Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ratha Pournami
Ratha Pournami
Ratha Pournami
Ebook49 pages17 minutes

Ratha Pournami

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விஷ்ணு உறங்கும் போது நள்ளிரவில் விழித்துப் பார்க்கிறான். நிலா சிவப்பாய் தெரிகிறது. செலுத்தப்பட்டவன் போல் எங்கோ செல்லும் அவன் கொலை செய்ய நேரிடுகிறது. ஏன்? விஷ்ணுக்கு என்னவாகிறது.

விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் ரத்தப் பௌர்ணமியை வாசித்து விடை காண்போம்.

Languageதமிழ்
Release dateAug 9, 2021
ISBN6580145507215
Ratha Pournami

Read more from Gavudham Karunanidhi

Related to Ratha Pournami

Related ebooks

Related categories

Reviews for Ratha Pournami

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ratha Pournami - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    ரத்தப்பவுர்ணமி

    Ratha Pournami

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    1

    விஷ்ணு சாப்பாடு ரெடி ஆயிடுச்சு வந்து சாப்பிட்டுப் போ

    விஷ்ணுவின் அம்மா விசாலாட்சி மாடியைப் பார்த்து குரல் கொடுத்தாள்.

    விஷ்ணுவிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே, தன் குரலை உயர்த்தினாள்.

    விஷ்ணு கீழ வாடா

    தாயின் குரலை கேட்டு எட்டிப் பார்த்த விஷ்ணு புன்னகைத்தான்.

    தோ வரேன்மா கொஞ்ச நேரம் பாட்டு கேட்க விடமாட்டே.

    சொன்னவன் காதில் மாட்டியிருந்த இயர்போனை கழற்றிக் கழுத்தில் போட்டுக்கொண்டு கீழே இறங்கினான்.

    வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தா மாடியிலேயே ஐக்கியமாயிரு. கீழே என்ன நடக்குதுன்னு எந்த அக்கறையும் இல்லை உனக்கு

    விசாலாட்சி சொல்ல, விஷ்ணு பதில் ஒன்றும் சொல்லவில்லை.

    விஷ்ணுவிற்கு இருபத்தெட்டு வயதாகிறது. கருப்பு என்றும் சொல்ல முடியாது, சிகப்பு என்றும் சொல்ல முடியாது மாநிறத்தில் காண்போர் மனதை கலைக்கும் வசீகரப் புன்னகை உடையவன்.

    இன்னும் திருமணம் ஆகவில்லை. அவனும், அம்மாவும் மட்டும்தான் இப்பொழுது வீட்டில். தந்தை சிறுவயதில் இறந்துவிட்டார். தங்கைக்கு ஆறு மாதங்கள் முன்புதான் திருமணம் முடிந்தது.

    கிண்டியில் உள்ள ரெடிங்டன் கம்பெனியில் பணிபுரிகிறான். வீடு இருப்பது குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், மூன்றாவது தெரு. சென்னைக்கு குடிவந்து ஆறு வருடங்கள் ஆகின்றன. விஷ்ணுவின் சொந்த ஊர் மதுரை. பள்ளிப்படிப்பு கல்லூரிப்படிப்பு எல்லாம் மதுரையில்தான்.

    விஷ்ணுவின் ஒரே பொழுதுபோக்கு பாட்டு கேட்பது. ஓய்வாக இருக்கும் நேரங்களில் எல்லாம் காதில் இயர்போனை மாட்டிக்கொண்டு எதையாவது கேட்டுக்கொண்டே இருப்பான். அதுவும் மாடிக்குச் சென்று இளங்காற்று வீசும் மாலைப்பொழுதுகளில் இயர்போனில் பாட்டு கேட்பது அவனுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1