Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aathma Samarpanam
Aathma Samarpanam
Aathma Samarpanam
Ebook49 pages18 minutes

Aathma Samarpanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர்.

விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

இவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்றும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன.

இவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு.

கும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர்.

இவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580125804419
Aathma Samarpanam

Read more from Lakshmi Ramanan

Related authors

Related to Aathma Samarpanam

Related ebooks

Related categories

Reviews for Aathma Samarpanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aathma Samarpanam - Lakshmi Ramanan

    http://www.pustaka.co.in

    ஆத்ம சமர்ப்பணம்

    Aathma Samarpanam

    Author:

    லக்ஷ்மி ரமணன்

    Lakshmi Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    அமைதியில் ஆழ்ந்து கிடந்தது அவைக் கூடம். மேவாரின் தலைநகரான சித்தோருக்கே பெருமை தரக் கூடிய வகையில் சலவைக் கல் தூண்களிலும், சுவர்களிலும் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த அந்த பிரம்மாண்டமான ஆலோசனை மண்டபத்தில் அமைச்சர்களும், சலுகைமிக்க மேவார் பிரபுக்களும், ஆஸ்தானக் கலைஞர்களும் குழுமியிருந்தார்கள். ஆஸ்தான சிற்பிகளில் ஒருவரான மாண்டனா. 'கும்பல்க’ரிலிருந்து (கும்பல்மீர் என்றும் இதைக் குறிப்பிடுவ துண்டு) அனுப்பியிருந்த அவசரச் செய்தி என்னவாக இருக்கும் என்று அறியும் ஆவலில் அனைவரும் மெளனமாகக் காத்திருந்தார்கள்.

    சபா மண்டபத்தின் ஆரம்பத்தில் நடு நாயகமாக அமைக்கப்பட்டிருந்த சலவைக்கல் மேடையின் மீது, நவ இரத்தினங்களும் பதித்த தங்கச் சிம்மாதனத்தில், மேவாரின் மகாராணா, நரபதி, அசுவபதி, கஜபதி, ராஜகுரு, பரம குரு, ஷைலகுரு, தனகுரு, அபிநவ பரதாச்சாரியார், மகாராஜாதி ராஜர் கும்பகரன் என்னும் கும்பா கம்பீரமாக வீற்றிருந்தார்.

    அவர் முகத்தில் சூரியனுக்கு நிகரான பிரகாசமும். கண்களில் சந்திரனுக்குரிய தண்மையுடன் கூடிய காருண்யமும் விசாலமான நெற்றியில் ஜொலித்த திருநீருடன் அறிவுச்சுடரும் ராஜபுத்திரர்களுக்கே உரிய தீர்க்கமான நாசியும், வீரத்தைப் பறைசாற்றும் நீண்ட மீசையும், துடிக்கும் உதடுகளும், ஆஜானு பாகுவான தோற்றமும் கொண்ட அவரை, மனத்தளவில் இந்திரனுக்கும், குபேரனுக்கும், போர்வலிமையில் பீமா அர்ஜுனர்களுக்கும், கொடைத் திறமையில் கர்ணனுக்கும், காருண்யத்தில் ஸ்ரீராமபிரானுக்கும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அங்கிருந்தவர்கள். அவரணிந்திருந்த நீண்ட பட்டு அங்கியும், இடுப்பில் கட்டப்பட்ட, வஸ்திரமும், மார்பை அலங்கரித்த, முத்து, வைர, வைடூரிய ஆபரணங்களும் அவருடைய கம்பீரத்தை இன்னும் அதிகரித்துக் காட்டின.

    மேடையின் இரு பக்கங்களிலும், சற்று முன்னால் சிங்காதனங்களில் அரசகுமாரன் ராய்மல்லும், கும்பராணாவின் பெரிய தந்தையார் சோண்டாவும் அமர்ந்திருந்தனர். ராணாவின் கட்டளைப்படி, வந்திருந்த மடலைப் பிரித்துச் செய்தியை உள்துறை அமைச்சர் விஸ்வரூபன்,

    Enjoying the preview?
    Page 1 of 1