Kaadhal Mutham Tharuvaaya?
By Maheshwaran
()
About this ebook
என் கண்ணின் மணியான வாசகர்களுக்கு வணக்கம்!
என் அன்பு தந்தை திரு பொ.கணபதி அவர்களின் மறைவு என்னை ஆழ்ந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. என்னால் தொடர்ந்து எழுத முடியுமா என்பதே சந்தேகமாக இருந்தது. மரணம் என்பது எல்லோருக்கும் வரக்கூடியது தான் என்றாலும் என்னால் தாங்கவே முடியவில்லை. மீள முடியாத வேதனையிலிருந்து என்னை மீண்டும் மீட்டெடுத்தது எனது எழுதுகோல் தான்.
காதல் முத்தம் தருவாயா? கதை வித்தியாசமான படைப்பு. இக்கால பெண்கள் பெற்றோரிடம் எதையுமே மறைக்கக்கூடாது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். இல்லாவிட்டால் இக்கதையின் நாயகி வண்ணக்கிளி மாதிரி தத்தளிக்க வேண்டியது தான்.
மரகதப் பொன் வீணையான தன் மனைவி வண்ணக்கிளியை சந்தேகம் கொண்டு புழுதியில் வீசிய முகிலன் மறுபடியும் காதல் இசையை மீட்டினானா?
வாசித்து பாருங்கள்
மகேஷ்வரன்.
Read more from Maheshwaran
Aayiram Kodi Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsTick.. Tick.. Thik. Rating: 4 out of 5 stars4/5Mullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsLinga Pura Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Thoppu Marmam Rating: 5 out of 5 stars5/5Varuvean Naan Rating: 5 out of 5 stars5/5Pachaikili Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Kobam Varum! Rating: 0 out of 5 stars0 ratingsThik Thik Thilothi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vennila Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Naanuranga Rating: 0 out of 5 stars0 ratingsThappithu Vidu... Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsRaja Nagam Rating: 0 out of 5 stars0 ratingsThalaivan Sooda… Nee Malarnthai Rating: 0 out of 5 stars0 ratingsUn Manasula Naan Irukkena? Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mudiyavillai...! - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsManal Sirpangal Rating: 0 out of 5 stars0 ratingsMalargal Pesuma? Rating: 2 out of 5 stars2/5Mayanginean Solla Thayanginean Rating: 0 out of 5 stars0 ratingsIravum Pagalum Un Uruvam Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathai Koduthu Vidu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Devathai Azhaikkiral... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kiliye Kobama? Rating: 0 out of 5 stars0 ratingsMalligai Poovai Maarivida Aasai Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Pattampoochi Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathil Vizhuntha Thirumana Maalai! Rating: 0 out of 5 stars0 ratingsNee Kavithai Naan Kaagitham Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathil Idam Irukkiratha? Rating: 0 out of 5 stars0 ratingsMudhalai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kaadhal Mutham Tharuvaaya?
Related ebooks
Nizhalattam Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Kaanatha Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsMalarey Mounama? Rating: 0 out of 5 stars0 ratingsAagaya gangai Rating: 5 out of 5 stars5/5Thunbam Nergaiyil… Rating: 5 out of 5 stars5/5Irulai Virattu Rating: 0 out of 5 stars0 ratingsIvala En Magal? Rating: 0 out of 5 stars0 ratingsUyirai Pirikka Mudiyuma? Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalantidave Rating: 0 out of 5 stars0 ratingsUnakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsChirotkavin Payam Rating: 0 out of 5 stars0 ratingsManithargal Paathi Neram Thoongukirargal Rating: 5 out of 5 stars5/5Kolai, Innoru Kolai! Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5En Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsUyirin Uyire Rating: 5 out of 5 stars5/5Megam Thedum Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsAvaloru Kathanayagi Rating: 5 out of 5 stars5/5Poo Maalaiye Thol Serava? Rating: 0 out of 5 stars0 ratingsRishiyum Manushiyum Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Pirintha Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsVaana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsOondru Kol Rating: 0 out of 5 stars0 ratingsIngeyuma Nee? Rating: 0 out of 5 stars0 ratingsOru Coffee Kudikalama? Rating: 4 out of 5 stars4/5Uravum Pirivum Rating: 0 out of 5 stars0 ratingsKalainthu Pona Mehangal Rating: 0 out of 5 stars0 ratingsKichu Kichu Rating: 0 out of 5 stars0 ratingsNijam Pondra Poi Rating: 0 out of 5 stars0 ratingsTheekkul Viralai Vaithal Rating: 4 out of 5 stars4/5
Reviews for Kaadhal Mutham Tharuvaaya?
