Yamuna Nadhi
3.5/5
()
About this ebook
Read more from Vidhya Subramaniam
Thunbam Nergaiyil… Rating: 5 out of 5 stars5/5Cauvery Karaiyil Oru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsValampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Anandha Alaigal Rating: 5 out of 5 stars5/5Pon Veenai Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsOomathai Pookkal Rating: 4 out of 5 stars4/5Varuvaal, Kaadhal Devathai… Rating: 3 out of 5 stars3/5Asaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Nilavey... Rating: 5 out of 5 stars5/5Vedikkai Manithargal…! Rating: 5 out of 5 stars5/5Kaadhal 24x7 Rating: 4 out of 5 stars4/5Malargale Malarungal Rating: 5 out of 5 stars5/5Oomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Vittil Poochigal Rating: 5 out of 5 stars5/5Kopura Vasal Rating: 0 out of 5 stars0 ratingsAgayam Ullavarai Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Odangal Rating: 0 out of 5 stars0 ratingsAval Mugam Kaana Rating: 4 out of 5 stars4/5Enthanuyir Kaadhalaney! Rating: 5 out of 5 stars5/5
Related to Yamuna Nadhi
Related ebooks
Kaadhal Neram Rating: 5 out of 5 stars5/5Gopura Kalasangal Rating: 5 out of 5 stars5/5Maya Maan Rating: 0 out of 5 stars0 ratingsPoo Mazhai Ennul...! Rating: 0 out of 5 stars0 ratingsAndha Maalai Mayakkam Rating: 0 out of 5 stars0 ratingsEn Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsVaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Soorya Dharisanam Rating: 0 out of 5 stars0 ratingsVittil Poochigal Rating: 5 out of 5 stars5/5Uravu Sonnavan Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsAgni Rating: 5 out of 5 stars5/5Kanavu Devathai Rating: 1 out of 5 stars1/5Nesamey Narumana Pookkalaai...! Rating: 0 out of 5 stars0 ratingsEnkengum Un Vannam Rating: 0 out of 5 stars0 ratingsKoodu Marantha Kuyilkal Rating: 5 out of 5 stars5/5Kozhaigal Rating: 0 out of 5 stars0 ratingsIthazhoram Varalama Rating: 0 out of 5 stars0 ratingsAgayam Ullavarai Rating: 0 out of 5 stars0 ratingsOru Thirumanam Nichayikkapadugirathu Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Aasaigal Rating: 5 out of 5 stars5/5Sollathey Yarum Kettal Rating: 5 out of 5 stars5/5Vazhikatti Vazhi Thavarugirathu! Rating: 5 out of 5 stars5/5Maaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Padigal Rating: 0 out of 5 stars0 ratingsMerke Oru Uthayam Rating: 0 out of 5 stars0 ratingsNaan Unnodu Than Rating: 0 out of 5 stars0 ratingsVaasamillaa Malarithu Rating: 5 out of 5 stars5/5Asaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Inba Irave Nee Vaa! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Yamuna Nadhi
2 ratings0 reviews
Book preview
Yamuna Nadhi - Vidhya Subramaniam
http://www.pustaka.co.in
யமுனா நதி
Yamuna Nadhi
Author :
வித்யா சுப்ரமணியம்
Vidhya Subramaniam
For other books
http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
இனிய நட்புக்கு,
தரமான புதினங்கள் மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும் என்பதை அதன் பதிப்புகளிலிருந்து புரிந்து கொள்ளலாம். யமுனா நதியின் இரண்டாம் பதிப்பு இது. எந்தப் பத்திரிகை யிலும் வெளிவராமல் நேரடிப் பதிப்பாக வெளிவந்த புதினம் இது. எனக்கு நிறைய வாசக நட்புகளை ஏற்படுத்திக் கொடுத்த நாவல் இது. எண்பதுகளின் இறுதியில் கலைஞரின் ஆட்சியில் சாவ்லான் அமைப்பின் மூலம் மும்பை சிவப்பு விளக்குப் பகுதிகளிலிருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்ட அபலைப் பெண்களைப் பற்றி அன்றைய தினசரிகளில் பலப்பல கண்ணீர்க் கதைகளை வாசித்த பாதிப்பில் எழுதிய நாவல்தான் யமுனா நதி.
