Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chithira Poovizhiyal
Chithira Poovizhiyal
Chithira Poovizhiyal
Ebook100 pages39 minutes

Chithira Poovizhiyal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய விழிப்புணர்வு கதை இது. காதல் தோல்வியைத் தொடர்ந்து ஆஸிடை வீசி இளம் பெண்களைத் தாக்கும் கயவர்களின் செயல் கண்டிக்கப்பட வேண்டியது. தண்டிக்கப்பட வேண்டியது. ஆஸிடை வீச்சால் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்க்கை அதன் பிறகு நரகமாகிவிடுகிறது. ஆஸிட் வீச்சால் பாதிக்கப்படும் ஓர் இளம் பெண்ணின் கதை இது. சமூக உணர்வு கொண்ட இந்த த்ரில்லரைப் படித்து மகிழுங்கள்.

Languageதமிழ்
Release dateOct 22, 2022
ISBN6580144609187
Chithira Poovizhiyal

Read more from Puvana Chandrashekaran

Related to Chithira Poovizhiyal

Related ebooks

Reviews for Chithira Poovizhiyal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chithira Poovizhiyal - Puvana Chandrashekaran

    http://www.pustaka.co.in

    சித்திரப் பூவிழியாள்

    Chithira Poovizhiyal

    Author :

    புவனா சந்திரசேகரன்

    Puvana Chandrashekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/puvana-chandrashekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 1

    சித்திரப்பூ விழி வாசலிலே வந்து யார் நின்றவரோ!

    இந்தக் கட்டுக் கரும்பினைத் தொட்டுக் குழைந்திட யார் வந்தவரோ!

    யார் நின்றவரோ! யார் வந்தவரோ!

    (பழைய திரைப்படப் பாடல்)

    காலைப் பொழுது அழகாக மலர்ந்தது. கதிரவனின் கதிர்கள் ஆயிரம் கனவுகளைச் சுமந்து கொண்டு வந்து உலக மாந்தரைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தது. புதிய விடியல் புதிய நம்பிக்கைகளைக் காற்றில் கலந்து வீசி எழுப்பியதில் சோர்ந்து கிடந்த உள்ளங்கள் உயிர்த்து எழுந்தன.

    அழகான தனது சித்திரப் பூ விழிகளைத் திறந்து முதலில் எதிரில் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த தன்னுடைய அப்பாவின் படத்தைப் பார்த்தாள் அந்த இளம்பெண்.

    அப்பாவின் செல்லப் பெண்ணாக அப்பா மடியை விட்டு இறங்காமல் திரிந்தவள் தான் அவளும். அப்பாவின் இளவரசியாய், அப்பாவின் குட்டி தேவதையாய்த் துள்ளித் திரிந்த நேத்ரா சின்னவயதிலேயே அப்பாவை இழந்தவள். சீக்கிரம் பிரியப் போகிறோம் என்று தான் அவ்வளவு பிரியத்தைக் கொட்டி வளர்த்தாரோ என்னவோ தெரியவில்லை.

    அப்பா விபத்தில் இறந்ததில் இருந்து தன்னுடைய அறையில் படுக்கைக்கு எதிர்ச்சுவரில் மாட்டப்பட்டிருக்கும் அப்பாவின் புகைப்படத்தில் தான் நேத்ரா கண் விழிப்பாள். அவருடைய புகைப்படத்துடன் தினம் பேசிக் கொண்டே தான் அவளுடைய நாள் கழியும்.

    அப்பா விபத்தில் இறந்த பின்னர் நல்ல வேளையாகப் பணக்கஷ்டம் இல்லை. அம்மா கார்த்திகாவும் நேத்ராவும் தான் அந்த சிறிய குடும்பத்தின் அங்கத்தினர்கள். கார்த்திகாவும் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

    கார்த்திகாவும் முகிலனும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். கல்லூரிக் காதல் தொடர்ந்து திருமணத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இரண்டு பக்க சொந்தங்களையும் எதிர்த்து நின்று துணிச்சலாகத் திருமணம் செய்து கொண்ட ஜோடி.

    முகிலன் இறந்த போது கார்த்திகாவின் கையில் அவர்கள் இருவருடைய உழைப்பின் பலனாகக் கணிசமான சேமிப்பு இருந்தது. விபத்தில் கொஞ்சம் நஷ்ட ஈடு கிடைத்தது. ஆனால் பணத்தால் என்றுமே பிரிந்து போன உயிரை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது.

