Mayurikku Thirumanam Orumuraidhan
()
About this ebook
வாழ்க்கை என்றால் என்ன? அதற்கு திருமணம் அவசியமா என்று கேட்டால் பெரும்பான்மையோர் மக்கள் செல்வத்துடன் கூடிய இல்லற வாழ்க்கையே மகிழ்ச்சி தரும் என்பார்கள். இது அமைய என்ன வழி?தொன்றுதொட்டு ஜாதகப் பொருத்தம் பார்த்துவிட்டுத்தான் பெற்றோர்கள் திருமணத்தை நிச்சயிக்கின்றனர். இரு வீட்டு ஜோசியர்களும் பொருத்தம் அமைந்திருக்கிறது என்று கூறினால் நிபந்தனைகள், எதிர்பார்ப்புகள் எழும். கணவன் தன்னைவிட அதிகம் படித்திருக்க வேண்டும், அதிகம் சம்பாதிக்க வேண்டும், தன் பெற்றோர்களுக்குத் தேவைப்படும்போது உதவி செய்ய வேண்டும் என்று மனைவி எதிர்பார்ப்பாள். கணவனோ மனைவியின் வருமானத்தில் வீடு வாங்க வேண்டும், பிசினஸ் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தால் குடும்பத்தில் குதூகலம் எப்படி ஏற்படும்?கற்பனையில் இப்படி வாழ்ந்தால்தான் நல்லது என்று எண்ணும் சிலரைப் பற்றிய கதை இது.
Read more from K.S. Chandrasekaran
Aravinthin Arputha Thiyagam Rating: 0 out of 5 stars0 ratingsManasatchiyin Uruthalgal Rating: 0 out of 5 stars0 ratingsAdharmathai Veezhthidu! Dharmathai Kaathidu!! Rating: 0 out of 5 stars0 ratingsTheeyil Erintha Unmaigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Mayurikku Thirumanam Orumuraidhan
Related ebooks
Eera Pudavai Rating: 3 out of 5 stars3/5Santhithome Kanakkalil...! Rating: 3 out of 5 stars3/5Perukku Oru Manaivi! Rating: 0 out of 5 stars0 ratingsUdal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Senthanalil Pootha Semparuthi Rating: 0 out of 5 stars0 ratingsThisai Thedum... Rating: 0 out of 5 stars0 ratingsNandhavana Thendral Rating: 0 out of 5 stars0 ratingsMura Penn Rating: 0 out of 5 stars0 ratingsBadrinath Rating: 0 out of 5 stars0 ratingsVasantha Rani Rating: 0 out of 5 stars0 ratingsSaraswadhi Nathi Rating: 0 out of 5 stars0 ratingsRangoon Periyappa Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Manam Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsThunai Thedum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsKannukkul Unnai Vaithean Rating: 0 out of 5 stars0 ratingsMalar Vanam Rating: 0 out of 5 stars0 ratingsAyokyan Rating: 4 out of 5 stars4/5Nerunji Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Poo Rating: 0 out of 5 stars0 ratingsVazhga Manamakkal Rating: 0 out of 5 stars0 ratingsManam Virumbuthey Malarey Rating: 0 out of 5 stars0 ratingsMaaney Mayiley Manjari Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsMinminigal Kann Simittum!! Rating: 5 out of 5 stars5/5Magalukkaga Rating: 0 out of 5 stars0 ratingsParadesi Kolam Padi Thaandi Vittathu Rating: 0 out of 5 stars0 ratingsIdhayaraagam Rating: 5 out of 5 stars5/5Utharavindri Ulley Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsArugamai Sugam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Mayurikku Thirumanam Orumuraidhan
0 ratings0 reviews
Book preview
Mayurikku Thirumanam Orumuraidhan - K.S. Chandrasekaran
https://www.pustaka.co.in
மயூரிக்குத் திருமணம் ஒருமுறைதான்
Mayurikku Thirumanam Orumuraidhan
Author:
கே.எஸ்.சந்திரசேகரன்
K.S.Chandrasekaran
For more books
https://www.pustaka.co.in/home/author/ks-chandrasekaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
முன்னுரை
வாழ்க்கை என்றால் என்ன?அதற்கு திருமணம் அவசியமா என்று கேட்டால் பெரும்பான்மையோர் மக்கள் செல்வத்துடன் கூடிய இல்லற வாழ்க்கையே மகிழ்ச்சி தரும் என்பார்கள். இது அமைய என்ன வழி?தொன்றுதொட்டு ஜாதகப் பொருத்தம் பார்த்துவிட்டுத்தான் பெற்றோர்கள் திருமணத்தை நிச்சயிக்கின்றனர். இரு வீட்டு ஜோசியர்களும் பொருத்தம் அமைந்திருக்கிறது என்று கூறினால் நிபந்தனைகள், எதிர்பார்ப்புகள் எழும். கணவன் தன்னைவிட அதிகம் படித்திருக்க வேண்டும், அதிகம் சம்பாதிக்க வேண்டும், தன் பெற்றோர்களுக்குத் தேவைப்படும்போது உதவி செய்ய வேண்டும் என்று மனைவி எதிர்பார்ப்பாள். கணவனோ மனைவியின் வருமானத்தில் வீடு வாங்க வேண்டும், பிசினஸ் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தால் குடும்பத்தில் குதூகலம் எப்படி ஏற்படும்?கற்பனையில் இப்படி வாழ்ந்தால்தான் நல்லது என்று எண்ணும் சிலரைப் பற்றிய கதை இது.
