Pengalai Purinthu Kolla...
()
About this ebook
இந்த புத்தகத்தை படித்துவிட்டு பெண்களை புரிந்துகொண்டு விடலாம் என்று நீங்கள் நம்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல. இது ஒரு சிறுகதை தொகுப்பு. மனோதத்துவ நூல் அல்ல.
நான் முதன்முதலாக எழுதிய “கண்ணம்மாவின் வயது” இந்த தொகுப்பில் வெளியாகிறது. கண்ணம்மா என்னும் பெண் என்னை மிகவும் பாதித்ததுதான் நான் கதை எழுதத் துவங்கியதற்கு காரணம். ‘இப்படியும் ஒருத்தி இருக்க முடியுமா?’ என்று என்னை வியக்க வைத்த பெண்.
அந்த கதை எழுதுவதற்கு இன்னொரு காரணம் என் சிறிய சகோதரன் அரவிந்த கிருஷ்ணன். எந்த விஷயத்தை கூறினாலும், அதில் ஒரு நகைச்சுவையை காண்பவன். மலைவாழ் பழங்குடியினர் வாழும் கிராமத்திற்கு நான் செல்கிறேன் என்று கூறியவுடன், “அவர்களும் நம்மை போலத்தான் இருப்பார்கள். செல்ஃபோன், கம்ப்யூட்டர் பற்றியெல்லாம் அறிந்திருப்பார்கள். ஏதோ சினிமாவில் வருவது போல் இலையை இடையில் ஆடையாக அணிந்து பாட்டு பாடி ஆடிவரும் பெண்களை எதிர்பார்க்காதே,” என்று கிண்டலாக அறிவுரை வழங்கினான்.
என் அரிய அதிர்ஷ்டம், அங்கு நான் கண்ணம்மாளை சந்தித்தது. என் கதைகளில் விவரிப்பு அதிகம் காணப்படாது. வர்ணனையை அதிகம் விரும்பாதவன் நான். இதனை என் “தேங்காய்மூடி அதிசயம்” தொகுப்பை படித்தவர்கள் அறிவர். திடுமென்று துவங்கி, வேகமாக வளர்ந்து தடாலடியாக முடிவதுடன் என் கதைகள் நின்றுவிடும். படிப்பவர்களுக்கு பாடம் கற்பிக்க நான் ஆசானும் அல்லன்; கையை பிடித்து வர்ணனை செய்து காட்டிடும் அளவு புலமை பெற்ற கலைஞனும் அல்லன். படிப்பவர் மனதில் உணர்ச்சியை தூண்டுவது மட்டுமே என் குறிக்கோள். அவை ஒரு சிறு புன்னகையாகவோ, கனத்த நெஞ்சாகவோ, ஓரிரு கண்ணீர்த்துளிகளாகவோ இருக்கலாம். அவ்வளவே.
Read more from Dr. R.C. Natarajan
Cycle Bhagavathar Rating: 0 out of 5 stars0 ratingsCollector Lavanyavin Kavalai Rating: 0 out of 5 stars0 ratingsThengaimoodi Athisayam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Pengalai Purinthu Kolla...
