Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mohini Vanthaal! Nindraal! Kondraal!
Mohini Vanthaal! Nindraal! Kondraal!
Mohini Vanthaal! Nindraal! Kondraal!
Ebook122 pages48 minutes

Mohini Vanthaal! Nindraal! Kondraal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புதிதாகத் திருமணமான இரண்டு இளைஞர்கள் மறைந்து போகிறார்கள். மற்றொரு இளைஞன் தீ விபத்தில் இறக்கிறான். இந்த மூன்று சம்பவங்களிலும் இருக்கும் ஒரே தொடர்பு ஓர் ஓவியம். ஓவியத்தில் இருக்கும் மோகினி யின் பூர்வஜென்மக் கதை என்ன? மோகினி தான் இவற்றிற்குக் காரணமா? அவள் மனதில் இருக்கும் கோபத்தின் பின்னணி என்ன? தெரிந்து கொள்ளப் படித்துப் பாருங்கள்.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580144607160
Mohini Vanthaal! Nindraal! Kondraal!

Read more from Puvana Chandrashekaran

Related to Mohini Vanthaal! Nindraal! Kondraal!

Related ebooks

Related categories

Reviews for Mohini Vanthaal! Nindraal! Kondraal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mohini Vanthaal! Nindraal! Kondraal! - Puvana Chandrashekaran

    https://www.pustaka.co.in

    மோகினி வந்தாள்! நின்றாள்! கொன்றாள்!

    Mohini Vanthaal! Nindraal! Kondraal!

    Author:

    புவனா சந்திரசேகரன்.

    Puvana Chandrashekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/puvana-chandrashekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 1

    முன்கதை

    வருடம் 2017 ஜுன் மாதம்

    அபிநவ் தனது காரை நிறுத்தி இறங்கித் தனது காதல் மாளிகையைப் பெருமையுடன் பார்த்தான்.எவ்வளவு அழகு! ஆதிராவிற்குத் தெரியாமல் ஸர்ப்ரைஸ் ஆக வைத்திருந்தான். அவளுடைய பிறந்த நாள் அன்று அவளைக் கூட்டி வந்து காண்பிப்பதாகத் திட்டம்.

    அபிநவ் மதுரையில் வளர்ந்து வரும் ஓர் இளம் தொழிலதிபர். ஆதிரா அவனது ஆசை மனைவி.காதலில் விழுந்து அவள் பின்னால் துரத்தித் துரத்தி அவளை மசிய வைத்தப் பிடிவாதக் காதலன்.

    ஆதிரா அனாதை இல்லத்தில் வளர்ந்தவள். அபிநவ் பக்கமும் தாய்,தந்தை உயிருடன் இல்லை. வளர்த்த தாத்தா, பாட்டியும் இப்போது உயிருடன் இல்லை. சொல்லிக் கொள்ளும் படியாக உறவு ஒன்றும் இல்லை. ஒரே ஒரு செல்லத் தங்கை திருமணமாகி வெளிநாட்டில் ஸெட்டில் ஆகி விட்டாள்.அதனால் இவர்கள் காதல் கதையில் வில்லன் என்று யாருமில்லை.

    திருமணமாகி மூன்று வருடங்கள் மடமடவென்று ஓடிவிட்டன.இன்னும் குழந்தை இல்லை. ஆனால் அவர்கள் தான் தள்ளிப் போட்டிருக்கிறார்கள். திருமணம் ஆனதும் தொழிலில் அப்படி ஒரு அசுர வளர்ச்சி அபிநவ்க்கு. மதுரை நகருக்குள் திருநகரில் ஒரு தனி வீடு இருக்கிறது.

    இந்த வீட்டைப் பற்றி யாரோ அவனுக்குச் சொல்ல வந்து வீட்டைப் பார்த்தான். மனதைக் கவர்ந்து விட்டது. கப்பலூர் அருகில் ஒதுக்குப் புறமாக ஒரு மாளிகை.

    பழைய காலத்து ஜமீன்தார்

    வாரிசு யாரோ வாழ்ந்தது. அந்த வம்சமே நொடித்துப் போனதால், யாரோ தூரத்து சொந்தக்காரர்கள் வந்த விலைக்குக் கிடைத்தது லாபம் என்று உள்ளே இருந்த சாமான்களுடன் விற்று விட்டார்கள்.

    பழைய காலக் கட்டிட முறைப்படி அழகாகக் கட்டப் பட்டிருந்தது. உள்ளே நிறைய பெரிய ஓவியங்கள்; பெரிய பெரிய மலர் ஜாடிகள்;  சிற்பங்கள்; திரைச்சீலைகள். வீடு மட்டும் தூசி படிந்து அழுக்கடைந்த சாமான்களுடன் இருந்தது.

    ஒரு காண்ட்ராக்டரைக் கூப்பிட்டு வீட்டை முழுவதும் சுத்தம் செய்து புதுப்பிக்கும் வேலையை ஒப்படைத்திருந்தான். பழைய ஃபர்னிச்சரை அப்படியே க்ளீன் மட்டும் செய்து பாலிஷ் செய்து போடச் சொன்னான். எல்லாமே கலையம்சத்துடன் இருந்த புராதான சாமான்கள். மார்க்கெட்டில் நல்ல விலை போகக் கூடியவை. வீட்டை முடிந்த வரை பழைய நிறங்களை மாற்றாமல் பெயிண்ட் செய்து, ஓவியங்களைத் துடைத்து மாட்டி விட்டார்கள். மற்றபடி வீட்டுக்கு வேண்டிய ஃபேன், கீசர், கேஸ், ஏ.சி., டி.வி  இத்யாதி இத்யாதி எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து வாங்கி ஃபிக்ஸ் செய்து கொண்டிருந்தார்கள்.

