Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Amanushya Kanavugal
Amanushya Kanavugal
Amanushya Kanavugal
Ebook195 pages1 hour

Amanushya Kanavugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வினோதமான கனவுகளால் துரத்தப்பட்டு, அந்தக் கனவுகளின் பின்னணியில் உள்ள உண்மைகளை அறிந்து கொள்ளத் துடிக்கிறான் ரூபேஷ். உண்மை பெரிய அதிர்ச்சியாக அவனைத் தாக்குகிறது. அவனுடைய சிறு வயதுத் தோழியான ரூபிணிக்கு நடந்த கொடுமைகள் தெரிய வருகின்றன. அகால மரணம் அடையும் ரூபிணியின் ஆவி, தனக்கு நடந்த அநீதிக்குத் தகுந்த தண்டனை வழங்கத் துடிக்கிறது. அந்த ஆத்மாவின் ஆசைகள் நிறைவேறினவா என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இங்கு வடநாட்டில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றிய உண்மைச் செய்திகளின் அடிப்படையில் எனது கற்பனையைக் கலந்து தந்திருக்கிறேன். பெண்களுக்கு உண்மையில் நடக்கும் கொடுமைகளைச் சொல்ல முயற்சி செய்ததால் என்னால் வன்முறைக் காட்சிகளைத் தவிர்க்க முடியவில்லை.படித்துப் பாருங்கள்.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580144607167
Amanushya Kanavugal

Read more from Puvana Chandrashekaran

Related to Amanushya Kanavugal

Related ebooks

Related categories

Reviews for Amanushya Kanavugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Amanushya Kanavugal - Puvana Chandrashekaran

    https://www.pustaka.co.in

    அமானுஷ்யக் கனவுகள்

    Amanushya Kanavugal

    Author:

    புவனா சந்திரசேகரன்

    Puvana Chandrashekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ puvana-chandrashekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 1

    நடு இரவில் தூக்கம் கலையத் திடுக்கிட்டு எழுந்தான் ரூபேஷ். உடலெல்லாம் வியர்த்துக் கொட்டித் தொப்பல் தொப்பலாக நனைந்திருந்தது. டிசம்பர் மாதத்தின் கடுங் குளிர். ‌உடலுக்குள் ஊசியாகத் தாக்கும் குளிரில் இப்படி வியர்த்தால் எவ்வளவு பயங்கரக் கனவாக இருக்கும்? கொடூரமாகத் தான் இருந்தது.

    கனவாகத் தான் இருக்க வேண்டும். கண்களை மூடினால் திரும்பவும் அதே உருவம். அவ்வளவு கோரமான தோற்றம். உடல் கருகித் தோலெல்லாம் பொசுங்கி எலும்புகள் தெரிய ஆரம்பித்திருந்தன. கருகிய உடலில் இரத்தம் வடிந்து கொண்டு சதை அங்கங்கு பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அத்தனை துன்பத்திலும் கதறாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தாள் அந்தப் பெண். கருகித் தோல் சுருங்கித் தொங்கிக் கொண்டிருந்த முகத்தில், கண்கள் மட்டும் அவனைச் சுட்டு எரிப்பது போல வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

    ரூபேஷ் தனது பார்வையை இறக்கி அவள் உடலின் நடுப் பகுதியைப் பார்த்தான். என்ன கோரமான காட்சி! வயிற்றுப் பகுதி நடுவில் குறுக்கே கிழிக்கப்பட்டு உடலில் இருந்து ஒரு குழந்தை தொங்கிக் கொண்டிருந்தது.

    நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் பிரசவத்திற்குத் தயாராக வெளி உலகைச் சந்திக்க முழு வளர்ச்சியுடன் தயாராக இருக்குமே அந்த மாதிரி சிசு. அதுவும் தீயில் கருகி தாய் வயிற்றிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தது. தொப்புள் கொடியில் ஊசலாடிக் கொண்டிருந்தது.

    மூடிய கண்களுக்குள் திரும்பத் திரும்ப அதே பயங்கரக் காட்சி.

    என்ன தான் காரணம் இதற்கு? தூக்கம் நன்றாகக் கலைந்து விட்டது. எழுந்து

    படுக்கையில் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தான். அந்த உருவம் முகத்தை நிமிர்ந்து அவனையே உற்றுப் பார்த்தது பயங்கரமாக இருந்தது. ஆனால் மனதை ஏதோ பிசைந்து ரொம்பவும்‌ சோகமாகத் தான் இருந்தது. அடிவயிற்றில் ஏதோ கலக்கம்.

