Pasamulla Rojavey!
()
About this ebook
தில்லியில் குடியேறும் சிறிய தமிழ்க் குடும்பம். அண்ணன், தங்கை, அம்மா மூவர் மட்டுமே. கல்லூரி செல்லும் தங்கை திடீரெனத் தொலைந்து போகத் தேடி அலையும் அண்ணனின் தவிப்பை இந்தக் கதையில் சொல்லி இருக்கிறேன். கதையின் ஊடே தில்லியின் பல பகுதிகளுக்கு வாசகர்களை அழைத்துச் செல்கிறேன். படித்துப் பாருங்கள்.
Read more from Puvana Chandrashekaran
Nandhavanathil Oru Aandi Rating: 0 out of 5 stars0 ratingsBala Thiripurasundari Rating: 0 out of 5 stars0 ratingsTwinkle Twinkle Little Star Rating: 0 out of 5 stars0 ratingsUnarvugalin Holi Rating: 0 out of 5 stars0 ratingsMouna Suvar Rating: 0 out of 5 stars0 ratingsNesamulla Vaansudarey! Rating: 0 out of 5 stars0 ratingsVaana Prestham Rating: 0 out of 5 stars0 ratingsKalinthiyin Kanneer Rating: 0 out of 5 stars0 ratingsNugathadi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalagi Kasindhu Kanneer Malgi Rating: 5 out of 5 stars5/5Maaya Vanathil Vinotha Ilavarasargal Rating: 0 out of 5 stars0 ratingsAganaga Natpathu Natpu Rating: 0 out of 5 stars0 ratingsVasudeva Kudumbagam Rating: 0 out of 5 stars0 ratingsKanney! Kalaimanaey! Rating: 0 out of 5 stars0 ratingsMarkazhi Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsSenthanalil Pootha Semparuthi Rating: 0 out of 5 stars0 ratingsOonaagi Uravaagi Uyiraagi! Rating: 0 out of 5 stars0 ratingsMinnal Thoorikaigal Rating: 0 out of 5 stars0 ratingsChithira Poovizhiyal Rating: 0 out of 5 stars0 ratingsKaleidoscope Kadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsMohini Vanthaal! Nindraal! Kondraal! Rating: 0 out of 5 stars0 ratingsAlai Payuthey Kanna! Rating: 0 out of 5 stars0 ratingsAambalin Pagal Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsAmanushya Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsAbini Aaranyam Rating: 0 out of 5 stars0 ratingsChithrai Nilave! Senbaga Malare! Rating: 0 out of 5 stars0 ratingsVaira Oosi Rating: 0 out of 5 stars0 ratingsKolai Kudil Rating: 0 out of 5 stars0 ratingsAmmavin Meesai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Pasamulla Rojavey!
Related ebooks
Unnai Vidava, Ramya Rating: 0 out of 5 stars0 ratingsIthanai Naalai Engirunthai? Rating: 5 out of 5 stars5/5Megala Rating: 0 out of 5 stars0 ratingsKathavu Thiranthirukku! Rating: 0 out of 5 stars0 ratingsThaalattum Megangal Rating: 0 out of 5 stars0 ratingsKanavodu Sila Naal Rating: 0 out of 5 stars0 ratingsT.R.vin Thernthedukkappatta Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsUndhan Manam Nandhavanam Rating: 5 out of 5 stars5/5Oru Thoppu Kuyilgal Rating: 0 out of 5 stars0 ratingsChithrai Nilave! Senbaga Malare! Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5Devathai Vamsam Rating: 0 out of 5 stars0 ratingsBrahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Sudar Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsசுடர் விளக்கு Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Mudichu Rating: 5 out of 5 stars5/5Thaniyarai Rating: 0 out of 5 stars0 ratingsTheerkka Sumangali Rating: 0 out of 5 stars0 ratingsOru Satyavan Iru Savitri Rating: 0 out of 5 stars0 ratingsNadhimoolam Rating: 0 out of 5 stars0 ratingsOru Thai Uruvaagiral Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Neethaney…! Rating: 5 out of 5 stars5/5Aval Oru Thendral Rating: 0 out of 5 stars0 ratingsThullatha Manamum Thullum Rating: 2 out of 5 stars2/5Penn Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Thean Kinnam? Rating: 4 out of 5 stars4/5Thulli Thiriyum Ninaivalaigal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalin Deepam Ondru... Rating: 0 out of 5 stars0 ratingsKannukkulle Unnai Vaithean...!!! Rating: 0 out of 5 stars0 ratingsEnvizhi Neeyandro! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Pasamulla Rojavey!
0 ratings0 reviews
Book preview
Pasamulla Rojavey! - Puvana Chandrashekaran
https://www.pustaka.co.in
பாசமுள்ள ரோஜாவே!
Pasamulla Rojavey!
Author:
புவனா சந்திரசேகரன்
Puvana Chandrashekaran
For more books
https://www.pustaka.co.in/home/author/puvana-chandrashekaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 1
சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன். இரவு 9.30 மணி இருக்கலாம். தில்லிக்குப் போகும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸுக்காக அந்தக் குடும்பம் காத்துக் கொண்டிருந்தது.