குறைந்த வருவாயில் பணிபுரியும் ஒரு ஆணும் பெண்ணும் மனமிருந்தால் வாடகை வீட்டில் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்த முடியும் என்றெண்ணி மனப்பொருத்தத்தில் ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்துகொண்டு வெற்றியடைகிறார்கள்.
அதிக வருவாய் கிடைக்கும் ஐ. டி. கம்பெனியில் பணிபுரியும் பெண் ஒருத்தி அவளிடம் ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சித்த கசப்பான அனுபவத்தில் வேலையை உதறித் தள்ளிவிட்டு பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து பகல் நேரத்தில் ஒரு வங்கியில் வேலை தேடிக் கொள்கிறாள். அவளை நாடிய பலர் இப்போது விலகுகின்றனர். காரணம் வருமானம் குறைவு!
பணத்திற்காக ஆறு மாதக் குழந்தையுடன் தவிக்கும் மனைவியை விவாகரத்து செய்கிறான் கணவன். வேலை பார்க்கும் ஒரு ஆளை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள். இது நடக்கவில்லை. அவள் பிரச்சினை எப்படி தீரும்?
கொலை செய்து பணம் சம்பாதிக்கும் இரு கிரிமினல்கள் போலீஸிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்த நிலையில் கௌரவமாக வாழவேண்டும் என்று ஒருவன் நினைக்கிறான்.
பண ஆசையால் தன் மீது சிறிதளவும் ஆசையுடன் வாழாத கணவனை ஒரு மனோதத்துவ பெண் டாக்டர் வெறுக்கிறாள். எதிர்பாராத விதமாக அவள் கணவன் பெங்களூரு விமான நிலைய கார்கள் நிறுத்தும் இடத்தில் சுட்டுக் கொல்லப்படுகிறான். பெங்களூருவில் இருந்த அனைத்து சொத்துக்களையும் விற்று சென்னையில் அவளுக்குச் சொந்தமான நான்கு கடைகளை நடத்த ஈடுபாடு கொள்கிறாள். அந்த கிரிமினல் தன் வாழ்க்கைப் பின்னணி தெரியாமல், ஒரு நடிகையைக் கல்யாணம் செய்துகொள்ள அந்த மனோதத்துவ பெண் டாக்டரின் உதவியை நாடுகிறான். அவள் உதவிக்கரம் நீட்டுகிறாள். தனிமை விலகுகிறது. மற்றவர்களுடன் பழகுவதில் ஆனந்தம் பிறக்கிறது.
கணவன் மனைவி உறவு இறக்கும் வரை சுமூகமாக இருக்க வேண்டும். இல்லையெனில் வாழ்க்கையும் இல்லை, சந்தோஷமும் இல்லை. இதை ஒரு வயதான பெண்மணி உணர்ந்தாலும் தன் பணவெறியை தளர்த்திக்கொள்ள மறுக்கிறாள்.
இப்படி பல்வேறு மனிதர்களை வைத்துப் புனையப்பட்ட கற்பனைக் கதைதான் இந்த நாவல். இது நடக்கும் என்பது என் கருத்து. படியுங்கள். உங்கள் விமர்சனங்களைத் தெரிவியுங்கள்.