இந்த நாவலை வாசித்து விட்டு ஒரு பெண்மணி என்னிடம் தொலைபேசியில் பேசினார். தனக்கு நான்கு ஆண் மகன்கள்தான் பிறந்ததாகக் கூறியவர், யமுனா மாதிரி ஒரு பெண் பிறக்கவில்லையே என்று ஏங்குவதாகவும் வருத்தப்பட்டவரிடம், அதற்கென்ன, இப்போதுகூடப் பெற்றுக் கொள்ளலாமே என்று சொன்னதும், அவர் தனக்கு எண்பத்தைந்து வயதாகிறது என்று பதில் சொன்னபோது, எனக்கு வாயடைத்துப் போயிற்று. இந்த வயதிலும் ஆர்வமாகப் புத்தகங்களைத் தேடித் தேடிப் படிக்கும் அவரிடமிருந்து எனது ஒவ்வொரு நாவலுக்கும் மறக்காமல் தொலைபேசி பாராட்டு வந்து கொண்டிருக்கிறது. இந்தப் பாராட்டுகள்தான் எனது எழுத்துக்களுக்கு அழுத்தமும்வலிமையும் சேர்க்கின்றன. உயர்ந்த ரசனைகள் கொண்ட மிக நல்ல வாசகர்கள் என் புத்தகங்களை வாசிக்கிறார்கள் என்பது கூடுதலான பொறுப்புணர்ச்சியை எனக்குத் தந்திருக்கிறது. எனது ஒவ்வொரு படைப்பையும் இன்னும் அதிகத் தரத்தோடு தர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யமுனா நதிக்குப் பின்பு வெளி வந்திருக்கும் எனது நாவல்களை வாசிக்கும்போது இது புரியும்.
யமுனா நதி தற்போது சன் டி.வி.யில் ‘தீர்க்க சுமங்கலி’ என்ற பெயரில் மெகா தொடராகவும் வந்து கொண்டிருக் கிறது. எனது யமுனா நதியில் ஒரே ஒரு தாஜ்மஹால்தான் அழகாகப் பிரதிபலிக்கும், ஆனால் இந்த மெகா யமுனா நதியில் பலப்பல கதாபாத்திரங்கள் பிரதிபலிக்க, அந்தப் பிம்பங்களுக்கு நடுவில் தாஜ்மஹால் சற்றே மறைந்து விட்டது எனலாம். மெகா சீரியல் என்றால் அப்படித்தான். கிளைக்கதைகள் வேண்டாம், மூலக் கதைகள் மட்டும் போதும் என விரும்புகிறவர்கள் இந்த யமுனா நதியை வாசிக்கும் வகையில் இதன் இரண்டாம் பதிப்பை வெளியிட்டிருக்கும் தேவி வெளியீட்டிற்கு என் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
வித்யாசுப்ரமணியம்
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
பாரதியார்
1
இதமான விடிகாலைப் பொழுதில் சட்டென்று துயில் கலைந்தது. போர்வையை விலக்கி விட்டு எழுந்து உட்கார்ந்து சில நொடிகள் கண் மூடிப் பிரார்த்தனையில் ஆழ்ந்துவிட்டு, பிறகு எழுந்து பால்கனி கதவைத் திறந்தாள் யமுனா. முகத்தில் காலைக் காற்று சிலீரென்று தாக்கியது. பூக்களின் வாசத்தோடு வீசிய காற்றை இழுத்துச் சுவாசித்தாள்.
