Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vadaamalar
Vadaamalar
Vadaamalar
Ebook101 pages29 minutes

Vadaamalar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Arnika Nasser
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466909
Vadaamalar

Read more from Arnika Nasser

Related to Vadaamalar

Related ebooks

Related categories

Reviews for Vadaamalar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vadaamalar - Arnika Nasser

    1

    "இந்த வரன் வேண்டவே வேண்டாம். வேற ஏதாவது இருந்தா சொல்லுங்க!"

    ஏன் சாமி?

    போயும் போயும் ஒரு சினிமாக்காரனுக்கு எம் பொண்ணைக் கட்டித்தர நான் தயாரா இல்லை!

    "ஏன் அப்படி சொல்றீங்க?’

    சினிமாக்காரன்கிட்ட ஒழுக்கம் இருக்காதுய்யா! என் பொண்ணு ஆயுள் முழுக்கக் கண்ணீரும், கம்பலையுமா நிக்கணுமா? எதுக்கு வேதனையை விலை கொடுத்து வாங்கணும்? வேற சொல்லுங்க!

    தரகர் மௌனமாக இருந்தார்.

    தற்சமயம் கைவசம் இல்லை. இந்த வரன்தான் நல்லா பொருந்துது!

    நிதானமாக் கொண்டு வாங்க. தேடத் தொடங்கி ஒரு வருஷம்தானே ஆகுது. அவளுக்கும் வயசு 24 தான் ஆச்சு. தப்பில்லை. நீங்க புறப்படுங்க

    தரகர் புறப்பட்டுப் போய்விட்டார்.

    மேனகா வீட்டில்தான் இருந்தாள்.

    அன்று அவளுக்கு ஆபீஸ் இல்லை.

    தனியார் நிறுவனம் ஒன்றில் டைப்பிஸ்ட் வேலை மேனகாவுக்கு. சுமார் சம்பளம்தான்.

    மேனகா நல்ல நிறமும், ஓரளவு அழகிலும் சேர்த்திதான். கண்களைக் கிறங்கடிக்கும் அளவுகளுடன் வசீகரமான பெண்தான்.

    அனாவசியமாக யாருடனும் பழகமாட்டாள். ஓரளவு ரிசர்வ்ட் டைப்தான்.

    ஆனால் மனதுக்குள் நிறைய ஆசைகளை சுமந்து கொண்டிருந்தாள்.

    சொந்த வீடும், காரும், கை தட்டியவுடன் வந்து நிற்கும் ஆட்களுடனும் வாழ வேண்டும் என்ற ஆசை.

    பிறந்த வீட்டில் அதற்கெல்லாம் வழியில்லை. தான் சம்பாதிக்கும் ஆயிரத்துச் சொச்சத்துக்குக் கூட பட்ஜெட் போட்டுவிடும் அம்மா....

    அப்படியும் பற்றாக்குறை!

    என்ன செய்வது?

    மேனகா இங்கு எதுவும் பலிக்காது என்பதால் - தன் ஆசைகள் எதையும் வெளியே சொல்வதில்லை.

    ‘வரப்போகும் கணவன் பணக்காரனாக இருந்தால் ஆசைகள் நிறைவேற வாய்ப்புண்டு’

    ‘கிடைப்பானா?’

    ‘பணக்காரனிடம் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். அப்பாவால் செய்ய முடியுமா?’

    ‘சாதாரணமாக ஒரு வரன் வந்தாலே செய்வதற்குள் அப்பாவுக்கு முழி பிதுங்கி விடும்.’

    பிறகு?

    இந்த ஒரு வருடமாக அப்பா வரன் பேசத் தொடங்கிவிட்டார்.

    இதுவரை யாரும் பெண் பார்க்க வரவில்லை.

    மேனகா! குடிக்கத் தண்ணி கொண்டுவாம்மா!

    வர்றேன்பா

    நீருடன் மேனகா வெளிப்பட,

    என்ன வரன் அது? அம்மா கேட்டுக் கொண்டிருந்தாள்.

