Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Kodi Lottery
Oru Kodi Lottery
Oru Kodi Lottery
Ebook67 pages28 minutes

Oru Kodi Lottery

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கேரளாவில் தள்ளுவண்டியில் வேர்க்கடலை விற்று வாழும் மாரிமுத்துவிற்கு எதிர்பாராத விதமாக லாட்டரியில் ஒரு கோடி விழுந்தது. அதை எடுத்துக் கொண்டு இருபது வருடங்களாகச் சென்று பார்க்க நினைத்த, தன்னைத் தூக்கி வளர்த்த பெரியப்பாவை காணச் செல்கிறான். அங்கு, அவரது பிள்ளைகளும் சொந்தங்களும் எப்படியெல்லாம் இவனிடமிருந்து பணத்தைப் பறிக்கிறார்கள்; இறுதியில் அவன் கேரளா திரும்பினானா? அவனால் சொந்த வீடு வாங்க முடிந்ததா, தன் மகன் ஆசையாகக் கேட்ட மிதிவண்டியைத் தான் வாங்க முடிந்ததா? அந்த ஒரு கோடி அவன் வாழ்க்கையை மாற்றியதா? வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள். நன்றி!

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580150007721
Oru Kodi Lottery

Read more from Kavani

Related to Oru Kodi Lottery

Related ebooks

Reviews for Oru Kodi Lottery

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Kodi Lottery - Kavani

    https://www.pustaka.co.in

    ஒரு கோடி லாட்டரி

    Oru Kodi Lottery

    Author:

    கவாணி

    Kavani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chitra-g

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    என்ன புள்ள, சொல்லாம கொள்ளாம எங்கியோ கிளம்பிட்டீங்க போல பக்கத்து வீட்டு கனகா வீட்டிற்குள் நுழைந்தவாறே பொடி வைத்துப் பேசினாள்.

    வாயெல்லாம் பல்லாக, அதான். அவரு வாங்குன லாட்டரிச் சீட்டில் ஒரு கோடி விழுந்திருக்கு இல்ல…. என்று சரசு ஏதோ சொல்லவர அதற்குள் கனகா இடைமறித்தாள்.

    அதனால், வீட்டைக் காலி பண்ணிட்டு, கேரளாவை விட்டுட்டு தமிழ் நாட்டுக்கே போறீங்களாக்கும்?

    "அதெல்லாம் ஒண்ணும் இல்லை. என் வீட்டுக்காரருடன் நான் ஊரிலிருந்து ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டு, கிட்டதட்ட இருபது வருசம் ஆச்சு. ஊர்ல எல்லாரும் நாங்க காதலிச்சு ஓடிப்போய் எங்கயோ பிச்சையெடுத்துச் சாப்பிடறதாதான் நினச்சிட்டு இருப்பாங்க. அவங்களுக்கு எல்லாம் காட்ட வேண்டாமா நாங்க கோடீஸ்வரங்கன்னு. அதுவுமில்லாம, சொந்தபந்தம் எல்லாம் வேணுமில்ல…

    நாங்களும் வாழ்க்கையில் கொஞ்சம் முன்னுக்கு வந்திட்டா, ஊருக்குப் போலாமுன்னு வருசா வருசம் நினச்சுக்குவோம். எங்க? இந்தத் தள்ளுவண்டியில் வேர்க்கடலை வித்து, தினம் வயித்தைக் கழுவவே சரியாப் போயிடுது. இப்பதான் கடவுள் கனிஞ்சு வந்திருக்கார்." என்று பெருமூச்சு விட்டாள் சரசு.

    அப்படியே எங்களையும் கொஞ்சம் தூக்கி விடுறது. இத்தன நாள் ஒத்தாசையா இருந்த எங்களையெல்லாம் மறந்துட்ட பாத்தியா? என்று கனகா முகத்தைத் திருப்பிக் கொண்டு எழுந்தாள்.

    சரசு அவள் கையைப் பிடித்து இழுத்து அமர வைத்தாள். அட உட்காரு. அவரு அந்தத் தள்ளுவண்டியை வித்திட்டு பெரிய கடை திறக்கப் போறேன்னு சொன்னாரு. நாந்தான் நம்ப கனகா புருசன் ரொம்ப கஷ்டப்படுறாரு, அவருக்குக் கொடுத்திடலாம்னு அவருகிட்ட சொல்லி வச்சிருக்கேன். சந்தோசம்தானே என்று கனகாவைப் பார்த்து சரசு புன்னகையுடன் கேட்டாள்.

    கனகா பூரித்துப் போனாள். நிஜமாவா சொல்ற?

    சத்தியமா. நாங்க போயிட்டு வந்து கடை திறந்த உடனே, எங்க வண்டியை உங்களுக்குக் கொடுத்திடுவோம். ம்… என்று மீண்டும் வாக்குறுதிக் கொடுத்தாள் சரசு.

    உடம்பெல்லாம் சிலிர்த்துப் போனாள் கனகா. தன் சீலைக்குள் மறைத்து வயிரோடு சேர்த்துக் கட்டி வைத்திருந்த பச்சையும் சிவப்புமாய்க் கலந்த நிறத்தில் இருந்த சீனிப் புளியங்காயைக் கை நிறைய எடுத்து நீட்டினாள் கனகா.

    இந்தா… பாலுவுக்குப் பிடிக்குமேன்னு கொண்டுவந்தேன். நான் பால் வாங்கப் போவேனுல்ல மணியக்கா. அவங்க வீட்டில் காய்ச்சுத் தொங்குச்சு. கொஞ்சம் பறிச்சிட்டு வந்தேன். நல்லா தேனாட்டம் இனிக்குது. இந்தா. சாப்பிட்டுப் பாரு

    அப்பொழுதுதான் அந்தப் பத்து வயது சிறுவன் பாலு மூச்சு வாங்க வீட்டிற்குள் ஓடி வந்தான்.

    அம்மா.. அம்மா… என்று பேச முடியாமல் மூச்சு வாங்கினான்.

    எதுக்கு இப்படி ஓடி வர? முதலில் உட்காரு. பொறுமையாச் சொல்லு

    ம்மா… இன்னைக்கு என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் நீதான் பணக்காரன் ஆயிட்டேயில்ல. எங்களுக்கெல்லாம் ஏதாவது வாங்கிக் கொடுன்னு கேட்கிறாங்கம்மா. நாம்ப பணக்காரங்க ஆயிட்டமாம்மா?" அப்பாவியாய்க் கேட்டான் பாலு.

    சரசு புன்னகையுடன் அவன் தலையை வருடினாள். அப்பாவுக்கு லாட்டரி விழுந்திருக்கு இல்ல, அதில் கொஞ்சம் பணம் வந்திருக்கு. அதுக்கு கேட்டிருப்பாங்க. நீவேணா எல்லாத்துக்கும் தேன் முட்டாய் வாங்கிக் கொடு என்று தன் சேலைக்குள் கைவிட்டு, தன் ஜாக்கெட்டுக்குள் பத்திரமாய் ஒளித்து வைத்திருந்த ஒற்றை ஜிப் கொண்ட குட்டிப் பர்சை எடுத்து, ஜிப்பைத் திறந்து ஓர் இருபது ரூபாயை எடுத்து அவன் கையில் திணித்தாள்.

    பாலு கோபமாய் அதைத் தட்டி விட்டான்.

    Enjoying the preview?
    Page 1 of 1