.

    வீட்டுக்குத் தினமும் லேட்டாகப் போகிறோமே என்று உள்ளுக்குள் மறுகிக் கொண்டிருக்கிறார்.

    இந்த நிலையில் குழந்தைக்கு அவர் வைத்த பெயர் லேட்டாபிராமன்.

    வீட்டில் வாலுப் பையனான தன் குமாரன், எதைப் போட்டு உடைத்து, என்ன துவம்சம் செய்து கொண்டிருக்கிறானோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.

    இந்த நிலையில் அவர் வைத்த பெயர் குமாரவாலு.

    ***

    'நயா'னார்கள் சரித்திரம்

    பழைய ஓலைச் சுவடிகளுக்கு நடுவே ஒருசில புதிய ஓலைச் சுவடிகள் தென்பட்டன. 'நயானார் சரித்திரங்கள்' என்ற தலைப்பில்.

    பஸ்ஸுவப்ப நயானார்

    சனப் பெருக்கமும் சந்தடியும் சூழ்ந்த சென்னை நகரின் கண் இவர் ஓர் பண்புளள் நான்கெஸடட் மரபினிற் தோன்றினார். டைப்ரைட்டிங், ஷார்ட் ஹாண்ட், புக் கீப்பிங் முதலிய சால கலைகளையும் தமது பதினேழாவது வயதுக்குள்ளேயே கற்றுணர்ந்து யாவரும் அதிசயிக்கத்தக்க வண்ணமாயிருந்தார். படிப்பும் முடிந்து குலவழக்கப்படி படிகள் பல ஏறி இறங்கித் துதித்து கடைசியில் உத்தியோகம் ஒன்றில் அமர்ந்தார். தினமும் இவர் பஸ்ஸுக்காகக் காத்திருப்பார். கண்டக்டர், 'ஒரே ஓர் ஆளுக்குத்தான் இடம்' என்று சொல்லும்போது இவர் தான் ஏறாமல் தனக்கடுத்தவர் ஏறும்படி விட்டுவிட்டு, இன்புற்றிருப்பார். 'எங்கோ போய்ப் பாதிவழியில் நிற்கப் போகிற பஸ்ஸில், யார் முதலில் ஏறினால் என்ன?' என்ற ஞான நோக்கே இவருக்கு. இதனால் இவருக்கு 'இடம் கொடுத்த தம்பி’, என்ற பெயரும், 'பஸ் உவப்ப நயானார்' என்ற பெயரும் ஏற்பட்டது. இவர் இயற்றிய பஸ்ஸரே கோபாலம்! என்ற பாடல் மிகவும் பிரசித்தமானது.

    பெரும் ஷேர் நாதர்

    பல்லாண்டுகளுக்கு முன்னே கல்கத்தாவில் பெரும் ஷேர் தாதன் என்றொரு சீமான் இருந்தார். ஏழை எளியவரான சிறிய பணக்காரர்களிடமுள்ள ஒண்டி சண்டி ஷேர்களையெல்லாம் குறைந்த விலைக்கு வஞ்சகமாய் வாங்கிப் பின்னர் பெரு விலைக்கு விற்றுவந்தார். இவருக்கு ஞானம் அடைய வேண்டிய காலம் வந்துவிட்டது. ஆனால் இதை நம் செல்வர் அறியார். ஓர் நாள் காலை திவ்விய தேஜசுடன் கூடிய ஓர் பச்சைப் பசேலென்ற காரில் முந்த்ரா என்னும் திரு நாமத்தினராய் ஒருவர் நமது செல்வந்தரின் இல்லத்தின் முன் இழிந்தனர். தம்மிடம் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கான ஷேர் இருப்பதாகவும் அவற்றைக் குறைந்த விலையில் விற்கவே தாம் வந்ததாகவும் கூறினார். பொருளாசை உந்தப் பட்டவராக ஷேர்தாதர் இசைந்தார். அந்தோ! மறுநாள் காலைத் தினசரியை விரித்தார் பெரும் ஷேர் நாதர்! அவ்வளவே! அடியற்ற மரம்போல் விழுந்தார். முதல் தினம் அவரிடம் வந்த முந்த்ரா நேற்று கோடீஸ்வரர். இன்று வெறும் கைதி! இவர் விற்ற ஷேர்கள் மோசடியானவை. பெரும் ஷேர் நாதருக்கு அப்போதே ஞான முண்டாயிற்று. 'ஷேரிடமறிந்து ஷேராமற்போனேனே' என்று புலம்பினவராய் மண்ணில் விழுந்தார், வேற்றுலகம் போய் ஷேர்ந்தார்.

    வளையான் குடி மாற்றனார்

    இவரது காலம் ரெண்ட் கண்ட்ரோல் காலமாகும். ‘வசிக்க ஒரு சாண் இடம்' என்று தமது வீடு தேடி வருகிறவர்களை இவர் அன்புடன் 'போர்ஷன்' கொடுத்து உபசரித்து வந்தார். இங்ஙனமிருந்து வரும் நாளில் சகல வாடகை வீடுகளையும் தமது கண்ட்ரோலில் ஆளுகை புரிந்து வருபவரான ரெண்ட் கண்ட்ரோல் அதிகாரி எம்பெருமானார் நமது வளையான் குடி மாற்றனாரது இல்லத்தைச் சோதனை செய்யத் துணிந்தார்.

