Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadalora Pookkal
Kadalora Pookkal
Kadalora Pookkal
Ebook256 pages1 hour

Kadalora Pookkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803912
Kadalora Pookkal

Read more from Maharishi

Related to Kadalora Pookkal

Related ebooks

Reviews for Kadalora Pookkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadalora Pookkal - Maharishi

    http://www.pustaka.co.in

    கடலோரப் பூக்கள்

    Kadalora Pookkal

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    ரேவதி தன்னுடைய அலுவலக அறையில் உட்கார்ந்திருந்தாள்.

    அரை வட்டமான மேஜை மேற் பரப்பில் சன்மைக்கா.

    இரண்டு பெரிய ட்ரேக்களில் வெளியே போகும் உள்ளே வரும் பேப்பர்கள்.

    சிகப்பு வெள்ளை நிறங்களில் டெலிபோன்கள்.

    டேபிளைச் சுற்றி ஏராளமான ஃபைல்கள், அவசரம், மிக அவசரம், ஆர்டினரி என்கிற மேல் பட்டைகள்.

    மாடி அறையில் தேக்கு மரப் பலகைகளால் தடுக்கப்பட்ட அறை அது.

    எதிரிலும் பக்க வாட்டிலும் இரண்டு கீராக்களும் சந்தன்களும் நின்று கொண்டிருந்தன.

    மேலே சன்சார் சுழன்று கொண்டிருந்தது.

    எடுத்த எடுப்பில் அறையில் தென்படும் வர்ணம் ஒரு வெளிர் சிவப்பு. தரை விரிப்பு, மேஜைமேல் உள்ள சன்மைக்கா, சுழலும் நாற்காலியின் ரெக்ஸின், சாலையோரமாக உள்ள ஜன்னல்களில் தொங்கும் திரைச்சீலைகள் எல்லாமே சிவப்பு.

    ரேவதி ஒரு பைலை பார்த்துக் கொண்டிருந்த போது டெலிபோன் மணி ஒலித்தது.

    எஸ்...ரேவதி...ஹியர்...

    ஓ...ஷா அண்ட் ஷா; கம்பெனியா...சாரி மிஸ்டர் ரகோத் உங்க கொடேஷன் ரொம்ப அதிகமா இருந்தது. நாங்க விலைகள் குறைவாக உள்ள கொடேஷனுக்கு ஆர்டர் கொடுக்க தீர்மானம் பண்ணிட்டோம்... ஆமாம் நான் தான் அந்தப் பேப்பர்களைப் பார்ப்பது......

    ஒரு நிமிஷம் போன்ல சொல்லியிருந்தா நாங்க வேற புது கொடேஷன் கொடுத்திருப்போமே. நீ மனசு வச்சிருந்தா நடந்திருக்கும். பின் தேதி போட்டுக் கொடுப்போம். இல்லேன்னு வேற புது கொடேஷன் தரோம்...

    அதெல்லாம் சரியில்லை மிஸ்டர் ரகோத்தமன்...

    இல்லே மிஸ் ரேவதி, நாங்க ஒரு பெரிய வியாபாரத்தைத் தவற விட்டு விட்டோம். எங்களுக்கு உங்க கம்பெனியுடன் ஏதேனும் ஒரு பெரிய வியாபாரம் பண்ணனும்ணு ரொம்ப நாளா ஆசை, நீ மனசு வச்சிருந்தா இப்படியொரு சந்தர்ப்பத்திலே அதை எங்களுக்கு உண்டாக்கித் தந்திருக்க முடியும்...

    இப்ப நான் என்ன பண்ண முடியும்...

    இப்ப கூட நீ சரின்னு சொல்லு...

    சரின்னு சொன்னா...

    நான் நேரில வரேன்... இதைப் போன்ல பேச வேண்டாம்...

    'ரகோத்...'

    எதிர் முனையில் டெலிபோன் தன் யதாஸ்தானத்தில் அமர்ந்து விட்ட ஒலி கேட்டது.

    ரேவதி சலிப்புடன் டெலிபோனைக் கீழே வைத்தாள்.

    பக்க வாட்டில் டிராயர் அருகில் உள்ள வெள்ளை பட்டனை ஒரு முறை அழுத்தினாள்.

    வெளியே பஸ்ஸர் உறுமியது.

    ஐயப்பன் எட்டிப் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்து அவள் எதிரில் வந்து நின்றான்.

