Collector Lavanyavin Kavalai
()
About this ebook
சிறுகதை என்றால் என்ன? சிறுகதை எப்படி இருக்க வேண்டும்? இந்த விவாதம் என் கதையை படித்த ஒரு நண்பருடன் ஏற்பட்டது.
தமிழ் சிறுகதைகள் ஏறத்தாழ 1950க்கு பிறகிலிருந்துதான் நமக்கு பொதுவாக கிடைக்கின்றன. தமிழ் எழுத்தாளராகிய என் தகப்பனார் திரு.ம.ந.ராமசாமியின் முதல் சிறுகதை 1947ல் பிரசுரிக்கப்பட்டது. மிகப் பழைய தமிழ் பத்திரிகையான ‘ஆனந்த விகடன்’ 1928ல் தோற்றுவிக்கப்பட்டது. அதற்குமுன் ‘விவேக சிந்தாமணி’ 1892ல் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் இவற்றில் வெளியான சிறுகதைகளை அதிகம் காண முடிவதில்லை. ஒரு வேளை முனைந்து தேடினால் கிடைக்கும் என்னவோ.
கிடைத்த தமிழ் சிறுதைகளை படிக்கையில் மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சில விடைகள் கிடைக்கின்றன.
சிறுகதை என்பது பொதுவாக ஒரு சிறிய நிகழ்ச்சியை, வெகுசில பாத்திரங்களுடன் சிறிய அளவில் மைக் அகப்பட்ட கதை. இது என்ஸைக்ளோபீடியா பிரிட்டான்னிகாவின் கூற்றை ஒத்துப்போகிறது. இந்த அமைப்பு டால்ஸ்டாய் எழுதிய ருஷ்ய சிறுகதைகளிலும் காணப்படுகிறது. சிறுகதையில் பாத்திரங்கள் விலாவாரியாக விவரிக்கப்படுவதில்லை. அவர்கள் கதையில் வரும் நிகழ்ச்சிகள மற்றும் உரையாடல்கள் மூலம் தாமாகவே விவரம் அடைகின்றனர். ஒரு பாத்திரத்தின் முழு பின்னணி தேவை என்றால் மட்டுமே விவரிப்பை காண்கிறோம்.
Read more from Dr. R.C. Natarajan
Cycle Bhagavathar Rating: 0 out of 5 stars0 ratingsPengalai Purinthu Kolla... Rating: 0 out of 5 stars0 ratingsThengaimoodi Athisayam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Collector Lavanyavin Kavalai
Related ebooks
Ivarthan, Konjam Kavani... Rating: 0 out of 5 stars0 ratingsAppavin Radio Rating: 0 out of 5 stars0 ratingsSathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Enge En Kannan Rating: 0 out of 5 stars0 ratingsIngeyuma Nee? Rating: 0 out of 5 stars0 ratingsNizhal Vazhkai Rating: 0 out of 5 stars0 ratingsIppadiyor Thaalattu Paadava? Rating: 0 out of 5 stars0 ratingsRaasi Rating: 5 out of 5 stars5/5Aagayam Kaanatha Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsKichu Kichu Rating: 0 out of 5 stars0 ratingsVelicha Poove Vaa… Rating: 0 out of 5 stars0 ratingsOru Singam Muyalagirathu Rating: 4 out of 5 stars4/5Innoruthi + Innoruthi Rating: 0 out of 5 stars0 ratingsAakasa Veedugal Rating: 0 out of 5 stars0 ratingsVithi Pichai Rating: 0 out of 5 stars0 ratingsVaazhkkai Ennum Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsEn Peyar Ranganayagi Rating: 0 out of 5 stars0 ratingsSivam Rating: 4 out of 5 stars4/5Oorkkolam Rating: 0 out of 5 stars0 ratingsUnakke Uyiraanen Rating: 0 out of 5 stars0 ratingsஉனக்கே உயிரானேன்! Rating: 0 out of 5 stars0 ratingsVenuvanavaasam Rating: 0 out of 5 stars0 ratingsIrulai Virattu Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Varai Rating: 0 out of 5 stars0 ratingsOru Coffee Kudikalama? Rating: 4 out of 5 stars4/5Boodha Kannadi Samy! Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Irakkam Enna Vilai? Rating: 0 out of 5 stars0 ratingsEn Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsUn Manasula Naan Irukkena? Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Collector Lavanyavin Kavalai
0 ratings0 reviews
Book preview
Collector Lavanyavin Kavalai - Dr. R.C. Natarajan
https://www.pustaka.co.in
கலெக்டர் லாவண்யாவின் கவலை
Collector Lavanyavin Kavalai
Author:
ஆர்.சி. நடராஜன்
Dr. R.C. Natarajan
For more books
https://www.pustaka.co.in/home/author/dr-rc-natarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
இந்த நூலில் தரப்பட்டுள்ள படங்கள் யாவும் Bitmoji என்னும் Appஐ பயன்படுத்தி, கதாசிரியரால் உருவாக்கப்பட்டவை.
