Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enna Satham Indha Neram?
Enna Satham Indha Neram?
Enna Satham Indha Neram?
Ebook79 pages1 hour

Enna Satham Indha Neram?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இக்குறுங்கதைகளின் தொகுப்பு, பெண்களின் உணர்வுகள் பற்றியது. சமூகத்தின் கட்டுப்பாடுகளைத் தாண்டி பெண்ணவளின் தேடல்கள் பற்றியது. ஆணுக்கு நிகரான அனைத்து உணர்வுகளும் ஆசைகளும் சக்திகளும் திறமைகளும் அவளுக்குள்ளும் புதைந்து கிடக்கிறது என்றும் அது ஆலகால விஷம் ஆகாமல் அமிழ்தமாய் உயிர் கொடுக்கப் புறப்பட்டால் நலம் என்றும் குறிப்பிடும் செய்தி இங்கே தரப்பட்டுள்ளது. மூடநம்பிக்கைகள் முட்டுக்கட்டைகளாகி பெண்களை சீரழிக்கும நிலைகளும் சொல்லப்பட்டுள்ளது.

வாசியுங்கள். விமர்சியுங்கள்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580148407676
Enna Satham Indha Neram?

Read more from Yamuna

Related to Enna Satham Indha Neram?

Related ebooks

Reviews for Enna Satham Indha Neram?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enna Satham Indha Neram? - Yamuna

    https://www.pustaka.co.in

    என்ன சத்தம் இந்த நேரம்?

    Enna Satham Indha Neram?

    Author:

    யமுனா

    Yamuna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/yamuna

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்ன சத்தம் இந்த நேரம்?

    சிங்க பெண்ணே

    ஒரு பீட்சவும் இரண்டு நாளைய வீட்டுச் செலவும்

    சீறும் பாம்பும் சிங்கமாய் மாறிய பெண்ணும்

    நூலகம்

    குடிகார பாட்டியும், திருத்தும் பேத்தியும்

    மோகமுள்.

    சொல்லத்தான் நினைக்கிறேன்

    என்ன சத்தம் இந்த நேரம்?

    கண்ணம்மா அந்த லாந்தர ஏத்து...எழும்பு.. டக்குன்ணு எழும்பு.. ம்ம் எந்திரிடி...

    ஏன் மாமா...

    நீ உடனே ஏத்து சொல்றேன்...

    கோரைப்பாயின் ஓரத்தில் ஒருக்களித்துக் கிடந்த கண்ணம்மா 'கும் கும்' என்று இருள் கவ்வி கருப்பு பூதம் படர்ந்த ஓலைக்கூரை முகட்டில் பூதத்தின் திறந்த கண்கள் போல அருகருகே ஒட்டி இருந்த இரு மின்மினிப் பூச்சிகளின் பொட்டு வெளிச்சம் மட்டும் புள்ளியாய் வீசிக்கொண்டிருக்க..

    இடுக்கியக் கண்களுக்குள் உறக்கம் தெளியாமல்..புறங்கையெடுத்துக் கண்களைக் கசக்கி இருட்டைப் பழக்கிவிட்டு.. சிணுங்கிக்கொண்டே எழுந்து கால்நீட்டி அமர்ந்தாள்..காலில் சுறுசுறுவென ஏதோ ஊர்ந்து சென்றதை உணர்ந்தவள்..

    எம்மாஆஆஆ.. சட்டெனக் காலை உதறினாள்...சொத் என கீழே விழுந்தது அது.. தோளைத்திருப்பித் தலையணைக்கு அடியில் பேப்பரில் மடித்து வைத்திருந்த தீப்பெட்டியைத் திறந்து ஒற்றைக் குச்சியின் தலையில் கொள்ளி ஏற்றினாள்...

    ச்சிக்..ஸ்ஸ்ர்ர்ர்ஸ்ஸ்... ஒரு நொடிதான்...தலைப்பாகை எரிந்து முடிவதற்குள் அவள் மூச்சுக்காற்றில் அணைந்துபோனது குச்சி..கண்முன்னே பறந்தது அந்த ஜந்து...

