இரவுக்கு ஆயிரம் 'GUN' கள்
()
About this ebook
Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Read more from ராஜேஷ்குமார் Rajeshkumar
மூன்று வினாடி முகம் Rating: 5 out of 5 stars5/5நிலா வெளிச்ச சதி Rating: 5 out of 5 stars5/5அவென்யூ மரங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsஜூலையில் ஒரு கொலை Rating: 0 out of 5 stars0 ratingsதூரத்தில் ஒரு சிகப்புக்கொடி Rating: 0 out of 5 stars0 ratingsஇது சதிவேளை Rating: 0 out of 5 stars0 ratingsஉடைந்த நிலா Rating: 0 out of 5 stars0 ratingsஆயுள் ஆறே நாள் Rating: 0 out of 5 stars0 ratings
Related to இரவுக்கு ஆயிரம் 'GUN' கள்
Related ebooks
Iravukku Aayiram Kangal Rating: 4 out of 5 stars4/5Sigappaaga Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5Poove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Yethiri Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Meendum Rating: 0 out of 5 stars0 ratingsOliyin Nizhalil... Rating: 0 out of 5 stars0 ratingsபுல்லட் சேம்பர் Rating: 0 out of 5 stars0 ratingsBullet Chamber Rating: 0 out of 5 stars0 ratingsPagalil Ingey! Iravil Engey? Rating: 0 out of 5 stars0 ratingsNaanaga Naanillai Rating: 0 out of 5 stars0 ratingsSiraiyil Oru Paravai Rating: 5 out of 5 stars5/5Aadatha Oonjajkal Rating: 4 out of 5 stars4/5Yaar Rating: 5 out of 5 stars5/5Neruppodu Vilaiyadu! Rating: 5 out of 5 stars5/5Nesam Marakkumo Nenjam Rating: 5 out of 5 stars5/5Thattungal Irakkapadum Rating: 0 out of 5 stars0 ratingsதட்டுங்கள் இறக்கபடும்...! Rating: 0 out of 5 stars0 ratingsPoi Satchi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thoranangal Katti Rating: 0 out of 5 stars0 ratingsIravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Ratthamillatha Manithan Rating: 0 out of 5 stars0 ratingsOdaathey Kolaikaraa Rating: 5 out of 5 stars5/5Kaadhalukku Oru(th)thee Rating: 0 out of 5 stars0 ratingsOru Nalliravin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratingsFebuary - 30 Rating: 3 out of 5 stars3/5ரத்தம் சிந்தும் ரோஜாக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsRattham Sinthum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsKaiyil Sikkiya Minnal Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Inge Virkkapadum Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for இரவுக்கு ஆயிரம் 'GUN' கள்
0 ratings0 reviews
Book preview
இரவுக்கு ஆயிரம் 'GUN' கள் - ராஜேஷ்குமார் Rajeshkumar
1
இருட்டுச் சாயம் கரைந்து கொண்டிருந்த அந்த விடியலில் - வாசலுக்கு வெளியே சைக்கிளின் மணியோசைக் கேட்டது.
உல்லன் போர்வைக்குள் இருந்த கணவன் பிரகதீசின் முதுகோடு ஒட்டிப் படுத்துக் கொண்டு. கண்களை மூடியிருந்த ஸ்வப்னா வழக்கமான அந்த மணியோசையைக் கேட்டு விழித்துக் கொண்டாள்.
பால்காரன் முனுசாமி இந்நேரத்துக்கு வந்து விட்டானா?
ஸ்வப்னா எழுந்து கட்டிலை விட்டு இறங்கினாள். குழந்தை ப்ரீத்தியை அணைத்தபடி படுத்திருந்த பிரகதீசின் கால்களை ஒற்றிக் கன்னத்தில் போட்டுக் கொண்டவள், நெருங்கிப் போய் குழந்தையின் கன்னத்தில் முத்தமொன்றைப் பதித்து விட்டு விலகி நடந்தாள்.
திடீரென்று தூக்கம் விழித்த அந்த நிலையிலும் அழகாக இருந்தாள் ஸ்வப்னா. பிரகதீஷின் ராத்திரி விளையாட்டில் நெற்றியில் இருந்த சாந்துப் பொட்டு கரைந்து போயிருந்தது. காதோர முடிக்கற்றைகள் சிலும்பியிருந்தது. உடம்பு பூராவும் ஒரு சந்தோஷ வலி தெரிந்தது.