    ஷா...அன்ட்...ஷா... கம்பெனி ரகோத்தமன் தெரியுமில்லே...

    ஆமாங்க

    என்னைத் தேடிக் கொண்டு பார்க்க வந்தால் நான் இல்லை என்று கூறி விடு...

    சரிங்க...

    அக்கௌண்டெண்டைக் கூப்பிடு...

    அக்கௌண்டெண்ட் உள்ளே நுழைந்தார்,

    வாங்க சிவபாதம் உட்காருங்க...

    அந்த நியூ டின் கண்டெய்னர்... ஐயாயிரத்துக்கான ஆர்டர் இன்னும் போக வில்லையே...

    போகலை. கொடேஷன் சார்ட் எல்லாம் போட்டு லோயஸ்ட் ரேட்டை நாம் பொறுக்கி அந்த கல்கத்தா கம்பெனிக்கு என்று முடிவு பண்ணியாச்சு.

    ரகோத்...வருவார்...ஒரே கழுத்தறுப்பு...

    அந்த ஷா... அண்ட்...ஷா

    ஆமாம்...

    எதையுமே நேர் வழியில் செய்தே பழக்கமில்லாத கம்பெனியில் அது ஒன்று. ஜனாதிபதி பரிசைக் கூட பிளரப் பண்ணி வாங்குவேன்னு ஓப்பனா சொல்ற ஒரே ஆளு...ரகோத்...

    ஹல்லோ...மிஸ்டர் சிவபாதம்.

    நாசமாப் போச்சு டெலிபோன் பண்ணினது போராதுன்னு இங்கேயே கழுத்தை அறுக்க வந்திட்டியா

    ஹலோ

    ரகோத் பின்னால் பியூன் ஐயப்பன் பீதியுடன் நின்றான்.

    "சொன்னேன் கேட்க மாட்டேன்னுட்டாரு...இப்பத் தான் அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாலே டெலிபோன்ல பேசினேன். அதுக்குள்ளார ஆளு இல்லேன்னா என்ன அர்க்கம் யார் கிட்டே அளக்கறே நேரே வந்து உன்னை உதைப்பேன்னு சொன்னாரு...

    நீ...போ...நான் பேசிக் கொள்கிறேன்...ரேவதி ஐயப்பனை அனுப்பி விட்டாள்.

    "நானும் போறேன். இந்த கடங்காரன் கிட்டே ஜாக்கிரதையா இருங்கோ. நம்பிக்கையானவன் தான். கழுத்தை அறுத்தாக் கூட ரகசியத்தை வெளியே சொல்ல மாட்டான், ஆனா வெளியிலே விடுகிற சவாலே எதிராளியைப் பற்றின சந்தேகத்தைக் கிளப்பி விடும்.

    அந்த கவர்ன்மென்ட் ஆர்டரை நான் வாங்கலே எம்பேரை மாத்திவை என்பான். அடுத்த வாரம் ஒன்னரைக் கோடிக்கான அந்த சர்க்கார் ஆர்டரைக் கொண்டு வந்து காட்டிவிட்டுக் கண் சிமிட்டுவான். எப்படிக் கிடைத்தது. இவ்வளவு போட்டிகளுக்கு நடுவில் இது எப்படிடா சாத்திய மாச்சு உன்னால் என்று கேட்டால் தலைமேல் அடித்து பிராமிஸா நான் அதை மட்டும் வெளியே சொல்ல மாட்டேன் என்பான்."

    ஐயர் என்ன சொல்றே, நீ போ...எல்லாத்தியும் நான் மிஸ் கிட்டே பேசிக்கறேன்... என்று சிவபாதம் வெளியேற கதவைத் திறந்து வைத்துக் கொண்டு நின்றான். போகிற இடங்களில் எல்லாம் இப்படியொரு உரிமையையும் சுலபமாகப் பழகும் தன்மைகளையும் அவனாகவே எடுத்துக் கொண்டு விடுவான்

    நல்லவன் வியாபாரி என்பதால் அதில் உள்ள நெளிவு சுளிவுகளுடன் இருப்பவன் என்பதைத் தவிர நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் அவன்.

    சின்ன வயதுதான் மழுங்கச் சிரைத்த முகம். படிமனாக வாரி விட்ட தலை. ரெமலான் பேண்ட். வைசாலி மில்லின் ஷர்ட், வாய் ஓயாத சிரிப்பு.