    எழுந்து சென்று பூஜையில் (சின்னப் படம் சுவற்றில் மாட்டியிருந்தது.அது தான் அவனுடைய பூஜையறை) ஆண்டவன் படத்திற்கு முன்னால் நின்று வேண்டினான்.

    ஆண்டவனே! இந்தக் கெட்ட கனவுகளில் இருந்து என்னைக் காப்பாற்று. எதற்காக எனக்கு மட்டும் இந்த மாதிரிக் கனவுகள் திரும்பத் திரும்ப வருகின்றன? இவற்றின் அர்த்தம் என்ன? யாராவது தன்னைக் காப்பாற்றச் சொல்லி எனக்கு சங்கேதம் அனுப்புகிறார்களா? இல்லை என்னைச் சுற்றி இருப்பவர்களில் யாருக்காவது ஏதாவது ஏதோ தீங்கு நிகழப் போகிறதா? ஒன்றுமே புரியவில்லையே!

    என்று வேண்டிக் கொண்டு படுத்துத் திரும்பவும் தூங்கச் சென்றான். எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை. எழுந்திருக்கவே நேரமாகி விட்டது. மடமடவென்று கிளம்பி வேலைக்கு

    ரெடியாகி வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினான்.

    ஸ்கூட்டரைக் கிளப்பிக் கொஞ்ச தூரம் சென்றிருப்பான். அவனைக் கடந்து கணகணவென்ற சத்தம். ஒரு தீயணைப்பு வண்டி கடந்து சென்றது. பின்னாலேயே ஓர் ஆம்புலன்ஸ் சைரனுடன் தொடர்ந்து சென்றது. பக்கத்தில் எங்கேயோ ஏதோ அசம்பாவிதம் ‌என்று மனதில் நினைத்துக் கொண்டே சிறிது தூரம் சென்றிருப்பான்.

    அவனைக் கடந்து ஒரு போலீஸ் ஜீப் அவசர கதியில். மனதிற்குள் சின்னதாக ஓர் ஆர்வம் எட்டிப் பார்த்தது.

    வேகமாக அந்தப் போலீஸ் ஜீப்பைத் தொடர்ந்தான் ரூபேஷ். அடுத்த தெருவில் இருந்த ஒரு பணக்காரத் தனமான, பல மாடிகளைக் கொண்ட தனி வீடு. பெரிய பணக்காரக் குடும்பம். கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்கள். அந்த வீட்டின் வாசலில் தான் கூட்டம். ஒரே புகை மயமாக இருந்தது. தீயணைப்பு வண்டியும் ஆம்புலன்ஸும் அங்கே தான் நின்று கொண்டிருந்தன.

    ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்திவிட்டு அங்கு

    கூடியிருந்த மக்கள் பேசுவதைக் கேட்டான்.

    பாவம்பா அந்தப் பொண்ணு.கேஸ் சிலிண்டர் வெடித்து உடம்பெல்லாம் பயங்கரத் தீக்காயமாம். இதில் நிறைமாத கர்ப்பிணி வேறயாம். தாயும் குழந்தையும் இரண்டு பேருமே பிழைப்பது கஷ்டம் தானாம். என்ன பணம் இருந்து என்ன பிரயோசனம்? கர்ப்பிணிப் பெண்ணை ஒழுங்காப் பாத்துக்கற துப்பில்லை. அவளை எதுக்கு நடுராத்திரியில் கிச்சனுக்கு அனுப்பணும்? ஈவு இரக்கம் இல்லாத உறவுகள். ஏழை வீட்டுப் பொண்ணு. கல்யாணமாகி வந்ததில் இருந்து ஒரு சுகமும் கிடையாது. பாவம்! போய்ச் சேந்தாக் கூட நிம்மதி தான் அவளுக்கு.

    அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே வேகமாக ஸ்ட்ரெச்சரில் காயமடைந்த பெண்ணைக் கொண்டு ஓடி வந்து ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.அடித்த காற்றில் அவள் மேல் போடப் பட்டிருந்த துணி விலகி அவள் கருகிய முகமும் உடலும் லேசாகத் தெரிய ரூபேஷ் திகைத்துப் போனான்.அவன் கனவில் வந்த அதே பெண்.