காலைப் பொழுது என்பது இயற்கையும் இறைவனும் கைகோத்து ஆனந்த நடம் புரியும் நேரம். இந்த நேரத்தை அனுபவிப்பது ஒரு வரம். ஒரு சுகம். இதை அனுபவிக்கத் தெரியாத மனிதன் வெறும் இயந்திரம், தோட்டம் முழுக்கப் புகை மண்டலமாய் முன்பனி சூழ்ந்திருக்க, செடி, கொடிமரங்களில் பனித் துளிகள் பளபளத்தன. விடியலை உணர்ந்து கொண்ட பறவைகளின் உற்சாக ஒலிகள் தோட்டம் முழுக்கப் பூபாளமாய்ப் பரவின. சரசரவென்று அணில் ஒன்று மாமரத்தி லிருந்து இறங்கி, பாதி வழியில் அவளையும் உற்றுப் பார்த்து விட்டுச் செல்ல, யமுனா அதற்குச் சிரித்தபடி குட்மார்னிங் சொன்னாள்.
வண்டுகளும், தேனீக்களும் தங்கள் பணியைத் துவக்கியிருந்தன. வண்ண வண்ணப் பட்டாம் பூச்சிகள் தம் அழகான இறக்கை விரித்துப் பறந்து ஜாலம் செய்தன. இந்த அற்புதங்களை ரசிக்கவே மீண்டும் மீண்டும் பிறக்கலாம். அந்த அழகை மேலும் ரசிக்க நேரமில்லாத காரணத்தால் யமுனா உள்ளே வந்து பாத்ரூமிற்குள் நுழைந்தாள். என்றைக்குமில்லாத படி பரபரப்பு அன்றைக்கு அவளிடம் தொற்றிக் கொண்டது. காரணம் ரவீந்திரன். மேல்படிப்பு முடிந்து லண்டனிலிருந்து திரும்புகிறான் ரவி.
ரவியின் கூரிய அறிவும் நரம்பியல் துறையில் அவன் காட்டிய ஆர்வமும் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளும் லண்டனிலிருந்து அவனை மேல் படிப்புக்காக வரவேற்கச் செய்தது. அன்று சென்றவன் இன்று நரம்பியல் துறையில் நிபுணனாகப் பட்டம் பெற்றுத் திரும்புகிறான். நியூரோ சர்ஜன் என்பது சாதாரண விஷயமல்ல. யமுனா அவனை நினைத்துமிகவும் மகிழ்ந்தாள்.
குளித்து விட்டு வந்த போது இண்டர்காம் கத்தியது. எடுத்து என்ன என்றாள். 'காப்பி கொண்டு வரட்டுமா, யமுனா?" என்றார் நீலகண்டன். நானே கீழே வரேன் என்று சொல்லி விட்டுக் கீழே வைத்தாள்.
இளம் பச்சை நிற கார்டன் சாரி உடுத்தி, தலையைப் பின்னாமல் ரப்பர் பாண்ட் போட்டுக் கொண்டு, பவுடர் பூசி, சின்னதாய்ச் சிகப்புப் பொட்டு வைத்து, ரிஸ்ட் வாட்சைக் கட்டியபடியே கீழே வந்தாள்.
குட் மார்னிங் யமுனா!
என்றான் திவாகர்.
குட் மார்னிங்! இன்னிக்கு என்ன ஹாட் நியூஸ் பேப்பர்ல?
என்றபடி டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.
"இன்னிக்கு எல்லாப் பேப்பர்லேயும் ஒரே ஒரு ஹாட் நியூஸ்தான்.'
என்ன அது?
மேல் படிப்பு முடிந்து நரம்பியல் நிபுணனாகத் தாயகம் திரும்பும் டாக்டர் ரவீந்திரனுக்கு வாழ்த்துக்கள்!
ஏய்... கிண்டலா?
என்ன இங்க கலாட்டா, காலங்கார்த்தால?
