Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sarppa Viyugam
Sarppa Viyugam
Sarppa Viyugam
Ebook142 pages35 minutes

Sarppa Viyugam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Sarppa Viyugam

Read more from Rajeshkumar

Related to Sarppa Viyugam

Related ebooks

Related categories

Reviews for Sarppa Viyugam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sarppa Viyugam - Rajeshkumar

    20

    1

    The human body is made up of matter and space. The soul is present in between the two eyebrows like a sparking star.

    ஜெயா...

    ட்ரஸ்ஸிங் டேபிளுக்கு முன்பாய் நின்று இரண்டாம் முறையாக பௌடர் கோட்டிங் கொடுத்து கொண்டிருந்த ஜெயா கணவன் ஹரி கூப்பிட திரும்பிப், பார்க்காமலேயே ம் நின்றாள்.

    "உன்னோட தம்பி வருண் நல்லா தூங்கிட்டிருக்கான். அவனை அப்படியே தூங்க விட்டுட்டு நாம் மட்டும் போட் ஹவுஸ்க்குப் போயிட்டு வந்துடலாமா...?'

    என்ன சொன்னீங்க... என்னோட தம்பி வருணை விட்டுட்டுப் போறதா...?

    ஆமா...

    இந்த ஊட்டிக்கு அவன் நம்ம கூடவே வந்ததே போட்ஹவுஸுக்காகத்தான்...

    இது ரொம்பவும் கொடுமை ஜெயா.

    எது...?

    ஊட்டிக்கு வந்து நாலைஞ்சு நாள் ஜாலியா இருக்கலாம்ன்னு பார்த்தா உன்னோட தம்பியும் வர்றேன்னு ஒட்டிகிட்டது. அவனை ஏதாவது ஒரு காரணம் சொல்லி ஊர்லேயே கட் பண்ணிட்டு வந்திருக்கணும்...

    பாவங்க... ஒரு சின்னப் பையனோட ஆசையை 'மளுக்'ன்னு முறிச்சுட்டு வர்றது ரொம்பத் தப்பு...

    அவனா... சின்னப் பையன்...?

    பின்னே... வயசு எட்டுதானே...?

    வயசு என்னமோ எட்டுதான். ஆனா அவன் பேசற பேச்சு இருக்கே...! அறுபது வயசு கிழவன் மாதிரி பேசுவான்...

    எங்க பரம்பரை அப்படி...

    பெரிசா பீத்திக்காதே... இப்ப அவனை என்ன பண்ணலாம். தூங்கிட்டிருக்கிறவனை இப்படியே ரூமுக்குள்ளே விட்டு பூட்டிட்டுப் போயிடலாமா... இல்லை... எழுப்பி கூட்டிட்டு போயிடலாமா...?

    கூட்டிட்டுப் போயிடலாங்க...

    சரி... அவனை எழுப்பு...

    ஜெயா வேகவேகமாய் போய் கம்பளிப் போர்வைக்குள் இருந்த தன் தம்பியை உசுப்பினாள்.

    டேய்... வருண்...

    கம்பளியை உருவினாள் ஜெயா.

    டேய் வருண்... எந்திரி... நானும் அத்திம்பேரும் போட் ஹவுஸுக்கு கிளம்பிட்டிருக்கோம்...

    வருண் எழுந்து உட்கார்ந்தான். முகத்தைப் பெரிய மனுஷத் தோரணையில் வைத்துக் கொண்டு சொன்னான்.

    அக்கா...! நான் போட் ஹவுஸுக்கு வரலை. நீயும் அத்திம்பேரும் போய்ட்டு வந்துடுங்க...

    நீ...?

    நான் ரூம்லேயே இருந்துக்கறேன்...

    ஏண்டா...?

    வருண் இரண்டு கைகளாலும் தன் கன்னங்களைத் தாங்கிக் கொண்டான். பார்வையை எங்கோ வைத்த படி சொன்னான்.

    எனக்கு ரூம்ல இருக்கத்தான் பிடிக்குது

    என்னது... ரூம்ல இருக்கத்தான் பிடிக்குதா?

    ஆமா...

    ஏண்டா...! ஊர்ல இருக்கும்போது ஊட்டிக்குப் போகணும் போகணும்ன்னு பாடாய் படுத்தினியே? ஊட்டிக்கு வந்ததுமே ஏண்டா இப்படி அழிச்சாட்டியம் பண்றே? எந்திரிச்சு ட்ரஸ் பண்ணிக்கோ. போட் ஹவுஸுக்கு போலாம்.

    நான் வரலை...

