Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Radhaiyum Kunti Deviyum
Radhaiyum Kunti Deviyum
Radhaiyum Kunti Deviyum
Ebook174 pages1 hour

Radhaiyum Kunti Deviyum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Yandamoori Veerendranath, is a famous Telugu novelist. He had written many social, fiction, super natural thriller stories and novels. Hailing from Andhra Pradesh state in India, he influenced younger generations with his socially relevant writings. In his writings he addresses many of the important social problems in India like poverty, prejudices, and superstitions, and encourages people to be socially responsible. He successfully bridges the idealistic and the popular styles of literature.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101102805
Radhaiyum Kunti Deviyum

Read more from Yandamoori Veerendranath

Related to Radhaiyum Kunti Deviyum

Related ebooks

Reviews for Radhaiyum Kunti Deviyum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Radhaiyum Kunti Deviyum - Yandamoori Veerendranath

    http://www.pustaka.co.in

    ராதையும் குந்தி தேவியும்

    Radhaiyum Kunti Deviyum

    Author:

    எண்டமூரி வீரேந்திரநாத்

    தமிழில்: கெளரி கிருபாநந்தன்

    Yandamoori Veerendranath

    Translator by: Gowri Kirubanandan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/yandamoori-veerendranath-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    ராதையும் குந்தி தேவியும்

    டிசம்பர் மாதம் இருபத்தி இரண்டாம் தேதி மாலை நாலரை மணிக்கு மூன்று வேறு வேறு இடங்களில் மூன்று வேறு வேறு நிகழ்வுகள் நடந்தன.

    ஒன்று ராதையின் வீட்டில்.

    மற்றொன்று அகில இந்திய வானொலி நிலையத்தின் இயக்குனர் பார்த்தசாரதியின் அலுவலகத்தில்.

    மூன்றாவது ‘மாடிஸம்’ நிறுவனத்தின் பதிவு செய்யப்படாத அலுவலகத்தில்.

    மேலோட்டமாக பார்த்தால் இந்த மூன்று விஷயங்களுக்கும் சம்பந்தம் இல்லை.

    1

    இதோ பாரும்மா! என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. இப்பொழுதே ஆறுமாத வாடகை பாக்கி. இனியும் சும்மாயிருக்க முடியாது. இவ்வளவு நாள் ஆண் துணை இல்லாதவங்களாச்சே என்று தயங்கினேன். நாளை மாலைக்குள் வீட்டைக் காலி செய்யாவிட்டால் நானே உங்கள் தட்டுமுட்டு சாமான்களை வெளியே தூக்கி எறிய வேண்டியிருக்கும் என்று எழுந்து கொண்டார்.

    ராதை அவரை இயலாமையுடன் பார்த்தாள். உள்ளே கதவு மறைவில் நின்று கொண்டிருந்த ராதையின் பாட்டி ஓரடி முன்வைத்து ஏதோ சொல்லப் போனாள். அவர் காதில் போட்டுக் கொள்ளாமல் திரும்பிப் போக முயன்று கொண்டே புரிந்ததா? நாளைக்குத்தான் கடைசி நாள் என்று சொல்லிவிட்டு விடுவிடென்று போய்விட்டார்.

    ராதை அவர் போன திசையையே பார்த்தபடி நின்று விட்டாள். அறையில் மெதுவாக இருள் பரவிக் கொண்டிருந்தது. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு நான்கு மாதங்களாகி விட்டன. கிரோசின் தீர்ந்து போய் இரண்டு நாட்களாகியிருந்தன.

    ராதை மெதுவாகத் திரும்பினாள். பாட்டி கதவிற்கு அருகில் இன்னும் அப்படியே நின்று கொண்டிருந்தாள். இருவரின் பார்வையும் சந்தித்துக் கொண்டன.

    ராதை வலுக்கட்டாயமாக சிரிப்பை வரவழைத்துக்கொண்டு, பாட்டீ! இன்னிக்கு ராகுகாலம் எப்போ? என்று கேட்டாள்.

    பாட்டியும் முறுவலித்தாள். இன்று மட்டும்தானா? உங்க தாத்தா போனது முதல் ராகுகாலம்தான். இனி உங்க அப்பா இறந்த பிறகு எல்லாமே யமகண்டம்தான்.

    கஷ்டங்கள் வரும் போது முறுவலுடன் தாங்கிக் கொள்வது ராதையின் பழக்கம். கிண்டலடித்தபடி பேசுவது பாட்டியின் பழக்கம். கஷ்டங்களை முறுவலுடன் சமாளிப்பதற்கு அவ்விருவரும் பத்து வருடங்களுக்கு முன்பே பழகிக் கொண்டார்கள்.

    நான் கொஞ்சம் நேரம் வெளியே போயிட்டு வரேன் பாட்டீ என்றாள் ராதை.

    இருட்டிக் கொண்டு வருகிறது. சீக்கிரமாக வந்து விடு.