0 ratings0 reviews
Book preview
Kaadhal Mutham Tharuvaaya? - Maheshwaran
http://www.pustaka.co.in
காதல் முத்தம் தருவாயா?
Kaadhal Mutham Tharuvaaya?
Author:
மகேஷ்வரன்
Maheshwaran
For more books
http://www.pustaka.co.in/home/author/maheshwaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
என்னைப்பற்றி…
என் கண்ணின் மணியான வாசகர்களுக்கு வணக்கம்!
என் அன்பு தந்தை திரு பொ.கணபதி அவர்களின் மறைவு என்னை ஆழ்ந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. என்னால் தொடர்ந்து எழுத முடியுமா என்பதே சந்தேகமாக இருந்தது. மரணம் என்பது எல்லோருக்கும் வரக்கூடியது தான் என்றாலும் என்னால் தாங்கவே முடியவில்லை. மீள முடியாத வேதனையிலிருந்து என்னை மீண்டும் மீட்டெடுத்தது எனது எழுதுகோல் தான்.
காதல் முத்தம் தருவாயா? கதை வித்தியாசமான படைப்பு. இக்கால பெண்கள் பெற்றோரிடம் எதையுமே மறைக்கக்கூடாது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். இல்லாவிட்டால் இக்கதையின் நாயகி வண்ணக்கிளி மாதிரி தத்தளிக்க வேண்டியது தான்.
மரகதப் பொன் வீணையான தன் மனைவி வண்ணக்கிளியை சந்தேகம் கொண்டு புழுதியில் வீசிய முகிலன் மறுபடியும் காதல் இசையை மீட்டினானா?
வாசித்து பாருங்கள்
மகேஷ்வரன்.
1
கண்கள் ஏங்குது
உனக்காக
இதயம் துடிக்குது
உனக்காக
உயிரும் கரையுது
உனக்காக
இதழ்கள் தவிக்குது
உனக்காக
இதயம் துடிக்குது
உனக்காக
ஊயிரும் கரையுது
உனக்காக
இதழ்கள் தவிக்குது
உனக்காக
இளமை காத்திருப்பது
உனக்காக
நாள்காட்டியில் தேதி பார்த்தால் வண்ணக்கிளி. முதல் நாளுக்குரிய தாள் கிழிக்கப்படாமலே இருந்தது. குளியலறையை விட்டு வெளியே வந்தவன் யதார்த்தமாகத்தான் நாள்காட்டியை கவனித்தான்.
'இன்று தேதி என்ன?'
யோசனையாய் கிழிக்கப்படாமல் இருந்த முதல் நாளுக்குரிய தாளை ஈரமான விரல்களால் கிழித்து வீசினாள்.
'செப்டம்பர் 18'
அன்றைய தேதி பளிச்சென்று தெரிந்தது.
இமைகளிரண்டையும் விரித்து கருமணிகள் அசையாமல் வெறித்துப் பார்த்தாள்.
திக்கென்று உடம்பு மொத்தமும் அதிர்ந்தாள் வண்ணக்கிளி. உள்ளுக்குள் அலை அலையாய் மின்சாரம் பரவியதைப் போல உணர்ந்தாள்.
செப்டம்பர் 18
வண்ணக்கிளியின் உதடுகள் மெல்ல முணுமுணுத்தது.
இன்றுதானே என்னுடைய கல்யாண நாள். எப்படி மறந்தேன் அதை? மறக்கக் கூடிய நாளா அது? முதல் முதலாய் என் வாழ்வில் வசந்தம் வீசிய நாளாயிற்றே!
இந்த நாட்கள் ஏன் இறக்கை முளைத்தது போல பறக்கிறது?
அதற்குள் ஒரு வருடம் முடிந்து போனதே கண்களுக்குள் முகிலன் வந்துப் போனான்.