ராம் என்ற ராமசுப்ரமணியன், அவனுடைய அம்மா பார்வதி. ஒரே தங்கை சிவப்ரியா.
மூன்று பேரைக் கொண்ட அந்தக் குடும்பம் டிரெயினின் வருகைக்காக மனதில் பல்வேறு உணர்வுகளுடன் காத்துக் கொண்டிருந்தது.
தந்தையை இழந்த ராம் நல்ல பொறுப்பானவன். பட்டப்படிப்பு போதும் என்று நிறுத்தி விட்டு மத்திய அரசாங்க வேலைகளுக்காகக் கடுமையாக உழைத்துப் படித்துத் தயார் செய்து இதோ வேலையும் கிடைத்து விட்டது. ஆனால் வேலை தில்லியில் மத்திய அரசின் உணவுத் துறை அலுவலகத்தில்.
அப்பா திடீரென்று இறந்து போனதில் இருந்து அம்மாவின் தலையில் வீட்டுப பொறுப்பு முழுவதுமாக விழுந்தது. அப்பா தனியார் கம்பெனி வேலையில் தான் இருந்தார். அதனால் அவர் திடீரென்று இறந்து போனதில் ஃபேமலி பென்ஷனோ, இதரப் பொருளாதார உதவிகளோ அதிகம் கிடைக்கவில்லை.
அம்மா கட்டும் செட்டுமாகக் குடித்தனம் நடத்தி வந்ததால் வங்கியில் ஏதோ கொஞ்சம் சேமிப்பு இருந்தது. வீடு அந்தக் காலத்தில் கட்டப்பட்ட சொந்த வீடு. தனி வீடு வேறு. பூர்விகச் சொத்து. முன்னாலும் பின்னாலும் தோட்டம் போடும் அளவு நிறைய இடம் இருந்தது. பின்னால் நான்கு தென்னங்கன்றுகள். காய்கறித் தோட்டம். முன்னால் பூச்செடிகள்.
அப்பா விபத்தில் இறந்ததால் கொஞ்சம் காம்பென்ஸேஷன் பணமும் ஆஃபிஸில் இருந்து கொஞ்சம் கிராஜுவிட்டி, பி.எஃப் பணம் என்று கிடைத்தன. இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுத்திருந்ததால் அந்தப் பணமும் கிடைத்தது.
அம்மா பார்வதி அதிகம் படிக்கவில்லை என்றாலும் பண விஷயத்தில் படு கெட்டி. பணத்தை எல்லாம் வங்கியில் முதலீடு செய்து வட்டி மாதாமாதம் வரும்படி போட்டு விட்டாள். மாடிப் போர்ஷனை வாடகைக்கு விட்டாள். வீட்டின் பின்பக்கம் சின்னக் கூரை போட்டு இரண்டு ஆட்களை வேலைக்கு வைத்துக் கொண்டு ஊறுகாய், அப்பளம், ஸ்நாக்ஸ் வகைகள் எல்லோமே செய்து விலைக்குக் கொடுக்க ஆரம்பித்தாள். தரமும் ருசியும் குறையாமல் பார்வதியின் மேற்பார்வையில் தொழில் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
ராம் அப்போது தான் இளங்கலைப் பட்டப் படிப்பிற்காகக் கல்லூரியில் முதல் வருடப்படிப்பு படித்துக் கொண்டிருந்தான்.
சிவப்ரியா ஸ்கூலில் ஐந்தாம் வகுப்பு.
இரண்டு குழந்தைகளுக்கும் நடுவில் எட்டு வயது வித்தியாசம்.
தான் எப்பாடு பட்டாலும் பரவாயில்லை, குழந்தைகளின் படிப்பு எந்த விதத்திலும் தடை படக் கூடாது என்று பார்வதி உறுதியாக நின்றாள். கல்வி ஒன்று தான் தலைவனை இழந்த அந்தக் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வரும் என்று உறுதியாக நம்பினாள்.
ராம் பட்டப்படிப்பை முடித்ததும் அரசாங்க
வேலை தான் வேண்டும் என்று மத்திய அரசின் வேலைக்காக ஸ்டாஃப் ஸெலெக்ஷன் கமிஷன் ( stafff selection commission) நடத்தும் தேர்வுகளாகப் பார்த்து எழுதி இதோ அமைச்சரவையின் துறையில் உதவியாளராக வேலை கிடைத்து விட்டது.
இந்த வேலையில் கவர்ன்மென்ட் குவார்ட்டர்ஸ் உண்டு என்றாலும் வீடு என்னவோ சீனியாரிட்டி படித் தான் கிடைக்கும். வீடு கிடைக்கும் வரை தங்குவதற்காக, கரோல்பாக்கில் ஒரு வாடகை வீட்டை நண்பனின் உதவியுடன் ஏற்பாடு செய்து அட்வான்ஸும் கொடுத்து விட்டான்.