    எல்லோரையும் ஒருமையில் அழைப்பான். ஒருமையில் தான் அழைக்கப்படுவதையும் புரிந்துகொள்ள மாட்டான்.

    அவன் ஒரு உல்லாசி, அதே நேரத்தில் நல்லவன்.

    உட்கார் அதான் டெலிபோன்லே சொல்லிட்டேனே ஏன் இப்படி வந்து கழுத்தை அறுக்கறே ... என்றாள் ரேவதி.

    நான் கழுத்தை அறுக்க வரலே... உன்னோட பைத் தியக்காரத்தனத்தைப் பார்த்துப் பரிதாபப்பட வந்திருக்கிறேன். பேப்பர் இன்னும் வெளியே போகலை, அந்த ஆர்டரை எனக்குக் கொடு, தான் ஒழுங்கா சப்ளை செய்கிறேன். உனக்கு நான் எதாவது நன்மை பண்ணனும்னு ரொம்ப நாளா யோசிக்கறேன். நீ நம்ப பிடியிலேயே சிக்காம போயிகிட்டு இருக்கே...

    என்ன நன்மை பண்ண முடியும் உன்னால...கேட்டு விட்டு அழகாகச் சிரித்தாள் ரேவதி

    என்ன முடியாது... உனக்கு என்ன வேணும்னுகேளு செய்யறேனா... இல்லையா பாரு...

    உன் அன்புக்கு நன்றி. ஆனா அன்பு வேறு வியாபாரம் வேறு...

    நீங்களெல்லாம் வாழத் தெரியாத கோழைகள், சந்தர்ப்பங்களை நன்றாகப் பயன் படுத்திக் கொள்ளத் தெரியாத முட்டாள்கள்

    ரேவதி அவனைக் கடுமையுடன் பார்த்தாள்.

    "நீ எப்படி முறைச்சாலும் நான் பயப்பட மாட்டேன். நீ என்னை வெளியே எழுந்திருந்து போடா ராஸ்கல்ன்னு சொன்னாக் கூட போக மாட்டேன். உன் மேலே கோபிச்சுக்க மாட்டேன்...

    நீ நேரே வருகிறேன் என்று சொன்னபோதே இதுக் காகத்தான் சொல்லி வைத்தேன். வந்து கேட்டால் இல்லை என்று சொல்லிவிடு என்று...

    சரி நான் நேரிடையாகவே விஷயத்துக்கு வரேன். அந்த காண்ட்ராக்ட்டை எனக்குக் கொடு. நான் என் கொடேஷனை வந்திருக்கிற கொடேஷன்களிலேயே குறைத்து வேறு ஒரு கொடேஷன் தரேன். இல்லே வேற பேர்ல தரேன். அதை சேர்த்து அனுப்பு...

    அது தப்பு ரகோ...

    தப்புதான். நான் இதை நியாயம்ன்னு சொல்ல வரலே ஆனால் வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம். போன வாரம் பெரிய இடத்து காண்ட்ராக்ட் ஒண்ணு புடிச்சேன். எப்ப தெரியுமா... டெண்டர் தேதியெல்லாம் முடிஞ்சு ஒரு வாரம்கழித்து பெரிசுல ரெண்டு ரூபா கொடுத்தேன். ஆனா யாரு எங்கேன்னு மட்டும் கழுத்தை அறுத்தாக் கூட சொல்ல மாட்டேன்...

    அடுத்த மாதம் இன்னொரு ஆர்டர் போடப் போறோம். அதுக்கு வேணா முயற்சி பண்ணு. இந்த மாதிரி குறுக்கு வழியெல்லாம் வேண்டாம். என்னோட மனசாட்சி இடம் தரலே...