பட்டு வேஷ்டி சட்டையணிந்து கழுத்தில் பெரிய ரோஜாப்பூ பூமாலையோடு மணமேடையில் தன்னருகில் தோள்கள் உரச அமர்ந்து அசையும் காதலும் கனவுகளுமாய் திருமாங்கல்ய கயிற்றை தன்னுடைய கழுத்தில் கட்டிய காட்சி மங்கலான பிம்பங்களாய் மனசுக்குள் ஓடியது.
'கெட்டி மேளம்… கெட்டி மேனம்...'
'நடந்தது எல்லாம் உண்மையா? பொய்யா?'
'ஏன் இப்படி ஆனது? எதனால் இப்படி ஆனது? யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காத எனக்கா இந்த கதி?
தனி மரமாய் நிற்கிறேனே
சிறகுகள் வெட்டப்பட்ட பறவையாய் துடிக்கிறேனே
பூத்துக் குலுங்க வேண்டிய செடியை வேரோடு பிடுங்கி வீசியதைப் போல விழுந்து கிடக்கிறேனே!
நான் தோப்பாவேனா? என்னுடைய சிறகுகள் முளைக்குமா? விழுந்து கிடக்கிற நான் மீண்டும் எழுவேனா?'
வண்ணக்கிளியின் கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென்று வழிந்தது. தேங்காய்ப்பூ துண்டினால் சுற்றப்பட்டிருந்த ஈரக்கூந்தலில் இருந்து தண்ணீர் சொட்டியது. குளியலறையை விட்டு வெளியே வந்தவள் நாள்காட்டியைப் பார்த்ததுமே தன்னை மறந்து நின்றுவிட்டாள்.
வண்ணக்கிளி
அருகில் வந்து நின்றாள் அன்னலட்சுமி.
எளிய நூல் சேலை கட்டி மங்களகரமாய் காட்சியளித்தாள். வண்ணக்கிளியை வாஞ்சையோடு பார்த்தாள்.
இந்தா வண்ணக்கிளி
கையிலிருந்த அட்டைப்பெட்டியை நீட்டினாள்.
வண்ணக்கிளியின் புருவங்கள் உயர்ந்தது.
என்னம்மா இது?
வாங்கிப்பாரு.
வண்ணக்கிளி அந்த அட்டைப் பெட்டியை வாங்கினாள். நிதானமாய் அட்டைப் பெட்டியின் மூடியைத் திறந்தாள்.
உள்ளே இருந்தது அழகான பட்டுச் சேலை.
அவளுக்குப் பிடித்தமான மாம்பழ வண்ணத்தில் கருஞ்சிவப்பு பார்டருடன் நிறைய ஜரிகை வேலைப்பாடுகளுடன் கண்களைப் பறித்தது.
எந்த சலனமும் இல்லாமல் அன்னலட்சுமியைப் பார்த்தாள் வண்ணக்கிளி.
யாருக்கும்மா இது?
உனக்குத்தான்.
எனக்கு எதுக்கு இதெல்லாம்?
குரலில் விரக்தி சிதறியது.
இன்னைக்கு உன்னோட கல்யாணநாள். மறந்துடுச்சா வண்ணக்கிளி?
ஞாபகத்துல வெச்சிருந்து நா என்னம்மா பண்ணப் போறேன்?
வண்ணக்கிளி..
அன்னலட்சுமி தழுதழுத்தாள்.
இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உன் மொகத்துலயே முழிக்கமாட்டேன்னு... சொல்லி உன்னோட மாப்பிள்ளை என்னை இங்கே கொண்டு வந்து விட்டுட்டுப் போய்.. ஆறுமாசம் முடிஞ்சிடுச்சு. இந்த ஆறு மாசத்துல ஒரு தடவைக்கூட நேர்லயும் வரலை.. போன்லயும் பேசலை. அவர் வீட்லயும் எனக்கு இடமில்லை. மனசை விட்டும் தூக்கி எறிஞ்சுட்டார். எந்த நம்பிக்கையிலம்மா நா கல்யாண நாளைக் கொண்டாடுவேன்? எதை நெனைச்சும்மா.. நா இந்த பட்டுச் சேலையைக் கட்டிகிட்டு சந்தோஷப்படுவேன்?
