Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aval Oru Thendral
Aval Oru Thendral
Aval Oru Thendral
Ebook128 pages48 minutes

Aval Oru Thendral

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரம்யா என்பவள் தனது தாய் மற்றும் தந்தையை இழந்தவள். இவள் பெரியப்பாவின் பாதுகாப்பில் வளர்க்கப்படுகிறாள். பெரியம்மா இவளை வீட்டு வேலை செய்யும் கொத்தடிமையாக நடத்துகிறாள். ரம்யாவிற்கு பெரியம்மாவின் கொடுமையிலிருந்து விடுதலை கிடைத்ததா? ரம்யாவின் திருமண வாழ்வு தென்றலாக வீசியதா? இல்லை புயலாக மாறியதா? வாசித்து அறிவோம்.

Languageதமிழ்
Release dateAug 8, 2022
ISBN6580155608699
Aval Oru Thendral

Read more from Lakshmi

Related to Aval Oru Thendral

Related ebooks

Reviews for Aval Oru Thendral

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aval Oru Thendral - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அவள் ஒரு தென்றல்

    Aval Oru Thendral

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    தன் புது மனைவியுடன் முதல்வகுப்புப் பெட்டியில் பயணப்பட ஏற்பாடு செய்திருந்தான் முரளி.

    ரெயில் நிலையத்திற்கு ரம்யாவின் பெரியப்பாவும், பெரியம்மாவும் தங்கள் இருபிள்ளைகளுடன் வந்திருந்தனர்.

    திருமணமாகி முதல்முதலாக புகுந்த வீடு புறப்பட்ட எதிர்வீட்டுக் கலைவாணியை அவளது பெற்றோர்கள் வழி அனுப்பி வைத்த காட்சி ரம்யாவின் கண்முன் ஓடியது.

    பெட்டிகள், படுக்கைகள், கட்டில்கள், இரும்புப் பீரோக்கள், பாத்திரங்கள் என்று சீர்வரிசை சாமான்களை சுமந்துகொண்டு லாரி திணறியபடி வாசலில் நிற்க, சம்பந்தி வீட்டார்கள் வயிறு புடைக்க விருந்து சாப்பிட்டுவிட்டு திணறியபடி விடைபெற்றுக் கொண்டிருந்தார்கள்.

    இருபது வயது வரை வளர்த்து ஆளாக்கிவிட்ட தன் மகளை, மஞ்சள் கயிற்றை கழுத்தில் முடிந்து விட்டான் என்ற தகுதிக்காக அவனுடன் உறவினர் புடைசூழ கூட்டி அனுப்புகிறோமே, அவளை அவர்கள் நன்றாகக் கவனித்துக் கொள்வார்களா என்ற கவலையும் துயரமும் நெஞ்சை அடைக்க, பிரிவின் சுமையைத் தாளாது அம்மாவின் கண்கள் நீரைப் பொழிகின்றன.

    அப்பா தனது தொண்டையை அடிக்கடி செருமிக்கொண்டும், உருண்டையாக அடைத்த பாசத்தின் அழுத்தத்தை விழுங்கிக்கொண்டும், வீட்டுக்குத் தலைவன் கலங்கக் கூடுமோ என்று தம்மைத்தாமே சமாதானப்படுத்திக் கொண்டு, ‘சாமான்களை எடுத்து வச்சாச்சா? பாக்கியம் அங்கே என்ன நின்னுக்கிட்டு! பரபரன்னு காரியத்தை கவனிக்காமல் என்ன பேச்சு? மீனாட்சி பலகார டப்பாக்களை எண்ணி எடுத்துவச்சியா அதை கார் டிக்கியில் வைக்கணும். போகிற வழியிலே பசித்தால் சம்பந்தி வீட்டுக்காரங்களுக்கு சாப்பிட கட்டுசாதம் வேறே இருக்கு. அதையும் கவனிச்சு எடுத்து வை’ என்று ஆணை பிறப்பித்துக்கொண்டு இருந்தார்.