    பாச்சாத்தான் ஊர்ந்துச்சிதா..பயந்துட்டேனே..

    வேகமாய்த் துடித்த இதயத்தை கைவைத்து தடவிவிட்டு வறண்டுக் குத்தியத் தொண்டைக் குழியை எச்சில் விழுங்கி ஈரம் தந்து ஆசுவாசப் படுத்திக்கொண்டாள்..

    கால் சென்ட் சதுர நிலத்தை மறைத்து அடைத்திருந்த பச்சைச் செங்கல் கட்டின் நான்கு சுவற்றின் சுண்ணாம்புப் பூச்சுக்களும்... பூக்களின் காய்ந்த இதழ்கள் போல உதிர்ந்து ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருந்தன..

    சுவற்றின் ஓராயிரம் ஓட்டைகளைச் சுற்றிலும் கடுகுகளை ஒட்டி வைத்ததுபோல் மூட்டைப் பூச்சிகள் மலம் கழித்து வைத்துவிட்டு கூட்டம் கூட்டமாய் ஓட்டமெடுத்து ஓட்டைகளுக்குள் நுழைந்து வெளிவந்துகொண்டிருந்தன..

    மாமாஆஆஆ...

    கத்தாதடி...கேட்டுட்டேல்ல.. அப்புறம் ஏன்டி கத்தி பீதியக் கிளப்புற...லாந்தர எடுத்தியா இல்லியா...

    குச்சி அணைஞ்சிடுச்சி மாமா. இரு இன்னொண்ணு கொழுத்துறேன்...

    அடுத்தது கொழுத்துவதற்குள் மீண்டும் கேட்டது அந்த சத்தம்...கைநீட்டும் தூரத்தில் வைத்திருந்த லாந்தர் விளக்கு தடவித் தேடியதில் கையில் தட்டுப்பட்டு உருண்டு சுவற்றைப் பற்றிக் கிடந்தது..

    நேரங்கெட்ட நேரத்துல இது வேறயா..

    ஒரு கையில் எரியும் தீக்குச்சியுடன் வலதுகால் மடக்கி இடதுகால் ஊன்றி தவழ்ந்துச் சென்று லாந்தரைக் கைப்பற்றித் திரியைக் கொழுத்தினாள்.. கம்பிக் கைப்பிடியைக் கையில் பிடித்துத் தூக்கி...

    இந்தா மாமா...விளக்கை அவன் முகத்திற்கு நேராக நீட்டினாள் கண்ணம்மா. விளக்கொளியின் பரவலில் மின்மினிக் கண்கள் காணாமல் போயிருந்தன. கணவனை முதுகுப்புறமாக இறுக்கமாகக் கட்டிக்கொண்டு முட்டைக் கண்களை உருட்டி உருட்டி சுவற்றைத் துழாவினாள்..

    ஏன்டி.. வயித்துல இருக்ற எம் புள்ள மூச்சி முட்டிச் செத்துரும்.. இந்த இறுக்கு இறுக்குற..வயிறு நசுங்குது கண்ணம்மா நகர்ந்து இடம் விட்டு உக்காரு...

    பயமாருக்கு மாமா.. அது என்ன சத்தமா இருக்கும்..இப்போ கேக்கல பாரு..ஏன் மாமா இப்ப விளக்க அணைச்ச...

    இருடி...தோ.. தோ.. இப்ப கேக்குது பாரு..

    தடக்.. கடக்..டொக்.. டொக்...

    இப்போ இன்னொரு குச்சிய ஏத்து கண்ணம்மா..காற்றை மொழியாக்கிக் கூறினான்..அவளும் அடுத்த குச்சியை எரித்துக் கொலை செய்தாள்..

    இப்ப கேக்கலேல்ல...

    கேக்கல மாமா...இப்போது கண்ணம்மாவே விளக்கை அணைத்தாள்...

    டொக்..டொக்...தடக்..க்டுக்.. க்டுக்..

    "மாஆஆமாஆஆ.. என்னது மாமா இது...கதவுலதான் மாமா

    Enjoying the preview?
    Page 1 of 1