Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Adharmathai Veezhthidu! Dharmathai Kaathidu!!
Adharmathai Veezhthidu! Dharmathai Kaathidu!!
Adharmathai Veezhthidu! Dharmathai Kaathidu!!
Ebook171 pages1 hour

Adharmathai Veezhthidu! Dharmathai Kaathidu!!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தியாவில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் வருடாவருடம் உயர்ந்து கொண்டே போகிறது. ஒரு புறம் வெள்ளம். விளைவு உயிர், பயிர் நாசம். விவசாயிகள் கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பல மாநிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்தில் பாய்கிறது. இந்நிலையில் விவசாயம் எப்படிச் செழிக்கும்?

அரசாங்கம் வரிகள் விதிக்க முடியாத சூழ்நிலையில் வருமானம் கொடுக்க காமவெறி ஒன்றுதான் வழி. தாய்லாந்திற்கு உலகெங்கும் சுற்றுலாப் பயணம் செய்யும் டூரிஸ்ட்கள் அங்கு நடைபெறும் நிர்வாண நடனத்தைக் காண வருகிறார்கள். இந்த வாதத்தை முன்வைத்து இந்தியாவில் அதை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்த எதிர்க்கட்சித் தலைவரும் ஆதரிக்கிறார். நான்கு தொழிலதிபர்கள் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் புகுத்துகிறார்கள். திட்டம் வெற்றி பெறுமா?

தொடர்ந்து வாசிக்கலாம்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580142006655
Adharmathai Veezhthidu! Dharmathai Kaathidu!!

Read more from K.S. Chandrasekaran

Related to Adharmathai Veezhthidu! Dharmathai Kaathidu!!

Related ebooks

Reviews for Adharmathai Veezhthidu! Dharmathai Kaathidu!!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Adharmathai Veezhthidu! Dharmathai Kaathidu!! - K.S. Chandrasekaran

    https://www.pustaka.co.in

    அதர்மத்தை வீழ்த்திடு! தர்மத்தைக் காத்திடு!!

    Adharmathai Veezhthidu; Dharmathai Kaathidu!

    Author:

    கே.எஸ். சந்திரசேகரன்

    K.S. Chandrasekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ks-chandrasekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    முன்னுரை

    உலகெங்கும் தொழில்கள் முடங்கிக் கொண்டு வருகிறது. ஆயுத விற்பனையில் மேற்கு நாடுகள் வருமானம் பெற்றுக் கொண்டு வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.

    இந்தியாவில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் வருடாவருடம் உயர்ந்து கொண்டே போகிறது. ஒரு புறம் வெள்ளம். விளைவு உயிர், பயிர் நாசம். விவசாயிகள் கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பல மாநிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்தில் பாய்கிறது. இந்நிலையில் விவசாயம் எப்படிச் செழிக்கும்?

    அரசாங்கம் வரிகள் விதிக்க முடியாத சூழ்நிலையில் வருமானம் கொடுக்க காமவெறி ஒன்றுதான் வழி. தாய்லாந்திற்கு உலகெங்கும் சுற்றுலாப் பயணம் செய்யும் டூரிஸ்ட்கள் அங்கு நடைபெறும் நிர்வாண நடனத்தைக் காண வருகிறார்கள். இந்த வாதத்தை முன்வைத்து இந்தியாவில் அதை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்த எதிர்க்கட்சித் தலைவரும் ஆதரிக்கிறார். நான்கு தொழிலதிபர்கள் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் புகுத்துகிறார்கள். திட்டம் வெற்றி பெறுமா?

    முழுவதும் என் சொந்தக் கற்பனை. என்ன சட்டங்கள் கொண்டு வந்தாலும் அதை மீறி கற்பழிப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்று ஒதுங்காமல் பத்து பேர்கள் ஒரு இயக்கத்தை உருவாக்கி முழுமூச்சுடன் செயல்படுகிறார்கள். அவர்கள் முயற்சி வெற்றி பெறுமா?

