Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Vaanam En Idhaya Nila
En Vaanam En Idhaya Nila
En Vaanam En Idhaya Nila
Ebook119 pages39 minutes

En Vaanam En Idhaya Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115704089
En Vaanam En Idhaya Nila

Read more from Lakshmi Rajarathnam

Related to En Vaanam En Idhaya Nila

Related ebooks

Reviews for En Vaanam En Idhaya Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Vaanam En Idhaya Nila - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    என் வானம் என் இதய நிலா

    En Vaanam En Idhaya Nila

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    அழைப்பிதழ்கள் வந்து விட்டன. கட்டுக்கட்டாக மேஜை மேல் வைக்கப்பட்டிருந்தன. அப்பா விஸ்வநாதன் தபாலில் அனுப்ப வேண்டிய பெயர் லிஸ்டை மேஜை மேல் கொண்டு வைத்தார்.

    வர்ஷினி, மெயில்ல அனுப்ப வேண்டியதை அனுப்பிட்டியா?

    ஆச்சுப்பா...

    இதோ லோக்கல் அட்ரஸ் லிஸ்ட் இருக்கு பார் என்றவன் அவனாருகில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார் வெற்றிலையைக் கிள்ளி போட ஆரம்பித்தார்.

    ஓர் ஓரமாக அவளுடைய அத்தை புவனா வந்தவர்களுக்கு பட்டுப் புடவை, நகைகள், வெள்ளிப் பாத்திரங்களை கடை பரத்திக் காட்டிக் கொண்டிருந்தாள்.

    பையன் என்ன பண்றான்? வந்தவர்களின் விசாரணை.

    டெல்லியில் பெரிய வேலையில் இருக்கான். நினைச்சா ஃபாரீன் போயிட்டு வர்ற வேலை என்றாள் அத்தை புவனா பெருமை பொங்க.

    வந்தவர்களில் ஒருத்தி இளம் பெண். வயிற்றில் அக்னி அடுப்பெரிந்தது.

    அடிக்கடி வர்ஷி அமெரிக்கா, கனடா, லண்டன்னு போய் வருவானு சொல்லுங்கோ என்றாள். எரிச்சலுடன்.

    ஆமாம்... ஆமாம்... என்ற அத்தை நெக்லெஸ்ஸைத் திறந்து காட்டினாள்.

    "பையனோட அம்மா, அக்கா தம்பிகள் எங்கே இருக்கா? டெல்லியில தானே?

    அத்தையின் முகம் மலர்ந்தது.

    அதான் இல்ல. மாப்பிள்ளைக்கு அப்பா இல்லை. அம்மாவும் சின்ன வயசுலேயே போய்ச் சேர்ந்துட்டா அப்பா ரெண்டாம் கல்யாணம் பண்ணிண்டார். அவளுக்கும் பிரபுவுக்கும் ஒத்துக்கல்ல.

    பிரபு யார்? வந்தவர்களில் ஒருத்தி கேட்டாள்.

    எங்க மாப்பிள்ளை பேர்தான். அவர் தனியா டெல்லியில் இருக்கார். இளைய தாயின் தன் ரெண்டு பெண்ணோட தஞ்சாவூர் பக்கத்து கிராமத்துல இருக்கா.

    இந்தப் பேச்சை எல்லாம் கேட்க விஸ்வநாதனுக்கு சகிக்கவில்லை. முகத்தை சுழித்தார்.

    "வர்ஷினி அம்மாதான் கூடத்து முன் அறையிலிருந்து அழைத்தாள்.

    அறையின் முன்னால் கூடத்தில் நடப்பதெல்லாம் தெரியும்படி கட்டில் போட்டுக் கொண்டு படுத்திருந்தாள். உடம்பு பலவீனம் ஒன்று டாக்டரிடம் காட்டப் போக டெஸ்ட் மேல டெஸ்ட் எடுத்து கான்சர் என்று கண்டு பிடித்தார்கள்.

    ஆனால் அம்மா கல்யாணிக்கு அது தெரியாது. ட்ரீட்மெண்ட் எடுப்பதற்குள் ஒரே மகள் வர்ஷினியின் கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என்று தீர்மானித்தார் விஸ்வநாதன். அக்கா புவனாவின் குடும்பத்துடன் உட்கார்ந்து ஆலோசித்தார் விஸ்வநாதன். சகலமும் அக்காதான். அம்மாவும், அப்பாவும் போன பின்பு இருவருக்கும் சொத்தை வைத்து விஸ்வனாதனைப் படிக்க வைத்தாள்.

    அக்கா, நான் வேலைக்குப் போய் உனக்கு நிச்சயம் கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று கண்ணீர் மல்க விஸ்வநாதன் தழுதழுத்தார்.

