Uchchakattam
By Devibala
3.5/5
()
About this ebook
Read more from Devibala
Kalyana Thevathai Rating: 4 out of 5 stars4/5Assai Oonjalil Aadum Velaiyil Rating: 0 out of 5 stars0 ratingsCharumma Rating: 0 out of 5 stars0 ratingsPaatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsSokkuthe Manam Rating: 5 out of 5 stars5/5Manmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsAmma Ammamma Rating: 0 out of 5 stars0 ratingsPennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsJodi Thevai Rating: 5 out of 5 stars5/5Veliye Sonnaal Vetkam Rating: 4 out of 5 stars4/5Seetha Rating: 0 out of 5 stars0 ratingsVara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Vizhikkul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsSeerum Sirappum Rating: 5 out of 5 stars5/5Poomaalai Poda Vaa 2 Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Azhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsUn Solle Vedham Rating: 0 out of 5 stars0 ratingsPoorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsKathal Varam Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 1 Rating: 0 out of 5 stars0 ratingsOru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsVarunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsIndru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsMadiyil Saayum Neram Rating: 0 out of 5 stars0 ratingsVaruvathu Yaro? Rating: 2 out of 5 stars2/5Oru Thai Oru Magan Rating: 5 out of 5 stars5/5Vidiyum Varai Rating: 5 out of 5 stars5/5Su(sa)gavasam Rating: 0 out of 5 stars0 ratings
Related authors
Related to Uchchakattam
Related ebooks
Pirivu Ini Illai Rating: 5 out of 5 stars5/5Thaimai Marappathillai! Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsOctober Pouranami Rating: 5 out of 5 stars5/5Niram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsAvalukku Peyar Agni Rating: 0 out of 5 stars0 ratingsUrimai Kondaadu Uyire Rating: 0 out of 5 stars0 ratingsPottuvetcha Vatta Nilaa Rating: 5 out of 5 stars5/5Poorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsVaazha Vaa Rating: 0 out of 5 stars0 ratingsParijadha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsMounam Pesattum Rating: 5 out of 5 stars5/5Mayangukiraal Oru Maathu Rating: 5 out of 5 stars5/5Nenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5Pazhaiya Paadam Thevaiyillai Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Kaithanean! Rating: 0 out of 5 stars0 ratingsPennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Mudhal Kadhali Rating: 5 out of 5 stars5/5Maanbumigu Maapillai Rating: 0 out of 5 stars0 ratingsIrukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Kalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsAnbil Thilaitha Uravu… Rating: 4 out of 5 stars4/5Ethir Paarthen Rating: 0 out of 5 stars0 ratingsPaniththirai Rating: 0 out of 5 stars0 ratingsPoojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Seetha Rating: 0 out of 5 stars0 ratingsPenalla Penalla Rojapoo Rating: 0 out of 5 stars0 ratingsMann Bommai Rating: 5 out of 5 stars5/5Oru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsMaavilath Thoranam Rating: 5 out of 5 stars5/5
Reviews for Uchchakattam
3 ratings0 reviews
Book preview
Uchchakattam - Devibala
12
1
சத்யன் குளித்துவிட்டு வந்தபோது, சியாமளா உடை மாற்றிக் கொண்டிருந்தாள். தன்னை லேசாக அலங்கரித்துக் கொண்டிருந்தாள்!
நம்ம தெருக்கோடி கோயிலுக்குப் போறியா?
இல்லீங்க! மாங்காடு, அன்னபாபா எல்லாத்தையும் முடிச்சிட்டு அப்படியே எங்கக்கா வீட்டுக்கு போறேன்! திரும்பி வர ராத்திரி ஆகும். நீங்க வெளியே சாப்பிடுங்க!
சியாமளா! உமா காலைல மாப்ளை கூட வர்றேன்னு ஏற்கெனவே சொல்லியிருக்காளே! நேத்திக்கே உங்கிட்ட நான் சொல்லலியா?