அன்புடன்
கே. எஸ். சந்திரசேகரன்
***
கதாபாத்திரங்கள்
சதீஷ் – கதாநாயகன் - வயது 32
கௌரிசங்கர் - சதீஷின் தந்தை - வயது 61
கல்பனா - சதீஷின் தாய் - வயது 57
சங்கர் - ஏர்போர்ட்டில் இறங்கும் – முதியவர் - வயது 63
இந்திரா- முதியவரின் மனைவி - வயது 57
விஜய் - முதியவரின் மகன் - வயது 35
ஹன்சிகா - முதியவரின் மகள் - வயது 30
பரத் - சதீஷின் நண்பன் - வயது 32
சுமித்ரா - டாக்சி டிரைவரால் தாக்கப்படும் பெண் - வயது 31
பரமேஸ்வரன் - சுமித்ராவின் தந்தை - வயது 59
பாகீரதி - சுமித்ராவின் தாய் - வயது 57
காயத்திரி - விவாகரத்தான பெண் - வயது 30
அஞ்சனா - சினிமா நடிகை - வயது 23
ரதி - துணை நடிகை -வயது 29
ஆதித்யா - சினிமா இயக்குநர் - வயது 32
ஆனந்த் - கிரிமினல் 1 - வயது 27
நவீன் - கிரிமினல் 2 - வயது 27
மயூரி - மனோதத்துவ நிபுணர் - வயது 36
பாலசுப்ரமணியம் - கடையின் மேனேஜர் - வயது 45
வைஷ்ணவி - விஜயை மணந்துகொள்ள விரும்பும் பெண் - வயது 32
ராஜேந்திரன் – இன்ஸ்பெக்டர் - வயது 42
1
நவீன் கோபத்தில் அப்பாவிடம் கத்தினான்.
எப்போ பார்த்தாலும் குத்தம் கண்டுபிடிக்கிறதுதான் உன் வேலையா?சொந்த வீடு இருக்கு. வேலையைத் தேடிக்கன்னு சொல்லிக்கிட்டே இருந்தா எவன் தரான்?நான் கண்டிப்பா ஒரு பெரிய பிசினஸ்மேனா ஆகப்போறேன். லட்சம் லட்சமா பணம் கொட்டப் போறது.
கொட்டும் கொட்டும்! டேய்! ஒண்ணு தெரிஞ்சுக்க. மனுஷனுக்கு முக்கியமானது மூணு. சொந்த வீடு, நல்ல படிப்பு, குணமுள்ள பொண்டாட்டி. சாக்குப்போக்கு சொல்லி பிளஸ் டூவோட படிப்பை நிறுத்திட்டே. உனக்குப் பதிலா தங்கையை படிக்க வெச்சேன். நல்ல உத்தியோகம் கிடைச்சு புருஷனோட சந்தோஷமா வாழறாள்.
தங்கைக்கு அண்ணன் மேலே பாசமே இல்லை. கொஞ்சம் பணம் கொடுத்து பிசினஸ் பண்ண ஏற்பாடு செஞ்சிருந்தா நிச்சயமா நான் முன்னேறியிருப்பேன். இப்போ நாலாயிரம், ஐயாயிரம் சம்பளத்துக்கு பிரண்டு ஆனந்த் வேலை பாத்துதர்றேன்னு சொல்லியிருக்கான். இப்போ அவன் வீட்டுக்குப்போறேன். வேலை கிடைக்கறவரை வீட்டுக்கு வரமாட்டேன்.
அப்பாவும் பிள்ளையும் சண்டை போட்டுக்கொண்டிருந்ததை அம்மா கவனித்து வருந்தினாள்.
என்னங்க! பாவம் நவீன்! ஏதோ அதிர்ஷ்டத்திலே பொண்ணுக்கு வேலை கிடைச்சுது. ஆனால் நல்ல படிப்பு படிச்சிருந்தாலும் ஏகப்பட்ட பசங்க பியூனாகவும், சேல்ஸ்மேனாகவும் கொஞ்சந்தான் சம்பாதிக்கறாங்களே. நியூஸ் தினமும் வருதே!
ஏய்! நீ இவனுக்கு வக்காலத்து வாங்காதே!
உண்மையைச் சொன்னா எரியுதோ?நவீன்! கவலைப்படாதே. பிரண்டைப் பார்த்து வருமானம் கொஞ்சமா இருந்தாலும் ஒத்துக்க. அடிக்கடி எனக்கு போன் பண்ணு, சரியா?
அம்மா கூறியது நவீனுக்கு ஆறுதலாக இருந்தது.
சரிம்மா. நான் போயிட்டு வர்றேன். உன்னோட மட்டும் பேசறேன். வேலை கிடைச்சா உன் பேங்க் அக்கௌண்டிலே பணம் போடறேன்.
வேதனையின் சுமை மனதை அழுத்தியது. அப்பாவுடன் சண்டை போட்டாலும்