பொருளடக்கம்
முன்னுரை
அக்ஷதை செல்வி
அமானுஷ்யன்
இசையின் பார்வை
இடையூறு
இன்டர்வியூ
எல்லைக்கு அப்பால்
கடுவன் பூனையும் அணில் குஞ்சும்
கலெக்டர் லாவண்யாவின் கவலை
தாய்ப்பாசம்
பட்டப் பகலில்
பிரேக்
மான் கறி
F:\Dr RCN Data on 01 March 2012\C drive\Mydocuments Data\POST RETIREMENT\SHORT STORIES\TAMIL\FOR PUSTAKA\BOOK 03\pictures\WhatsApp Image 2021-11-14 at 6.48.32 PM.jpegமுன்னுரை
சிறுகதை என்றால் என்ன? சிறுகதை எப்படி இருக்க வேண்டும்? இந்த விவாதம் என் கதையை படித்த ஒரு நண்பருடன் ஏற்பட்டது.
தமிழ் சிறுகதைகள் ஏறத்தாழ 1950க்கு பிறகிலிருந்துதான் நமக்கு பொதுவாக கிடைக்கின்றன. தமிழ் எழுத்தாளராகிய என் தகப்பனார் திரு.ம.ந.ராமசாமியின் முதல் சிறுகதை 1947ல் பிரசுரிக்கப்பட்டது. மிகப் பழைய தமிழ் பத்திரிகையான ‘ஆனந்த விகடன்’ 1928ல் தோற்றுவிக்கப்பட்டது. அதற்குமுன் ‘விவேக சிந்தாமணி’ 1892ல் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் இவற்றில் வெளியான சிறுகதைகளை அதிகம் காண முடிவதில்லை. ஒரு வேளை முனைந்து தேடினால் கிடைக்குமோ என்னவோ.
கிடைத்த தமிழ் சிறுதைகளை படிக்கையில் மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சில விடைகள் கிடைக்கின்றன.
சிறுகதை என்பது பொதுவாக ஒரு சிறிய நிகழ்ச்சியை, வெகுசில பாத்திரங்களுடன் சிறிய அளவில் அமைக்கப்பட்ட கதை. இது என்ஸைக்ளோபீடியா பிரிட்டான்னிகாவின் வரையறையை ஒத்துப்போகிறது. இந்த அமைப்பு டால்ஸ்டாய் எழுதிய ருஷ்ய சிறுகதைகளிலும் காணப்படுகிறது. சிறுகதையில் பாத்திரங்கள் விலாவாரியாக விவரிக்கப்படுவதில்லை. அவர்கள் கதையில் வரும் நிகழ்ச்சிகள் மற்றும் உரையாடல்கள் மூலம் தாமாகவே விவரம் அடைகின்றனர். ஒரு பாத்திரத்தின் முழு பின்னணி அத்தியாவசியமாகத் தேவை என்றால் மட்டுமே விவரிப்பை காண்கிறோம்.
பொதுவாக ஒரு முரணை (Irony) வெளிப்படுத்தும்போது சிறுகதை சுவாரசியமாக அமைகிறது. கதை முடிவில் படிப்பவர்கள் மனதில் ஒரு சிறிய அதிர்வு ஏற்பட்டு மனச்சலனத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு சில விஷயங்கள் இன்றியமையாதவை:
1. கதையின் சூழல் படிப்பவருக்கு சமீபமாக இருக்க வேண்டும். இது காலக்கட்டத்தினாலோ, நிகழ்வுகளினாலோ, நிகழ்ச்சிகளாலோ அல்லது கலாச்சார மற்றும் அனுபவத்தினாலோ இருக்கலாம்.
2. பாத்திரங்களின் பழக்கவழக்கங்கள் புரியவேண்டும்.
3. ஓட்டம் வேகம் நிறைந்ததாக இருக்கவேண்டும். படிப்பவர்களுக்கு படிப்பதின் வேகம் குறைவாக இருக்கலாம்; ஆனால் அவர்களின் எண்ண ஓட்டம் வேகமானது.