    1

    டிசம்பர் 6

    அண்ணா நகர் பிரதான சாலையிலிருந்து சற்றுத் தொலைவில் ஒரு சிறிய தெருவில் வேன் ஒன்று பெரிய மரம் ஒன்றில் மோதி நின்றது. வேனின் முன் பக்கம் முழுவதும் சேதம் அடைந்திருக்க டிரைவர் மார்பு மரத்துக்கும் வேனின் முன்பக்க கண்ணாடிக்கும் இடையில் சிக்கி உயிர் இழந்தார். அப்போது இரவு 10 மணி இருக்கும். சாலையில் ஜனநடமாட்டம் இல்லை.

    டாக்டர் ஜெயச்சந்திரன் அந்தத் தெருவில் நின்று கொண்டிருந்தார். வேனில் ஒருவரும் இல்லை. டிரைவர் இறந்துவிட்டான் என்பதைப் பரிசோதித்துத் தெரிந்து கொண்டார். உடனே காவல் துறைக்குப் போன் செய்தார்.

    என் பெயர் டாக்டர் ஜெயச்சந்திரன். இங்கே ஒரு வேன் மரத்திலே மோதி டிரைவர் இறந்திட்டார். உயிர் போயிடுத்து. டெஸ்ட் பண்ணினேன். ConfirmedDead. நான் ஒரு ஆம்புலன்சை வரவழைக்கிறேன். நீங்க வரும்வரை வெயிட் பண்றேன்

    விபத்து நடந்த இடம், வேன் நம்பர் ஆகிய தகவல்களைக் கொடுத்து விட்டு தெருவிலேயே நின்றார். ஒரு அரை மணி நேரம் கழித்து ஆம்புலன்ஸ் வந்தது. பைக்கில் வந்த ஓரிருவர் ஆம்புலன்ஸ் நிற்பதைப் பார்த்து விட்டு ஓ! போலிசுக்குத் தகவல கொடுத்திட்டாங்கஎன்று கூறியபடி அங்கிருந்து சென்றார்கள்.

    சிறிது நேரத்தில் போலிஸ் வேன் வந்தது. போலிஸ் படையினர் வந்து வேனைச் சுற்றி வந்து என்ன நடந்திருக்கும் என்று நோட்டம் விட்டனர். வேன் காலியா வந்திருக்கு என்று சொல்லிவிட்டு டாக்டரிடம் ஆம்புலன்சில் டிரைவரின் உடலை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லலாம் என்றார். காரின் ஒரு பக்கக் கதவு திறக்க முடிந்தது. சிரமப்பட்டு அதன் வழியாக டிரைவரை இறக்கிட ஆஸ்பத்திரி அலுவலர்களுக்கு உதவி செய்தனர்.

    முன் சீட்டில் காலில் இடறிய சூட்கேசைக் கண்டு திகைத்தனர். பிறகு அதை எடுத்து போலிஸ் வேனில் வைத்தார்கள். டாக்டர் ஜெயச்சந்திரன் போலிஸ் வேனில் ஏறிக்கொண்டு ஆம்புலன்சை புறப்பட சைகை செய்தார். இரு வாகனங்களும் ஒன்றாகக் கிளம்பியது.

    ***

    ஒரு வாரம் முன்

    அசோக் நன்கு படித்த இளைஞன். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் நன்கு பேசவும் எழுதவும் தெரியும். விரைவில் அவனுக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று பெற்றோர்கள் ஆசைப்பட்டனர். ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? வேலையில்லாதவனை எந்தப் பெண் கல்யாணம் செய்து கொள்ள முன் வருவாள்?

