Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kolai Sei Kadhala
Kolai Sei Kadhala
Kolai Sei Kadhala
Ebook86 pages28 minutes

Kolai Sei Kadhala

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By K.G.Jawahar
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466664
Kolai Sei Kadhala

Read more from K.G.Jawahar

Related to Kolai Sei Kadhala

Related ebooks

Related categories

Reviews for Kolai Sei Kadhala

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kolai Sei Kadhala - K.G.Jawahar

    17

    1

    சரசரவென்று விடியல் வந்து கொண்டிருந்தது... கிழக்கே வெளுப்பின் கீற்று!

    வெள்ளை நிக்கர், வெளுப்பு பனியன், சொட்டு நீலம் போட்டு முக்கியெடுத்த மாதிரியான ஷூவுடன் ஜாக்கிங் போய்க்கொண்டிருந்த ஆசாமிகள்... சாலையின் ஓரத்திலேயே இவர்களுக்காக வைத்திருக்கும் எடைமிஷின்... பானை ஒன்றில் அருகம்புல் சாறு விற்றுக் கொண்டிருப்பவன்...

    டாமி... டாமி... என்று புசுபுசு நாய்க்குட்டியை இழுத்துக்கொண்டே ஓடும் வயதான ஆசாமிகள்... நைட்டியுடன் தடக் தடக்கென்று குலுங்க நடக்கும் நடுவயதுப் பெண்கள்...

    சுத்தமான ஓஸோன்... அப்பழுக்கற்ற காற்று...!

    லீலா தினம்தினம் ரசிக்கும் காட்சிகள் தான்.

    சிக்கென்ற புடவையில் ஸ்லிம்மாக இருக்கும் லீலா, வியாசன் வீட்டு வேலைக்காரி.

    ‘சீக்கிரம் வியாசன் வீட்டிற்குப் போகணும்... இன்று ஐந்து நிமிடம் லேட்’, என்று நினைத்துக்கொண்டவளுக்கு அன்று அவளுக்கு அந்த விபரீத விடியல் என்று தெரியாது!

    2

    வியாசனைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

    கம்பெனி ஒன்றில் நல்ல உத்யோகம். கை நிறைய சபபளம் கைனடிக் வாகனத்துடன் வசதியான பங்களா...

    போன வருஷம் கல்யாணமாயிற்று.

    அழகான மனைவி.

    பெயர் அப்ஸரா.

    அவளைக் கைப்பிடித்தவுடன் வியாசன் தன்னை மறந்தான். உலகத்தின் பேரழகி தனக்குக் கிடைத்து விட்டதாய் பூரித்தான். அவள் சந்தனக் கழுத்தும், பளிங்கு முகமும், சிவந்த உதடும், மல்லிகைப் பூச்சிரிப்பும் அவனை அப்படியே வீழ்த்தி விட்டன...

    ஆனால்...

    அவளுக்கு?

    ஏதோ இடறல், நெருடல், சாந்தி முகூர்த்தத்திலேயே ஏதோ புஸ்ஸென்று முகம் காட்டி, ஒதுங்கினாள். பயம் என்று நினைத்தான். விலகி நின்று இடைவெளிவிட்டு, சில நாள் கழித்து அவளைத் தொட்டபோதும் விலக்கினாள்...

    ஏன், என்னாச்சு? அல்லது எல்லாப் பெண்களுமே இப்படித்தானா? அவனுள் ஒரு பயம் வந்து படிந்தது...

    சில நாட்கள், மாதங்கள், அவள் சற்று மாறியிருந்தாள். கொஞ்சம் பேச்சு வந்திருந்தது...!

    ஆனால்... ஆனால்...

    வியாசனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வெளியே சொல்லப் பயம், யாரையும் டாக்டரைக் கேட்கலாமா?

    எந்த டாக்டரை? மன நல டாக்டரா?

    அவனுக்கு யாரையும் நினைவுக்கு வரவில்லை...