    இப்ப நான் வரேன். ஆனா நீ மனசாட்சின்னு சொன்னதால நானும் சொல்ல வேண்டியிருக்கு. நீ மனசாட்சியுள்ள பெண்ணா இருந்தா, வெளியே வேலைக்கு வரக் கூடாது. வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்க வேண்டியதுதான். இருபதாம் நூற்றாண்டிலே விலை போகாத சரக்கை வச்சிகிட்டு வீணா போய்கிட்டு இருக்கே, மனசாட்சியில்லாத அரசியல் வாதிங்க, மனசாட்சியில்லாத தலைவர்கள், மனசாட்சியில்லாத வியாபாரிகள், மனசாட்சியில்லாத டாக்டர்கள். வக்கீல்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் இதுக்கு நடுவிலே மிஸ் ரேவதி எம். எஸ். சி, யூனியன் கமர்ஷியல் ஏஜன்சீஸ் சீப் ஆபீஸர் மனசாட்சி பற்றிப் பேசிக்கிட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். ஆல்ரைட் பேசு. பேசிக்கிட்டே இரு நான் வரேன். இந்த வியாபாரத்தை எனக்குச் சாதகமாக முடிச்சு தர்ரதா இருந்தா உனக்கு நான் பெரிய தொகை தருவேன்.

    நன்றி...

    நீயும் உன் நன்றியும் நாசமாப் போக...

    ரேவதி நிமிர்ந்து பார்க்காமல் சிரித்தாள்.

    இரு காப்பி சாப்பிட்டு விட்டுப் போ...

    காப்பி வந்தது.

    இருவரும் குடித்தார்கள்.

    என்ன ஆச்சு உன்னோட கல்யாணம்-ரேவதி அவனிடம் கேட்டாள்-பேச்சை மாற்றி...

    நான் உங்க ஜாதிப் பெண் ஒருத்தியை காதல் பண்ணிக்கிட்டு இருக்கேன்...

    உண்மையாகவா?...

    ஆமாம்...

    ரேவதி ரகோத்தமனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

    இவன் எதற்கோ வந்தவன் எதையோ கேட்க வந்தவன்.

    ஒரு ஒன்றரை லட்ச வியாபார நிமித்தமாக பேச வந்தவன், இப்பொழுது எதையோ பேசிக் கொண்டிருக்கிறான்.

    உணர்ச்சி வசப்பட்டுப் பேசுகிறான். இந்தச் சிறு வயதில் அவனிடம் எல்லாமே அதிகமாக இருந்தன.

    வியாபார சாமார்த்தியம், சாதூர்யம், அதே நேரத்தில் ஆட்களை வளைத்துப் பிடிக்கும் தந்திரம். கொஞ்சம் சுயநலம், இது அவசியம் என்று அவன் அடிக்கடி கூறிக் கொள்கிறான்.

    இப்படிப்பட்டவன்தான் தன் கல்யாணத்தைப் பற்றிக் கேட்டவுடன் எடுத்த எடுப்பில் உணர்ச்சி வசப்பட்டு நிற்கிறான்.

    அவன் தெலுங்கு பேசுகிற பிராமணன். மத்வரை தொடர்கிறவன்.

    அப்ப நான் போக வேண்டியது தானா...

    நீ இப்ப போகலாம்...

    அவள் தன் வேலையில் ஈடுபட்டுக் கொண்டே பேசினாள்.

    நான் உன் மேல் ரொம்ப நம்பிக்கையுடன் வந்தேன். என்னை ஏமாற்றி விட்டாய்...

    எடுத்த எடுப்பில் என்னை மட்டுமல்ல வேறு யாரையுமே நம்பாதே. அதுவும் வியாபார விஷயத்தில் ஒருவரையும் நம்பக் கூடாது...

    போதும்... உன்னுடைய உதவாக்கரை உபதேசம்...

    இதே டெண்டரை நான் உன் கை பட எங்கள் கம்பெனிக்கே வாங்குகிறேன் பார்க்கிறாயா?

    எங்கள் எம். டி. விஸ்வேஸ்வரனிடம் உன் பாட்சா பலிக்காது. உன்னுடைய லஞ்சத்திற்கெல்லாம் மயங்கற சாதாரண ஆள் இல்லை. அவர் நேர்மையானவர். அவரை மாதிரி இந்த வியாபார வட்டத்திலே நீ யாரையும் பார்க்க முடியாது.

    வியாபாரம் இல்லாமல் மிகவும் கஷ்டப் படுவதாகச் சொல். உண்மையை ஒப்புக் கொண்டு அவரிடம் கேட்டுப் பார். இந்தக் குறுக்கு வழியெல்லாம் போக வேண்டாம்.