    ஆனால் திடீரென்று அசோக் வேலை தேட ஆரம்பித்தான். அதற்குக் காரணம் அர்ச்சனா என்ற பெண். உன்னைக் காதலிக்கிறேன் என்று அவளிடம் ஒரு நாள் கூறிய போது வாக்குவாதம் ஏற்பட்டது. வேலை இல்லாத ஒருவனை எப்படி நான் ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேட்டாள். திடீரென்று அவளருகில் சென்று முகத்தோடு உரசி ஒரு செல்ஃபீ எடுத்தான். கோபத்தில் அவன் மொபைலைப் பிடுங்கி சாக்கடையில் வீசினாள். தான் மணமானவள் ஏதாவது தகராறு செய்தால் போலீசைக் கூப்பிடுவேன் என்று மிரட்டி விட்டுப்போனாள்.

    சாக்கடையிலிருந்து மொபைலை எடுத்து தண்ணீரில் கழுவி அண்ணா நகரில் உள்ள பார்த்திபன் மொபைல் சர்வீஸ் சென்டரில் கொடுத்து பழுது பார்க்கச் சொன்னான். வேலை தேடுவதாக அசோக் சொல்ல ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தால் டெல்லியில் நல்ல வேலைக்கு சிபாரிசு செய்ய முடியும் என்றும் ஹிந்தி பாஷை தெரிந்ததால் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றும் கூறினான். பெற்றோர்களிடம் பேசி பணம் வாங்கிக் கொண்டான். பார்த்திபன் டிசம்பர் 6ந் தேதி புவனேஸ்வரி டிராவல்ஸ் விலாசம் கொடுத்து இரவு 8 மணிக்கு வரச் சொன்னான். அசோக் வந்ததும் கம்பெனியின் இரு CEOக்களை அறிமுகப்படுத்தினான். ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் நேர்காணலுக்கு வந்து உடனே வேலையில் சேரலாம் என்று கூற, அசோக் மகிழ்ச்சியடைந்தான். அவனைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய கவரையும் பணத்தையும் அவர்களிடம் கொடுத்தான். பார்த்திபன் உன் வேலைக்கு எல்லா ஏற்பாடுகளைச் செய்வது என் பொறுப்பு என்று உறுதியளித்தான்.

    புறப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது என்று CEOக்கள் கூற விடைபெற்று சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்த வேனில் ஏறப் போகும் போது பார்த்திபன் நானும் வருகிறேன் என்றான். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு பெண் வேனில் ஏறிப் பின்புறம் மறைந்து கொண்டாள்.

    ***

    கமிஷனர் டாக்டர் ஜெயச்சந்திரன் கொடுத்த Postmortem ரிப்போர்ட்டைப் படித்தார். வேனில் வைக்கப்பட்டிருந்த R. C. டிரைவிங் லைசன்ஸ், பர்மிட்டின் நகல்களையும் பரிசீலித்தார். குடித்துவிட்டு ஓட்டவில்லை. விபத்தில் உயிரிழந்த ஓட்டுநர் பெயர் முரளி. புவனேஸ்வரி அவரது மனைவி. இருவரும் புவனேஸ்வரி டிராவல்சை நடத்தி வந்தனர். வீட்டிலேயே முன்பகுதியில் அலுவலகம் வைத்திருந்தனர். வீடு பூட்டப்பட்டிருந்தது. புவனேஸ்வரி எங்கு சென்றிருப்பாள்? அவர் மனதில் எழுந்த பல பல சந்தேகங்கள்.

    1. இவ்வளவு பணமும் பாங்க்கில் போட முடியாத கறுப்புப் பணமா?

    2. ஹவாலா பரிமாற்றமா?

    3. கஞ்ஜா, போதைப் பொருள்கள் விற்ற பணமா?

    வீட்டைச் சோதனை செய்ய வேண்டுமென்றால் ஒன்று சொந்தக்காரரிடம் அனுமதி பெற வேண்டும். இல்லை தேடுவதற்கு வாரன்ட் பிறப்பிக்க வேண்டும். கமிஷனர் அண்டை வீட்டுக்காரரிடம் விசாரித்தார்.