"வாங்க, சித்தப்பா, பேப்பர்ல என்ன ஹாட் நியூஸ்ணு கேட்டா. சொன்னேன்,' என்றான் திவாகர்.
ரவீந்திரன் வரதைப் பற்றியா?
சிவசங்கரன் சிரித்தார்.
ஏன், அது ஹாட் நியூஸ் இல்லையா?
ம். ம். ஹாட் நியூஸ்தான் யமுனாவுக்கு
நீலகண்டன் நெய் வடியும் பொங்கலும் சட்னியும் கொண்டு வந்தார்.
ஒய்நீலகண்டன், உம்ம சமையலைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு எனக்கு கொலஸ்ட்ரால்தான் வரப் போறது.
அது சரி! நான் நெய் விடாமப் பண்ணினாலும், டாக்டர் சார் கோவிச்சுக்கறேளே! நீ சொல்லு யமுனா, இனிமே நான் நெய் விட்டுப் பொங்கல் பண்ணட்டுமா? வேண்டாமா?
நீங்க ஒண்ணு செய்யுங்க, மாமா.
என்று திவாகர் குறுக்கிட்டான். சித்தப்பாவுக்கு மட்டும் நெய்யும் முந்திரியும் இல்லாம தனியா எடுத்து வெச்சுட்டு எங்களுக்கு நெய்யைக் கொட்டித் தாளிச்சு ஜமாய்ச்சுடுங்கோ.
படவா, நான் உன்னைத் தாளிச்சுடுவேன்
என்று சிரித்த சிவசங்கரன், என்ன யமுனா, உனக்கு நாழியாகலையா?
என்றார்.
"இதோ’ என்று கடைசி ஸ்பூன் பொங்கலையும் விழுங்கி விட்டு எழுந்தாள்.
ஏம்பா, நீங்க எப்போ வருவீங்க?
"இல்லை யமுனா. இன்னிக்கு நான் வர முடியாது. நீயே பார்த்துக்கோ, எனக்குப் பூண்டி வரைக்கும் போகணும்.'
பூண்டிக்கா..?
"யெஸ். அங்க மெடிக்கல் செக்கப் பண்ணக் கூப்பிட்டிருக் காங்க.'
யாருக்கு?
"நிறையப் பேருக்கு. நீ கூடக் கேள்விப் பட்டிருப்பாயே.
சாவ்தான் மூலமா பம்பாய் சிவப்பு விளக்குலேயிருந்து
மீட்டுட்டு வந்த பெண்களைப் பத்தி."
ஆமா.
"அவங்களுக்குதான் மெடிக்கல் செக்கப் பண்ணக் கூப்பிட்டிருக்காங்க. எய்ட்ஸ் இருக்கான்னு பரிசோதனை பண்றதுதான் மெயினான விஷயம். நான் புறப்படறேன். மணியாச்சு.'’
த்ரில்லிங்கா இருக்குமே. நானும் வரட்டுமா?
வேண்டாம்மா. அந்தப் பெண்கள் எப்படிப் பழகு வாங்கன்னு சொல்ல முடியாது. மரியாதையா நடந்துக்க மாட்டாங்க. அவங்க உணர்ச்சிகள் என்னன்னு புரியாம நீ அவங்களைப் பார்த்துப் பழகறது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயம். நீ கிளம்பு. நர்ஸிங் ஹோம் விழிச்சிருக்கும். பேஷண்ட்ஸ் வெயிட் பண்ணிட்டிருப்பாங்க... டாக்டரே லேட்டா போகலாமா?
சிவசங்கரன் தனது மாருதியில் ஏறிக் கொண்டார்.
சித்தப்பா, நானாவது வரட்டுமா?
'எதுக்குடா? போ. போய்த் தோட்டத்துக்குத் தண்ணி ஊத்திட்டு படிக்கற வழியைப் பார். கோட் அடிச்ச... படவா, கண்ணை நோண்டிருவேன்.