4. படிப்பதை சுலபமாக்கி, ஓட்டத்தை எண்ணங்களின் வேகத்திற்கு ஈடாக ஏற்படுத்துகையில் படிப்பவர் கதையால் முழுவதுமாக ஈர்க்கப்பட்டுவிடுகிறார்.
என் கதைகளில் என்னால் இயன்றவரை இவற்றை தரமுயன்றுள்ளேன். இந்த கதைகள் எந்தவித நீதி நியதிகளையும் போதிப்பதற்காக எழுதப்பட்டவை அல்ல. முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்காக எழுதப்பட்டவை. படிப்பவர் மனதில் ஒரு சிறிய தாக்கம் ஏற்படுத்த முயன்றிருக்கிறேன். ஒரு புன்னகை, ஒரு புருவம் உயர்த்தல், அட!
, அடேடே!
, அடப்பாவமே!
, அடப் பாவி!
இப்படி ஏதாவது ஒரு விளைவு, அவ்வளவுதான்.
லாவண்யா என்னும் பாத்திரம் கதையில் உருவாவதும் முடிவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதும் இப்படிப்பட்ட ஒரு முயற்சிதான். அதேபோல் இசையில் மேதையான ரத்தினத்தின் நடத்தைகள் புரிகையில் தோன்றும் மனச்சலனமும் இந்த வகைதான்.
அக்ஷதைச்செல்வி ஒரு வீடியோவாக வந்த ஒரு சுபமுடிவு கதையை சிறிது திருப்பி நோக்கினால் என்ன விளைவு என்பதில் எழுந்த கற்பனை. சுபமுடிவு கதைகள் நாம் சிறுவயதில் நிறைய படித்திருக்கிறோம். ஆனால் யதார்த்தம் பலமுறை சுபமுடிவில் ஒரு சிறு கோணல் வைக்கிறதே.
‘இசையின் பார்வை’ நான் வரிவரியாக அனுபவித்து, ரசித்து எழுதிய கதை.
உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.
ஆர்.சி. நடராஜன்
அக்ஷதை செல்வி
எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். நல்ல கருப்பான அவள் வட்ட முகமும் புன்னகையும்தான் அவள் சொத்து. எல்லோருமே அவள் புன்னகைக்கு பதில் புன்னகைப்பது இயற்கை அமைத்த ஒரு மனோதத்துவ நிகழ்வு.
சுவாமி கும்பிட வரும் எல்லோரையும் அவள் முகமலர்ந்து பார்ப்பது பக்தர்களுக்கு தம்மை அறியாமலே ஒருவித பாசிட்டிவ் எனர்ஜி தோன்றுவது போலிருக்கும்.
ஏதோ அம்மனின் மறுபிறவி என்றெல்லாம் எண்ண வேண்டாம். ஒரு சாதாரண சிறுமி, அசாதாரணமான ஏழைக் குடும்பத்திலிருந்து வருபவள்.
யாரும்மா நீ? இங்கே என்ன பண்றே? பிச்சை எடுக்கறியா?
நான் இங்கே சும்மாதானே உட்கார்ந்துக்கிட்டிருக்கேன்? உங்கக்கிட்டே காசு கேட்டேனா?
அடேங்க்ப்பா! என்னமா பேசறே. இந்தா. இந்த எட்டணாவை வெச்சுக்கோ.
தாங்க்ஸ்.
அட, இங்கிலீஷ்லாம் பேசறே! என்ன படிச்சிருக்கே?
படிக்கலை.
அப்பா அம்மா என்ன பண்றாங்க?
அம்மா இல்லை. அப்பா உடம்பு முடியாம படுத்திருக்காரு.
சாப்பாடு?
சாமி பார்த்துக்குது.
சபாஷ்! ஃபிலாஸஃபி வேறயா? பிச்சை எடுக்கறியான்னு கேக்கைல கோபம் வருது. ஆனா காசு குடுத்தா மட்டும் வாங்கிக்கறே?
நீங்களா குடுத்தீங்க. வாங்கிக்கிட்டேன். நான் உங்கக்ககிட்ட வந்து பிச்சை கேட்டேனா?
இல்லை. அதுவும் சரிதான். சரி, பூசாரி எப்ப வருவாரு?
இப்ப வந்துடுவாரு. பக்கத்து கிராமந்தான். சைக்கிள்ல வரணுமில்ல?
கோவில் திறந்திருக்கு?
ஆமா. கதவு கிடையாது.
நீதான் காவலா?