கணவனின் நினைப்பில் பிறந்த புன்னகையோடு ஸ்டூலில் வைத்திருந்த பாத்திரத்தை ஒரு கையில் எடுத்துக் கொண்டே நேர் எதிர் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கண்ணாடிக்குள் தெரிந்த ஸ்வப்னா கலைந்த கேசங்களை மறு கையால் ஒதுக்கிச் சரி செய்தாள்.
சைக்கிள் மணியின் உச்சமடைந்த ஓசையால் நிதானத்திலிருந்து விடுபட்டு கதவைத் திறந்து போய்ப் பாத்திரத்தை நீட்டினாள்.
"ஊம்... ஊத்து.’’
"உங்க ஒரு வீட்டுக்காகவே பத்து நிமிஷம் முன்னாடி புறப்பட்டு வர்றேன்மா.
‘‘ஆமா, கார்ப்பரேஷன் தண்ணியையே பாலா மாத்தி ஊத்தற உனக்கு இந்த அளவுக்கூட அசெளகரியம் பண்ணலேன்னா மனசு கேக்காது பாரு" சீரியஸாய் ஸ்வப்னா சொன்னதும் ‘பக்’கெனச் சிரித்து விட்டான்.
‘‘ஏய்...ஏய்... என்ன எவ்வளவு ஊத்தறே?"
வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை ஒரு லிட்டர் அதிகமா வாங்குவிங்களேம்மா!
அடச்சை! மறந்தே மறந்துட்டேன்.
முனுசாமி போனதும் நாளின் ஞாபகம் வர பிரமித்தாள்.
வெள்ளிக்கிழமை! வீடு வழிக்க வேண்டும்... தலைக்குக் குளிக்க வேண்டும். கோயிலுக்குப் போக வேண்டும்... எல்லாவற்றிற்கும் மேலாய் தலைக்குக் குளிப்பதென்றாலும் ஏக ரெளஸ் பண்ணும் ப்ரீத்திக் குட்டியைக் குளிக்க வைத்து..."
எல்.பி.ஜி. எரிந்து கொடுத்த சூட்டிற்கு மேல் பால் பாத்திரத்தை வைத்துவிட்டுப் பல் தேய்க்கப் போனாள். திரும்பி வரவும் பொங்கவும் சரியாயிருக்க அவசரமாய் எடுத்து விட்டு, நீரைக் கொதிக்க வைத்த பின் யோசித்தாள்.
குளிக்கலாமா?
முதலில் ப்ரீத்தியைக் குளிக்க வைப்போம்! ஒரு பெரிய பிரச்சனை தீரும்.
சின்ன சைஸ் பிரஷ்ஷின் தலையில் டூத் பேஸ்ட்டை அப்பி, எடுத்துக் கொண்டு படுக்கையறையை நோக்கி நடந்தாள். சரியான குட்டிப் பிசாசு!
ப்ரீத்தி...எந்திரி குளிக்கலாம்...
கத்தியபடியே அறைக்குள் நுழைந்ததும் திடுக்கிட்டாள். பிரகதீஷ் மட்டும்தான் படுத்திருந்தான்.
ஓ... வெள்ளிக்கிழமை போராட்டம் ஆரம்பமாகி விட்டது.
அதற்குள் ‘டோக்கர்’ கொடுத்துவிட்டு ஒளிந்து கொண்டு விட்டாள்.
குனிந்து கட்டிலடியில் பார்த்தாள். அசைந்த திரைச் சீலையை விலக்கிப் பார்த்தாள், அறைக் கதவுக்குப் பின்புறம், பீரோ சந்து... எங்குமே இல்லை.
ஹய்யோ...!
தலையில் தட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.
"ஏய் ப்ரீத்தி...ப்ரீத்தி...’’
முன் வாசலுக்குத்தான் போயிருக்க வேண்டும், போனாள் கத்தினாள்.
ப்ரீத்தி...
கத்தின குரலுக்கு நிசப்தம்.
காணவே காணோம்.
‘‘ரீத்திக் குட்டி... தலைக்குக் குளிக்காட்டிப் போகுது வா... காப்பி குடிக்கலாம்..."
வாசல் முழுக்க கண்களைச் சுழல விட்டாள்.
காம்பவுண்டோரம் இருந்த பச்சைப் பசேல் அவரைக்கொடி சன்னமான குலுங்களோடு கேட்டது.
"நிஜமாவாம்மா...?’’
அடக் கழுதை, அங்கேதான் இருக்கியா?
ப்ராமிஸ்ஸா! தலைக்கு ஊத்த மாட்டியே?
"மாட்டேன். சொன்னதும் அவரைக்