Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thendral Thappa Mudiyathu
Thendral Thappa Mudiyathu
Thendral Thappa Mudiyathu
Ebook141 pages47 minutes

Thendral Thappa Mudiyathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர்.

விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

இவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்றும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன.

இவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு.

கும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர்.

இவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580125804580
Thendral Thappa Mudiyathu

Read more from Lakshmi Ramanan

Related to Thendral Thappa Mudiyathu

Related ebooks

Reviews for Thendral Thappa Mudiyathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thendral Thappa Mudiyathu - Lakshmi Ramanan

    http://www.pustaka.co.in

    தென்றல் தப்ப முடியாது

    Thendral Thappa Mudiyathu

    Author:

    லக்ஷ்மி ரமணன்

    Lakshmi Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    தொடர்ச்சியாக நின்ற மலைகளின் வரிசை மழையில் நனைந்து குளித்துக் கொண்டிருந்தது. இருள் கவிழ்ந்து கொண்டு மாலை வேளையே இரவைப் போல் காட்சியளிக்க மலைப்பாதையின் ஏற்றத்தில் வெள்ளை மாருதி கொஞ்சம் கூட அலட்டல் இல்லாமல் மூச்சு வாங்காமல் அலட்சியமாய் ஏறியது.

    வளைந்தும் நெளிந்தும் கொண்டையூசித் திருப்பங்களைக் கொண்ட பாதை காருக்கு அடியில் அவசரமாக வழுக்கி நழுவிக் கொண்டு போயிற்று. ஒரு பக்கம் பிரும்மாண்டமாய்ப் பரவி இருந்த மலைப்பாறை...

    இன்னொரு பக்கம் முட் செடிகளும், புதர்களும் மரங்களும் கொண்ட காட்டுப் பிரதேசம் பாதாளம் வரை நேர் செங்குத்தாக இறங்கியது. காருக்குள்ளிருந்து அதைப் பார்த்தபொழுதே 'திக்' என்று பயம் நெஞ்சைக் கவ்வியது. வைப்பர்களைத் துரிதமாக வேலை செய்யவிட்டு மழையை ஊடுருவிக் கொண்டு பாய்ந்த ஹெட்லைட்டுகளின் வெளிச்சத்தில் வெகு கவனத்துடன் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான் விவேகானந்தன்.

    இவனை விவேக் என்று அழைப்பதுதான் நமக்குச் சுலபம். அதுதான் அவனுக்குப் பிடிக்கும்! அவன் தன் அருகில் வீற்றிருந்த உமாவை அடிக்கொரு முறை கவலையுடன் திரும்பிப் பார்த்த வண்ணமிருந்தான்.

    உமா வறண்டு போன தன் உதடுகளை மீண்டும் மீண்டும் நாவினால் ஈரப்படுத்திக் கொண்டாள். கண்களில் தேக்கமிட்ட கண்ணீரை அடிக்கடி கைக்குட்டையினால் துடைத்துக் கொண்டாள். இங்கே... இங்கேதான், இந்த வழியில்தான் எங்கோ ஒரு வளைவில் ஆபத்தான திருப்பத்தில் திலீப்பை விழுங்க யமதூதன் காத்திருந்தானா?

    எப்படி நடந்தது அந்த விபத்து!

    எப்படி... எப்படி?

    காரை யார் ஓட்டிக் கொண்டிருந்தார்கள்? திலீப்பா இல்லை ஓட்டுனரா? அவனுக்கு இப்படிக் கொட்டுகிற மழையில் அபுரோடுக்குப் போகவேண்டிய அவசரம் என்ன ஏற்பட்டது? காரில் பழுது ஏதும் இருந்திருக்குமோ! ஏகப்பட்ட கேள்விகள் அடுக்கடுக்காய் எழுந்து அவளைக் குடைந்தெடுத்தன.

    மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் அவள் ஐந்து நாள் விடுப்பில் அங்கே வந்திருந்தாள். அண்ணா திலீப் அபுரோட் ரயில் நிலையத்துக்கு அவளை வரவேற்க வந்திருந்தான். இருவரும் அரட்டையடித்துக் கொண்டே உணவு விடுதியொன்றில் சிற்றுண்டி அருந்தினார்கள்.

    பின் இதோ இதே வழியாகத்தான் அபுமலைக்குச் சென்றார்கள்.

    திலீப் காரை ஓட்டிக்கொண்டு வர அவள் குழந்தை போல் எதிரில் வருகிற வாகனங்களைக் கணக்குப் பண்ணினாள்.

    கொண்டையூசித் திருப்பு முனைகளை ஒவ்வொன்றாக எண்ணினாள்.

    காரைச் சுற்றிக் கொண்ட மேகங்களைக் கையால் இழுத்து உள்ளே திணித்துக் கொள்ளுகிறவளைப் போல் பாவனை செய்தாள்.

    உமா உன்னைப் பார்த்தால் ஒரு டாக்டர் என்று நம்புவது சிரமமாக இருக்கு திலீப் கேலி செய்தான்.

    ஏன்... ஏனாம்?

    நீ பண்ணுகிறதைப் பார்த்தால் குழந்தை மாதிரி இருக்கு.

    நான் ஒண்ணும் குழந்தை இல்லே அவள் சிணுங்கினாள்.

    அப்போ சீக்கிரம் கல்யாணம் செய்துட வேண்டியது தான். நல்ல பையனாகக் கிடைக்கணுமே என்கிறதுதான் என் இப்போதைய கவலை.

    எனக்குக் கல்யாணமே வேண்டாம். நான் டாக்டராய் இருந்து சமூகசேவை செய்வேன்.

    கல்யாணம் பண்ணிக் கொண்டு நல்ல பிரஜைகளை உருவாக்குகிறதும் சமூக சேவைதான்.

    மாட்டேன்... மாட்டேன்...

    எல்லோரும் அப்படிச் சொல்றவங்கதான்.

    நான் அப்படி இல்லே. ஸ்டாப் இட் திலீப். என் கல்யாணத்தைப் பத்தி மறுபடி பேசினால் இங்கேயே கதவைத் திறந்துக்கிட்டு கீழே குதிச்சிடுவேன்

    அட அதுக்குள்ளே இத்தனை கோவிச்சுக்கிட்டா எப்படி? சும்மா விளையாட்டுக்குச் சொன்னேண்டா. அப்பா கோபக்காரி! அவன் செல்லமாய் அவள் கன்னத்தில் தட்டினான்.

    அதை நினைக்கும் பொழுது உமாவுக்கு இன்னமும் அழுகை அதிகமாய் வந்தது.

    இப்போது எது நிஜம்?

    அதுவா... இதுவா?

    அந்த விபத்து மட்டும் நேர்ந்திராவிடில் அவன் மறுவாரம் தில்லிக்கு வந்திருக்க வேண்டும்.

    அவனுக்காகத் தென் டில்லியில் உணவு விடுதியொன்றில் அறை பதிவாகி இருந்தது. திரும்பி அபுரோடு செல்ல மெயிலில் பெர்த் ரிசர்வாகி இருந்தது.

    திலீப்புக்கு மிகவும் பிடிக்குமே என்று ஐஃபெக்ஸ் ஹாலில் நடக்கவிருந்த விஜய் டென்டுல்கரின் நாடகமொன்றிற்கு உமா இரண்டு டிக்கெட்டுகள் வாங்கி வைத்திருந்தாள்.

    அவன் டில்லி வந்ததும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை மனத்தளவில் திட்டமிட்டு வைத்திருந்தாள் அவள். லோதி உட்லண்ட்ஸில் போய்ச் சாப்பிட வேண்டும்.

    கன்னாட்பிளேஸைச் சுற்றி அலைய வேண்டும். திலீப்புக்கு மிகவும் பிடித்த சாம்பல் நிறத்தில் ஷர்ட் ஒன்று தன் அன்பளிப்பாக வாங்க வேண்டும்.

