Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irandavathu Uyir!
Irandavathu Uyir!
Irandavathu Uyir!
Ebook141 pages1 hour

Irandavathu Uyir!

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 30, 2017
Irandavathu Uyir!

Read more from Rajesh Kumar

Related to Irandavathu Uyir!

Related ebooks

Related categories

Reviews for Irandavathu Uyir!

Rating: 4.25 out of 5 stars
4.5/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irandavathu Uyir! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    இரண்டாவது உயிர்!

    Irandavathu Uyir!

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    மூச்சு என்பது உடல், மனம் இரண்டையும் இயக்கக்கூடிய ஃப்ளை வீல் (Flywheel) கருவி போன்றது. இந்த மூச்சு நுரையீரல் மூலமாக நம் உடம்பிலுள்ள எழுபத்திரெண்டாயிரம் நாடி நரம்புகளும் இயங்குவதற்கு உறுதுணையாக இருக்கிறது.

    இன்னிக்குச் சாயந்தரம் ஏழு மணிக்கு நிச்சயமா சுந்தரமூர்த்திக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும். அதுக்கு நான் கியாரண்டி!

    டாக்டர் பரமேஸ்வரன் சொன்னதைக் கேட்டு அறையில் பரவியிருந்த காற்று ஒரு விநாடி உறைந்து பின் அசைந்தது. ஃபிஷ்டப்பில் நீந்திக் கொண்டிருந்த ஸ்கைபேர்ட்ஸ் மீன்கள் நீந்த மறந்து நீரில் மிதந்தன.

    ஃபிஷ்டப்புக்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்த சோபா-கம்-பெட்டில் உட்கார்ந்திருந்த புவனேஸ்வரியும் (32) அவளுடைய தம்பி கிரியும் (27) குடும்ப வக்கீல் கோபால்ராவும் (48) ஒருத்தரையொருத்தர் சின்னச் சின்ன புன்னகையேர்டு பார்த்துக் கொண்டார்கள்.

    டாக்டர்! நீங்க சொன்னதை நம்பலாமா? - புவனேஸ்வரி சோபாவின் நுனிக்கு நகர்ந்தபடி ஆர்வமாய்க் கேட்டாள். புவனேஸ்வரிக்கு ரோஸ் மில்க் நிறம். உடம்பு பூராவும் இளமை உட்கார்ந்து கொண்டு சத்தியாக்கிரகம் செய்து கொண்டிருந்தது. பியூட்டி பார்லருக்கு ஆயிரக்கணக்கில் செலவழிப்பவர்.

    ஸ்டெனோவாக வந்து சேர்ந்து மார்புத் துணியை நழுவ விட்டு - முதல் மனைவி இறந்து பதினைந்து ஆண்டுகள் வரை மறுமணத்தைப் பற்றியே எண்ணாமல் இருந்த சுந்தரமூர்த்தியை வளைத்து... கழுத்தில் தாலி வாங்கிக் கொண்டு... பங்களாவில் ராணியாக உலா வருபவள். இவளைப் பற்றி இன்னமும் அதிகமாகச் சொல்ல வேண்டும். இப்போது அவகாசமில்லை. கூடவே வாருங்கள். போகிற போக்கில் அவளைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வருகிறேன்.

    டாக்டர் பரமேஸ்வரன் தன்னுடைய மூக்குக் கண்ணாடியைக் கழற்றி... அணிந்திருந்த கோட் நுனி உபயத்தால் பாலீஷ் ஏற்றிக் கொண்டே மெல்லச் சிரித்தார். கடைவாய் ஓரம் ஒளிந்திருந்த தங்கப் பல் ஒன்று விநாடி நேரம் தெரிந்து மறைந்தது. குரலைச் சின்னதாக்கிக் கொண்டு கிசுகிசுத்தார்.

    இன்னிக்குக் காத்தாலே பத்து மணிக்குச் சுந்தர மூர்த்திக்கு அந்த இஞ்செக்ஷனைப் போட்டிருக்கேன். வழக்கமாகத் தினசரி ஏத்தற க்ளூகோஸ் இஞ்செக்ஷன் தானேன்னு அவர் அலட்சியமாப் புஜத்தை நீட்டி ஊசியை வாங்கிக்கிட்டார். ஆனா அந்த இஞ்செக்ஷன்ல ஹார்ட்டையே நிறுத்தற மெடிசன் கலந்திருக்குன்னு அவருக்குத் தெரியாது.

