Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Senthanalil Pootha Semparuthi
Senthanalil Pootha Semparuthi
Senthanalil Pootha Semparuthi
Ebook92 pages37 minutes

Senthanalil Pootha Semparuthi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எங்கோ பிறந்து, வளர்ந்து எங்கோ சந்திக்கும் நல்ல மனிதர்கள் அன்பு என்னும் சங்கிலியால் பிணைக்கப்படும் நிகழ்ச்சிதான் இந்தக் கதை.

தீவிரவாதம், வன்முறை போன்ற செந்தணலில் பூக்கும் மனிதநேயம் என்ற அழகான பூவை எனது கற்பனையில் வடித்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்.

Languageதமிழ்
Release dateOct 1, 2022
ISBN6580144609113
Senthanalil Pootha Semparuthi

Read more from Puvana Chandrashekaran

Related to Senthanalil Pootha Semparuthi

Related ebooks

Reviews for Senthanalil Pootha Semparuthi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Senthanalil Pootha Semparuthi - Puvana Chandrashekaran

    http://www.pustaka.co.in

    செந்தணலில் பூத்த செம்பருத்தி

    Senthanalil Pootha Semparuthi

    Author :

    புவனா சந்திரசேகரன்

    Puvana Chandrashekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/puvana-chandrashekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியர் உரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    முடிவு 1

    முடிவு 2

    ஆசிரியர் உரை

    எங்கோ பிறந்து வளர்ந்து எங்கோ சந்திக்கும் நல்ல மனிதர்கள் அன்பு என்னும் சங்கிலியால் பிணைக்கப்படும் நிகழ்ச்சிதான் இந்தக் கதை. தீவிரவாதம், வன்முறை போன்ற செந்தணலில் பூக்கும் மனிதநேயம் என்ற அழகான பூவை எனது கற்பனையில் வடித்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்.

    புவனா சந்திரசேகரன்.

    அத்தியாயம் 1

    அக்கினிப் பூக்கள் எங்கோ

    மலரக் காத்திருக்கின்றன!

    எரிமலைக் குழம்பு எங்கோ

    கொதித்துக் கொண்டிருக்கிறது!

    பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான சண்டிகர் நகரத்தில் அக்டோபர் மாதத்தின் ரம்மியமான ஒரு காலைப் பொழுது. அக்டோபர் மாதத்தில் குளிர் லேசாக ஆரம்பித்து, ‘நான் வந்துவிட்டேன்’ என்று காதில் சொல்லிக் கொண்டிருக்கிறது. உடலை வருடுகின்ற சில்லென்ற காற்றும், ஆமாம், ஆமாம் என்று ஒத்தூதுகின்றது.

    இனிமையான அந்தக் காலை வேளையில், பஞ்சாப் யுனிவர்சிடியின் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்த அந்த இளம் தம்பதியைச் சந்திக்கலாமா?

    ப்ரீத்தி, ப்ரீத்தி டார்லிங், அதுக்குள்ள எழுந்துட்டயா? என்று கண்களை மூடியபடி கைகளால் படுக்கையில் தன்னருகே காலியாக இருந்த அந்த இடத்தைத் தடவித் தனது காதல் மனைவியைத் தேடிக் கொண்டிருந்தான் சந்தீப்.

    அதுக்குள்ளயா? மணி எட்டு. இப்போ எந்திரிச்சு ரெடியானாத் தானே நாம பிளான் போட்டபடி கரெக்டாக் கிளம்ப முடியும்?

    அதெல்லாம் கிடக்கட்டும். நீ வந்து இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே என் பக்கத்தில் படுத்துக்கோயேன் டியர். குளிருக்கு இதமா இருக்கும் என்றான் சந்தீப்.

    இந்தக் குளிருக்கு உனக்கு எப்பப் பாத்தாலும் ரொமான்ஸ் கேக்குதா? நான் இப்பத் தான் குளிச்சுட்டு ரெடியாகி வந்திருக்கேன். ஒழுங்கா மரியாதையா எழுந்து ரெடியாகிக்கோ. ஒன்பது மணிக்கு ஸெமினாருக்குப் போணும்னு சொன்னே. அப்புறம் உன்னோட ஸோ கால்டு பஞ்சுவாலிட்டியோட மானம் கப்பலேறிடும். நான் தனியா டைனிங் ஹால் போயி கோபி பரோட்டா, தயிர், ஊறுகாய் சாப்பிட்டுட்டு ஷாப்பிங் பண்ணப் போறேன் என்று சொன்னதும் அடித்துப் புரண்டு எழுந்து தயாரானான்.