அதனால?
என்ன சியாமளா இப்படி கேக்கற? அவ பொண்ணுக்கு ஒரு நல்ல ஜாதகம் பொருந்தியிருக்குனு ‘அது தொடர்பா உங்ககிட்ட பேச வர்றேன்’னு அவ சொல்லியிருக்கா. இந்த நேரத்துல நீ வீட்ல இல்லைனா எப்படி? அவளுக்கும், மாப்ளைக்கும் ஒரு காபி போட்டுக் குடுக்கக்கூட இங்கே யாருமே இல்லையே?
சியாமளா திரும்பினாள்.
இதப்பாருங்க. இன்னிக்கு ஸன்டே. வாரத்துல ஆறுநாளும் நானும் ஆபீசுக்கு போயிடறேன். எனக்கு வெளியே போக இந்த ஒரு நாள்தான் இருக்கு. அக்கா வீட்டுக்கு நான் போய் மாசக்கணக்கு ஆச்சு!
சரி! இதை நேத்திக்கே நீ சொல்லியிருந்தா, உமாவுக்கு போன் பண்ணியிருக்கலாமே!
சரி.. சொல்லலை. இப்ப சொல்லிட்டேனே, போன் பண்ணி வர வேண்டாம்ன்னு சொல்லிடுங்க!
என்ன பேசற நீ! அவ ஆவடிலேருந்து வரணும். இந்த நேரம் கிளம்பியிருப்பா. மேலும், அவ பொண்ணு கல்யாண விஷயமா பேச வர்றா. வராதேனு சொல்ல முடியுமா சியாமளா. அது ஆச்சாணியமா இருக்காது?
அதனால?
இன்னிக்கு நீ போகாதே சியாமளா!
இல்லீங்க! நான் போய்த்தான் ஆகணும்!
இது நல்லால்ல சியாமளா. அடுத்த வாரம் போயேன்!
நான் வர்றேன்னு சொல்லியாச்சு!
உமாவும் அப்படித்தானே!
நீங்க இருக்கீங்களே! எனக்கு நேரமாச்சு. நான் வர்றேன்!
அடுத்த பத்தாவது நிமிடம் வாசலில் இறங்கிவிட்டாள். சத்யனுக்கு கடுப்பாகி விட்டது!
சியாமளா பிடிவாதக்காரி. தான் நினைத்ததை நடத்துவாள். யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ள மாட்டாள்!
ஆரம்பம் முதலே அப்படித்தான்!
சத்யனின் அம்மா உயிரோடு இருக்கும் வரை எல்லா வேலைகளையும் அம்மாதான் செய்வாள்!
சியாமளா துரும்பைக் கூட கிள்ளிப் போட மாட்டாள்.
சத்யனுக்கு ஆத்திரம் வரும்!
விடுப்பா! அவளும் வேலைக்குப் போறா. வீட்ல யாராவது ஒத்துழைச்சாத்தானே முடியும். நான் தெம்பா இருக்கேன். பாத்துக்கறேன்!
உடம்பில் ஆரோக்கியம் இருக்கும் வரை சலிப்பில்லாமல் அம்மா உழைத்தாள். தேக ஆரோக்கியம் சீர்குலைந்தபோது அம்மாவால் முடியவில்லை.
அம்மா படுத்தபோது கூட சியாமளா எதுவும் செய்யவில்லை. சத்யன்தான் உதவினான்.
அம்மா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு நாலே நாட்களில் உயிர் துறந்தாள்.
சத்யன் தனியாரில் அக்கவுண்ட்ஸ் அதிகாரி. நல்ல சம்பளம். சியாமளாவுக்கு மத்திய அரசாங்க உத்யோகம். இரண்டு பிள்ளைகள்!
மூத்தவன் ராகுலுக்கு பொறியியல் படிப்பு- இரண்டு வருடங்களுக்கு முன்பு முடிந்து, உடனடியாக புனேவில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை கிடைத்தாகிவிட்டது!