    அந்த மெடிசன் உடனடியா ஹார்ட்டைத் தாக்காதா டாக்டர்? - கிரியின் சிறிய சைஸ் கண்களில் லோடு லோடாய்ப் பேராசை பளபளத்தது.

    கிரி, புவனேஸ்வரியின் ஒரே தம்பி. மீசை வைத்த வினோத்கன்னா மாதிரியான தோற்றம். அளவுக்கு அதிகமான விஸ்கியும் பிராந்தியும் அவனுடைய விழிகளை நிரந்தரமாகவே சிவப்பாக்கியிருந்தன. அக்காவுக்கு நேர் எதிரான நிறம். வேலை வெட்டி இல்லாமல் பேட்டை ரவுடியாய்ச் சுற்றிக் கொண்டிருந்தவன். அக்காவுக்குக் கிடைத்த இந்தப் பெரிய இடத்து வாழ்க்கையில் சம உரிமை எடுத்துக் கொண்டு பங்களாவிலேயே பாதி நாட்கள் தங்கி விடுபவன்.

    டாக்டர் பரமேஸ்வரன் கிரியின் தோள்பட்டையை சிநேக பாவமாய்த் தட்டினார். கிரி, புரியாமப் பேசாதே! அது ஹார்ட்டை உடனடியாய்த் தாக்குகிற மருந்தில்லை. விஷம்... சுந்தரமூர்த்திக்கு நான் கொடுத்திருக்கிற இஞ்செக்ஷன் மெல்ல மெல்லத்தான் வேலை செய்யும். இரையை நோக்கி நகர்கிற பாம்பு மாதிரி நிதானமா ரத்தத்தில் நகரும். அது தன்னோட சுய ரூபத்தைக் காட்டறதுக்குக் குறைந்தபட்சம் ஒன்பது மணி நேரமாகும்.

    குடும்ப வக்கீல் கோபால் ராவ் தன் கன்னத்தைச் சொறிந்து கொண்டே டாக்டர் பரமேஸ்வரனின் பேச்சில் குறுக்கிட்டார்.

    டாக்டர்! நீங்க சொல்ற மாதிரியே சுந்தரமூர்த்திக்கு இன்னிக்குச் சாயந்திரம் ஏழு மணிக்கு ஹார்ட் அட்டாக் வந்தா உடனடியாச் செத்துட மாட்டாரே?

    மாட்டார். மெல்ல மெல்லத்தான் உயிரை விடுவார். இயற்கை உடம்பிலிருந்து உயிர் எப்படிப் பிரியுமோ அப்படித்தான் பிரியும். நாளைக்கு யாராவது சந்தேகப்பட்டுப் புதைச்ச பாடியை எடுத்துப் பரிசோதனை பண்ணினாக்கூட நாம மாட்டிக்கக் கூடாது லாயர் ஸார்!

    புவனேஸ்வரி மெல்லச் சிரித்தாள். சந்தேகப்பட ஆள் இருந்தாத்தானே சந்தேகப்படுவாங்க? இருக்கிற ஒரே ஆள் வினோத். என் கணவரோட முதல் சம்சாரத்து பாரிசு அவனையும் கச்சிதமா முடிச்சிட வேண்டியதுதான்!

    வினோத்தை எப்படித் தீர்த்துக் கட்டப் போறோம் புவனேஸ்வரி அம்மா? - கோபால் ராவ் மெல்லிய குரலில் கேட்டார்.

    அதை அப்புறமாச் சொல்றேன் வக்கீல் ஸார்! முதல்ல நான் சொன்ன மாதிரி உயிலைத் தயார் பண்ணீட்டீங்களா?

    நேத்தைக்கே பண்ணிட்டேன்!

    வாசகமெல்லாம் சரியாப் போட்டிருக்கீங்களா? பின்னாடி தப்பு வந்துடக் கூடாது. கஷ்டப்பட்டதுக்குப் பலனே இல்லாம போய்டும்.