    பிறகு மகளிடம் வந்தார். அம்மா கலைவாணி! உன் காமாட்சி விளக்கை எடுத்துட்டுபோக மறக்காதே. காரில் உன் பக்கத்திலே வச்சுக்கோம்மா என்றார்.

    அடுத்து மாப்பிள்ளையை அணுகினார். மாப்பிள்ளை இனி கலைவாணி உங்கள் பொறுப்பு பார்த்துக்கோங்க. உங்களுக்கு நான் சொல்ல வேணாம். படிச்சவர் நீங்கள் என்று தழுதழுத்தார்.

    விருந்து சாப்பிட வந்தவர் அத்தனை பேரும் மலர் தூவி வாழ்த்த, உம், நல்ல நேரம், கிளம்பலாமே என்று யாரோ இரைந்து உத்திரவிட, கலைவாணி புக்ககம் போக பிறந்த வீட்டில் சீராகத் தந்த தகடிச் சேலையை உடுத்திக்கொண்டு தங்கப் பொம்மைபோல அசைந்து வந்து பெற்றோரை வணங்கிவிட்டு, மிடுக்காக முன்னால் நடந்த கணவரைத் தொடர்ந்து காரில் ஏறிக்கொண்டாள்.

    மகராசியா போய்ட்டு வாம்மா தெருவில் இருந்த பெரிய வயதுக்காரிகள் இரைந்து ஆசீர்வதிக்க, மணமக்களைத் தாங்கிய அந்தக் கார் புறப்பட்டது.

    அந்தக் காட்சியை ஒரு பெரிய திருவிழாவைப் பார்ப்பதுபோல எல்லோரும் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்ததை அவளால் மறக்கவே முடியாது.

    ஒரு பெண்ணை புகுந்த வீடு அனுப்ப இத்தனை ஆர்ப்பாட்டங்களா…? ரம்யா அன்று அதிசயப்பட்டாள்.

    ஆனால், ரம்யாவை அவள் பெரியம்மாவும், பெரியப்பாவும் புகுந்த வீடு அனுப்பிய விதம்?

    சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புறநகர் பகுதி ஒன்றுக்கு அனுப்புவதற்கு பஸ் நிலையத்திற்கு வந்ததுபோல பட்டும்படாமலும், ஒட்டும் ஒட்டாமலும் உறவு என்ற கடமைக்காக ரெயில் நிலையத்தில் நின்றார்கள்.

    அவர்களைச் சொல்லி குற்றமில்லை.

    எதிர்வீட்டு கலைவாணி போல ரம்யாவுக்கு வசதியான பெற்றோர்கள் இல்லையே. வசதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பெற்றோர்கள் என்ற உறவே இல்லாது அவளை பெரியப்பா நிழலில் வாழ விட்டுவிட்டு அப்பாவும், அம்மாவும் ஒருவர் பின் ஒருவராக சிறு வயதிலேயே இறந்துபோய் விட்டனர்.

    ரெயில் நகரத் தொடங்கியது.

    எதிர்வீட்டுக் கலைவாணிபோல, ரம்யாவின் கண்கள் நிறைய நீரை வழிய விட்டுக்கொண்டு புறப்படவில்லை.

    வரிசைப் பற்கள் லேசாக மின்ன மெல்லியதாக முறுவலித்துவிட்டு, வரட்டுமா பெரியம்மா? வரட்டுமா பெரியப்பா? வரட்டுமா என்று தலையசைத்து விடைபெற்றுக் கொண்டாள்.

    வண்டி வேகமாக நகர, இரவில் இங்கும் அங்கும் பளிச்சிட்ட விளக்குகள் நிறைந்த சென்னை, கொஞ்சம் கொஞ்சமாக தன்னைவிட்டு நகர்வதை ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டு இருந்தாள். சில்லென்ற காற்று கூந்தலைப் புரட்டிக்கொண்டு அவள் முகத்திலே வேகமாக மோதியது.