    இழப்பு என்னவோ மிகப் பெரியது தான். நஷ்ட ஈடு தவிர இன்ஷுரன்ஸ் பணம் கிடைத்தது. எல்லாமே வங்கியில் மகளின் வருங்காலத் தேவைக்காகப் போட்டு வைத்தாள் கார்த்திகா.

    சொந்த வீடு பெருங்குடியில் இருந்தது. தனி வீடு; சிறிய வீடு தான். ஆனால் அழகாகச் சுற்றிலும் தோட்டம் போட்டிருந்தார்கள். மாடியில் இரண்டு அறைகளும் கீழே சமையலறை, ஹால், ஸ்டோர், ஒரு பெட்ரூம் என்று அழகாகக் கார்த்திகாவும் முகிலனுமாகத் திட்டம் போட்டு, ஆசையாகக் கட்டிய வீடு.

    மாதச் சம்பளத்திலேயே அம்மாவும் மகளுமாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு வங்கி டெபாஸிட்களைத் தொடவில்லை. இதோ நேத்ரா கம்ப்யூட்டர் இன்ஞ்சினியரிங் வெற்றிகரமாக முடித்துச் சென்னையிலேயே சிறுசேரியில் ஒரு பிரபல கம்ப்யூட்டர் கம்பனியில் வேலையும் பார்க்கிறாள்.

    காதல் கத்திரிக்காய் எல்லாம் நேத்ராவுக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கை கிடையாது.

    அவளுடைய அழகுக்கும் குணத்துக்கும் கல்லூரியிலும் ஆஃபிஸிலும் பலர் அவளை ஸைட் அடித்ததென்னவோ உண்மை தான். ஆனால் நேத்ரா சொன்னதென்னவோ ஒரு பிக் நோ தான்.

    நான் தான் வாழ்க்கையென்று எனக்காகவே வாழும் என்னுடைய அம்மா தேர்ந்தெடுக்கும் மாப்பிள்ளையைத் தான் நான் வாழ்க்கைத் துணையாக ஏற்பேன் என்று பிடிவாதமாக நின்றாள். ஆஃபிஸில் கண்டதும் காதல் பேச வந்தவர்களைச் சிரித்துக் கொண்டே ஒதுக்கினாள். கொஞ்சம் மீறி அருகில் நெருங்கப் பார்த்தவர்களைத் தயங்காமல் வெட்டி விட்டாள்.

    தேவைப்பட்டால் உயர் அதிகாரிகளிடம் கம்ப்ளைண்ட் செய்யத் தயங்க மாட்டேன் என்று சொல்லியே மிரட்டி அனுப்புவாள்.

    அம்மாவிற்கு அவளை நினைத்துக் கவலையாக இருக்கும். ‘தன் பேரில் மகள் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாளே! நம்மால் இவளுடைய நம்பிக்கையைக் காப்பாற்ற முடியுமா?’ என்று குழம்பி நின்றாள் கார்த்திகா.

    ஆண்டவன் தான் முடிச்சுப் போடத் தயாராக இருக்கிறானே! பள்ளியில் தன்னுடன் படித்த பார்கவியை‌ ஒரு நாள் கார்த்திகா பெசண்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோயிலில் சந்திக்க, இரண்டு பேரும் முகவரிகளைப் பரிமாறிக் கொண்டு அடிக்கடி சந்தித்துப் பேசி நட்பைப் புதுப்பிக்கத் திட்டமிட்டார்கள்.

    முதலில் பார்கவியும் அவள் கணவர் அகிலனும், கார்த்திகா வீட்டிற்கு வந்தார்கள். கார்த்திகாவின் ஒரே மகள் நேத்ராவை முதல் தடவையாகச் சந்தித்தார்கள்.

    அவளைப் பார்த்தவுடன் அவர்களுக்கு ரொம்பப் பிடித்து விட்டது. நேத்ராவின் அழகும், பணிவும் அவளுடைய குணமும் அவர்களை வெகுவாகக் கவர்ந்தன. நேத்ரா தான் தனக்கு மருமகளாக வரவேண்டும் என்ற ஆசை மனதில் இரண்டு பேருக்கும் உடனே ஒரே சமயத்தில் துளிர்த்து விட்டது.

    அவர்களுடைய ஒரே மகன் ஆரவ்விற்கும் நேத்ராவுக்கும், பார்கவி தன் மனக்கண்ணில் திருமணமும் செய்து பார்த்து விட்டாள். ஆரவ்

    Enjoying the preview?
    Page 1 of 1