ஆ...மா... மிரட்டலுக்கு ஒண்ணும் குறைச்சலில்ல. கண்ணு நோண்டற மூஞ்சியப் பார்.
என்ன முணுமுணுப்பு?
ஒண்ணுமில்ல, திருக்குறள் சொன்னேன்.
திருக்குறள் யார் எழுதினது திவாகர்?
யமுனா கேட்டாள்.
நம்ம ஒளவையார்தான் தெரியாதா?
நாசமாப் போச்சு! யமுனா, ரவி வந்தா முதல்ல இவன் மூளையை ஆராயச் சொல்லு உள்ள என்ன இருக்கோ, தெரியலையே...
"கரெக்ட் யமுனா, சித்தப்பா மூளையைக் கூட ஆராயணும். பாம்பின் கால் பாம்புதானே அறியும்,' என்ற திவாகர் ஓடியே போனான்.
சிவசங்கரன் சிரித்தபடி காரைக் கிளப்ப, யமுனா தோட்டத்து ஒற்றையடிப் பாதை வழியாக நர்ஸிங் ஹோமை நோக்கி நடந்தாள்.
ஒவ்வொரு படுக்கையாகச் சென்று நோயாளிகளைப் பரிசோதித்து நர்ஸூகளிடம் குறிப்புகள் கொடுத்து விட்டு அவுட் பேஷண்ட்டுகளையும் பார்த்து முடித்து விட்டுத் தன்னறைக்கு யமுனா வந்தபோது மணி இரண்டாகி யிருந்தது.
டேபிளில் காத்திருந்த மெடிக்கல் ரிப்போர்ட்டுகளை நோட்டம் விட்டு நோயாளியின் பெயர், பரிசோதனை முடிவு, வியாதியின் தன்மை அனைத்தையும் சிறு குறிப்புகளாக எழுதித் தந்தையின் பார்வைக்குத் தயாராக வைத்தாள்.
நர்ஸை அழைத்தாள்.
சிஸ்டர்...! ஈவினிங் நான் வர மாட்டேன். ஐ திங்க் அப்பா வந்தாலும் வந்துடுவார். ஏதாவது எமர்ஜென்சின்னா டாக்டர் முகேஷைக் கூப்பிட்டுக்கங்க. நான் வரட்டுமா?
ஓ.கே. டாக்டர்,
என்றாள் நர்ஸ்.
யமுனா பாத்ரூம் சென்று முகம் கழுவித் துடைத்துப் புத்துணர்ச்சியோடு வெளியே வந்து கைப் பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
வாசல்வரை கூட வந்திருக்க மாட்டாள். நர்ஸ் மூச்சிரைக்க ஓடி வந்தாள்.
சாரி டாக்டர். அந்த அஞ்சாம் நம்பர் பெட் இல்ல. ஹார்ட் பேஷண்ட்..
ஆமா, என்ன?
திடீர்னு தூக்கித் தூக்கிப் போடுது. பல்ஸ் குறையுது.
யமுனா வேகமாய் ஓடினாள்.
ஆக்ஸிஜன் பொருத்தி ஈ.சி.ஜி. எடுத்துவிட்டு முகேஷ்க்குப் போன் பண்ணி உடனே வரச் சொன்னாள்.
உடனடியாக ஆபரேஷன் செய்யா விட்டால் ஆள் பிழைக்க மாட்டான். முகேஷ் வந்ததும் ஆபரேஷன் தியேட்டருக்குச் சென்றார்கள்.
ஆறு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு வெற்றிகரமான அறுவைச் சிகிச்சை முடிந்து அவனைப் பிழைக்க வைத்தார்கள். யமுனா முகேஷூக்கு நன்றி சொன்னாள். இருவரும் வெளியே வந்தபோது திவாகர் காத்திருந்தான்.
என்ன யமுனா, மறந்துட்டாயா? ஏர்போர்ட் போகலையா?