காவலா? திருடிக்கிட்டுப் போக இங்கே என்ன இருக்கு? சாமிக்கு எதுக்கு காவல்?
உன் பேரு என்னம்மா?
செல்வி.
நீ என்ன பண்றே இங்கே?
கோவிலை சுத்தம் பண்ணி வெச்சேன்.
எத்தனை தடவை சுத்தம் செய்வே?
காலைல ஒருக்கா, சாயந்தரம் ஒருக்கா.
எவ்வளோ கூலி?
கூலியா? எதுக்கு?
திடுமென அவள் முகம் சீரியசாக மாறியது. நுழைவாயில் பக்கத்தில் ஒருபுறம் ஒதுங்கி நின்றாள்.
பூஜாரி சைக்கிளை நிறுத்திவிட்டு வந்தார். கிணற்றிலிருந்து தண்ணீரை ஏற்றி கால் கை கழுவிக்கொண்டார். செல்வியை அன்று அசாதாரணமாக உற்று நோக்கிவிட்டு, சட்டைப்பையிலிருந்து சில சிறிய ரூபாய் நோட்டுகளை அவளிடம் கொடுத்தார்.
வாங்கிக்கொண்டு செல்வி படு வேகமாக ஓடினாள். சிறிது நேரம் கழித்து, அதே ஓட்டத்தில் மூச்சு வாங்க ஓடிவந்தாள்.
அவள் ஓட்டத்தின் ஒலி கேட்டு, பூஜாரி வெளியே வந்து, அவள் கொடுத்த அரிசி பொட்டலத்தை வாங்கிக்கொண்டார். உள்ளே சென்று அரிசியை தட்டில் போட்டு மஞ்சள் பொடியுடன் கலந்து வைத்தார்.
கால்மணி கழித்து ஒரு பஸ் வந்து நின்றது. அவசர அவசரமாக சிலரும் மெதுவாக மற்றவர்களும் இறங்கி கோவிலுக்கு வந்தனர். சிலர் கையோடு தேங்காய், பூ, வாழைப்பழம் இவற்றை வாங்கி வந்தனர்.
கோவிலில் உண்டியல் கிடையாது. தட்டில் விழும் காசுதான் அவருக்கு ஜீவாதாரம்.
பக்தர்கள் கையில் அட்சதையைக் கொடுத்துவிட்டு, பூஜைக்கு தயார் செய்தார்.
மணியோசை கேட்டது.
"ஓம் ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய சாஹினே
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே ।
ஸமே காமான் காம காமாய மஹ்யம்
கமேஸ்வரோ வைஸ்ரவணோ ததாது ।
குபேராய வைஸ்ரவணாய மஹாராஜாய நம:"
தீபாராதனை தீபத்தை அட்சதைத் தட்டில் வைத்து, அர்ச்சகர் கர்ப்பக்கிரகத்தை விட்டு வெளியே வந்தார். எல்லோருக்கும் கையில் அட்சதையை தாராளமாகக் தந்துவிட்டு, பகவானுக்கு அட்சதையைப் போட்டு வேண்டிக்கோங்கோ,
என்றார்.
செல்வியின் முகம் மலர்ந்தது.
சிறிது நேரம் கழித்து பக்தர்கள் வந்தவழியாக திரும்பிச் சென்றனர்.
வெளியே வந்த பூஜாரி அவளைக் கடந்து தன் சைக்கிளை நோக்கி நடந்தார்.
‘இந்த சிறுமி இங்கே தினம் வருகிறாளே! என்ன விஷயம்?’
சைக்கிளை ரிப்பேர் செய்வதுபோல் குத்தவைத்து அமர்ந்து அவளை வேவு பார்த்தார்.
செல்வி உள்ளே ஓடி, தரையை கையால் கூட்டுவது தெரிந்தது. அந்த குப்பையை
தன் பாவடையில் அள்ளிக்கொண்டு அவள் அங்கிருந்து ஓடினாள்.
அவர் மனதில் குழப்பம் அதிகரித்தது. ‘என்ன செய்கிறாள்?’
இதுவே தினமும் நடக்கிறது என்று சில நாட்களிலேயே புரிந்துக்கொண்ட பூஜாரி, ஒரு நாள் அவளுக்குத் தெரியாமல் அவளைத் தொடர்ந்து சென்றார்.
அந்த கிராமத்துக்கு வெளிப்புறமாக, கொஞ்சம் தள்ளி ஒரு ஓலைக்கூரை போட்ட நான்கு மூங்கில்