    அப்படியெல்லாம் என்னை நான் தாழ்த்திக் கொண்டு இதைப் பெற வேண்டிய அவசியமில்லை. உன்னால் முடியும் என்று நம்பிதான் உன்னிடமே நேரிடையாகவே வந்தேன். நீதான் திட்டவட்டமாக முடியாதுன்னு சொல்லிட்டே. அதோடு விடு... நான் உன்னிடம் ஒரு சொந்த விஷயம் பேசனுமே...

    சொந்த விஷயமா... நாளைக்கு வீட்டுக்கு வாயேன்...

    நாளைக்கு முடியாது. ஞாயிற்றுக் கிழமை வரேன். விடியம் நிறைய இருக்கு

    அவள் புரிந்து கொண்டவள் போல் புன்னகை செய்தாள்.

    அவளுடைய வாழ்க்கைப் பின்னணி தெரிந்த நண்பன் அவன்.

    அவள் மேல் நேயம் மிக்கவன், பாசம் உள்ளவன். பரிவுடன் தொடர்கிற நிழல் அவன்.

    அவனுடைய அன்பு நிழல் பல சந்தர்ப்பங்களில் அவளுக்கு ஆறுதலையும், மன சந்துஷ்டியையும் தந்திருக்கிறது.

    அவன் வீட்டிற்கு வருகிறேன் என்று சொன்னாலே ஒரு செய்தி இருக்கிறது என்று அர்த்தம்.

    அவள் வாழ்க்கையில் அவன் ஒரு நற் செய்தியாளன்.

    அழகாக வாரி விடப்பட்ட கிராப், லாங்ஹேர் இல்லை, சைட் பர்ன் இல்லை, மிகுதியான செயற்கை அலங்காரம் இல்லை, அவள் அவனுக்குப் புன்னகையுடன் விடை கொடுத்தாள்.

    அவன் சென்று மறையும் வரை, கன்னத்தில் கை கொடுத்து உட்கார்ந்திருந்தாள்.

    ஸ்பிரிங் டோர் அவனை வெளியே அனுப்பி விட்டு முன்னும் பின்னும் ஆடியது.

    ரகோத்தமனைப் பற்றின சிந்தனை அவள் மனதில் ஒரு பசுமையான முல்லைக் கொடி போல படரத் தொடங்கியது.

    தொட்ட இடங்கள் எல்லாம் உதிருமே பவழமல்லி. அது போல சுகந்தமான நினைவுகளை உதிர்த்து விட்டுப் போய்க் கொண்டிருந்தான்.

    அவன் நேயம் மிக்க நண்பன் என்பதைத் தவிர அவளிடத்தில் வேறு ஒரு உயர்ந்த எண்ணங்களில் படிவும் உண்டு.

    வெளியே வந்தாள். பெரிய இரும்புக் கேட்டைக் கடந்து நடை பாதைக்கு வந்தபோது சென்னை நகர மாலை நேரத்துப் பரபரப்பு.

    மனம் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது.

    அந்த உணர்வின் தாக்கம் கூட அவளுக்குப் புதுமையே. இப்படியொரு படபடப்பை அவள் இதற்கு முன் அனுபவித்ததில்லை.

    2

    ரகோத்தமனை அவளுக்கு சிறு பிராயத்திலிருந்தே தெரியும்.

    ஓரத்த நாட்டில் ஒரே தெருவில் சர்வ மான்ய அக்ரஹாரத்தில் எதிர் எதிரே வசித்தவர்கள்.

    அவர்கள் பூர்வீகம் அதுதான். அன்றே அவளைவிட வசதி மிக்கவன். அரிசிக்கும் பணத்திற்கும் தட்டுப்பாடு உண்டாகும் போதெல்லாம் அவர்கள் வீட்டின் ரேழியில் போய் நின்ற நாட்கள் எத்தனையோ உண்டு. கிட்டத்தட்ட அது ஒரு யாசகம் போலத்தான்.

    காரணம்.

    ரகோத்தமனின் தாயாகட்டும், தந்தையாகட்டும், கொடுத்ததைத் திரும்ப வாங்கிக் கொள்ளும் பழக்கமற்றவர்கள்.

    திருப்பிக் கொடுக்க முயன்ற போது அதைப் பெற மறுத்து இதை நான் உங்களுக்குக் கொடுக்கும் போது திரும்ப வாங்கிக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் கொடுப்பதில்லை. உங்கள் நிலைமை எனக்குத் தெரியும். இந்தப் பரஸ்பர

    Enjoying the preview?
    Page 1 of 1