    சினிமால உதவி டைரக்டரா வேலை பாக்கறானாம். வேண்டாம்னு சொல்லிட்டேன்!

    ஏன்?

    என்னடீ ஏன்? சினிமாக்காரனுக்கு நம்ம பொண்ணு வாழ்க்கைப்பட்டா நிம்மதியா இருப்பாளா?

    அம்மா பேசவில்லை.

    வேண்டாம்! கஞ்சி குடிச்சாலும் நம்மை மாதிரி ஒரு நடுத்தர வர்க்கம் அமையட்டும்!

    அந்த சினிமாக்காரன் பணக்காரனா?

    தெரியலை. நான் கேக்கலை. நமக்கு அவசியமில்லாததைப் பற்றிப் பேசுவானேன்!

    தண்ணீர் கொண்டு வந்தாள் மேனகா.

    வாங்கிக் குடித்தார்.

    அப்பா

    என்னம்மா?

    அந்த உதவி டைரக்டர் வரனை ஏன் வேண்டாம்னு சொல்லணும்?

    மேனகா நீ என்ன சொல்ற?

    தீர விசாரிக்கறது. சினிமால உள்ளவங்க எல்லாருமே தப்பானவங்கனு பொத்தாம் பொதுவுல ஒரு முடிவுக்கு வர்றது நியாயமில்லைபா!

    மேனகா

    நல்லா விசாரிச்சிட்டு, நமக்குப் பிடிக்கலைனா விட்டுர்றது. தப்பாப்பா?

    அதில்லைமா! அப்படி அந்த வரன்தான் வேணும்னு என்ன இருக்கு? உனக்கு வயசு கூடியும் போகலை. நீ பார்க்க மோசமாவும் இல்லை. விடம்மா!

    அப்பா

    சொல்லும்மா!

    என் உள் மனசுல படுதுப்பா!

    என்ன படுது?

    இந்த வரன் முடிவாகும்னு.

    அப்பா அவளை அதிர்ச்சியுடன் பார்த்தார்.

    அப்பா யாருக்கு எங்கே முடிச்சு போட்டு வச்சிருக்கோ? அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும். நடக்கறது நடக்கட்டும்னு அதோட போக்குல விடுங்கப்பா!

    என்னை என்னம்மா செய்யச் சொல்ற?

    நாளைக்கே தரகரை வரவழைச்சு அந்த உதவி டைரக்டர் வரனையும் பாருங்க. அமைஞ்சா விசாரிக்கறது. இல்லைனா, விட்ரலாமேப்பா!

    அவ சொல்றதும் சரித்தான் யோகம் அதுதான்னா யாரால மாற்ற முடியும்?

    மேனகா உள்ளே போய் விட்டாள்.

    அதுக்கில்லைடி! சினிமாக்காரன்னா, நிச்சயம் குடியும், கூடாத மற்ற விவகாரங்களும் இருக்கும்.

    சொல்றேன்னு நீங்க கோவப்படக்கூடாது!

    சொல்லு

    உங்க தம்பி சினிமாக்காரரா?

    கல்யாணி!

    எந்த நேரமும் போதைல வாழலை? இதப்பாருங்க சினிமாக்காரங்களைக் குறை சொல்ல யாருக்கு இங்கே தகுதி இருக்கு? குடும்பத்துல உள்ள எல்லாருமே ஒழுங்கா இருக்காங்களா? சந்தர்ப்பம் அமையாத காரணமா சலனங்கள் வெளில வரலை

    நீ என்ன சொல்ற?

    அந்த வரனைப் பாருங்க! விசாரிங்க! பிடிச்சிருந்தா, மேற்கொண்டு போகலாம். இல்லைனா விட்ரலாம்! என்ன நஷ்டம்?

    நான் யோசிக்கணும்!

    "அது இப்ப இல்லை. அந்த வரனைப் பற்றி விசாரணை நடத்தின பின்னால கூடி உட்கார்ந்து யோசிக்கலாம் வேணுமா,

    Enjoying the preview?
    Page 1 of 1