Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aambalin Pagal Nilavu
Aambalin Pagal Nilavu
Aambalin Pagal Nilavu
Ebook82 pages32 minutes

Aambalin Pagal Nilavu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வரலாற்றுக் குறுநாவலாக எனது முதல் முயற்சி. பாண்டிய நாட்டைப் பற்றி வரலாற்று நாவல் வடிக்கும் எனது ஆர்வத்தில் விளைந்த முதல் கனி. பாண்டிய நாட்டுக்குட்பட்ட ஒரு குறுநில மன்னனின் மகனான இளம்பரிதி, தனது நாட்டுக்காகக் கடமை ஆற்றும் தருணம் , தனது காதலைக் கண்டுணர்கிறான். ஆம்பல் என்ற அந்த அழகான பெண், அவனுடைய காதலுக்கு உரியவளா இல்லை அவனை வீழ்த்த வந்த மோகினியா என்று திகைத்து நிற்கிறான். பாண்டிய நாட்டுப் பின்னணியில் அழகான காதல் கதை இது.

Languageதமிழ்
Release dateJun 1, 2021
ISBN6580144607121
Aambalin Pagal Nilavu

Read more from Puvana Chandrashekaran

Related to Aambalin Pagal Nilavu

Related ebooks

Related categories

Reviews for Aambalin Pagal Nilavu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aambalin Pagal Nilavu - Puvana Chandrashekaran

    https://www.pustaka.co.in

    ஆம்பலின் பகல் நிலவு

    Aambalin Pagal Nilavu

    Author:

    புவனா சந்திரசேகரன்

    Puvana Chandrashekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/puvana-chandrashekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author. All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 1

    ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

    இந்து இளம்பிறை போலும் எயிற்றனை

    நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை

    புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!

    கலை நிறை கணபதியைக் கை கூப்பி வணங்கி விட்டு இறைவனின் முன்னே வைத்திருந்த தனது வாளை எடுத்து இடுப்பில் இருந்த உறையில் நேர்த்தியாகச் சொருகிக் கொண்டுத் திரும்பவும் அந்த ஓலைச் சுவடியை எடுத்து ஒருமுறை படித்துப் பார்த்தான் அந்த இளைஞன்.

    மகனே! இந்த ஓலையைப் பார்த்தவுடன் விரைவில் கிளம்பி மதுரை நகருக்குச் சென்று மன்னரைத் தாமதிக்காமல் சந்திப்பாயாக. அங்கு சென்றவுடன் நீ ஆற்ற வேண்டிய முக்கியமான பணியொன்று உனக்காகக் காத்திருக்கும். நீ யாரென்று யாரிடமும் வெளிப்படுத்திக் கொள்ள மட்டும் வேண்டாம். இரகசியமாகவே வைத்துக் கொள். உன்னுடைய அறிவையும் திறமையையும் வீரத்தையும் பயன்படுத்தி இந்தச் செயலை வெற்றிகரமாக முடித்து விட்டு வர என்னுடைய ஆசிகள். இதை உனது பெயரை நிலைநாட்ட உனக்குக் கிடைத்திருக்கும் முதல் வாய்ப்பாக எண்ணிக் கொள். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அதீத கவனமும் எச்சரிக்கையும் தேவையாக இருக்கும். இந்த வாய்ப்பை உனக்காகக் கொடுக்கப் பட்டிருக்கும் முதல் தேர்வாக எண்ணி முழுமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றியுடன் திரும்பி வர வாழ்த்துக்கள்.

    அடிக் குறிப்பாக,

    இந்த ஓலையைப் பார்த்து விட்டு எரித்துவிடு. நீ எனது மைந்தன் என்ற உண்மை வெளிவர வேண்டாம். அதற்காகத் தான் இத்தனை. வருடங்களாக என்னிடமிருந்து பிரித்துத் தனித்திருக்க வைத்திருந்தேன்

    என்று அந்த ஓலையில் எழுதப்பட்டிருந்தது.

    அந்த ஓலையை மீண்டும் மீண்டும் படித்ததில் அதில் எழுதப் பட்டிருந்த ஒவ்வொரு சொல்லும் அவன் மனதில் பதிந்து விட்டது.

    ஆயினும் அந்த ஓலையைப் படிக்கும் போது என்னவோ தந்தையிடம் நேருக்கு நேர் அளவளாவது போல மனதிற்குத் தோன்றியதால் அதை மீண்டும் மீண்டும் கரங்களால் வாஞ்சையுடன் தீண்டி மகிழ்ந்தான். உடல் சிலிர்த்தது.

    கண்களை மூடி சிறிது நேரம் தியானம் செய்து இறைவனை வேண்டிக் கொண்டு சுற்றுமுற்றும் பார்வையைச் செலுத்தினான். அந்த ஓலையை முதல் வேலையாக விநாயகர் சிலைக்கு முன்பாக ஏற்றப் பட்டிருந்த தீபச்சுடரில் காட்டி எரித்து விட்டான்.

    நீண்ட பெருமூச்சொன்று நாசியில் இருந்து வெளியே வர அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான். அருகே இருந்த தெளிந்த நீரோடையில் தாகம் தீர நீரருந்தி விட்டுத் தலையைத் தூக்கி அவனைப் பார்த்துத் தலையை ஆட்டியது அவனுடைய செந்நிறப் புரவி. அதன் அருகே சென்று அதன் பிடரியைத் தடவிக் கடிவாளத்தில் மென்மையாகத் தட்டி விட்டு அதில் தாவி ஏறினான் அந்த வீர இளைஞன்.

    நெடிதுயர்ந்த கம்பீரமான உருவம். தமிழனுக்கே உரிய பளபளக்கும் தேகம். தீர்க்கமான ஒளி வீசும் அழகிய கண்கள். வலுவேறிய கரங்கள். வாட்களைச் சுழற்றி இலாவகமாகப் போர் புரியக்கூடிய வலிமையான தோள்கள். எதையோ சாதிக்கத் துடிக்கும் துள்ளல் கண்களில். ஆனால் அதை வெளிக்காட்டாமல் மறைக்கும் அமைதியான முகம். அழகான ஆண் மகன் தான். சுருண்ட குழல் கற்றைகள் நெற்றியில் முத்தமிட்டன. எந்த இளம் பெண்ணும் பார்த்தவுடன் மனதைப் பறிகொடுத்து விடுவாள் நிச்சயமாக.

    வீரமும் துணிவும் அவன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் தெறித்தன.

    மதுரை மாநகரை நோக்கி நீண்டு சென்ற அந்தச் சாலையில் சீரான வேகத்துடன் விரைந்தது அவனுடைய புரவி. புரவியைக் கையாளும் விதத்திலும் அந்தப் புரவி அவனுடைய ஆணைகளுக்கு அன்போடு அடிபணியும் விதத்தையும் பார்த்தாலே அந்தப் புரவிக்கும் இளைஞனுக்கும் நடுவில் நிலவும் ஆழமான நட்பும் பாசமும் காண்போர் கண்களுக்கு எளிதாகப் புரியும்.

    புரவியில் சென்று கொண்டே சிந்தித்துப் பார்த்தான் இளம்பரிதி. ஆம், அந்த இளைஞனின் பெயர் தான் அது.

    Enjoying the preview?
    Page 1 of 1