வண்ணக்கிளியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
கோடு கோடாய் கன்னங்களில் இறங்கியது.
நம்பிக்கைதான் வாழ்க்கை
நா அந்த நம்பிக்கையை இழந்து ரொம்ப நாட்களாச்சும்மா
விம்மலை அடக்க முடியாமல் உதட்டைக் கடித்துக் கொண்டாள் வண்ணக்கிளி. ஒவ்வொரு பெண்ணிற்கும் கல்யாண நாள் என்பது ரொம்ப முக்கியமான நாள். தித்திப்பான நாள், தாலி கட்டிய கணவன் அருகிலிருந்து அன்பாய் நான்கு வார்த்தைகள் பேசி ஒரு முழம் பூ வாங்கித் தந்தாலே போதும்.. மனசுக்குள் சந்தோஷ தேனாறு பாயும்.
'ஆனால் தனக்குத்தான் அந்த கொடுப்பினையே இல்லையே'
ஈரத் துணியோட ரொம்ப நேரமா நிக்கறே.. உள்ளறையில் போய் இந்த பட்டுச் சேலையைக் கட்டிகிட்டு வாம்மா
அன்னலட்சுமி கெஞ்சினாள்.
வேணாம்மா..
அப்பாவுக்காகவும் எனக்காகவும் இதை நீ கட்டிகிட்டுதான் ஆகணும்.
அவர் பக்கத்துல இல்லாம நா இந்த பட்டு சேலையைக் கட்டிக்கறதுல அர்த்தமே இல்லைம்மா
மாப்பிள்ளை நிச்சயம் இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வருவார்
அழுத்தம் திருத்தமாய் சொன்னான் அன்னலட்சுமி.
அம்மா..
'அம்மா சொல்வது மட்டும் நடந்தால் எப்படியிருக்கும்..?'
இத்தனை நாளா உன்னை நெனைக்காம இருந்திருக்கலாம். ஆனா இன்னைக்கு உன்னை நெனைச்சுக்குவார். நெனைப்பு வந்ததுமே உன்னைப் பார்க்க ஓடி வந்துடுவார். அவருக்காக புது பட்டு வேஷ்டி, சட்டையெல்லாம் கூட வாங்கி வந்திருக்கார் உங்கப்பா
அன்னலட்சுமி அவளை ஆறுதல் படுத்துவதுபோல வார்த்தைகளை உதிர்த்தான்.
'முகிலன் வருவாரா?
முகிலனுக்கு என்னுடைய நினைப்பு வருமா?
நான் களங்கமில்லாதவள் என்பதை புரிந்து கொள்வாரா?'
வண்ணக்கிளிக்குள் வரிவரியாய் யோசனை ஓடியது.
அம்மா சொல்றதைக் கேளு வண்ணக்கிளி.. மொதல்ல இந்தச் சேலையைக் கட்டிக்கிட்டு வா..
முதுகில் கையை வைத்து தள்ளினாள் அன்னலட்சுமி.
'முகிலன் வருகிறாரோ இல்லையோ, அம்மாவின் தவிப்பிற்காகவும் அப்பாவின் பாசத்திற்காகவும், தான் இந்தப் பட்டுச் சேலையைக் கட்டிக் கொண்டே ஆக வேண்டும்.'
பட்டுச்சேலை இருந்த அட்டை பெட்டியை கையில் ஏந்தியபடி உள்ளறையை நோக்கி நடந்தாள் வண்ணக்கிளி.
சாதாரணமாகவே பேரழகி.
அந்த மாம்பழ வண்ண பட்டுச் சேலையைக் கட்டிக் கொண்டதும் இன்னும் அழகாய் தெரித்தாள். மஞ்சள் பூசிய உருண்டை முகம் நிலவாய் பிரகாசித்தது. சரியாய் ஈரம் துவட்டப்படாத தலை கேசம் நெற்றியிலும், காதோரங்களிலும் சுருள் சுருளாய் விழுந்து கிடந்தது.
செதுக்கியது போன்ற நாசியில் ஒற்றைக்கல் வைரமூக்குத்தி.