Related ebooks
Thalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratings'Jolly' Kathaigal..! Rating: 0 out of 5 stars0 ratingsThaa! Rating: 5 out of 5 stars5/5Vidumurai Vibareetham Rating: 0 out of 5 stars0 ratingsKathi Kappal Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku Indhu... Rating: 0 out of 5 stars0 ratingsIndhu Maha Sarithram Rating: 0 out of 5 stars0 ratingsKinatru Thavalaigal Rating: 5 out of 5 stars5/5Jeithavan Pesugirean Rating: 5 out of 5 stars5/5Vilaga Vilaga Vibareetham Rating: 5 out of 5 stars5/5Nizhalai Varuven Rating: 0 out of 5 stars0 ratingsIlamai - Ithudan Inaippu Rating: 0 out of 5 stars0 ratingsKolai Kolaiyam Mundhirikka Rating: 0 out of 5 stars0 ratingsNaga Keeralgal Rating: 0 out of 5 stars0 ratingsNinaikka Therindha Manamey! Rating: 0 out of 5 stars0 ratingsEppadiyum Jeikka Vendum Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Kadhal Kalam Idhu Rating: 0 out of 5 stars0 ratingsThappu Thappai Oru Thappu Rating: 0 out of 5 stars0 ratingsகஸ்தூரி மானே... Rating: 0 out of 5 stars0 ratings9 Tharavum 9 Giragangalum Rating: 0 out of 5 stars0 ratingsPriyangaludan Naane Rating: 5 out of 5 stars5/5Ettu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Tick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Sorna Rating: 0 out of 5 stars0 ratingsKuthiraivaal Kuttrangal Rating: 4 out of 5 stars4/5Kaadhalin Jaadaiyellam Kannazhagile... Rating: 0 out of 5 stars0 ratingsUn Thol Sera Aasaithan Rating: 0 out of 5 stars0 ratingsஉன் தோள் சேர ஆசைதான்! Rating: 0 out of 5 stars0 ratingsWellington Vibareetham Rating: 5 out of 5 stars5/5
Reviews for Pengalai Purinthu Kolla...
0 ratings0 reviews
Book preview
Pengalai Purinthu Kolla... - Dr. R.C. Natarajan
https://www.pustaka.co.in
பெண்களை புரிந்துக்கொள்ள…
Pengalai Purinthu kolla...
Author:
ஆர்.சி. நடராஜன்
Dr. R.C. Natarajan
For more books
https://www.pustaka.co.in/home/author/dr-rc-natarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
இந்த நூலில் தரப்பட்டுள்ள படங்கள் யாவும் Bitmoji என்னும் Appஐ பயன்படுத்தி, கதாசிரியரால் உருவாக்கப்பட்டவை.
பொருளடக்கம்
பேரீச்சம்பழ ஜாம்
உளவும் உளவும்
கர்ப்பம்
கண்ணம்மாவின் வயது
டெக்னாலஜி
கடவுளுடன் சந்திப்பு
உருப்படாக் கழுதை
பெண்களை புரிந்துக்கொள்ள...
ஹெல்மெட்டான்
செல்வம் என்பது யாதெனின்
இந்த புத்தகத்தை படித்துவிட்டு பெண்களை புரிந்துகொண்டு விடலாம் என்று நீங்கள் நம்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல. இது ஒரு சிறுகதை தொகுப்பு. மனோதத்துவ நூல் அல்ல.
நான் முதன்முதலாக எழுதிய கண்ணம்மாவின் வயது
இந்த தொகுப்பில் வெளியாகிறது. கண்ணம்மா என்னும் பெண் என்னை மிகவும் பாதித்ததுதான் நான் கதை எழுதத் துவங்கியதற்கு காரணம். ‘இப்படியும் ஒருத்தி இருக்க முடியுமா?’ என்று என்னை வியக்க வைத்த பெண். அந்த கதை எழுதுவதற்கு இன்னொரு காரணம் என் இளைய சகோதரன் அரவிந்த கிருஷ்ணன். எந்த விஷயத்தை கூறினாலும், அதில் ஒரு நகைச்சுவையை காண்பவன். மலைவாழ் பழங்குடியினர் வாழும் கிராமத்திற்கு நான் செல்கிறேன் என்று கூறியவுடன், அவர்களும் நம்மை போலத்தான் இருப்பார்கள். செல்ஃபோன், கம்ப்யூட்டர் பற்றியெல்லாம் அறிந்திருப்பார்கள். ஏதோ சினிமாவில் வருவது போல் இலையை இடையில் ஆடையாக அணிந்து பாட்டு பாடி ஆடிவரும் பெண்களை எதிர்பார்க்காதே,
என்று கிண்டலாக அறிவுரை வழங்கினான். என் அரிய அதிர்ஷ்டம், அங்கு நான் கண்ணம்மாளை சந்தித்தது.
பேரீச்சம்பழம் ஜாம் கதையில் வரும் நிகழ்ச்சிகள் நம் எல்லோர் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில் நிகழும் நிகழ்ச்சி. அதில் உள்ள நகைச்சுவையை பகிர்வதுதுதான் என் எண்ணம்.
