Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kathai Kathaiyaam Karanamaam
Kathai Kathaiyaam Karanamaam
Kathai Kathaiyaam Karanamaam
Ebook91 pages33 minutes

Kathai Kathaiyaam Karanamaam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சந்தேகம் என்பது கொலை வரைக்கும் கூட செல்லுமா, இதில் ரோஸி மற்றும் ஜிம்மி என்பவர்கள் மதபோதனைக்காக ஒரு கிராமத்திற்கு வருகின்றனர். ஒரு வெளிநாட்டுக்காரனுடன் இயல்பாக பழகிய ரோஸியை அவ்வூர் மக்கள் தவறாக சந்தேகிக்கிறார்கள்? மேலும் அங்கு நடந்தது என்ன? அந்த ஒற்றைவீட்டில் நடந்தது என்ன? ராதாவிற்கும் ரோஸியின் நிலைமைதானா? இந்நிலையில் அந்த வேலைக்காரனின் சதித்திட்டம் என்ன? இவர்களுடன் நாமும் கதையின் காரணத்தில்...

Languageதமிழ்
Release dateDec 6, 2021
ISBN6580125407557
Kathai Kathaiyaam Karanamaam

Read more from Vaasanthi

Related to Kathai Kathaiyaam Karanamaam

Related ebooks

Reviews for Kathai Kathaiyaam Karanamaam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kathai Kathaiyaam Karanamaam - Vaasanthi

    https://www.pustaka.co.in

    கதை கதையாம் காரணமாம்

    Kathai Kathaiyaam Karanamaam

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vaasanthi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஒன்று

    இரண்டு

    மூன்று

    நான்கு

    ஐந்து

    ஆறு

    ஏழு

    எட்டு

    ஒன்பது

    ஒன்று

    காணி நிலம் வேணும் பராசக்தி காணி - நிலம் வேணும்.

    ராது பெரிதாகச் சிரித்தாள்.

    பாட்டைச் சட்டென்று நிறுத்தி, ரகு லேசான கோபத்துடன், கார் ஓட்டும் வேகத்தைக் குறைக்காமல் எதிர்த்தாற்போல்விரிந்த சாலையிலிருந்து பார்வையைத் திருப்பாமல் கேட்டான்.

    என்ன சிரிப்பு? நா தமிழ் பாட்டுப் பாடினா உனக்குக் கேலியா இருக்கா? இல்லே, பாட... வரல்லேங்கிறியா?

    ராது அவன் அருகில் ஒண்டிக்கொண்டு நெருக்கமாக உட்கார்ந்தாள். அவனுடைய தோள்மேல் முகத்தைச் செல்லமாகத் தேய்த்துப் புன்னகைத்தாள்.

    சேச்சே, நா எதுக்குச் சொல்றேன்? நீங்க மாத்திரம் ஒரு பாட்டனிஸ்டாப் போகல்லேன்னு வச்சுக்குங்க, பால முரளிகிருஷ்ணா எல்லாம் பிச்சை வாங்கணும்!

    ஆ தாங்க்யூ! பின்னே எதுக்கு சிரிப்பு?

    பாரதியை இன்னும் ஞாபகம் வெச்சுக்கிட்டிருக்கீங்களான்னு ஆச்சரியம் ஏற்பட்டுது, காணி நிலம் வேணுங்கிறீங்க. எங்கே வேணும்? உங்க ரிஸர்ச் வேலைக்காக இப்பப்போயிட்டிருக்கீங்களே, அருணாசல பிரதேசத்திலேயா, இல்லே பதினைஞ்சு வருசமா பார்க்கவே பார்க்காத தமிழ்நாட்டிலேயா?

    சிறிது நேரம் ரகு பதிலே பேசாமல் ஏதோ பழைய ஞாபகங்களில் திடீரென்று சிக்குண்டவன் போல் உட்கார்ந்திருந்தான். நினைவுகள் ஏற்படுத்திவிட்ட மென்மையில் லேசாகச் சிரித்தான்.

    தமிழ்நாட்டிலே இருந்தா எத்தனை நன்னாயிருக்கும் ராது!

    வேண்டாம்பா இப்ப ரொம்பத்தண்ணி கஷ்டமாம்!

    அட, எப்பவுமேவா அப்படி இருக்கும்? கஷ்டமோ நஷ்டமோ நாம பிறந்த இடத்துக்கு ஒருவாசனை இருக்கில்லே?