    என்னங்க... இவன் இப்படி அடம் பிடிக்கிறான். இவனை ரூம்ல தனியா விட்டுட்டு நாம் மட்டும் எப்படிப் போறது...?

    ஹரி இப்போது வருணிடம் குனிந்தான்.

    டேய்... வருண்...! உன்னோட பெரிய மனுஷத்தனத்தையெல்லாம் மூட்டை கட்டி ஒரு ஓரமா வெச்சுட்டுக் கிளம்பு...

    ஸாரி... அத்திம்பேர்... எனக்கு வெளியே வரப் பிடிக்கலை. நீங்களும் அக்காவும் போய்ட்டு வாங்க. நான் ரூமை உள் பக்கமா தாழ் போட்டுக்கிட்டு டி.வி.யில கார்ட்டூன் சேனல் பார்த்துட்டிருக்கேன்.

    ஜெயா தன் இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு தம்பியை ஒரு உஷ்ணப் பார்வை பார்த்தாள்.

    உதை விழும். மரியாதையா எங்ககூட கிளம்பி வரப்போறியா இல்லையா...?

    ஜெயாவையே பார்த்தான் வருண்.

    என்னடா பார்க்கறே... போய் மொதல்ல மூஞ்சியை அலம்பிட்டு வா...

    வருண் தரையை உதைத்து விட்டு அறையின் மூலையில் இருந்த பாத்ரூமுக்குள் போனான்.

    ஹரியைப் பார்த்தான் ஜெயா.

    இவனுக்கு என்னங்க ஆச்சு...?

    என்னைக் கேட்டா...? உன்னோட குடும்பமே லூஸ் குடும்பம். பின்னே எப்படி இருப்பாங்க...?

    இதோ பாருங்க... என்னோட குடும்பத்தை அநாவசியமா இழுக்காதீங்க... எனக்குக் கெட்ட கோபம் வரும்.

    உள்ளதைச் சொன்னா கோபம் வரத்தான் செய்யும்...

    சரி... எங்க குடும்பம்தான் லூஸு குடும்பம்ன்னு தெரிஞ்சும் என்னை ஏன் கட்டிக்கிட்டீங்க...?

    கட்டிக்கிட்ட பின்னாடிதானே லூஸ் குடும்பம்ன்னு தெரிஞ்சுது...

    ஜெயா கோபத்தில் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு டீபாயின் மேல் இருந்த பித்தளை ஃப்ளவர் வாஷ் ஒன்றை எடுத்துக் கொண்டு ஓங்கினாள்.

    ஹரி ஒதுங்கிக் கொண்டு சிரித்தான்.

    அடிச்சுடாதே...! ஃப்ளவர் வாஷ்க்கு ஏதாவது ஒண்ணு ஆயிட்டா... ஹோட்டல் பில்லில் அமெளண்ட் ஏறிடும்.

    டெலிபோன் கூப்பிட்டது. போய் ரிஸீவரை எடுத்தான்.

    ஹலோ...

    ஸார்... இது ஹோட்டல் ரிசப்ஷன்...

    "சொல்லுங்க...'

    "உங்களைப் பார்க்கிறதுக்காக உங்க ஃப்ரண்ட் மிஸ்டர் கிறிஸ்டோபர் வந்து ரிசப்ஷன்ல வெயிட் பண்ணிட்டிருக்கார். உங்க ரூமுக்கு அனுப்பி வைக்கலாமா ஸார்...?

    ப்ளீஸ்

    "ஹரி ரிஸீவரை வைத்த இரண்டாவது நிமிஷம் இருபத்தேழு வயது கிறிஸ்டோபர் கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்தான்.

    வாடா தடியா...

    ஸாரிடா ஹரி...

    எதுக்கு ஸாரி...?

    என்னைக் கேட்டு வீட்டுக்கு நாலைஞ்சு தடவை போன் பண்ணிட்டியாம்... நான் ரெண்டு நாளா அவுட் ஆஃப் ஸ்டேஷன். கோயமுத்தூர்ல ஒரு லா அண்ட் ஆர்டர் ப்ராப்ளம். என்கொய்ரிக்காகப் போய்ட்டு அரை மணி நேரத்துக்கு முன்னாடிதான் திரும்பி வந்தேன். வந்தவுடனே வீட்ல என்னோட மிஸஸ் நீ போன் பண்ணினதைப் பத்தி சொன்னா... பைக்கை எடுத்துகிட்டு ஓடி வர்றேன்...

    ஹரி

    Enjoying the preview?
    Page 1 of 1