அவன் புனேவில் இருக்கிறான்.
அடுத்தவன் இங்கே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இரண்டாவது வருடம் படிக்கிறான். கோகுல்!
இரண்டும் ஆண் குழந்தைகள். பெண்களே இல்லை. லோன் வாங்கிக் கட்டிய வீடு. கடன் அடைந்துவிட்டது. இரண்டு சம்பளம். எல்லா வசதிகளும் உண்டு. எந்தக் கஷ்டமும் இல்லை!
குடும்ப நிர்வாகம் சியாமளாதான்.
சத்யனின் சம்பளத்தை பைசா திருத்தமாக கறந்து விடுவாள். டீ செலவுக்குக் கூட அவளிடம் வாங்கிக் கொண்டுதான் போக வேண்டும்!
பைசா குறைந்தாலும் கணக்கு கேட்பாள்.
சத்யனும் கணக்கு கொடுத்து பழகி விட்டதால் இது பெரிதாகத் தெரியவில்லை.
சத்யனுக்கு ஒரே தங்கை உமா. உள்ளூரில்!
அவளது கணவர் பள்ளிக்கூட வாத்தியார். தனியார் பள்ளிக்கூடம்.
உமாவுக்கு வேலையில்லை.
பிறந்தது இரண்டும் பெண் குழந்தைகள்.
மூத்தவள் அருணா பி.காம் படித்து முடித்ததும் வேலை கிடைத்துவிட்டது.
அடுத்தவள் சுகுணா. கல்லூரியில் படிப்பு.
வருமானம் குறைவு என்பதால உமாவின் குடும்பத்தில் பிரச்சினை அதிகம்.
அவளது மாமியாரின் மருத்துவச் செலவு, பிள்ளைகளின் படிப்புச் செலவு. ஆனாலும் உமா எந்த உதவியும் இதுவரை கேட்டதில்லை. கேட்டால், சியாமளா செய்யவும் மாட்டாள். அம்மா இருக்கும் காலத்தில் உமா இரண்டு நாட்கள் குழந்தைகளுடன் வந்து தங்கினாலே-சியாமளாவுக்கு பிடிக்காது. முகத்தை தூக்குவாள்!
அத்தையும், பெண்களும் வந்தால் ராகுல், கோகுலுக்கு கொண்டாட்டம்!
உமா வந்த முதல் சமையல் கட்டில்தான் இருப்பாள்.
அந்த இரண்டு நாட்களும் மாடுபோல் உழைப்பாள்.
அப்படியும் சியாமளா தன் அதிருப்தியை காட்டிக் கொண்டே இருப்பாள்.
ஆத்திரப்பட்டால் குடும்பத்தில் குழப்பம்தான்.
சண்டை என்று வந்துவிட்டால், சியாமளாவுக்கு அல்வா சாப்பிடுவதைப்போல!
சத்யன் என்றுமே சண்டையில் ஜெயித்ததில்லை!
ஜெயிக்க விட்டதில்லை சியாமளா!
இதுதான் நடப்பு.
அடங்கிப் போகத் தொடங்கிவிட்டால், அதன் பிறகு ஆண்கள் தலைதூக்க முடியாது. பெண்களின் கை ஓங்கிவிட்டால், அந்தக் குடும்பத்தில் ஆண்களும், அவர்களைச் சேர்ந்த உறவுகளும் அடிமைதான்!
அதுதான் நடக்கிறது.
சத்யன் போராட நினைத்ததில்லை. போராடத் தயாராகவும் இல்லை.
ஆனால், மூத்தவன் ராகுல் அப்படியல்ல.
படிக்கும் காலம் தொட்டே, அவனுக்குப் பிடிவாதம் அதிகம். அம்மாவின் குணம்.
சியாமளாவின் நாட்டாமை அவனிடம் எடுபடவில்லை. தான் நினைத்தது நடக்க வேண்டும் என்று பிடிவாதம்