உருப்படாக்கழுதை என் சிறு வயது அனுபவத்தின் அடிப்படையில், கற்பனை கலந்து எழுதப்பட்டது. அதில் வரும் பாலு வாத்தியார் போல சிலரை நீங்களும் உங்கள் பள்ளி பருவத்தில் சந்தித்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது. எப்படிப்பட்ட கடுமையாக தண்டிக்கும் ஆசிரியரிமும் உள்ளுக்குள் ஒரு கனிவான இதயம் இருப்பதை இந்த கதையில் நான் எழுதியிருக்கிறேன்.
என் கதைகளில் விவரிப்பு அதிகம் காணப்படாது. வர்ணனையை அதிகம் விரும்பாதவன் நான். இதனை என் தேங்காய்மூடி அதிசயம்
தொகுப்பை படித்தவர்கள் அறிவர். திடுமென்று துவங்கி, வேகமாக வளர்ந்து தடாலடியாக முடிவதுடன் என் கதைகள் நின்றுவிடும். படிப்பவர்களுக்கு பாடம் கற்பிக்க நான் ஆசானும் அல்லன்; கையை பிடித்து வர்ணனை செய்து காட்டிடும் அளவு புலமை பெற்ற கலைஞனும் அல்லன். படிப்பவர் மனதில் உணர்ச்சியை தூண்டுவது மட்டுமே என் குறிக்கோள். அவை ஒரு சிறு புன்னகையாகவோ, கனத்த நெஞ்சாகவோ, ஓரிரு கண்ணீர்த் துளிகளாகவோ இருக்கலாம். அவ்வளவே.
ஆர்.சி. நடராஜன்
F:\Dr RCN Data on 01 March 2012\C drive\Mydocuments Data\POST RETIREMENT\SHORT STORIES\TAMIL\FOR PUSTAKA\BOOK 02\pictures\WhatsApp Image 2021-11-10 at 10.25.39 AM.jpegபேரீச்சம்பழ ஜாம்
ஏம்ப்பா, கொஞ்சம் லண்டன் போய்ட்டு வரேளா? அந்த நீல பையை எடுத்துக்கோங்கோ.
சீய்... ஒரு நிமிஷம் இங்கிலாந்துக்குத்தான் அனுப்பறியோன்னு நெனச்சேன்.
அப்பறம் சிரிக்கறேன். இப்போ போய் சாமான் வாங்கிண்டு வாங்கோ.
அமைதி.
என்னப்பா கிளம்பினேளா இல்லியா?
இருடீ. பான்ட் போட்டுண்டிருக்கேன். பறக்காதே.
பொம்பளை கெட்டா. அப்படியே லிப்ஸ்டிக்கும் போட்டுண்டு வாங்கோ. இங்க இருக்கற கடைக்கு போக மேக்கப் கேக்கறதாக்கும். சீனியர் சிடிசனுக்கு இளமை திரும்பறது.
சரி சரி. என்ன வாங்கணும்? சொல்லு.
இந்தாங்கோ லிஸ்ட். பர்ஸ் எடுத்துண்டேளா? எல்லாம் கைல தரணும்.
எடுத்துண்டுட்டேன்.
சமத்து. கிளம்புங்கோ. குளிக்க போணும்.
சந்தோஷமாக கிளம்பினேன். முக்கால் மணி நேரம் மனைவியிடம் திட்டு வாங்க வேண்டாம். ஐஸ்கிரீம் திங்கலாம். கோக் குடிக்கலாம். வெய்யிலை பொருட்படுத்தாது நடந்தேன். நூறு மீட்டர்தான்.
வாங்க சார். எப்படி இருக்கீங்க?
ம்ம்ம். நன்னாருக்கேன். நீ எப்படியிருக்கே ஜான்?
ஒங்க ஆசீர்வாதம் சார். லிஸ்டை குடுங்க.
போட்டு வை. வந்துட்டேன்.
ஆர்ய கௌடர் ரோட்டில் நடப்பது எப்போதுமே சுகம்.
வாங்க சார்.
இளநீர் எப்படிப்பா?
முப்பது ரூவா.
ஒரு இளநீர்தானே கேட்டேன்? மரத்துக்கே விலை சொல்றியே.