    ப்ரீத்து, தனியாவே ஷாப்பிங் மேனேஜ் பண்ணிடுவயா? செமினார் முடிஞ்சதும் சேந்து போலாமே?

    அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீ லேட் பண்ணினேன்னாக் கஷ்டம். லஞ்ச் முடிச்சிட்டு அம்ரித்சர் கெளம்பப் போறோம் இல்லையா? எனக்கு ஹிந்தி நல்லாத் தெரியும். மும்பையில் வளந்தவ நான். உன்னை மாதிரி வார்த்தைக்கு வார்த்தை ‘ஹை’ போட்டுப் பேசினா ஹிந்தின்னு நம்பறவ இல்லை நான். நல்லாவே பேசி மேனேஜ் பண்ணிக்குவேன். உன்னோட கண்றாவி ஹிந்தியைப் பாத்துத் தான் ஒட்டுமொத்தமா மதராஸி ஹிந்தின்னு நம்மைப் பாத்து இவங்க எல்லாரும் கேலி செய்யறாங்க என்றாள் ப்ரீத்தி.

    ப்ரீத்தியின் செல்லமான மிரட்டலைப் புரிந்து கொண்டு எழுந்து தயாரானான் சந்தீப்.

    இரண்டுபேரும் காலை உணவை முடித்துவிட்டு அவரவர் வேலைகளைப் பார்க்கப் போனார்கள். கனம் கனமான கோபிப் பரோட்டாவையும், அதன் மேல் தாராளமாக மின்னிய வெண்ணெயையும் பார்த்தாலே வயிறு நிரம்பியது ப்ரீத்திக்கு.

    பஞ்சாபிகளின் உடல் வளமையின் காரணமும் அவளுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.

    சந்தீப், சென்னையில் ஒரு பிரபல கல்லூரியில் இயற்பியல் (physics) பேராசிரியர். பஞ்சாப் யுனிவர்சிடியில் நடக்கும் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக, அவனுடைய கல்லூரியின் சார்பாக அனுப்பப் பட்டிருக்கிறான். தனது மனைவியையும் தன்னுடன் அழைத்து வந்திருந்தான். முதல்நாள் விடுமுறை இருந்ததால் சண்டிகரில் பார்க்க வேண்டிய இடங்களை இரண்டு பேருமாகச் சென்று பார்த்தார்கள்.

    ராக் கார்டன் (rock garden) - இது உடைந்த பீங்கான் துண்டுகள் மற்றும் வேண்டாத சாமான்களை அழகிய கலைப்பொருட்களாக மாற்றி வைத்திருக்கும் இடம், ரோஸ் கார்டன்- பல்வேறு வண்ணங்களில் அழகிய ரோஜாக்கள் நிறைந்த இடம், சுக்னா ஏரி போன்ற இடங்களைப் பார்த்து விட்டு வந்தார்கள். ஸெக்டர் 17 இல் இருந்த மார்க்கெட்டையும் பார்த்தார்கள். அந்த மார்க்கெட்டில் தான் இப்போது ஷாப்பிங் செய்ய, ப்ரீத்தி கிளம்பியிருக்கிறாள்.

    சண்டிகர் நகரம் பஞ்சாப், ஹரியானா இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகர் என்பதால் இது யூனியன் டெரிடரி(union territory). மத்திய அரசின் கண்காணிப்பில் இருக்கும் சிறப்புப் பகுதி. மிக அழகாகத் திட்டமிடப் பட்டு நிர்மாணிக்கப்பட்ட சிறந்த நகரம். சுத்தத்திற்கும், பசுமையான இயற்கை எழிலுக்கும், அழகான கட்டிடங்களுக்கும் பேர் போன நகரம். மதுரையைப் போலவே அழகான வடிவமைப்பு அமைந்துள்ள நகரம்.

    பஞ்சாப் யுனிவர்சிட்டியில் படிக்கும் ஒரு மாணவியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு அங்கிருந்த கடைகளை அலசிக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி.

    Enjoying the preview?
    Page 1 of 1