    ரூபேஷ் தலை சுற்றி மயங்கிக் கீழே விழுந்தான்.

    அத்தியாயம் 2

    ரூபேஷ் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்து மயங்கிக் கீழே சரிந்தான். சுரீரென்று மிளகாயைக் கடித்தது போல உள்ளத்தில் ஏறிய‌ அச்சமும் திகைப்பும் தான் அவனைத் தன்னிலை இழக்க வைத்தன. அப்படியே அவன் கனவில் வந்த பெண்ணின் முகம். என்ன ஒரே ஒரு வித்தியாசம் தான்! அவன் கனவில் முழுதாகக் கண்களைத்

    திறந்து அவனை முழித்துப் பார்த்தவள் இப்போது கண்களை மூடி உணர்வில்லாமல் கிடக்கிறாள். அவ்வளவு தான்!

    ரூபேஷ் நினைவு வந்து கண்களை விழித்துப் பார்த்த போது ஹாஸ்பிடல் பெட்டில் இருந்தான். எதிரில் கவலையுடன் அப்பா நின்று கொண்டிருந்தார். துண்டை வாயில் வைத்து அழுகையை அடக்கிக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தார். ரூபேஷ் கஷ்டப்பட்டுக் கண்களை விழித்துப் பார்க்க ரூபேஷின் அப்பா உடனே பெரிய நிம்மதியுடன் பரபரப்பாக எழுந்தார்.

    என்னப்பா ஆச்சு? பயந்தே போயிட்டேம்பா ராஜா. ஒடம்புக்கு என்னப்பா செய்யுது! மயக்கம் வர மாதிரி என்னப்பா ஆச்சு?.

    சரியாக அந்த நேரத்தில் ட்யூட்டி டாக்டர் உள்ளே நுழைந்தார்.

    ஹலோ யங் மேன், எப்படி இருக்கீங்க?.

    சார்ட்டை எல்லாம் பார்த்து விட்டு அவனையும் செக் பண்ணி விட்டு ரூபேஷின் அப்பாவிடம் திரும்பினார்.

    ஒன்றுமேயில்லை உங்கள் மகனுக்கு. எல்லா டெஸ்ட்டும் கிளியராக இருக்கு. ஏதோ அதிர்ச்சியில் மயக்கமாகி இருக்கார். வேற‌ ஒரு பிரச்சனையும் இல்லை. இன்னைக்கே டிஸ்சார்ஜ் செஞ்சுடலாம். ஒரு வாரம் வீட்டில் வைச்சுப் பாத்துக்கங்க. அதுவே போதும். வேலைக்குப் போக வேணாம். ரெஸ்ட் எடுக்கட்டும். அடுத்த வாரம் ஒரு தடவை வந்து என்னைப் பாருங்க.

    ரூபேஷ் டெல்லி அருகே நொய்டாவில் ஐடி வேலை பார்க்கும் கணினி நிபுணன். தாய் தந்தைக்கு ஒரே மகன். முழுக்க முழுக்கத் தந்தையின் வளர்ப்பு. தாய் அவன் பிறந்தவுடன் இறந்து போக, தந்தை வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தானே தாயுமாகி நின்று பாசத்துடன் அவனை வளர்த்துப் படிக்க வைத்து இன்று ரூபேஷ் ஒரு கம்ப்யூட்டர் இஞ்சினியர். நல்ல வேளை படிப்பில் ரூபேஷ் படு சுட்டி. நன்றாகவே படித்ததால் அப்பாவிற்குக் கஷ்டம் தரவில்லை.

    அப்பா சத்தர்பூர் காத்யாயினி‌ தேவி கோயிலில் பூஜை செய்யும் பூசாரி. சத்தர்பூர் கோயிலின் காத்தியாயினி தேவி மிகவும் பிரசித்தியான தெய்வம். எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் கோயில். சத்தர்பூரில் கோயில் அருகிலேயே அவர்கள் வீடு. ரூபேஷூக்கு கேம்பஸ் இண்டர்வ்யூவில் வேலை கிடைத்து நொய்டாவில் பிரபல ஐடி கம்பெனியில் வேலை. சத்தர்பூர் நொய்டாவில் இருந்து அதிக தூரமென்பதால் நாய்டாவிலேயே பேச்சிலர் ரூம் ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தான்.