    இன்று வந்தது டி.விக்காகத் தான். டி.வி. கடையில் இருந்து ஆட்கள் வந்து டி.வியைப் பிரித்து இன்ஸ்டால் செய்து விட்டுப் போனார்கள்.

    உள்ளுக்குள் சென்று சுற்றிப் பார்த்தான். என்ன அழகு? புதிய திரைச் சீலைகள். பழைய கால ஃபர்னிச்சர் புதுப்பிக்கப் பட்டு அழகு சேர்த்தன. வீட்டுக்குத் தேவையான அத்தனை சாமான்களும். ஏதோ குறைச்சலாகத் தெரிந்தது. டி.விக்குப் பின்னால் சுவர் காலியாகத் தெரிந்தது.

    சுற்றிச் சுற்றிப் பார்த்தான்.மாடிப்படி வளைவின் அருகில் சுவற்றில் அழகான பெண் ஓவியம். உப்பரிகையில் இளவரசி. கீழே வேடிக்கை பார்க்கிறாள். கண்களில் சொல்லத் தெரியாத ஏதோ சோகம். மோனாலிசா ஓவியம் போல அந்த முகத்தில் கண்டு பிடிக்க முடியாத ஓர் உணர்வு. கீழே வேடிக்கை பார்க்கும் இளைஞர் கூட்டம்.

    அவளது நீண்ட கூந்தல் முடியப் படாமல் கீழே கால்கள் வரை வழிந்தது. அழகு என்றால் அப்படி ஓர் அழகு. ஓவியன் தனது கற்பனையை எல்லாம் சேர்த்து ஒட்டுமொத்தமாக வரைந்திருந்தான். திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டும் உணர்வு. அதைக் கழட்டி டி.வியின் பின்னால் சுவரில் மாட்டினான்.

    இப்போது திருப்தியாக இருந்தது.

    சற்றுத் தள்ளி நின்று ரசித்தான். மனநிறைவு. திடீரென அந்த அழகியின் கண்கள் சிமிட்டிய உணர்வு. திடுக்கிட்டுப் பார்த்தான். உதடுகளும் அசைந்தது போலத் தோன்றியது.

    சே! காலையில் இருந்து அலைச்சல். களைப்பாக இருக்கும். என்ன இது மனப்ரமை? என்று தலையைத் தட்டிக் கொண்டு மடமடவென வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினான்.

    பூட்டுகின்ற சமயம், வீட்டிற்குள் இருந்து பாடல் கேட்ட மாதிரி இருந்தது. சோகம் பிழிந்தது. நேரமாகி விட்டதால் திரும்ப உள்ளே போகாமல் கிளம்பி விட்டான்.

    அடுத்த நாள் ஆதிராவின் பிறந்த நாள்.

    எப்போதும் பரிசு மழைகளைக் கொட்டும்

    அன்புக் கணவன் இன்று ஒன்றுமே பரிசு தராமல் முகத்தையும் இறுக்கமாக வைத்துக் கொண்டு கிளம்பி விட்டான் என்று ஆதிராவிற்கு வருத்தம்.

    காலையில் நெற்றியில் முத்தமிட்டுப் பிறந்த நாள் வாழ்த்து சொன்னதோடு சரி. ஏமாற்றமாக இருந்தது அவளுக்கு. வேலைகளில் பிஸியாக இருந்தாள். லஞ்ச் டயத்தை ஒட்டி ஃபோன் வந்தது.

    கொஞ்சம் டிரஸ் மட்டும் ரெண்டு பேருக்கும் பேக் செஞ்சுக்கிட்டு ரெடியா இரு. ஒரு வேலையா எங்கோ போகவேண்டி இருப்பதால், உன்னையும் கூட்டிக்கிட்டு போலாம்னு நெனைச்சேன். நான் கொஞ்ச  நேரத்தில் வந்ததும் கெளம்பலாம்.

    வேறு ஒன்றும் கேட்க அவளுக்கு நேரமோ வாய்ப்போ  கொடுக்காமல் ஃபோனை வைத்து விட்டான். தயாராக இருந்தாள். சிறிது நேரம் கழித்து வந்து உணவு உண்ட பின், அவளையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான். மாறி மாறி ஃபோனில் பேசிக் கொண்டே இருந்ததால் வேறு ஒன்றுமே பேச முடியவில்லை. கோபம்

    கோபமாக வந்தது ஆதிராவிற்கு.

    புது வீட்டின் எதிரே காரை நிறுத்தி இறங்கி மலர்ந்த முகத்துடன் கையில் சாவியைக் கொடுத்தான் அபிநவ். ஆதிராவின் கண்கள் வியப்பில் விரிந்தன. முகமும் மலர்ந்தது.

    கணவனின் ஸர்ப்ரைஸ் புரிந்தது. ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொண்டாள்.

    ஹேப்பி பர்த்டே டியர் ஆதிரா!

    பாடிக் கொண்டே கதவைத் திறக்க வைத்தான். உள்ளே நிறைய மலர்கள் எல்லாம் வைத்துப்  பிரமாதமான அலங்காரம். வீடே, இல்லை இல்லை அந்த மாளிகையே படு பிரம்மாண்டமாகப் படு அழகு. அதுவும் அன்று மலர்களால் அலங்காரம். நிறைய விளக்குகள். கொள்ளை அழகு.பழைய சினிமாக்களில் வருவது

    Enjoying the preview?
    Page 1 of 1