    தன் சிநேகிதி அஞ்சலியின் வீட்டுக்கு அவனை அழைத்துப்போய் அவள் பெற்றோர்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

    இன்னும் இப்படி எத்தனை வேண்டும்கள்!

    அத்தனையையும் கண நேரத்தில் தகர்த்தெறிந்தது அந்தத் தந்தி!

    'திலீப் பயங்கர விபத்துக்குள்ளானான். உடனே வரவும் விவேக்!'

    அவ்வளவுதான்.

    உமாவின் அத்தனை குதூகலமும் உற்சாகமும் வடிந்து போயிற்று.

    திலிப் அவளுக்கு அண்ணனாக மட்டுமா இருந்தான்! ஒரு பாசமுள்ள அப்பாவாக, அம்மாவாக, வழிகாட்டியாக சிநேகிதனாக... அவர்களது பெற்றோர்களை ஒருவர் பின் ஒருவராக இழந்த போது உமா பிளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்தாள். திலிப் அப்போது வேலையில் சேர்ந்து இரண்டே ஆண்டுகள் ஆகியிருந்தன. அன்று முதல் இன்று வரை அவன் தன்னைப் பற்றி நினைத்தது கிடையாது.

    உமாவின் விருப்பப்படியே அவளை மருத்துவக் கல்லூரியில் சேர்த்தான்.

    அவன் எந்த ஊரில் இருந்தாலும் முதல் தேதியன்று அவள் செலவுக்குப் பணம் தவறாமல் வந்துவிடும். அவள் படிப்பை முடித்துச் சம்பாதிக்கத் துவங்கியதும் அந்தத் தொகை அவளுக்கான சேமிப்பில் சேர்க்கப்பட்டது என்பதையும் உமா அறிவாள். அதன்பின் அவள் தொடர்ந்து படித்து சமீபத்தில்தான் எம்.டி. முடித்திருந்தாள்.

    திலீப்புக்கு இந்த ஊருக்கு மாற்றலாகி நான்கு மாதங்களே இருக்கும். தந்தியைப் பார்த்ததும் உமா குழப்பம் அடைந்தாள். பயங்கர விபத்து என்கிற பதத்திற்கு என்ன அர்த்தம்?

    அவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான் என்றா?

    நிலைமை மோசம் பிழைக்க மாட்டான் என்றா? இல்லை... உயிர் பிரிந்து ஆளே இல்லை என்றா? ஐயோ அப்படி இருக்காது! அதை அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. உமாவுக்கு விவேக்கின் மீது கோபம் வந்தது. என்ன அரைவேக்காடு இவன்! இப்படியா தந்தி அடிப்பார்கள்! தவிப்பில் கை கால்கள் இயங்க மறுத்தன. கண்ணீர் நிற்காமல் பெருகியது. அவள் நெருங்கிய சிநேகிதி அஞ்சலிதான் ரயிலுக்கு டிக்கெட் வாங்கி வந்தாள்.

    உமாவின் பெட்டியில் தேவையானவைகளை எடுத்து வைத்து பாக் செய்தாள்.

    எத்தனை நாள் அவசியமாக இருக்குமோ தயங்காமல் இருந்துவிட்டு வா. மற்றவற்றைப் பிறகு யோசிக்கலாம் என்று உபதேசித்தாள்.

    பட்டினி கிடக்காதே உமா. பிரயாணம் செய்யத்தெம்பு வேணாமா? என்று அன்புடன் அதட்டி அவளைச் சாப்பிட வைத்தாள்.

    விபத்து என்றால் உடனே ஆள் பிழைக்கவில்லை என்று அர்த்தமா? அநாவசியமாய்ப் பயப்படாதே எல்லாம் சரியாக இருக்கும் என்று தைரியம் சொன்னாள்.

    ஸ்டேஷன்

    Enjoying the preview?
    Page 1 of 1