    யோசித்துப் பார்த்ததில்-

    அவின்யூ சாலையில் ஒரு புது பித்தளை போர்டு பார்த்த ஞாபகம், புதுசாய், பளபளப்பாய்.

    ‘டாக்டர் பொன்னுரங்கம்-மன நல மருத்துவர்’ –

    அவரிடம் போய்க் கேட்டால் என்ன?

    அவன் தீர்மானித்தான்.

    நான்தான் டாக்டர் பொன்னுரங்கம். யூஷ்வலா செவ்வாய்க் கிழமை கன்ஸல்டேஷன் கிடையாது... லேசாகச் சிரித்தான்.

    ஓ... ஐயாம் ஸாரி...

    பரவாயில்லை. வந்துட்டீங்க... என்ன பிராப்ளம்...? நேரடியாக விஷயத்துக்கு வந்தார் பொன்னுரங்கம்.

    வியாசன் அவரையே பார்த்தான்.

    நான் பெரிய வயசாளி டாக்டர் என்று நினைத்தேன்... என்றான் வியாசன்.

    பெயர் பார்த்து நினைச்சுட்டீங்களா? என் அப்பா பிரியமா வைச்ச பெயர்... சொல்லுங்க... என்ன பிராப்ளம்...?

    வியாசன் தயங்கினான். டாக்டர்தான் என்றாலும் இவர் அந்நிய மனுஷர். இவரிடம் போய்...

    பயப்படாதீங்க. சொல்லுங்க... என்ன விஷயமானா’லும். பெர்ஸனல்? அபிஷியல்?... செக்ஸ்...? பிராபளமான பாஸ்...? பொஸஸிவ்வான மனைவி...?- எதைப் பற்றியும் சொல்லலாம். விஷயம் ஸீக்ரெட்டாக இருக்கும்...

    அதிர்ந்தான் வியாசன்.

    மனதில் உள்ளதைப் படம் பிடித்துவிட்டானா?

    செருமிக் கொண்டான்... வந்து... பிராப்ளம் என் மனைவியால்... எனக்கு?

    ம்...

    அவள் என்னிடம் விலகியே இருக்கிறாள்... எதுக்கும் கிட்டே வருவதில்லை...

    எவ்வளவு நாளா?

    கல்யாணமானதிலிருந்து...

    எப்ப கல்யாணமாச்சு...?

    போன வருஷம்...

    இதுவர...?

    தொட்டதில்ல. தொடவிட்டதில்ல... -வியாசன் தழுதழுத்தான். எனக்குப் புரியல... ஐ லவ் ஹர்...!

    உங்களுக்கிடையில் ஏதாவது பெர்ஸனாலிட்டி வித்யாசம்?

    நோ. எனக்கு ஏற்ற மனைவி. நல்ல அழகு. பாருங்க... போட்டோ...- பர்ஸை உருவி போட்டோ எடுத்துக் காண்பிக்க-டாக்டர் பொன்னுரங்கம் போட்டோவைக் கூர்ந்து பார்த்தார்.

    3.

    லீலா நடையை - எட்டிப்போட்டாள். வியாசன் வீட்டிற்குப் போவதற்கு லேட்டாகிவிடுமோ? என்று பயந்தாள். காரணம் அப்ஸரா-எஜமானியம்மா கொஞ்சம் கோபக்காரி. நல்லவள்தான். ஆனால் இந்த முணுக்கென்ற முன் கோபம் அவளுக்கு மைனஸ் பாய்ண்ட்.

    லீலாவிற்கு அவளின் கோபமும் எரிச்சலும் பிடிக்காது. அதைத் தவிர்க்க விரும்புவாள். இந்த இடத்தில் வேலை செய்யப் பிடித்திருந்தது. நல்ல சம்பளம், சாப்பாடு, சாயங்காலம் ஆறுமணிக்கெல்லாம் ஃப்ரீ. அதன்பின் லீலா கூடை முடையலாம். பீடி சுற்றலாம். அம்மாவைக் கவனித்துக் கொள்ளலாம்.

    Enjoying the preview?
    Page 1 of 1