நீங்க எப்பவும் படு டமாஸ் சார். புது டயலாக் எதாவது சொல்லுங்க சார்,
என்று சிரித்துக்கொண்டே ஒரு இளநீரை வெட்டினான். இந்தாங்க. ஒங்களுக்கு புடிச்சமாறியே இனிப்பா.
நிஜமாகவே இனித்தது.
இந்தா. ரெண்டா வெட்டு. இன்னொண்ணு ஜஸ்ட் சீவிக்குடு.
நாலா வாங்கிக்கங்க. வெயிலுக்கு நல்லது.
இல்ல. பொட்டாஷியம் ஏறிடும். ரெண்டு போறும்.
நாலந்தா லெண்டிங் லைப்ரரியில் நுழைந்தேன்.
வாங்க சார்.
இந்தாப்பா. முடிச்சுட்டேன்.
அலிஸ்டர் மக்லீனின் ‘டைம் ஆஃப் த அஸ்ஸாஸின்ஸ்’ புத்தகத்தை திருப்பிக் கொடுத்தேன்.
சோமர்செட் மாம் ஒரு நாவல் இருக்கு படிக்கறீங்களா?
எது? ஆஃப் ஹ்யூமன் பான்டேஜா?
ஆமா.
1984ல படிச்சது. வேணாம். அவரோட சிறுகதை ரெண்டாம் வால்யூம் குடு. இருக்கா?
கம்பயூட்டரில் பார்த்துவிட்டு, இல்லை. அமேசான்ல கெடைச்சா வாங்கிடறேன் சார்.
சரி, அவரோட ‘த மாஜீஷியன்’?
இல்ல சார்.
அவர் இருவது நாவல் எழுதியிருக்கார். வாங்கி வை.
எங்க சார்? மெம்பர்ஷிப் ஏறவே மாட்டேங்குது.
கொஞ்ச நேரம் அங்கிருந்த புத்தகங்களை அளைந்தேன். ஒரு ஜேம்ஸ் பாட்டர்சன் நாவலை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
சார், உங்க அக்கவுண்டுல எண்பது ரூவா க்ரெடிட்ல இருக்கு.
தெரியும். நீ எங்க ஓடிப் போயிடுவே? இருக்கட்டும். வரட்டுமா?
போயிட்டு வாங்க சார்.
அவன் எப்படி குடும்பம் நடத்துவான் என்று மலைப்பாக இருந்தது.
லண்டன் ஸ்டோர்ஸுக்கு நடந்தேன்.
வாங்க சார். எல்லாம் போட்டாச்சு.
செக் பண்ணு லிஸ்ட்ல. எத்தனை ஐட்டம்?
இருவத்தாறு.
இங்க கணக்கு பண்ணு.
...
...
வீட்டினுள் நுழைகையில் சின்ன வெங்காய சாம்பார் மணம் மூக்கைத் துளைத்தது.
என்ன சமையல்?
ஏதோ கைக்கு வந்தது. குளிங்கோ போய். வெய்யில்ல வந்திருக்கேள், கசகசங்கல? என்ன ஜன்மமோ.
குளித்து விட்டு வந்தேன்.
மளிகை சாமானெல்லாம் தரையில் பரவியிருந்தன.
என்னது இது?
ஜாம்.
எதுக்கு இது? நம்ம ப்ரெட் சாப்படறோமா?
சப்பாத்தியோட சாப்படலாம். பூரியோட, தோசையோட.
ஆமா. நான் பொண் பொறந்த மாதிரியிருக்கும்.
இல்ல. நன்னாதான் இருக்கும்.
நாக்கை கடித்துக் கொண்டேன். ஐயோ! என்ன சொன்னேன்? போச்சு!
ஒங்கள இதெல்லாம் வாங்க சொன்னேனா?
கேளு முதல்ல.
ஒண்ணும் கேக்க வேணாம். ஒண்ணு கெடக்க ஒண்ணு பண்றதே வேலை.
இந்தோ பார். அது நான் வாங்கலை. ஜான்தான் குடுத்தான்.
"அவன் குடுத்தா? வாங்கிண்டு வந்துடறதா? வீட்லதான்