    உள்ளே இருந்த இருட்டைவிட வெளியே இருக்கும் இருட்டு பரவாயில்லை. ராதை வெளியே வந்தாள். ஊர்க் கோடியாக இருந்ததால் வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தன. மைதானத்திற்கு நடுவில் டிரங்க் ரோடு கருப்பாக பாம்புபோல் இருந்தது. ராதை அந்தப் பக்கமாக போகாமல் வலது பக்கமாக நடந்தாள். நூறடி தொலைவு நடந்தால் ஏரி. ஆங்காங்கே பெரிய பாறாங்கற்கள். ஒரு கல்லின் மீது உட்கார்ந்து கொண்டாள் ராதை.

    சூரியன் மேற்குப் பக்கமாக சரிந்து கொண்டிருந்தான். குளிர் நாளாக இருந்ததால் இருட்டு வருவதற்குள்ளாகவே பனிமூட்டம் சூழ்ந்து கொள்ளத் தொடங்கி விட்டது. தொலைவில் டிரங்க் ரோட்டில் போலீஸ் வேன் ஒன்று ஏரிக் கரைக்கு அந்தப் பக்கமாக சத்தம் போட்டுக் கொண்டே போயிற்று. அப்பொழுதுதான் ராதைக்கு நினைவு வந்தது. பிரதமர் அந்த சாலையின் வழியாக அடுத்த நாள் போகப் போகிறார் என்று.

    நாளைக்குத்தான் தமிழ்நாட்டில் இன்னொரு வானொலி நிலையத்தின் திறப்பு விழா. அதற்காகத்தான் பிரதமர் வருகிறார். மறுநாள் நடக்கப் போகும் இண்டர்வ்யூவில் இந்த விஷயத்தை பற்றி கேள்வி கேட்பார்கள் என்று ராதை நம்பினாள். அதுவும், இண்டர்வ்யூவுக்குப் போய்க் கொண்டிருப்பதுகூட வானொலி நிலையத்திற்குதான்.

    வேலை கிடைக்கும் என்று அவளுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. ஆனாலும் போகாமல் இருக்க முடியாது.

    ஏரியிலிருந்து குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. தொலைவில் எருமை மாடு ஒன்று எந்த கவலையும்யின்றி நிம்மதியாக புல்லை மேய்ந்து கொண்டிருந்தது. பூமியும் வானமும் சந்திக்கும் இடத்திலிருந்து சந்தியா வெளிச்சம் மெல்ல மெல்ல மங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று அவளுக்கு ஒரு யோசனை வந்தது.

    தற்கொலை செய்து கொண்டுவிட்டால்?

    ஊஹூம். அதனால் பிரச்னைகள் தீர்ந்து விடாது. வீட்டுக்காரருக்கு தொல்லைக் கொடுப்பதற்காக வேண்டுமானால் தற்கொலை செய்து கொள்ளலாம். நட்சத்திரம் சரியாக இல்லாத நாளாக பார்த்து பண்ணிக்கொண்டால் வீட்டை நான்கைந்து மாதங்களுக்கு பூட்டி வைக்க வேண்டி வரும். அப்பொழுதுதான் தன்னுடைய ஆத்திரம் அடங்கும்.

    அதற்குள் அவளுக்கு வீட்டுக்காரர் மீது இறக்கம் ஏற்பட்டது. அவர் மட்டும் என்ன செய்வார்? ஆறு மாத வாடகை பாக்கி! இத்தனை நாள் தங்கியிருக்க விட்டதற்காக சந்தோஷப்பட்டுக் கொள்ளணும். அவளுக்குச் சிரிப்பு வந்தது.

    உடனே திடீரென்று துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது. தனிமை எவ்வளவு பயங்கரமானதோ யாருக்கும் தெரியாது. உண்மையில் தனிமையைக் காட்டிலும் வேதனை தரக்கூடியது மனிதனுக்கு வேறு இல்லை. இருளும் வெளிச்சமும் கலந்த சூழலில் ஆளரவமற்ற அந்த மைதானத்தில் அவள் அழுது கொண்டே ரொம்ப நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாள். பாட்டி என்ற பந்தம் மட்டும் இல்லாமல் இருந்தால் இந்த நிமிடமே ஏரியில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டு இறந்திருப்பாள்.

    கொஞ்ச நேரத்தில் அவள் தேறிக்கொண்டு விட்டாள். ஆனால் இடத்தை விட்டு அசையாமல் முழங்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டு காலடியில் இருந்த நீரையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.

    அப்பொழுதுதான் கேட்டது ‘தொபீர்' என்ற சத்தம். யாரோ ஏரியில் விழுந்து விட்டாற் போன்ற சத்தம்.

    அவள் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். எங்கும் ஆளரவமில்லாமல் இருந்தது. தொலைவில் மிலிடரி வேன் போய்க் கொண்டிருந்தது. அவள் தண்ணீரின் பக்கம் பார்த்தாள். உள்ளேயிருந்து காற்றுக் குமிழ்கள் வந்து கொண்டிருந்தன. அதற்குள் கை ஒன்று தண்ணீருக்கு மேலே வந்து பிடிமானம் எதுவும் கிடைக்காததால் மறுபடியும் உள்ளே போய்விட்டது. அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எங்கும் ஆள் நடமாட்டமே தென்படவில்லை. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு உதவிக்கு யாரும் வரமாட்டார்கள் என்று தெரிந்து கொண்டாள்.

