Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyir Parithu Soothaadu
Uyir Parithu Soothaadu
Uyir Parithu Soothaadu
Ebook96 pages1 hour

Uyir Parithu Soothaadu

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Arnika Nasser, an exceptional Tamil novelist, Written over 300+ Novels and 100+ Short Stories, Readers who love the subjects Crime, Detective, Police, supernatural and Science will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
Uyir Parithu Soothaadu

Read more from Arnika Nasser

Related to Uyir Parithu Soothaadu

Related ebooks

Related categories

Reviews for Uyir Parithu Soothaadu

Rating: 4 out of 5 stars
4/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyir Parithu Soothaadu - Arnika Nasser

    13

    1

    ஆரஞ்சு வர்ண சூரியப் பழத்தை கடல் கிழவன் ஆசையுடன் விழுங்கிக் கொண்டான். நொடிக்கொரு நிறம் காட்டும் வர்ண கதம்ப ஆகாயம் அவசிய நொடியில் அறுபது சதவீதம் இருண்டது. வானப் பந்தலில் நட்சத்திர இலந்தைப் பழங்கள் உலக ஜனத் தொகையின் லட்ச மடங்காய் தொங்கி மினுமினுத்தன. மஞ்சள் நீராட்டு விழா மங்கையின் முகம் போல எழுந்தது முழு நிலா.

    பெசன்ட் நகரின் அந்த பங்களாவின் முகப்பில் இடமும் வலமும் சகல பணக்கார நான்கு சக்கர வாகனங்கள் கோமாவில் ஆழ்ந்திருந்தன. உள் வாசலின் இடப்பக்கம் அமர்ந்திருந்த ஓர் ஆசாமி காரிலிருந்து இறங்கி வரும் நபர்கள் கையளிக்கும் ஃபோட்டோ ஒட்டப்பட்ட உறுப்பினர் கார்டை செக் செய்தான். திருப்தி ஆனபின் உள் அனுமதித்தான்.

    பங்களாவின் சகல வட்ட திசைகளிலும் இயந்திரத் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு ஆசாமிகள் வலம்.

    ஒவ்வொரு வட்ட மேஜைக்கும் நால்வராக 50 மேஜைகளில் இருநூறு உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். அனைவரும் யூனிபார்ம் போல சாம்பல் நிற சூட்டிங் அணிந்திருந்தனர்.

    இவர்களுக்கு நேர் எதிர் பிரதான மேடையில் ஒரு வெல்வெட் குஷன் சேரில் அமர்ந்திருந்தார் அவர். பெயர் சுருக்கமாக ‘மிஸ்டர் எம்’. வாயில் பைப் புகைந்து கொண்டிருந்தது. தலைக்கேசத்தை வகிடெடுக்காமல் தூக்கி வாரி இருந்தார். வயது-சிவாஜி கணேசனைவிட ஒன்று குறைவு. கண்கள் கழுகினது போல் சிறுத்து ஆனால் மகா கூர்ப்பாய். சரீரம் உசிலைமணியில் 75 சதவீதம். ஆனால் உயரமான உடலில் சதை சீராய் பரவி.

    மிஸ்டர் ‘எம்’ தன் கைக்கடிகாரத்தைப் பாதி நொடி உன்னித்தவர் மைக்கில் கூட்டம் தொடங்கலாமா? என்றார்.

    அனைவரும் தலை ஆட்டினர்.

    இன்று முதல் நிகழ்ச்சி! உறுப்பினர் எண். 168 கொண்ட ஊட்டி நண்பர் ஆனந்தக்குட்டன் பற்றியது. ஆனந்தக்குட்டன் நம் அமைப்பில் பனிரெண்டு வருடங்களாக உறுப்பினர். இடையில் பெங்களூர் குதிரை ரேஸில் ஏகமாய் பணம் தொலைத்து விட்டு இன்று மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலையில் நிற்கிறார்...

    இதில் தலையைத் தொங்கப்போட்டபடி அந்த ஆனந்தக்குட்டன் மேடையில் வந்து நின்றார்.

    நம் அமைப்பின் விதிமுறைகளின்படி-அங்கத்தினர் யாராவது நொடித்துப் போனால் ஒரே ஒரு முறை அவருக்கு பண உதவி செய்து மீண்டும் பணக்காரராக சந்தர்ப்பம் தரப்படும். அதன்படி இன்று நாம் ஆனந்தக்குட்டனுக்கு உதவப் போகிறோம். தொகை மனம் உவந்து தரும் உறுப்பினர்கள் எழுந்து வரலாம்... பேசிவிட்டு மிஸ்டர் ‘எம்’ உறுப்பினர்களை உறுத்தார்.