"திடீர்னு ஒரு ஆபரேஷன் திவாகர். ரவியும் டாக்டர்தானே புரிஞ்சுப்பார். நாளைக்கு அவரைப் பார்த்தாப் போச்சு.’' யமுனா சிரித்தாள்.
நர்ஸிங் ஹோமில் ஒரு பகுதி முழுக்கச் சிவசங்கரனின் கண்காணிப்பிலிருந்த நோயாளிகள் இருக்க, மறுபகுதி பிரசவ விடுதியாக இருந்தது. யமுனாதான் முழுக்க முழுக்க அதைப் பராமரித்து வந்தாள். இளம் வயதிலேயே ஒரு சிறந்த கைனகாலஜிஸ்ட் என்ற பெயர் வாங்கிவிட்டதால் நாளுக்கு நாள் அங்கு கர்ப்பிணிகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வர ‘முழுக்கப் பிரசவத்துக்குன்னே தனி நர்ஸிங் ஹோம் நவீன வசதிகளோட பெரிசா கட்டணும்பா…’ என்று அடிக்கடி அப்பாவிடம் கோரிக்கை மனு சமர்ப்பிப்பாள் யமுனா. நாவிங் ஹோமை ஒட்டிப் பொட்டல் வெளி ஒன்று வெகு காலமாகவே கட்டப்படாமல் இருந்தது. அது யாருக்குச் சொந்தம்என்று தெரியாத நிலையில் அதைப் பற்றி விசாரிக்கச்சொல்லித்திவாகரிடம் சொல்லியிருந்தார் சிவசங்கரன்.
திவாகரு அலைந்து திரிந்து ஒரு வழியாகச் சொந்தக்காரர் யாரென்று கண்டுபிடித்து விட்டான். அவர் ஒரு கன்னடத்துச் சமையல்காரர் அவரைப் பார்த்தால் இந்த ஜென்மத்தில் வீடுகட்டு என்று தோன்றவில்லை. அவருடைய தாத்தா காலத்தில் ஆயிரமோ இரண்டாயிரமோ கொடுத்து வாங்கிப் போட நிலமாம்அது பரம்பரையாய் அவர் பெயருக்கு மாறியிருந்தது. நிலத்தை விற்றுத்தான் தன் மூன்று பெண்களுக்கும் கல்யாணம் பண்ண வேண்டும் என்றதும்,திவாகர் அடுத்தவாரம் அவரை வீட்டுக்கு வரச் சொல்லிவிலாசம் கொடுத்து விட்டு வந்தான்.
மறுவாரம் அவர் மகிழ்ச்சி நிறைந்த முகத்தோடு வந்தார்.
"நீங்கநிலம் கேட்ட நேரம் மூத்தவளுக்கு ஒரு இடம் அமையும்போல இருக்கு ஆடி பொறக்கறதுக்கு முந்திகல்யாணம் வெச்சுக்கணும்னு சொல்லிட்டாங்க,’' என்றார்அவர்.
அப்படியா என்று யோசித்த திவாகர், சித்தப்பா காலையிலவெளியில போனவர் இன்னும் வரலையே.
என்றான்.
"என்ன திவாகர், யார் இவர்? அப்பாவை இன்னும் காணலையே, எங்க போனார்? ஏதாவது சொல்லிட்டுப் போனாரா?'’ என்றபடி இறங்கி வந்தாள் யமுனா.
திவாகர் விவரம் சொன்னதும் யமுனாவின் முகம் மலர்ந்தது.
இன்னிக்குத் தேதிக்கு கிரவுண்டுக்கு அம்பதாயிரம் போகும். நான் உங்களுக்காக மேலே பத்தாயிரம் கூடத் தரத் தயாரா இருக்கேன். மொத்தம் எத்தனை கிரவுண்டு இருக்கும்?
"நாலு கிரவுண்டும்மா... ஏதோ