    அதற்குள் தண்ணீரின் மேலே தலை ஒன்று வெளியே வந்தது. வாயிலிருந்து நீர் வெளியே வந்து கொண்டிருப்பது தென்பட்டது. மறுபடியும் தலை நீருக்குள் மூழ்கிவிட்டது. அதற்குப் பிறகு இரண்டு கைகள் உயரே வந்து ஏதாவது பற்றுகோல் கிடைக்குமா என்பது போல் தேடிவிட்டு திரும்பவும் மூழ்கிவிட்டது.

    ராதை ஏரியைச் சுற்றும் முற்றும் பார்த்தாள். ஏரிக்கு அந்தப் பக்கம் வயல்கள். இரண்டுக்கும் நடுவில் சாலை… சிறிய பாலம். எங்கும் மனித சஞ்சாரம் இல்லை.

    அவள் பார்வை ஏரியின் பாலத்தில் இருந்த மூங்கில் கழிகள் மேல்பட்டது. ஒரே ஓட்டமாக அங்கே போய்ச் சேர்ந்தாள். சேற்றில் சறுக்கி விழப்போனவள் எப்படியோ சமாளித்துக் கொண்டாள். மூங்கில் கழியைப் பற்றி இழுக்கப் போனாள். ஒன்றோடு ஒன்று இணைத்துக் கட்டப்பட்டு இருந்ததாலோ என்னவோ கழியை பிடுங்க முடியவில்லை. அவள் இயலாமையுடன் பார்த்தாள். ஏரியில் சந்தடியே இல்லை. அவளுக்குப் பயமாக இருந்தது. பதற்றத்தில் கண்களில் நீர் சுழன்றது. மறுபடியும் தான் முன்னாடி இருந்த இடத்திற்கே ஓடி வந்தாள்.

    கவனமாக பார்த்தபோது, காற்றுக் குமிழ்கள் புளுக் புளுக்கென்று சத்தமிட்டுக் கொண்டே மேலே வருவது தென்பட்டது. உள்ளே இருந்த நபர் இன்னும் மூழ்கிப் போய் விடவில்லை என்று புரிந்தது. புடவையை கயிறாக பயன்படுத்தி அந்த நபரை வெளியே இழுக்கலாமா என்று யோசித்தாள். ஆனால் தன்னிடம் இருப்பது ஒரு புடவைதான் என்றும், அதுவும் வாங்கி இரண்டு வருஷமாகி விட்டது என்றும், ஒருக்கால் தான் புடவையை நீட்டினாலும் அது கிழிந்து பாதி தன் கையிலும் மறுபாதி தண்ணீரிலும் போய்விடக் கூடும் என்று பயந்தாள்.

    அந்த ஏரியில் எந்த இடத்திலும் நாலடிக்கு மேல் தண்ணீர் இல்லை என்று அவளுக்கு உறுதியாகத் தெரியும். ஆனாலும் ஏரியில் விழுந்தவன் மூழ்கிக் கொண்டிருந்தான் என்றால் அவன் நிச்சயமாக குள்ளமானவனாகவும் நாலரை அடி உயரமானவனாகவும் இருந்திருக்க வேண்டும்.

    ‘அப்படிப்பட்டவனுக்காக புடவையை அவிழ்ப்பது அனாவசியம்' என்று சொல்லக்கூடும் ஜெயா மட்டும் தன்னுடைய இடத்தில் இருந்திருந்தால்!

    ஜெயா தன்னுடைய இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பாள் என்று யோசிப்பதற்கு இது நேரம் இல்லை. ஏரியில் விழுந்தவன் கால்களையும், கைகளையும் உதைத்துக் கொண்டு இருந்தான்.

    அவள் மேற்கொண்டு யோசிக்காமல் தண்ணீருக்குள் குதித்தாள். அரை நிமிஷத்தில் கோட்டு கைக்கு அகப்பட்டது. அதைப் பிடித்துக்கொண்டு இழுத்த போது உடம்பும் வெளியே வந்தது.

    அவள் நினைத்தது சரிதான். அவன் குள்ளமானவன்தான். நாவலில் வரும் கதாநாயகன் அல்ல. அறுபது வயது கிழவன்.

    அரும்பாடுபட்டு அவனை வெளியே இழுத்து கரையில் சேர்த்தாள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ஆள் நடமாட்டம் இருக்கவில்லை. அவனை மல்லாக்காக படுக்க வைத்து வயிற்றை அமுக்க வேண்டுமா, குப்புறப் படுக்க வைத்து முதுகை அழுத்த வேண்டுமா என்று ஆறாவது வகுப்பிலோ ஏழாவது வகுப்பிலோ படித்த ஞாபகம். சரியாக நினைவுக்கு வராமல் நெற்றியில் தட்டிக் கொண்டாள்.

    ஆனால் அவளுக்கு மேற்கொண்டு சிரமம் தராமல் அந்தக் கிழவன்

    Enjoying the preview?
    Page 1 of 1