    முதலில் ஒருவர் எழுந்து வந்து ஆனந்தக்குட்டன் எதிரில் நின்றார். முகத்தில் காரித்துப்பிவிட்டு அறுபதாயிரம் ரூபாயைக் கொடுத்தார். இப்படி ஒவ்வொருவராக எழுந்து வந்து ஆனந்தக்குட்டன் முகத்தில் காரித்துப்பிவிட்டு பணம் கொடுத்துவிட்டுப் போயினர்.

    அடுத்த அரை மணி நேரத்தில் 32 லட்சம் ரூபாய் ஆனந்தக்குட்டனுக்கு திரண்டது. ஆனந்தக்குட்டன் நன்றி உணர்வாய் மிஸ்டர் எம். மையும் உறுப்பினர்களையும் வணங்கினார். இறங்கி தனக்குரிய இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

    மிஸ்டர் எம். சில நொடிகள் தாமதித்தார். பின், அன்பான உறுப்பினர்களே! போன மாதம் நடந்த சூதாட்டத்தில் வெற்றி பெற்றவர் தவிர மீதம் அனைவரும் மிகவும் விசனமாக இருப்பீர்கள். இதோ உங்களுக்காக இம்மாத சூதாட்டம்...

    என்ன? என்ன? என்ன? என வினவும் முகத்தில் அனைவரும் நிமிர்ந்தனர்.

    நாம் இதுவரை சூதாடியவைகளில் புதியவகை இது. மிகப்பெரிய தொகையை முன்னிலை வைத்து ஆடப் போகிறோம். நான் படிக்கப்போகும் இந்த லிஸ்ட்டை கூர்ந்து கவனியுங்கள்...

    அனைவரும் உலக ஆர்வமாய் உன்னித்தனர்.

    ஒன்று. மேகவர்மன், நெல்லிக்குப்பத்தில் ஒரு தொழிற்சாலையில் நல்ல பதவியில் இருந்தவன். ஒரு சாத்தானின் திருவிழா நாளில் இவனின் உயிருக்கு உயிரான மனைவி அவளின் கள்ளக் காதலனுடன் காதல் மல்யுத்தம் செய்வதை பார்த்துவிட்டான். உடன் விளைவு இரு கொலைகள். தொடர் விளைவு ஆறு வருடம் கடுங்காவல் தண்டனை...

    மேகவர்மனின் நேர், பக்கவாட்டுத் தோற்றங்கள் ஸ்கிரீனில் புரஜக்ட் செய்யப்பட்டன.

    இரண்டு. கார்த்திகேயன். சென்னை. ஒரு கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படிக்கும்போது நிமிலா என்ற சூப்பர் அழகுப் பெண்ணை வெகுவாய் காதலித்தான். மறுத்த அவளைத் தூக்கிச் சென்று கற்பழித்தான். கற்பழிப்பின் கடைசி நொடியில் அவள் மூச்சு விட மறந்தாள். போலீசில் அடுத்த ஒரு வாரத்துக்குள் பிடிபட்டு பத்து வருட கடுங்காவல் தண்டனை பெற்றான்...

    கார்த்திகேயனின் நேர் பக்கவாட்டுத் தோற்றங்கள் ஸ்கிரீனில் தோன்றின.

    மூன்று. மந்திரமூர்த்தி. ஒரு பெரிய நிறுவனத்தின் மேனேஜராய் இருந்தவன். முதலாளி கொடுத்த சம்பளம் ஆடம்பரச் செலவுகளுக்குப் போதவில்லை. மூளை குறுக்கு வழி தேடியது. ஒரு நாள் முதலாளியின் செக்புக் எடுத்து மிகப் பெரிய தொகை எழுதி அவர் கையெழுத்தை இவன் போட்டான். அவன் கஷ்ட காலம். லபக்கென்று பிடிபட்டு ஏழு வருடம் சிறைத்தண்டனை அடைந்தான்...

    மந்திரமூர்த்தி ஸ்கிரீனில் தோன்றினான்.

    நான்கு. பாலு ஆனந்த். ஆட்டோ டிரைவர். தன் பரம எதிரியின் குடும்பத்தை ரோட்டில் ஆட்டோ ஏற்றிக் கொலை செய்தான். 8 வருடம் சிறைத் தண்டனை பெற்றான்...

    பாலு ஆனந்த் திரையில் பளிச்சினான்.

    ஐந்து. மாயநாதன். ஒரு நக்ஸலைட் குரூப்பின் தலைவன், வெடிகுண்டு தயாரிப்பது இவனின் உப தொழில். தமிழ் நாட்டிலுள்ள ஒரு வானொலி நிலையத்தை தகர்க்க முயன்று மாட்டிக்கொண்டு ஆயுள் தண்டனை அடைந்தவன்...

    கண்களில்

    Enjoying the preview?
    Page 1 of 1