    காலை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச் எல்லாம் கம்பெனியிலேயே. இரவு உணவு மட்டும் வெளியே எங்காவது முடித்துக் கொண்டு வந்து விடுவான். அப்பாவால் கோயில் வேலையை விட்டு வர முடியவில்லை. வேலையை விட அவருக்கு மனமும் இல்லை.

    அன்று காலை ஆஃபிஸ் போகும் வழியில் காஸ் சிலிண்டர் வெடித்த வீட்டின் எதிரில் ரூபேஷ் மயங்கி விழுந்ததும் அவனைச் சுற்றி நின்ற சில நல்ல உள்ளம் கொண்ட இளைஞர்கள் அவனுடைய அடையாள அட்டையைப் பார்த்து அவனுடைய கம்பெனிக்கு ஃபோன் செய்தார்கள். உடனே விரைந்து வந்த அவனுடைய நண்பர்கள்

    அவனை ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டு அவனுடைய அப்பாவையும் வரவழைத்து

    விட மீதி எல்லாம் கிடுகிடுவென்று முடிந்து விட்டன.

    இப்போதும் டிஸ்சார்ஜ் செய்யும் ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடிக்க நண்பர்கள் வந்து உதவினார்கள். ஆஃபிஸில் ஒரு வாரம் லீவு சொல்லி விட்டு அவனுடைய அப்பா ரூபேஷை சத்தர்பூருக்கு அவர்களுடைய வீட்டிற்கே கூட்டிக் கொண்டு போய் விட்டார்.

    ரூபேஷ் இன்னமும் இயல்பான கலகலப்பான நிலைக்கு வரவில்லை.

    ஏதோ வாய் மூடி மௌனியாகவே இருந்தான். மனதிற்குள் ஏதேதோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன.

    குழப்பத்தில் இருந்தான். ரூபேஷின் அப்பா ராம் அவதார், அவன் உடல் பலவீனமாக இருக்கிறான் என்று தொந்தரவு செய்யவில்லை.

    வீட்டிற்கு வந்து நுழைந்ததும் ரூபேஷ் தன்னுடைய ரூமுக்குச் சென்று கண்களை மூடிப் படுத்துக் கொண்டான். அப்படியே தூங்கியும் விட்டான். திரும்பவும் கனவில் அதே பெண்.இந்த முறை வாயைத் திறந்து ஏதோ பேச முற்பட்டாள். கண்களில் இருந்து குருதியுடன் சேர்ந்து கண்ணீரும் வழிந்து கொண்டிருந்தது. வயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தொட்டுத் தொட்டு அழுது கொண்டே ஏதோ சொன்னாள்.

    திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான் ரூபேஷ்.யாரோ விம்மி விம்மி அழும் குரல் கேட்டு எழுந்து

    வெளியே சென்றான். அப்பா ஃபோனைக் கையில் வைத்துக் கொண்டு அடக்க முடியாமல் அழுது கொண்டிருந்தார். பதறிப் போனான் ரூபேஷ்.

    அப்பா, என்னப்பா ஆச்சு? எதுக்குப்பா இந்த அழுகை?

    பக்கத்தில் உட்கார்ந்தான் ரூபேஷ். அவரை அணைத்தாற் போல அமர்ந்து கொண்டு பரிவோடு விசாரித்தான்.

    "ரூபிணி, நம்ப ரூபிணி இருக்காளே! அவ காஸ் சிலிண்டர் வெடிச்சுக் காயங்களோட ஹாஸ்பிடலில் இருந்தா. இப்போத் தான் கொஞ்ச நேரம் முன்னால இறந்து போய்ட்டாளாம். என்னோட நண்பன் ஃபோன் செஞ்சான். பாவம்பா அவ. கல்யாணமாகிப் போய் ஒரு சுகமும் அனுபவிக்கவேயில்லை.

    நிறை மாச கர்ப்பிணி . குழந்தையும் தாயும் இரண்டு பேருமே இறந்து போயிட்டாங்களாம். அந்தத் துயரமான செய்தியைக் கேட்டதும் துக்கம் நெஞ்சை அடைக்கிறது. தாங்க முடியலைப்பா. உன்னுடைய ரூமுக்குப் பக்கத்தில் தான் அவளோட புகுந்த வீடு இருந்தது."

    பளீரென்று உண்மை புரிந்தது ரூபேஷுக்கு. அவனுடைய கனவில் வந்து கொண்டிருக்கும் பெண் ரூபிணி தான். இப்போது

    Enjoying the preview?
    Page 1 of 1