    என்னுடைய இருபது வருஷ வக்கீல் மூளையை இந்த உயில் எழுதுறதுக்காக ஏகமாகக் கசக்கியிருக்கேன். பின்னாடி எந்தத் தொந்தரவும் வராதும்மா!

    உண்மையான உயில் - என் கணவர் சொன்ன பிரகாரம் சொத்துல முக்கால் பங்கு வினோத்துக்கும் கால் பங்கு எனக்கும் சேரணும்ங்கிற அந்த உயில் இப்போ வினோத் கிட்டத்தான் இருக்கு. இல்லையா வக்கீல் ஸார்?

    ஆமாம்மா... அப்படித்தான் சுந்தரமூர்த்தி என்கிட்ட சொன்னார். அதைச் சுலபமாய்க் கண்டுபிடிச்சு அழிச்சுடலாம்.

    புவனேஸ்வரி ஏகமாய் மை தீட்டியிருந்த தன்னுடைய அழகான விழிகளைப் படபடத்தாள். டாக்டர் ஸார்! வக்கீல் ஸார்! நாம இப்பப் போட்டிருக்கிற திட்டப்படி எல்லாமே துல்லியமா நடந்தா... நான் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரி ஆயிடுவேன். நான் மொதல்ல உங்ககிட்ட பேசினபடி ஆளுக்குப் பத்து லட்சம் குடுத்துடுவேன். இந்தத் திட்டத்திலே எங்கேயும் ஓட்டை இருக்கக் கூடாது.

    டாக்டரின் கடைவாய் ஓரம் ஒளிந்திருந்த தங்கப் பல் மறுபடியும் தெரிந்து மறைந்தது. எல்லாம் சரியா நடக்கும் மிஸஸ் புவனேஸ்வரி! நம்ம திட்டத்தோட முதல் கட்டம் சுந்தரமூர்த்தியின் ஹார்ட் அட்டாக்கை வரவழைக்க வேண்டியது. இன்னிக்குச் சாயந்தரம் ஏழு மணிக்கு என்னோட இஞ்செக்ஷன் அவருக்கு ஹார்ட் அட்டாக்கை வரவழைக்கும். அதுக்குப் பின்னாடி இரண்டாவது கட்டமா என்ன பண்ணப் போறோம்?

    மூன்று பேரும் தத்தம் தலைகளை புவனேஸ்வரிக்கு வெகு அருகில் கொண்டு போக... புவனேஸ்வரி உதடுகளை மெல்ல அசைத்தாள்.

    வினோத் பிசினஸ் விஷயமா இன்னிக்குச் சாயந்தரம் அஞ்சு மணிக்கு பாம்பே போகிறான். திரும்பறதுக்கு எப்படியும் ஒரு வாரமாயிடும். என் கணவருக்கு ஹார்ட் அட்டாக் வந்ததும் அவரை இந்தப் பங்களாவிலே வைக்காம... நம்ம வால்பாறை எஸ்டேட் பங்களாவுக்குக் கொண்டு போயிட வேண்டியது. வக்கீல் எழுதி வெச்சிருக்கிற உயிலில் கையெழுத்தை வாங்கிக்க வேண்டியது!

    அவர் போடுவாரா? - கிரி குறுக்கிட்டுக் கேட்டான்.

    கேட்கிற விதத்தில் கேட்டால் கையெழுத்தைப் போடுவார். உண்மையான நகலிலில் ஒரு கையெழுத்து வேணும்னு சொல்லி நாம எழுதி வெச்சிருக்கிற உயிலை நீட்டிட வேண்டியதுதான். மனுஷனுக்கு என் மேல அபார நம்பிக்கை. சொன்ன இடத்துல கையெழுத்தைப் போட்டுடுவார். அதில் ஒரு பிராளமும் இல்லை! - கோபால் ராவ் அமர்த்தலாய்ச் சொன்னார்

    புவனேஸ்வரி தொடர்ந்தாள். "பம்பாய் போயிருக்கிற வினோத்துக்கு அப்பா சீரியஸாய் இருக்கார்ன்னு சொல்லித்

    Enjoying the preview?
    Page 1 of 1