முதலில் ராம் மட்டும் போய் வேலையில் சேர்ந்து விட்டு வாடகைக்கு வீட்டையும் பார்த்து விட்டு வந்தான். அம்மாவிற்கும் தங்கைக்கும் ஹிந்தி தெரியாது. ராம் மட்டும் ஸ்கூலில் படிக்கும் போதே கற்றுக் கொண்டிருந்ததால் இப்போது உதவியாக இருந்தது.
அதனால் தான் கரோல்பாக்கில் வீடு பார்த்தான். கரோல்பாக்கில் தமிழர்கள் அதிகமாக வசிப்பதால் குட்டித் தமிழ்நாடாக இருக்கும். தமிழர்களின் காய்கறிக் கடைகள், தமிழர்களின் பலசரக்குக் கடைகள், காஃபிப் பவுடர் மற்றும் முறுக்கு மாவு திரிக்கும் அரவை மிஷின், மலையாளத்துக் காரர்கள் நடத்தும் பல்வேறு பெட்டிக் கடைகள் என்ன எல்லா இடங்களிலும் அந்தக் காலத்தில் தமிழர்கள் நிறைந்த இடம். மற்ற கடைகள் வைத்திருக்கும் பலசரக்குக் கடைக்காரர்களும் நிறையத் தமிழ் வாடிக்கையாளர்கள் வருவதால் ஓரிரண்டு தமிழ் வார்த்தைகள் பேசுவார்கள். அதனால் அம்மாவுக்குக் கொஞ்சம் ஈஸியாக இருக்கும் என்று தான் கரோல்பாக்கில் வீடு பார்த்தான்.
இந்தக் கதை நடக்கும் காலகட்டத்தில் அப்படித் தான் இருந்தது. இப்போது நிறைய மாற்றங்கள் வந்து விட்டன.
கரோல்பாக் மாதிரியே மயூர் விஹார், ஜனக்புரி, துவாரகா என்று தமிழர்கள் நிறைந்த இடங்கள் நிறைய வந்து விட்டாலும் அந்தக் காலத்தில் கரோல்பாக் மட்டும் தான் தமிழர் ஏரியாவாக அதிகப் புகழ் பெற்றிருந்தது.
டிரெயின் வந்ததும் ஏறி அமர்ந்தார்கள். இரண்டாம் வகுப்பு. ஸ்லீப்பருடன் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகள். புதுக் குடித்தனமாகப் போவதால் நிறைய சாமான்கள் இருந்தன.
வீட்டிற்குத் தேவையான சேர், கட்டில், காஸ் அடுப்பு எல்லோமே அங்கே போய் வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்ததால் இங்கே இருந்து எதுவும் கொண்டு செல்லவில்லை. வீட்டு சாமான்களை இரண்டு ரூம்களில் போட்டுப் பூட்டி விட்டு மீதிப் போர்ஷனை அம்மாவுக்கு உணவுத் தயாரிப்புத் தொழிலில் உதவி செய்த தோழிக்கே வாடகைக்குக் கொடுத்து விட்டார்கள். அந்தத் தொழிலையும் அவரே தொடர்ந்து நடத்துவதாகவும் உறுதி அளித்திருந்தார்.
புது இடம், புதிய மனிதர்கள், தெரியாத பாஷையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பார்வதியின் மனதில் குழப்பமான மனநிலை. ஆனால் எதுவானாலும் ஒரு கை பார்த்து விடலாம் என்ற திடமான மனநிலை.
அந்த மனோதிடத்தையும் குலைக்கும் படியான சம்பவங்கள் அடுத்தடுத்துத் தலைநகரில் நிறைவேறப் போவது அவளுக்கு அப்போது தெரியாது.
சிவப்ரியாவிற்குக் குதூகலமாகத் தான் இருந்தது. புதிய இடம் என்பதே அவளுக்கு ஆர்வமாக இருந்தது. ப்ளஸ் டூ முடித்து நல்ல மார்க்கு வாங்கிய அவளுக்கு தில்லியில் ஒரு காலேஜில் அட்மிஷனும் கிடைத்து விட்டது. தில்லி போய்ப் பத்துப் பதினைந்து நாட்களில் கல்லூரியும் ஆரம்பித்து விடும்.
காலேஜில் எதிர்கொள்ளப் போகும் புதிய சூழ்நிலையை நினைத்துப் பார்த்து அதை அனுபவிக்க ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தாள். வடநாட்டுப் பெண்கள் எல்லோரும் பார்க்க நல்ல நிறத்துடன் அல்ட்ரா மாடர்னாக எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்று சிவப்ரியா மனதிற்குள் வியந்ததுண்டு. இப்போது அந்தப் பெண்களுடன் பழகுவதற்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று மனதில் நல்ல சந்தோஷம் பொங்கியது.
இயல்பாகவே சிவப்ரியாவிற்கு நல்ல கலகலப்பான சுபாவம். யாராவது புதிதாக சந்தித்தாலும்