    அப்பாடா அடிமை வாழ்க்கையில் இருந்து ஒரு விடுதலை என்று அவளுள் ஒரு நிம்மதி நிலவியது.

    சாமான்களை எல்லாம் சரியாக இருக்கான்னு பார்த்துட்டியா? முரளி கேட்டபோது ரம்யாவுக்குச் சிரிப்புத்தான் வந்தது. சாமான்களா அவை…? அவளது துணிகள்கொண்ட ஒரு பெட்டி, ஒரு சிறு கூடைக்குள் ஒரு பொட்டலத்தில் கல்யாணத்தில் மீதமான சில லட்டுகளும், முறுக்கும் சுற்றி வைக்கப்பட்டு இருந்தன. இரண்டு வாலையிலை பொட்டலத்தில் வழிப்பயணத்துக்கு சாப்பிட தயிர் சோறு, ஒரு தண்ணீர் பாட்டில், இரண்டு சாத்துக்குடி பழம், அவை நடுவே… பேய் பிசாசுகளை விரட்ட ஒரு கொத்து வேப்பிலை குலதெய்வத்தின் விபூதி குங்கும பிரசாத பொட்டலங்கள், இவைதான் அவளுடைய சாமான்கள்.

    கல்யாணத்திற்கு முரளி வாங்கித் தந்த கூறைப்புடவையும், அவளது தாயின் காமாட்சி விளக்கும் பத்திரமாக இருந்தன. அவளது கைப்பையில் சோப்பு, சீப்பு, கண்ணாடி, பவுடர் என்ற ஒப்பனைப் பொருள்கள் பத்திரமாக வைக்கப்பட்டு இருந்தன.

    நகைகள்…?

    பொன் தோய்த்த மணிகூட அவளுக்கு பெரியப்பா வீட்டில் ஏதும் போட்டு அனுப்பவில்லை. கழுத்தில் தொங்கிய தாலியைத் தவிர, அவள் காது கழுத்து கை எல்லாவற்றையும் கவரிங் நகைகள் அலங்கரித்தன.

    அவள் தாய் இறக்கும் முன் தன் கழுத்தில் கிடந்த இரட்டைச்சர தங்கச் சங்கிலியையும், கையில் இருந்த இரண்டு தங்க வளையல்களையும் மகளுக்கு சொத்தாக விட்டுவிட்டுப் போயிருந்தாள். ஆயிரம் ரூபாய் வேறு மகளின் கல்யாண செலவுக்குத் தந்துவிட்டுப் போயிருந்தாள்.

    பூ! ஆயிரம் ரூபாயில் இந்த காலத்தில் ஒரு சேலைகூட எடுக்க முடியாது. அரைக் காசில் கல்யாணமாம். அதில் கொஞ்சம் வாணவேடிக்கையாம்… என்று அவள் காதுபட பெரியம்மா நீலா பலமுறை சாடியிருக்கிறாள் அதைப்பற்றி.

    தம்பி, அண்ணா, அக்கா, தங்கை இந்த உறவினர்கள் ஒருவருக்கொருவர் பாசத்தைப் பொழிந்து ஒருவர் வாழ மற்றவர் தியாகத்தில் உருகி செத்து மடிவதெல்லாம் சினிமாப் படத்திலும் - சில கதாசிரியர்களின் கதைகளிலும் வரும் கண்ணீர் சரக்குகள். உண்மை வாழ்க்கையில் அண்ணனாவது தம்பியாவது, அவரவர்கள் சுகம் அவரவர்களுக்கு.

    பெற்றவர்களை இழந்து போக்கிடம் இல்லாது பெரியப்பாவின் நிழலில் ஒண்டிக்கொண்டு இருந்தாள், ரம்யா.

    அவளை அவர்கள் தங்கள் தலையில் சுமத்தப்பட்டதொரு பாராங்கல்லாக எண்ணியதில் வியப்பில்லை.

    ரம்யாவும்

    Enjoying the preview?
    Page 1 of 1