    வீட்டுக்கு இன்னொரு சாவி மொபைல் சர்வீஸ் நடத்தும் பார்த்திபனிடம் இருக்கிறது என்று சொல்லிவிட்டு அவனுக்குப் போன் பண்ணினார். பத்து நிமிடத்தில் பார்த்திபன் அங்கு வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சிங்கப்பூரில் உள்ள புவனேஸ்வரியின் தங்கையிடம் பேசினான். அவள் பெயர் ஸ்ரீலேகா.

    சார்! பார்த்திபனிடம் சாவியை வாங்கிக் கொண்டு சோதனை செய்யுங்கள். புவனேஸ்வரி கர்ப்பிணி. என் வீட்டில் தங்கி இருக்கிறாள். முரளி இறந்த விஷயம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவாள். பக்குவமாக நான் எடுத்துச் சொல்ல வேண்டும். இன்னும் இரண்டு நாட்களுக்குள் சென்னை வருகிறேன்

    கமிஷனர் சம்மதித்தார். வீட்டைச் சோதனை செய்வதுடன் பாங்க் லாக்கர்களுக்கு சீல் வைக்க வேண்டும். பாங்க் அக்கௌன்ட் ஸ்டேட்மென்ட் வாங்க வேண்டும். வீட்டைப் பூட்டி சாவியை வாங்கிக் கொண்டார். வீட்டிற்கு இரு போலிஸ்காரர்களைக் காவல் காக்கச் சொன்னார்.

    அவர் சோதனையைத் தள்ளிப் போட்டதற்குக் காரணம் அரசியல் வட்டாரத்திலிருந்து சில கட்டளைகள் வந்தது. பத்திரிகையாளர்களுக்கோ, மீடியாவுக்கோ விளக்கமாக எதுவும் சொல்ல வேண்டாம். சாதாரண விபத்து என்று அறிவிக்க வேண்டும். இரண்டாவது பணம் கிடைத்தது பற்றி மூச்சு விட வேண்டாம்.

    இதில் யாரோ பெரிய மனிதர்கள் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவு பணம் யாருக்கு அனுப்பப்பட்டது? அரசியல் செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்த நினைப்பவர்களை விடக்கூடாது என்று தீர்மானித்தார்.

    முதலில் சூட்கேசில் இருந்த பணத்தை எண்ணி குறித்துக் கொண்டார். சரியாக மூன்றரை கோடி ரூபாய்!

    சிங்கப்பூரிலிருந்து ஸ்ரீலேகா வந்து விட்டாள். முதல் வேலையாகக் கமிஷனருக்குப் போன் செய்தாள். நீங்கள் உடனடியாகச் சோதனை செய்யலாம் என்று கூறினாள். கமிஷ்னர் அமைத்திருந்த தனிப்படையினர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றினர். டிராவல்ஸ் கம்பெனி நஷ்டத்தில் இயங்கியது என்பதை வரவு செலவு கணக்குகள் நிரூபித்தன. முரளி, புவனேஸ்வரிக்கு பார்த்திபன் உதவி செய்தான் என்று ஸ்ரீலேகா கூறினாள். பார்த்திபன், முரளி, புவனேஸ்வரி மூவருடைய பாங்க் பாஸ்புக்குகள் பீரோவிலிருந்து எடுக்கப்பட்டது. மூவருடைய கணக்கிலும் மாதம் 25,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது.

    மேலும் முரளியின் டிரைவிங் லைசன்ஸ், வேனின் R. C. புக் பர்மிட் ஆகியவைகளின் ஒரிஜினல் கிடைத்தது. முரளி குடிக்கவில்லை என்பது ஆஸ்பத்திரியின் POSTMORTEM REPORTல் நிரூபித்ததால் இது ஒரு சாதாரண விபத்து என்று அறிவித்துவிட்டு அரசியல் செல்வாக்குடைய

    Enjoying the preview?
    Page 1 of 1