    ஆனால் அதற்கு சந்தர்ப்பம் தராமல் இறையருள் கூட்டி வைத்தது. குலதெய்வம் கோவிலுக்கு உற்சவத்தை முன்னிட்டு வந்திருந்தார்கள் விஸ்வநாதனும், புவனாவும், சத்யனும் அவனுடைய அம்மாவும் வந்திருந்தார்கள். பூஜை சமயத்தில் சத்யனின் பர்ஸ் காணாமல் போய்விட்ட செய்தி தெரிந்தது. ஊருக்கு எப்படித் திரும்பப் போவது என்று தெரியாமல் தவித்தார். அர்ச்சகரிடமே கேட்கலாமா என்று தாயும் மகனும் ஆலோசித்த பொழுது விஸ்வநாதன் அவர்கள் பரிதவிப்பைக் கண்டுபிடித்து விட்டான்

    ஸாருக்கு ஏதோ பிரச்சனை போல இருக்கு. எங்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்கோ. மனுஷா ஒருத்தர்க்கு ஒருத்தர் உதவி பண்ணத்தான் இருக்கோம் என்று விஸ்வநாதன் கனிவாகக் கேட்ட விதம் சத்யனுக்கு பிடித்திருந்தது.

    நீங்களும் சென்னையா? என்று சத்யன் கேட்க ஆமாம். இந்த அரியலூர் எசனை ஐயனாரப்பன்தான் எங்க குலதெய்வம். வருஷா வருஷம் வருவோம் என்றான் விஸ்வநாதன்.

    எங்களுக்கும் இவர்தான் குலதெய்வம் என்ற சத்யனின் தாய் சத்யா, இவர் கிட்ட உதவிகேளடா என்றாள்.

    ஒண்ணுமில்ல மிஸ்டர்... என்ற சத்யனை இடைமறித்து என் பெயர் விஸ்வநாதன் என்றார்.

    ம்... விஸ்வநாதன் சின்ன உதவிதான். ஆனால் அது இல்ல பெரிய உதவியா தேவைப்படுது. என் பர்ஸ் காணாம போயிடுச்சு. யார் கிட்ட கேட்கறதுனு தெரியல்ல என்றான் சத்யன்.

    இது சின்ன உதவிதான். அதை செய்யற சந்தர்ப்பத்தை எனக்குக் கொடுங்க சத்யா என்று அவன் கையைப் பிடித்துக் கொண்ட விஸ்வநாதன் தேவையான பணத்தை சற்றும் யோசிக்காமல் கொடுத்தான்…

    நீங்க ரொம்ப புத்திசாலி விஸ்வநாதன். என் பெயரைச் சொல்லி அம்மா கூப்பிட்டதுமே என் பெயரைத் தெரிஞ்சுகிட்டிங்கோ... என்றான் சத்யன்.

    மறக்காமல் விஸ்வநாதனின் விலாசத்தை வாங்கிக் கொண்டான். (மொபைல் வராத காலம் அது) சத்யனின் அம்மா பிரசாதக் கூடையுடன் அமைதியாக நிற்கும் புவனாவை தன் மனத்திற்குள் பதித்துக் கொண்டாள்.

    இது என் அக்கா புவனா என்று விசு அறிமுகப்படுத்த சத்யனின் தாய் குங்குமத்தை புவான நெற்றியில் இட்டு விட்டாள்.

    தீர்க்க சுமங்கலி பவ என்றாள்.

    எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல்ல என்றாள் புவனா கன்னம் குழியச் சிரித்தபடி.

    என் வாயில் வந்திடுச்சு. சீக்கிரம் ஆகிவிடும் என்றாள் சத்யனின் தாய்.

    அடுத்து வந்த இரண்டு நாட்களிலேயே சத்யனும், அவன் தாய் மீனாம்பிகையும் விஸ்வநாதனின் வீட்டிற்கு வந்து விட்டார்கள். பை நிறையப் பழங்களும், இனிப்பும், பூவும் கொண்டு முகம் நிறைந்த புன்னகையுடன் புவனாவிடம் நீட்டினாள் மீனாம்பிகை.

    இவ்வளவு எதுக்காகம்மா!

    முதன் முதல்ல வந்திருருக்கோம் வாங்கிக்கோம்மா என்றாள் மீனாம்பிகை.

    அன்று காலையில் விஸ்நாதன் அக்கா, இன்னிக்கு கோதுமை அல்வா பண்ணி, வெங்காய, வாழைக்காய் பஜ்ஜி பண்ணு, என்னவோ சாப்பிடணும் போல இருக்குக்கா என்றான்.

    புவனா சிரித்தாள். தம்பி இப்படி கேட்பது அதிசயமல்ல. நீ கேட்கப் போறேன்னு தெரிஞ்சோ என்னமோ எல்லா சாமானும் இருக்குடா என்று தம்பி கேட்டதை சூடா பண்ணி வைத்த சமயம் விசுவும் ஆபிசுலேர்ந்து வந்துவிட்டான்.

    அவன் வந்து கைகால் முகம் கழுவிக் கொண்டு வரும் சமயம் சத்யனும், அம்மாவும் வந்தார்கள்.

    அவர்களை உட்கார வைத்து புவனா இதோ காப்பி கொண்டு வரேன் என்று உள்ளே வந்தாள்.

    பரபரவென்ற அவர்கள் கொண்டு வந்த பழங்களை நறுக்கி வைத்து உடன் அல்வாவையும், பஜ்ஜியையும் வைத்துக் கொண்டு வந்தாள்.

    என்னம்மா, அல்வா பஜ்ஜி எல்லாம் அமர்க்களப்படுது? என்று

    Enjoying the preview?
    Page 1 of 1