    அதையெல்லாம் மறந்துட்டுதானே நீங்க கண்காணாத வனாந்திரத்தையெல்லாம் மோப்பம் பிடிக்கக் கிளம்பியிருக்கீங்க? இப்ப நாம போற இடத்திலே மனுஷ சஞ்சாரம்கூட இல்லே யாராவது ஆதிவாசி நம்மை அடிச்சுப் போட்டான்னா ஏன்னு கேட்க ஆள்கூட இருக்கப் போறதில்லை.

    இந்த அனுபவமெல்லாம் நமக்கு அவசியம் ராது!

    அடிபட்டுக்கவா?

    சீ! அது பைத்தியக்காரத்தனமான பயம். ஆதிவாசிங்க காட்டுமிராண்டிகள் இல்லே. உத்தியோக ரீதியிலே வாய்ப்பு கிடைக்கும்போது பல இடங்களைப் பார்க்க வேண்டாமா? என் ரிசர்ச்சுக்கு வேண்டிய அபூர்வமான செடிகள் நாம இப்பப்போற இடத்திலே இருக்கு.

    நா என்ன செய்யப்போறேன்னு தெரியல்லே.

    ஏதாவது பாஷை கத்துக்க. தோட்டம் போடு எழுது. பொழுதைக் கழிக்க வழியா இல்லே...?

    அவள் சமாதானமில்லாமல் முணுமுணுத்தாள்.

    எத்தனை நேரம் இதையெல்லாம் செய்ய முடியும்? பேசறதுக்கும் பழகறதுக்கும் ஜனங்க இல்லேன்னா எனக்கு ‘போர்' அடிக்கும்

    ரகு தோளைக் குலுக்கினான்.

    என்னோட இருக்கணும்னா, இதெல்லாம் நீ சகிச்சுக்கத்தான் வேணும்.

    அவனுடைய வேலை விஷயங்களில் அவனுக்கிருக்கும் தீவிரமும், அதில் அவன் ஆழ்ந்து போவதனால் தனக்கு ஏற்படும் தனிமையைப் பற்றி முணுமுணுப்பது அவனைக் கோபப்படுத்தும் என்கிற ஞாபகத்தில் அவள் தன்னை சமாளித்துக்கொண்டு சிரித்தாள்.

    பேய்க்கு வாக்கப்பட்டா, புளியமரத்திலே ஏறணும்பாங்க.

    நீ ஏற வேண்டாம். மரங்களுக்கு நடுவிலே இரு போதும்.

    அவள் பதில் ஏதும் சொல்லாமல் வரப்போகும் நாட்களை எப்படிக் கழிக்கப் போகிறோம் என்கிற உண்மையான குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள்.

    அவன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னான் - மாலை ஆறுமணிக்குப் போயிடுவோம்

    அடர்ந்த காட்டுப் பகுதியில், ராணுவத்தார் போட்டிருந்த மண் ரஸ்தாவில் கார் சற்று சிரமத்துடன் சென்று கொண்டிருந்தது. மதியம் மூன்று மணிக்கே தண்ணென்று இருண்டிருந்தது.

    ரொம்பக் குளிருமா இந்த இடம்?

    ஆமாம். குளிரும். போதுமான ஸ்வெட்டர் எடுத்து வந்திருக்கிறாயா?

    ஆமாம்!

    பின்னே என்ன கவலை?

    கவலைப்பட எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. அங்கு காஸ் இல்லை - மின்சாரம் இல்லை - மனிதர்கள் இல்லை.

    ஓ. கடவுளே, இன்னும் மூன்று மாதங்கள் எப்படி இருக்கப்போகிறோம்?

    மறுபடி ரகு ஏதோ பாட்டை அடிக்குரலில் பாட ஆரம்பித்தான். அவள் தன்னுள் மூழ்கிய யோசனைகளுடன் சுற்றுப்புறத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்து களைத்துத் தூங்கிப்போனாள்.

    உலுக்கப்பட்டவள் போல் அவள் விழித்துக் கொண்டபோது கார் ஒரு சமதரை வெட்டவெளியில் ஒரு இருண்ட வீட்டிற்கு முன் நின்றிருந்தது. சுற்றிலும் லேசாக இருள் சூழ ஆரம்பித்திருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை ஒரு ஈ, காக்காய் இருப்பதாகத் தெரியவில்லை. குளிருடன் 'ஊய்' என்று ஒரு அமானுஷ்ய ஒலியுடன் காற்று...

    பயத்தினாலா, குளிரினாலா என்று புரியாத

    Enjoying the preview?
    Page 1 of 1