    இடம் கேட்ட எம்பெருமானாரை இப்படிச் சற்றே திண்ணையில் அமர்க! என்று கூறிவிட்டு குடி மாற்றனார் அந்த நள்ளிரவில், இருளும் புக அஞ்சும் தமது பழக்கடைப் பகுதிக்கு விரைந்தார். மழையும் லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. மனைவியார் டார்ச் ஒளி காட்ட மாற்றனார், முருங்கை மரத்து மூலையில் ஒரு காலத்தில் தாம் போட்டிருந்த தகரங்களை எடுத்தார். வீட்டு அம்மிக் குழவியைக் கொண்டு தகரத்தின் மேடு பள்ளங்களை அகற்றினார். திண்ணைக்கு எடுத்தேகினார். திண்ணையில் மூன்று பக்கங்களிலும் அவற்றை வைத்துக் கட்டினார்.

    எம்பெருமானார் ஏதும் புரியாமல், மாறா! என்னைச் சுற்றி மூன்று தகரங்கள் இஃதெல்லாம் என்னை? என்றார். ஐயன்மீர்! இதுதான் தங்கள் போர்ஷன்! வீடு தேடி வருகிறவர்களுக்கு நான் இடமில்லை என்று சொல்லுதல் ஆமோ? வாடகை இருபதும் அட்வான்ஸ் ஐந்நூறும் தாமோ? என்றார்.

    எம்பெருமான் அக்கணமே மயங்கி விழுந்தார். விழுந்த வரை எழுப்ப நீர் கொண்டுவர உள்ளே சென்று திரும்பி வந்து வெற்றுத் திண்ணையை நோக்கிக் கண்ணீர் சொரிவாராயினார். 'என்ன இது கூத்து! என்னே இது சோதனை!' என்று பலவாறாய்ப் புலம்பினார். முப்பது ரூபாய்க்குள்ளிட்ட வாடகையாகையால் எம்பெருமானார் நமது உண்மை சொரூபத்தை மாற்றனாருக்குக் காட்டி அருளாமலே போய் விட்டார் என்பதை மாற்றனார் எவ்வாறே அறிவார்!

    ***

    சட்டம் ஒரு சிரிப்புறை

    எட்டுக் குற்றங்களும் அவற்றுக்கான எட்டுத் தண்டனைகளும் கீழேயுள்ளன.

    (1) சுவாரசியமாகச் சினிமா பார்த்துக் கொண்டிருக்கும் போது அடுத்து வருவதை முன்கூட்டியே தொண தொணவென்று சொல்லிக் கொண்டிருப்பவருக்கு:

    அந்த வருடத்திய மோசமான தமிழ்ப் படத்தை ஒரு குழு வைத்துத் தேர்ந்தெடுத்து, குற்றவாளியைச் சேர்ந்தாற்போல் அப்படத்தை முப்பது தடவை பார்க்க வைத்தல். (அந்த வசனங்களை ஒப்பிக்கச் சொல்லித் துன்புறுத்தல் தவறாக ஒப்பிக்கும் ஒவ்வொரு வசனத்துக்கும் இன்னும் ஒரு தடவை அதே படத்தைப் பாக்கும்படி கட்டளையிடுதல்.)

    (2) புதிய பத்திரிகை ஏதாவது வந்தால், வழியிலேயே மறித்து அதைப் பிடுங்கிக்கொண்டு பிரித்து, சாவகாசமாகப் படித்து முடித்தபின், பூ! ஒன்றுமில்லையே, என்று திரும்பிக் கொடுப்பவருக்கு:

    சுவாரசியமான துப்பறியும் நாவலில் கடைசிச் சில பக்கங்களைக் கிழித்துவிட்டு அது தெரியாதவாறு புதியது போல் பைண்டு செய்து கொடுத்து அதைப் படிக்கச் செய்தல்.

    (3) மோசமான சாப்பாட்டைத் தயாரித்து வயிற்றைக் கெடுக்கும் ஓட்டல் அதிபருக்கு:

    வயிறு நிறைய அவர் ஓட்டலிலேயே அவரைச் சாப்பிட வைத்து, உடனே ஆட்டோ ரிக்ஷா ஒன்றில் ஏற்றி மேடு பள்ளமான ரஸ்தாவில் பத்து மைல் அனுப்பி வைப்பது.

    (4) போட்டிருக்கும் சலவைச் சட்டையை நட்பு என்ற பெயரால் கட்டிப் பிடித்து அநியாயமாய்க் கசக்குகிறவர்களுக்கு:

    பஸ்ஸில் மூன்று பேர் மீட்டில் இருபுறமும் இரண்டு தயிர் வியாபாரிகளைக் (தயிர்க் கூடை சகிதம்) உட்கார வைத்து நடுவில் குற்றவாளியை உட்கார வைத்தல். (அவருக்கு சலவை சட்டை அணிவித்து.)

    (5) உரித்துக் கொடுத்த பழத்தைத் தின்றுவிட்டு, யார் இப்படித் தோலைப் போட்டது என்று அதிகாரம் செய்கிறவருக்கு:

    நகத்தை மழுங்க வெட்டிவிட்டுச் சாத்துக்குடி பழத்தை (ஒரு டஜன்) உரிக்கச் சொல்லுதல்.

    (6) ஊசியில் நூல் கோக்கிறபோது கையை அசைத்து

    Enjoying the preview?
    Page 1 of 1